Monday, June 24, 2013

நெருப்போடு விளையாடாதே! -பகுதி 2

வன்னிக்காட்டில் நான் தம்பியோடு இருந்தபோது, ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். ஆங்கிலம் படிக்கவில்லை என்று அவருக்கு வருத்தம் இருந்திருக் கலாம். ஆனால், அருமையாகப் புரிந்து கொள்வார்; அதைப்பற்றி விளக்கமும் சொல்வார். மிக்கி மவுஸ் போல ஒரு கார்ட்டூன் படம். அந்த உருவம் ஆங்கிலத் தில் பேசுவது போல ஒரு குரல் வரும். அதை அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்துப் பிரபாகரன் சொல்லிக்கொண்டு இருந்தார் என்று மணி கூறினார்.

விடுதலை வேட்கையைத் தூண்டக்கூடிய படங்களைத்தான் அவர் விரும்பிப் பார்ப்பார். அது மட்டும் அல்ல, தன்னுடைய சகாக்களுக்கும் போட்டுக்காண்பிப் பார். அப்படிப்பட்ட படங்களில், பால் உணர்வைத் தூண்டுகின்ற காட்சிகள் மறைக்கப் பட்டு விடும். வன்னிக் காட்டில் அவரோடு இருந்தபோது, அப்படி இரண்டு மூன்று ஆங்கிலத் திரைப்படங்களையும் அவரோடு நான் பார்த்து இருக்கின்றேன். திரில்லர் படங்களைப் பார்ப்பார். யுத்தத்தை மனதிலே வைத் துக்கொண்டுதான், அதைப்பற்றிய படங்களைத்தான் பார்ப்பார். அவருக்கு நிகராகப் பணி அணிகளை நடத்தியவன் உலக வரலாற்றில் வேறு எவனும் கிடையாது.
இதை நான் சொல்லவில்லை. இந்திய அரசின் பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த அருண் சிங், சொல்லுகிறார். ராஜீவ் காந்தியோடு டேரா டூன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர். பள்ளியில் இருவரும் நெருக்கமான நண் பர்கள். இராஜபுத்திர மன்னர்களின் வழித்தோன்றலாக வந்த குடும்பத்தைச்
சேர்ந்தவர். இராணுவ போர் நுட்பங்கள் பற்றிய புத்தகங்களைத்தான் விரும்பிப் படிப்பார், எனக்குத் தெரியும்.நல்ல நண்பனாக அவரோடு பழகி இருக்கின்றேன்.


1988 ஆம் ஆண்டு.ஆபரேசன் செக்மேட் என்ற ஒரு ரகசியத் திட்டத்தின்கீழ் , எங் கே பிரபாகரன்? என்று தேடி அழிப்பதற்காக, இந்தியாவில் இருந்து அனுப்பப் பட்ட இராணுவம் சல்லடை போட்டுத்தேடிக்கொண்டு இருந்த காலகட்டத்தில், பிரபாகரனின் உயிரை முடித்து விட வேண்டும் என்றுதேடிக் கொண்டு இருந்த நாள்களில், ஒருநாள் நாடாளுமன்ற வராந்தா ஓய்வு இருக்கையில் நான் அமர்ந் து இருந்தேன். அப்போது, அவர் என் அருகில் வந்து அமர்ந்தார். என்னி டம் சொன்னார்: இதே ஆசியக் கண்டத்தில்தான், 6000 கிலோ மீட்டர்கள் நடந்து, பீகிங் மாளிகையில் செங்கொடியைப் பறக்கவிட்டார் மாவோ.ஆனால், எனக் குத் தெரிய, இந்த இருபதாம் நூற்றாண்டில், பிரபாகரனுக்கு இணையான இரா ணுவத்தை நடத்தக்கூடியவர்கள் வேறு யாருமே கிடையாது’ என்றார். (பலத்த கைதட்டல்.) அதனால்தான், ஏழு அணு ஆயுத வல்லரசுகளை எதிர்த்து நின்றார்.

வன்னிக்காட்டில் பேசிக்கொண்டே இருக்கின்றோம்.அவருக்குப் பக்கத்தில், கிட்டு உட்பட எல்லோரும் அமர்ந்து இருக்கின்றார்கள். என்னை உரை ஆற்றும் படிச் சொன்னார். யூதர்கள், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், தங்கள் பள்ளி களில் பிள்ளைகளிடம் கோலியாத்-டேவிட் கதையைச் சொல்லிக் கொடுக்கின் றார்கள். இன்றைக்கு இஸ்ரேல் என்ற தனிநாடு அமைக்கப்பட்டு இருக்கின்றது என்றால்,அவர்கள் போர்முனைக்குச் செல்வதற்கு ஊக்கம் அளித்தது அந்தக் கதைதான் என்ற செய்தியை, நான் சொன்னேன்.

ஒரு இரவில், கையில் தட்டுகளோடு சாப்பிட உட்கார்ந்து இருக்கின்றோம். அண்ணே, கோலியாத்தை டேவிட் அடித்து வீழ்த்தியதில் ஒரு சூட்சுமம் இருக் கின்றது என்றார். என்ன? என்று கேட்டேன். கோலியாத் தன் உடல் முழுக்க
கவசம் அணிந்து இருந்தான். தலைக்கும் கவசம் அணிந்து இருந்தான். அந்த
கோலியாத், டேவிட்டை பார்த்து, பிள்ளைப் பூச்சியே, காட்டுப்பூச்சியே உன் னைக் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் விருந்தாக வைக்கப்போ கிறேன் என்று சொன்னான். ஆனால், அவன் தலையில் அணிந்து இருந்த முக மூடியில், பொருத்துக்கு (நடுநெற்றி) அருகில் ஒரு சின்ன இடைவெளி இருந் தது. அந்த இடத்தைக் குறிபார்த்து டேவிட் கவண்கல் வீசினான். அப்படியே வீழ்ந்தான் கோலியாத் என்றார்.

அதுபோல, எந்தப் படை எதிர்த்து இருந்தாலும், அவர்களிடம் ஒரு பலவீனம்
இருக்கும். கிரேக்கத்து இலியட் காவியத்தில், மாவீரன் அக்கில்லசுக்குக் குதிங் காலில் இருந்தது பலவீனம். அப்படித்தான் அக்கினி அலைகள், ஓயாத அலை களைத் திட்டமிட்டு, நிகரற்ற சூரத்தனத்தை வெளிப்படுத்தி, தமிழன் யார் ? என் பதை அடையாளம் காட்டினாரே! மணி அவர்கள் கூறியது போல, தமிழனின் முகவரியை உலகுக்குக் காட்டியவர் அல்லவா பிரபாகரன்?(பலத்த கைதட்டல்)

தந்தை பெரியார் அவர்களையும், தம்பி பிரபாகரன் அவர்களையும் ஒப்பிடுகை யில், இருவரும் ஒன்றுதான்.எனக்கு நன்கு நினைவு இருக்கின்றது. யூல் பிரன் னர் நடித்த தாராஸ் புல்பா என்ற படத்தைப் பற்றி அவரிடம் சொன்னேன். பத் துக் கட்டளைகள் படத்தில், பாரவோன் மன்னனாக வருகின்றாரே யூல் பிரன் னர், அவர் நடித்த படம். சென்னை ராஜகுமாரி திரையரங்கில், 1964 ஆம் ஆண்டு பார்த்தேன். அந்தத் திரை அரங்கு இப்போது இல்லை. அந்தப் படத்தில், ஒரு பழங்குடி இன மக்களுக்குப் பூட்டப்பட்டு இருக்கின்ற அடிமை விலங்கை உடைத்து எறிவதற்கு, அவன் ஆயுதம் ஏந்தி வருகின்றான். அந்தப் படத்தின் தொடக்கமே, மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. கடைசியில், தன் மகனே, ஆளு நர் மகளைக் காதலித்து எதிரிப் படையில் சேர்ந்து விட்டதால், நேருக்குநேராக அவனைச் சுட்டுக் கொல்வான். இதைப் பற்றிச் சொன்னேன். அதை நான்
பார்த்தது இல்லையே? என்றார்.

அதுபோலத்தான், கிங் ஆஃப் தி சன் திரைப்படம். அதைப் பார்க்கின்றபோது, எனக்கு அடிமைப்பெண் படத்தின் முதல் காட்சி நினைவுக்கு வந்து விடும். ஏனெனில், ஒரு கையையும், காலையும் கட்டிக்கொண்டு சண்டை இடுகின்ற காட்சி, இந்தப் படத்தில் அருமையாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

எனவே, ஆங்கிலப் படங்களைப் பார்க்கின்ற ஆர்வமும், புரிந்து கொள்ளும் திற மையும் பிரபாகரனுக்கு இருந்தது, தந்தை பெரியாருக்கும், ஆங்கில அறிவு உண்டு. 

நம்முடைய மணி அவர்கள் மற்றொரு செய்தியை என்னிடம் சொன்னார்கள். அவருக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தால், என்னிடம் வந்து, இதை நான் சொல் லுவதை விட நீங்கள் சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்பார். (பலத்த கைதட்டல்). பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்து இருந்த பொதுக்கூட் டத்துக்கு என்னை அழைத்து இருந்தார். நான் சென்று இருந்தேன். அப்போது ஒரு செய்தியைச் சொன்னார். தூக்குத்தண்டனை விதித்த நீதிபதி தாமஸ் ஒப்பு தல் வாக்குமூலம் வந்து இருக்கின்றது.

இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைப் பற்றி அவர் சொல் கிறார். அதை நீங்கள் இங்கே சொன்னால் நன்றாக இருக்கும் என்றார். அது தான் கொளத்தூர் மணி.

அவர் சொன்னார், தந்தை பெரியாருக்கு ஆங்கிலம் நன்றாகப் புரியும். சுயமரி யாதைத் திருமணத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா
அவர்கள் முடிவு எடுத்து, அதற்கான வரைவைத் தயார் செய்து, மானமிகு வீர மணி அவர்கள் வழியாக, அய்யாவுக்கு அனுப்பினார். அய்யா படிக்கின்றார்.
வீரமணியை அழைத்துச் சொல்லுகின்றார். என்ன இப்படி இருக்கின்றதே?

Exchange of garlands, rings, taking solmenizing of oath and tying of Thaali என்று இருக்கின்றதே, மாலை மாற்றிக் கொள்ளலாம்; உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்; அதோடு தாலியும் கட்டித் தீர வேண்டும் என்று சொன்னால், அப்படியானால், புரோகித முறைப்படிதான் நடந்தாக வேண்டும் என்று பொருளாகின்றதே? எனவே, அந் தச் சொல்லை எடுத்து விட்டு, or tying of thaali என்று போட்டு விடுங்களேன்? 
என்கிறார். வீரமணியும் ஆமய்யா, நீங்கள் சொல்வதுதான் சரி என்று கூறி, அண்ணா விடம் எடுத்துக் கொண்டு வருகிறார்.அவரிடம் சொன்னபோது, என்ன வீரமணி, நீ எம்.ஏ., பி.எல்., நான் டபுள் எம்.ஏ., மாதவன் சட்ட அமைச்சர் ஒரு வழக்குரைஞர்.

இந்த வரைவை எழுதியவர் சட்டம் படித்தவர். நம்மில் எவருக்குமே இது தோன் றவில்லையே? ஐயா எவ்வளவு அருமையாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார் என்று வியந்தார். (பலத்த கைதட்டல்) அதனால்தான், கல்லூரி காணாத கிழவர் என்று அண்ணா பாராட்டினார்.

கான்பூரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்கு,தந்தை பெரியாரும், வீரமணியும் சென்று இருந்தனர். பெரியாரின் பேச்சை, வீரமணி மொழிபெயர்க் கின்றார். அப்போது, சமையல் செய்கின்ற அடுப்பு என்பதைச் சொல்லுவதற்கு, கொஞ்சம் வீரமணி திணறுகின்றார். அங்கே அவர் இடறுவதைப் பார்த்துப்
பெரியார் சொல்லுகிறார், அது ஓவன் (Oven)  என்று.அதற்குப்பிறகு, பெரியார் ஆங்கிலத்திலேயே அந்த மாநாட்டில் பேசி இருக்கின்றார் .(பலத்த கைதட்டல்.)

அதனால்தான், ஜின்னா அவர்களோடும்,அண்ணல் அம்பேத்கரோடும் 1940 ஆம் ஆண்டு சந்தித்துவிட்டு வந்தார். அதற்குப் பிறகு, மார்ச் மாதத்தில்தான், பாகிஸ் தான் பிரகடனத்தைச் செய்கிறார் ஜின்னா.

பெரியாரின் உணர்வுகளைச் சொல்லுகின்றபோது, அதே உணர்வோடுதான், தான், தனது குடும்பம் என்ற எண்ணமே இல்லாத மனநிலையைத்தான் மாவீரர்
திலகம் பிரபாகரனும் கொண்டு இருந்தார். அலைபாயும் கடலில், எந்த நேரத் திலும் தாக்கிக் கொல்லப்படலாம் என்ற நிலையிலும்,தன் துணைவி மதிவத னியையும், பிள்ளைகளையும் வரச் சொன்னதற்கு, இங்கே மணி அவர்கள் விளக்கம் தந்தார். தன்னல உணர்வு இல்லாத ஒரு வாழ்க்கை. தான், தனது குடும்பம் என்ற எண்ணம் இல்லாத ஒரு வாழ்க்கை.

என்னுடைய அன்புக்கு உரியவர்களே,

ஆயுதம் ஏந்துவது எதற்காக? என்பதற்கு, இந்த நூலில் விளக்கம் இருக்கின்றது. எதிரிகள் ஆயுத பலத்தோடு நம்மை அழிக்க முனைந்தால், நினைத்தால், நாமும் ஆயுதம் ஏந்தலாம் என்ற விளக்கம் தரப்பட்டு இருக்கின்றது. அந்த உணர்வோடுதான், நான் இங்கே பேசுகிறேன்.

இன்னொரு செய்தி. 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி. தஞ்சை யில், திராவிடர் கழக மாநாடு.அங்கே பெரியார் பிரகடனம் செய்கிறார்: சாதி ஒழிப்பு மாநாடு. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால்,சாதிக்கு அங்கீகாரம் தரு கின்ற, இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்த வேண் டும் என்கிறார். நவம்பர் 26 ஆம் தேதி அந்தப் போராட்டம் நடக்கும் என்று அறி விக்கிறார்.

இதை நான், இப்படிப் பார்க்கிறேன். இந்தத் தேதியில்தான் பிரபாகரன் பிறக் கிறார். (பலத்த கைதட்டல்). இந்த நூலுக்கு, தந்தையும், தம்பியும் என்று என்ன
அருமையான தலைப்பு வைத்து இருக்கின்றீர்கள்!

அன்றைக்கே அந்தத் தேதியைத் தெரிவு செய்தார்,தந்தை பெரியார். போராட்டம் நடக்கின்றது. 4000 க்கும் மேற்பட்ட கருஞ்சட்டை வீரர்கள் கைது செய்யப்பட் டனர். ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள் சிறைவாசம். பலரது குடும்பங்கள் சின்னாபின்னமாயிற்று. தந்தை பெரியாருக்கும் சிறைத்தண்டனை. சுதந்திரத் தமிழ்நாடு,தனித்தமிழ்நாடு என்ற வேட்கையை, நெஞ்சில் ஏந்திக்கொண்டு செல்கிறேன் என்றார்.

1938 டிசம்பர் 6 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு,பெல்லாரி சிறையில் அடைக் கப்பட்டார். அவரது உடல் நலம் மிகவும் குன்றி, உயிருக்கு ஆபத்து என்ற நிலையில்,1939 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதில் அவருக்கு மகிழ்ச்சி இல்லை. அப்போது அவர் சொன்னார்: நான் இந்தச் சிறையிலேயே செத்து இருக்க வேண்டும் என் றார். சாவைப் பற்றி எதுவுமே சொல்லாத தந்தை பெரியார், இப்படிச் சொன் னார். ஏன் சொன்னார் தெரியுமா? அப்படி நான் செத்துப் போயிருந்தால், எண் ணற்ற இளைஞர்களுக்கு வீர உணர்ச்சியை என் சாவு ஏற்படுத்தி இருக்கும் என்று சொன்னார். (பலத்த கைதட்டல்).அப்படிப்பட்ட உணர்வு கொண்ட வர் தந்தை பெரியார்.

தம் உயிர் மூச்சு அடங்குவதற்கு முன்பு,1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி, இதே தியாகராயநகரில்தான், தம் இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
இன்றைக்கு தியாகராயர் பெயரால் அமைக்கப்பட்டு இருக்கின்ற அரங்கத்தில் நான் பேசுகிறேன். தம் உடலில் பல உறுப்புகள் இயங்க மறுத்த நிலையிலும், இந்த மண்ணுக்காக முழங்கிய தந்தை பெரியாரைப்போல், வேறு எவரும் இல்லை. அப்பொழுது அவர் பேசுகிறார். டெல்லியைப் பற்றிச் சொல்லுகிறார்.

1500 கல்லுக்கு அப்பால் இருக்கின்ற உனக்கும், எனக்கும் என்னடா உறவு? நீ வேறு, நான் வேறு. உன் மொழி வேறு, என் மொழி வேறு. நீ பேசுவது எனக்குப் புரியாது.உன் பழக்கம் வேறு, என் பழக்கம் வேறு. உனக்கும் எனக்கும் என்ன உறவு?

இங்கே என் நாட்டில் மலை இல்லையா? கடல் இல்லையா? கரும்பும், நெல் லும் விளையவில்லையா? இங்கிருந்து நீ ஓடி விடு. ரகளை வேண்டாம். இது தான், தந்தை பெரியார் அறிவித்து விட்டுப் போன பட்டயம்.(பலத்த கைதட் டல்). 

அதைச் செயல்படுத்த வேண்டும், தந்தை பெரியாரின் கனவை நனவாக்கி விட வேண்டும் என்றுதான்,சோனியாவின் தலைமையில் இயங்குகின்ற காங் கிரஸ் கட்சி, கச்சை கட்டிக்கொண்டு வேலை செய்கின்றது.(பலத்த கைதட் டல்.) அதனால்தான், முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, தெற்குச் சீமையை அழிப்பதற்கு, ஒத்துப் போய்க் கொண்டு இருக்கின்றது. காலங்கால மாக, அரிசி, பருப்பு, பால், காய்கறிகள் தந்து கொண்டு இருக்கின்றோமே அந்த மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துக் கொண்டு போகின்றார்கள். அதற் காகப் பொய்க்குமேல் பொய்களைச் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அன்றைக்கு எங்கள் பாட்டன் சூளுரைத்த தியாகராய நகரில் நின்றுகொண்டு சொல்லுகிறேன், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், இந்தியா துண்டு
துண்டாக உடைந்து சிதறும். (பலத்த ஆரவாரம்).உடைப்போம் என்று நானே பேசுவேன். என்ன வழக்கு வேண்டுமானாலும் போடு.

பெரியாரின் பெயரைச் சொல்வது என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். அவ ரைப் போல உணர்வுகொண்டு இருக்க வேண்டும். (விசில் சத்தம்). எல்லா
விஷயங்களிலும் அவரைப்போல என்னால் இருக்க முடியாது; ஆனால், இந்த ஒரு விஷயத்தில் அப்படி என்னால் இருக்க முடியும்.

இந்திய அரசையும், கேரள அரசையும் எச்சரிக்கிறேன்: நெருப்போடு விளையா டாதே.

பிள்ளை, குட்டி என்ற பாசத்தைத் தூக்கி எறிந்தவன்தான் இலட்சியவாதியாக இருக்க முடியும்! அத்தகைய இலட்சிய நெருப்புதான் எங்கள் பிரபாகரன்.காலக்
கடைத்தீயாக எழுந்தவன். ஏழு வல்லரசுகளை எதிர்த்துப் படை நடத்தியவன். முப்படைகளை அமைத்தவன்.

நான் சில நாள்களுக்கு முன்னர் பஞ்சாப் சென்று இருந்தேன். முதல் அமைச்சர் பாதல் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று இருந்தேன். சீக்கியர்களின் வர லாறைச் சித்தரிக்கின்ற அருங்காட்சியகத்தை அமைத்து இருக்கின்றார்கள். அங்கே என்னை அழைத்துச் சென்றார். சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேஜ் பகதூர் வாழ்க்கையைச் சித்தரித்து இருக்கின்றார்கள்.தில்லி செங்கோட் டைக்கு எதிரே இருக்கின்ற சாந்தினி செளக் என்ற இடத்தில், அவரது தலை யைத் துண்டித்துக் கொன்றார்கள். அதை அவரது மெய்க்காப்பாளன் பத்திரமாக ஒளித்து எடுத்துக்கொண்டு போய்விட்டான்.பஞ்சாப்புக்கு எடுத்துச் சென்றார் கள். தேஜ்பகதூரின் ஒன்பது வயது மகன், தந்தையின் துண்டிக்கப்பட்ட தலை யைப் பார்த்தான். அவன்தான் கோவிந்த சிங். ஆயுதம் ஏந்தினான். படையைத் திரட்டினான். அதற்கு விளக்கம் கொடுக்கின்றான்.

When all other means rare failed, it is permissble to draw the sword.

எல்லா முறைகளும் தோற்றுப் போனால், வாள் ஏந்தலாம் என்றார்.

பிரபாகரன் அதைத்தான் செய்தார். தமிழர்களுக்கு அழிவு நேர்ந்ததால், ஆயுதம் ஏந்தினார்.

அந்த கோவிந்த சிங்தான், சீக்கியர்களின் பத்தாவது குருவாக ஆனார். அவர் ஒரு அற்புதமான கவிஞரும் ஆவார். தந்தையைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது, He lost his head; but never cried in pain என்று சொன்னார்.

அடுத்து அவர் சொல்லுவதுதான், நமக்குத் தேவையானது. எதிரிகளின் படை பலத்தைப் பற்றிப் பிரபாகரன் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது. 40 பேர்களோடு கோவிந்தசிங் போராடியதாக அவர்களது வரலாறு சித்தரிக் கின் றது. 28 பேர்களோடுதான், வன்னிக்காட்டுக்கு உள்ளே சென்றார் பிரபாகரன்,
இலட்சம் பேர் கொண்ட படையை எதிர்ப்பதற்கு!

Train a swallow to hunt the hawk.

வல்லூறை வேட்டையாட, சிட்டுக்குருவிக்குப் பயிற்சி கொடு. கவி இக்பால் வேறுமாதிரியாகச் சொன்னான்.

Train a man to fight a Legion.

ஒரு படையை எதிர்த்துப்போராட,ஒரேயொரு வீரனுக்குப்பயிற்சி கொடு.இதை ஈழத்தில் செய்து காட்டியவர் பிரபாகரன். (கைதட்டல்).

குரு கோவிந்தசிங்கின் நான்கு பிள்ளைகளும் கொல்லப்பட்டார்கள். ...... யுத்த களத்தில், இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள். செய்தி வருகிறது. ஒன் பது வயது, ஏழு வயதுச் சிறுவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில், தாயார் இறந்து போகிறார். இதையெல்லாம்
நினைக்கின்றபோதே நமது நெஞ்சம் பதறுகிறது.கண்ணீரும், கம்பலையுமாக வீரர்கள்போய் அவரிடம் சொல்லுகிறார்கள்.

அப்போது அவர் சொல்லுகிறார். ஊழித்தீயென யுத்தம் என்கின்ற பெருநெருப் பை நாம் வளர்க்கின்றபோது அதில் சில கங்குகள் அணைந்து போவதைப் பற்றிக் கவலைப்பட முடியுமா? என்று கேட்கிறார்.

அதையெல்லாம் பார்த்தபோது, என் மனத்திரையில்,வன்னிக்காட்டின் காட்சி கள்தாம் விரிந்தன.அப்படிப்பட்ட உணர்வோடு, தாயக விடுதலைக்காகப் புலி கள் சிந்திய இரத்தம், ஒருபோதும் வீண்போகாது.

காசி ஆனந்தன், தமது நறுக்கு களில் சொல்கின்றார்.

மிகவும் கவலைப்பட்டதாம் கூழாங்கல்.

வைரத்தை மட்டும் கண்ணாடிப் பெட்டியில் வைத்து அழகு பார்க்கின்றீர்களே? என்னை எவருமே மதிப்பது இல்லையே ? என்று.

அது எத்தனையோ ஆண்டுகள், மண்ணுக்குள் புதைந்து தவம் இருந்ததால் தான், வைரம் அந்தச் சிறப்பைப் பெற்றது; அதுபோல, நிறைவாகும் வரை மறை வாக இரு என்றார். அப்படித்தான் இருக்கின்றார் பிரபாகரன். (பலத்த கைதட் டல்). இருக்கிறார், நம்மை இயக்குகிறார்.(ஆரவாரம்).

கூட்டத்துக்கு நீங்கள் போடுகின்ற தடைகள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்; நொறுங்கிப் போய்விடும்.எனவே, இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

உலகம் முழுமையும் தமிழர்களின் உள்ளம் துடிக்கின்ற வேளையில், பிறக் கின்ற குழந்தை வளர்கின்றபோது உச்சரிப்பது, பிரபாகரன் என்ற சொல். அந்த மாபெரும் தலைவன், அன்போடு தம்பி என்று அழைக்கப்படுவது போல, தந்தை யும், தம்பியும் என இரண்டு மாபெரும் தலைவர்களை நீங்கள் இந்த நூலில் சித்தரித்துக் காட்டி தங்கபாண்டியன் அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும்
சொல்லத் தமிழர் உலகம் கடமைப்பட்டு இருக்கின்றது.

மலரும் தமிழ் ஈழம்; தந்தை பெரியாரின் கனவும் நனவாகும்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment