Thursday, June 27, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 11

நாள் :- 26.10.2006

இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு:
தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக!
பிரதமருக்கு வைகோ தந்தி

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது
இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டி அடித்து இருக்கிறது.
இதனால் 3000 மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் தப்பி ஓடி வந்து உள்ளனர். இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வருகின்ற
இத்தகைய தாக்குதல்களால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
அவர்களது அன்றாட வாடிநக்கை, கேள்விக்குறி ஆகி உள்ளது.

இப்பிரச்சனை குறித்து, பலமுறை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு
வந்து உள்ளேன். நாடாளுமன்றத்திலும் பேசி உள்ளேன். இலங்கைக் கடற் படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி
தி.மு.கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                           வைகோ,
சென்னை - 8                                                                         பொதுச் செயலாளர்,
                                                                        மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment