Tuesday, June 11, 2013

தமிழகத்தைத் தாக்கும் பேராபத்து...

தண்ணீர்..... தண்ணீர்..... தண்ணீர்!

தமிழகத்தைத் தாக்கும் பேராபத்து...

வைகோதான் காப்பாற்ற வேண்டும்!

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு.

மாந்தர் இனம் உயிர்வாழ ஆதாரமாக இருப்பது தண்ணீர்.மனிதர்கள் மட்டுமல் ல, மண்ணில் தோன்றிய எல்லா உயிர் இனங்களும் செடி கொடிகளும், வன விலங்குகளும், பறவைகளும் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் அவசியமாகும்.
ஒவ்வொரு பயிருக்கும் உயிர் உண்டு.அவை நம்மைப் போலவே சுவாசிக் கின் றன. நீரையும் உணவையும் எடுத்துக்கொள்கின்றன. அவைஉணவும் தயாரிக் கின்றன. அப்பணிகள் செவ்வனே நிறைவேறிட நீர் மிக மிக முக்கியமாகும். மனித உடலில் 70 சதவிகிதம் நீர் என்றால், தாவரங்களின் உடலில் 90 சதவிகி தம் நீர்தான்.


உலகில் மூத்த இனம் தமிழன் என்கிற பெருமை பெற்றிருந்தாலும் நீரியல், மண்ணியல் ஆகிய நுண்ணிய தொழில் நுட்பங்களை அறிந்து பயன் படுத்திக் கொண்ட பாரம்பரியமும் நமக்கு உண்டு.

நதிகள்தான் நாகரிகம் பிறப்பதற்கான தொட்டில்கள் என்பதிலே மாறுபட்ட
கருத்துக்கு இடமேயில்லை. நதிக்கரையில் தோன்றிய நாகரிக வளர்ச்சியில்
தமிழர்கள் முதன்மையானவர்களாவர்.

எகிப்தின் நைல் நதி,சுமேரியாவின் டைகிரீஸ்,யூப்ரடீஸ் நதி,சீனாவின் மஞ்சள் நதி போன்றவற்றில் மிகத் தொன் மையான காலத்திலேயே அணைகள் கட்டப் பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. எனினும் அவற்றுக்கான ஆவணங்கள் கிடைக்க வில்லை. அப்படியே இருப்பினும் அவை சில ஆண்டுகள் மட்டுமே இருந்திருக்கக் கூடும் என்றே ஆய்வாளர்கள் கருது கின்றனர்.

உலகில் தமிழர்களின் தொழில் நுட்பத்தின் அடையாளமாகத் திகழுவது கல்ல ணை. அது இன்றைய அதி நவீன நீரியல், நிலவியல் அறிஞர்களைக்கூட வியப் பில் ஆழ்த்தி நமது பழம் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. உலகில் தமிழினத்தின் மதிப்பு உயர்வதற்கு நமது தொன்மைக்கால வாழ்வியல் நெறிமுறைகளே முதன்மைக் காரணங்களாக முன்னிற்கின்றன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடபுலவியனார் என்னும் சங்கத் தமிழ்ப் புல வர், பாண்டிய நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்தும் பொருட்டு, எழுதப்பட்ட பாட்டு ஒன்று புறநானூற்றில் உள்ளது.

“நிலன்நெளி மருங்கின் நீர்நிலைப்பெருக
தட்டோரம்ம இவன் தட்டாரே
தள்ளாதோர் இவன் தள்ளாதோரே”

“பள்ளமான இடங்களைக் கண்டறிந்து, அங்கு மழை நீரையும், இயற்கையில்
கிடைக்கும் நீரையும் சேமித்து வைத்தல் மன்னனின் முதல் கடமையாகும்.
இதனைப் புறந்தள்ளியவன், மன்னன் என்னும் தகுதிக்குப்பொருத்தமற்ற வனா வான்” என்பதே இப்பாடலின்பொருளாகும்.

பெருவெள்ளம், மிகுவறட்சி ஆகிய இரண்டில் இருந்தும் காப்பாற்றிக் கொள் ளும் நீரியல் தொழில் நுட்பத்தை பண்டைத் தமிழ் மன்னர்கள் செயல் படுத்தும் திறன் பெற்றிருந்தனர் என்பதைப் பறைசாற்றிக் கொண்டு இருப்பதே கரி காலன் கட்டிய கல்லணையாகும்.

பழம் பெருமையைப் பேசிக் கொண்டு இருந்தால் மட்டும் போதுமா?இன்றையச் சூழலில் தமிழ்நாட்டில் நமது நிலைப்பாடு என்ன? என்பதனைக்கூர்ந்து நோக்கு வதே அறிவுடைமை ஆகும்.

- எனது தாத்தா ஆற்றில் ஓடுகின்ற நீரைப் பார்த்தார்!

- எனது தந்தை கிணற்றில் இருக்கின்ற நீரைப் பார்த்தார்!

- நான் குழாயில் வழிகின்ற நீரைப்பார்த்தேன்!

- எனது பேரப்பிள்ளைகள்..... அய்யோ!.....?????

இந்த நிலையில், தமிழ்நாடு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆண்டுதோறும் நீர்ப்பற் றாக்குறையால் நிலை குலைந்து தவிக்கும் மக்களையும், வறண்டு கிடக்கும் ஏரி குளங்களையும், வாடிக் கிடக்கும் விளைநிலங்களையும்,வானத்தைப் பார்த்து அழும் விவசாயிகளையும், குடி நீருக்காகக் குடத்துடன் அலையும் தாய்க்குலத்தையும், காலம் காலமாய்க் கதை விட்டுக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போய் விட்டது மக்களுக்கு.

இதிலிருந்து காப்பற்றி தங்களை மீட்டு எடுப்பதற்கு மறுமலர்ச்சி நாயகன் வைகோ ஒருவரால்தான் முடியும் என்பதே மக்களின் நம்பிக்கையாகும்.

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்தினோரே (புறம் -18)

2000 ஆண்டுகளுக்கு முன் சங்கப்புலவர் குடபுலவியனார் அறிவுறுத்தும் பாடல்
இது. எத்துணைதான் விஞ்ஞானம் வந்தாலும் அரிசியும் பருப்பும் காய் கனி களும் கம்ப்யூட்டரில் வரமாட்டாது என்பதனை எவ்வளவு அழகாக எளிதாக
எடுத்தியம்பியிருக்கிறார் புலவர் என்பதனை எண்ணிப் பார்க்கும்போது வியப் படைகிறோம்.

“நிலமும் நீரும்தான் உணவு.நிலத்தையும் நீரையும் சேர்த்தவர்கள் தான் உடம் பையும் உயிரையும் கொடுத்தவர்கள்” என்பதே மேற்கண்ட பாடலின் பொரு ளாகும்.

இதன்மூலம் நிலமும் நீரும் இணைந்து உணவு உருவாக்கத்திற்குத் தேவை யான அணை, ஏரி, குளம் ஆகிய நீர்த் தேக்கங்களை உருவாக்குபவர்களே மக் களது உடம்பையும் உயிரையும் தந்தவர்கள் என்கிறார் அவர்.

நீர் இயற்கையானது.எவரும் அதை உருவாக்க முடியாது.அது அனைத்து உயிர் களுக்கும் பொதுவானது. அதைத் தமக்கு மட்டுமே சொந்தம் என்று தேக்கி வைத்துக்கொள்பவர்கள் மனிதத் தன்மையற்றவர்களாவர். கேரளாவுக்கு இது பொருந்தும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்,நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 

கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப் பாற்றுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய நல்லறங்களில் எல்லாவற்றிலும் தலையாய அறமாகும் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

தண்ணீரும் தமிழும்

உலக அமைப்பில் தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்ப மண்டலப் பகு தியைச் சேர்ந்ததாகும். அதனால் தான் நீர் குறித்த மதிப்பீடுகளும், அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழர்களின் வாழ்வியலோடு பெருமைக்கு உரியதாகப் போற்றப் படுகிறது.

நமது தாய் மொழியான “தமிழ்” எனும் மொழிப் பெயருக்கு விளக்கம் அளித்த
அறிஞர்கள் குறிப்பிடும்போது, தமிழ் என்றாலே இனிமையும் நீர்மையும் பொருந்தியது என்று விளக்கம் அளித்தார்கள்.

நீரினால் உடலைச் சுத்தம் செய்திட காலையிலும், மாலையிலும் குளிப்பது
தமிழர்களின் வழக்கமாகும். (வட புலத்தார் இதற்கு மாறுபட்டவர்கள்) குளிர்ச்சி யுடையது என்பதனால் நீரைத் தண்ணீர் என்று குறிப்பிட்டனர்.குளித்தல் என் பது உடலைக் குளிர்ச்சி பெறச்செய்தல் என்றே பொருளாகும்.உடம்பில் உள்ள வெப்பத்தைக் குறைப்பதற்கு தண்ணீர் முதலிடம் பெற்றது.

தமிழ்ச்சொற்கள் அனைத்தும் காரண காரியங்களை உள்ளடக்கிஉருவானவை. நீர் நிலைகளைக் குறிப்பிடும் விதத்தில் உரிச்சொல் நிகண்டு 17 பெயர்களைச் சுட்டிக் காட்டுகிறது

ஏரி-தடாகம்-இலஞ்சியம்-கயம்-கேணி-கோட்டகம்-நளினி-பொய்கைமலங்கள் -மடு-ஓடை-வாவி-சலந்திரம்-வட்டம்-குட்டை-கிடங்கு-குளம். இவை ஒவ் வொன்றும் பல்வேறு காரணங்களுக்குப் பயன்படுகின்ற நீர்த் தேக்கங்களாகும். நீர் நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கிய பெயர்கள் யாவும் காரணத்தோடு அமையப் பெற்றவை.

ஏர் உழும் தொழிலான விவசாயத்திற்குப்பெரிதும் பயன்படக்கூடிய பெரிய நீர்த்
தேக்கங்களுக்கு ஏரி என்று பெயர்.மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தும் நீர்
நிலைக்கு குளம் என்று பெயர். ஊர் அருகில் அமைந்த குளத்தில் உள்ள நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்தினால் அதற்கு ஊருணி என்று பெயர். ஊரார் உண்ப தற்குப் பயன்படுத்துவதால் ஊருணி என்று ஆனது.

மழைக் காலத்தில் பள்ள மான குறுகிய நிலப்பகுதியில் தேங்கிய நீர் நிலைக்கு ஏந்தல் என்றும், குறுகிய வட்டத்தில் இருந்தால் அதற்கு குட்டை என்றும், நீண்ட கரைகளை உடைய நீர் நிலைகளை மடை என்றும் கண்ணாறு உள்ள தால் அதற்குக் கண்மாய் என்றும் பெயரானது.

தமிழ்நாட்டின் நிலப்பரப்பும் நீர்த் தேவையும்

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 325 இலட்சம் ஏக்கர். இதில் காடுகள், தரிசு
நிலங்கள், விவசாயம் இல்லாத நிலப்பரப்பு, உவர் நிலப்பரப்பு ஆகியவை போக மீதம் உள்ள 130 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே பயிரிடப்படுகின்றன.

இவற்றில் 75 இலட்சம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெற்றவையாகும். அரசு
கால்வாய்கள் மூலம் 20 இலட்சம் ஏக்கரும், ஏரிகள் மூலம் 15 இலட்சம் ஏக்கரும், கிணறுகள் மூலம் 40 இலட்சம் ஏக்கரும் நீர்ப்பாசனம் பெறுகின்றன.
மற்றும் தென்னை, கரும்பு ஆகிய பல்வேறு தோட்டம் துரவுகளுக்கும் நீர்
வேண்டும். இதற்குத் தேவைப்படும் நீரின் அளவு ஏறத்தாழ 1500 டி.எம்.சி.ஆகும்.

ஆயினும் மில்லியன் கனஅடி கொண்டது ஒரு டி.எம்.சி. (Thousand Million Cubid Feet ) ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடியாகும். ஒரு கன அடி என்பது 28 லிட்டர் இருக்கும்.

எந்த நாட்டிலும் ஆறுகளின் நீர் வளத்தைக் கணக்கிட்டே பொதுவான நீர்வளம் குறிப்பிடப்படுகிறது. அதன்படி பார்த்தால், நமது ஆறுகளின் மேற்பரப்பு நீர் 880 டி.எம்.சி. பிற மாநிலங்களில் இருந்து கிடைப்பது 430 டி.எம்.சி.பயன்படுத்தும் நிலத்தடி நீர் 440 டி.எம்.சி. தமிழகத்திற்கு மொத்த நீர் வளம் 1700 டி.எம்.சி. இதில் 1500 டி.எம்.சி. நீரைக்கொண்டுதான் 75 இலட்சம் ஏக்கர் பாசனம் செய்து வருகிறோம்.

மீதியுள்ள 200 டி.எம்.சி. நீரை வைத்துத்தான் தொழில்துறைகளுக்கும் குடிநீருக் கும், குளியலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். இது போதாது.விவசாயத்திற்கு மட்டுமல்ல, தொழில் துறைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரு கிறது.

தண்ணீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விவசாயத்திற்கு மட்டு மல்ல, மின் உற்பத்தி உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தண்ணீர்த் தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது.

நீர்வளம் ஒரு நாட்டின் சமூகப்பொருளாதார அடிப்படை எனப் பல காரணிகள் சேர்ந்து தண்ணீர்ப் பயன் பாட்டைத் தீர்மானிக்கின்றன. எடுத்துக் காட்டாக, வளர்ந்துள்ள நாடுகள் 85 விழுக்காடு நீர்வளத்தை தொழிற் சாலைகளுக்குப் பயன்படுத்துகின்றன.

நாம் பயன்படுத்துகின்ற கார் தயாரிப்பதற்கும் கூட தண்ணீர் தேவை என்பத னை மனதிற்கொள்ள வேண்டும்.அழகான ஒரு புதிய கார் தயாரிப்பதற்கு நான்கு இலட்சம் (4,00,000) லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இது போன்ற தொழில் நிறுவனங்கள் நீர் நுகர்வில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மற்ற பொருட்களைப் போன்று நீரை உற்பத்தி செய்ய முடியாது. நீர் சுழற்சி யினால் கடல்நீர் சூரிய வெப்பத்தில் ஆவியாகி,பின்னர் மழையாகப் பொழி கிறது.

- தொடரும்

நன்றிகள் 

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment