Sunday, June 30, 2013

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -4

அரசின் ஆதரவுடன் நிலத்தடி நீர் கொள்ளை...

1000 லிட்டர் தண்ணீரை 18 ரூபாய்க்கு வாங்கி
ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பதற்குப் பெயர் என்ன?

நம் தமிழ்நாடு தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலமாக ஆனதற்கு மாநிலங்களின்
எல்லைக்கோடு, வரையறுப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள்தான் முதல் காரண மாகும்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை,சென்னை முதலிய இடங்களுக்கு இடையி
லான நாடுகளைப் பல அரசர்கள், சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அதில் இன்று (தெலுங்கானா பகுதியான) நிஜாம் என்ற மன்னர் ஆண்ட பகுதிக்குத் தென் கிழக் கேயும், திருவிதாங்கூர்-கொச்சி மன்னர் ஆண்ட பகுதிக்குக் கிழக்கேயும் பெரும் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மன்னர்கள் யாரும் ஆட்சி செய்ய வில்லை.
எனவே இந்தப் பகுதியை எல்லாம் சேர்த்து சென்னைப் பட்டினத்தைத் தலை நகராக வைத்து “சென்னை இராஜதானி” என்று பெயர் வைத்து பிரிட்டானியர் ஆட்சி புரிந்தனர்.

அன்று இருந்த அரசுகள், ஜமீன்கள் எல்லாம் மக்கள் வாழும் பகுதிகள், பயிர்த்
தொழில் செய்யும் பகுதிகளை மட்டும், அதாவது வரி வசூல் செய்யக்கூடிய
பகுதிகளை மட்டுமே தங்கள் நாடு என எல்லை வகுத்துக்கொண்டனர்.



மீதி உள்ள பெரிய காடு, மலைகள் உள்ள பெரும் பகுதிகள் எல்லாம் யாருடைய ஆளுகையும் இல்லாமல் இருந்த காலத்தில்தான் மொழிவழி மாநிலப் பிரி வினை ஏற்பட்டது.அப்போது விழித்துக் கொண்டவர்கள் தங்கள் மாநில எல் லைக் கோடுகளை விரிவாக்கிக் கொண்டார்கள்.

தமிழர்கள் அப்போதும் இளிச்சவாயர் களாகவே இருந்தார்கள். தேவிகுளம், பீர் மேடு பகுதிகளைத் தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டும் என்று தமிழர்கள்
கோரிக்கை வைத்தபோது, “அட... போய்யா..... குளமாவது மேடாவது, எல்லாம் இந்தியாவில்தானே இருக்கிற துன்னே” என்று காமராசர் சொன்னார்.அதனால் தான் தேவிகுளம், பீர்மேடு கேரளத்தோடு போக நேர்ந்தது.

பொதுவாக தமிழ்நாட்டைக் கெடுத்தது காங்கிரஸ்காரர்களும், கருணாநிதியும்
தான் என்பதே வரலாற்று உண்மையாகும்.

நிஜாம் சமஸ்தானம், மைசூர் சமஸ்தானம்,திருவிதாங்கூர்-கொச்சி சமஸ் தானம் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகளான தெலுங்கு பேசும் பகுதிகள், கன் னடம் பேசும் பகுதிகள், மலையாளம் பேசும் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட் டோடு இணைந்து சென்னை இராஜதானி என்று வைத்து வெள்ளையர் ஆட்சி நடத்தினர்.அதன் பின்விளைவுகள்தான் தமிழ் நாட்டுக்குப் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தின.

திராவிட இயக்கப் பார்வையில் நோக்கினால், பொதுவாக இவர்கள் எல்லாம் தமிழருக்கு பெரும் பங்காளிகள் எனக் கூறலாம். உடன் பங்காளி களுக்குள் பாட்டனார் சொத்துப் பிரிவினையின்போது பத்தடி நிலத்திற்காக வெட்டுக் குத்தெல்லாம் நிகழ்வதுண்டு. ஆகவே, பெரும் பங்காளிகளுக்குள் ஒரே கருத் தும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் எப்படி வர முடியும்?

மாநிலப் பிரிவினையின்போது கேரளக் காரர் கிருஷ்ணமேனன் போன்ற சில
மலையாளிகள் நேருவிடம் நெருக்கமாக இருந்தனர். அதனால் தான் ஒரு
மலையாளிகூட இல்லாத மூணாறு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழ் நாட்டிலிருந்து பிரித்து கேரளத்தோடு சேர்க்க நேர்ந்தது.

பாலாற்று நீரை பங்குபோட்டது ஏன்?

சென்னை இராஜதானியாக இருந்தவரை பாலாறு உற்பத்தியான இடத்திலி ருந்து கல்பாக்கம் வரை 240 கிலோ மீட்டர் தொலைவு தமிழ் மக்களோடுதான்
உறவாடியது. மொழிவாரி மாநிலங்கள் உருவாகும்போது, தமிழ்நாட்டுப் பகுதி யான சித்தூரை ஆந்திராவுக்கும், தங்கவயல் கோலாரை கர்நாடகத்திற்கும்
விட்டுக்கொடுத்ததால், பாலாறு 70 கிலோ மீட்டர் கர்நாடகத்திலும், 22 கிலோ மீட்டர் ஆந்திராவிலும் புகுந்து வரும் நிலை உருவாக்கப்பட்டது. இந்த அநீதி யைத் தட்டிக் கேட்கவும், தடுத்து நிறுத்தவும் அன்றைய தினம் வைகோவைப் போன்ற தொலை நோக்குச் சிந்தனையுள்ள தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

இன்றைய நிலையில், பாலாற்று நீர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்காத நிலை ஏன் ஏற்பட்டது? ஆந்திராவுக்குள் நுழைந்து போவதால் பாலாற்றில் 26 தடுப்பு அணைகளைக் கட்டியுள்ளனர்.

பவானி ஆற்றை கேரளத்துக்குள் நுழைத்தது ஏன்?

தமிழ்நாட்டுக்குள் உற்பத்தியாகும் பவானி ஆறு, தமிழர்களின் தண்ணீர் தேவைக்குப்பயன்படாத விதத்தில் கேரள எல்லைக்குள் போய்வருமாறு திட்ட மிட்டே செய்திருக்கிறார்கள். 

தமிழ்நாட்டுக்குள்ளே உற்பத்தியான பவானி ஆறு,தேவையில்லாமல்16 கிலோ மீட்டர் தொலைவு மட்டும் கேரளத்திற்குள்ளே போகுமாறு எல்லை வகுத்தது மகா அயோக்கியத்தனமாகும்.

இன்றைய நிலையில், முல்லைப் பெரியாறு தேக்கடி அணை உள்ள தேவி குளம், பீர்மேடு பகுதிகளில் 1956 இல் கேரளக்காரர்கள் குடும்பம் ஒன்றுகூட இல்லை. வேண்டுமானால், அன்றைய மக்கள் பதிவேடுகளைப் பார்த்துக் கொள்ளலாம். மலையாள மொழி பேசும் ஒருவர்கூட இல்லாத தேவிகுளம், பீர் மேடு பகுதிகளைக் கேரளத்தோடு சேர்த்தது தமிழனுக்குச் செய்த மாபெரும் மோசடியாகும்.

“கம்பம் மெட்டு, வண்டிப் பெரியாறு வழியாக இராஜபாளையம், சிவகிரிக்கு
இடைப்பட்ட செண்பகத் தோப்புவரை எல்லை குறித்திருந்தால், முல்லைப்
பெரியாற்றில் வரும் தண்ணீர் இராசபாளையம் சிவகிரி பகுதிக்குத் திருப்பி, தமிழ்நாட்டுக்குள்ளேயே கொண்டு சென்றிருக்கலாம்” எனும் கருத்தைத் தக்க ஆதாரங்களுடன் தலைமைப் பொறியாளர் ஒருவர் விளக்கிக்கூறினார். (அவரது பெயரைச் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை)

தமிழக அரசியலில் முழு அதிகார பலத்துடன் வைகோ அவர்களை உருவாக்கி னால், தமிழர்களிடம் இருந்து பறிபோன நிலப்பகுதிகளையும், நீர்வளத்தையும் மீட்டுருச் செய்திடும் நிலைமை ஏற்படும். அதற்குப் போதுமான ஆதாரங்களை முன்வைத்து இந்திய அரசை இழுத்துக்கொண்டுவந்து எல்லைக்கோடுகளின் அநீதிகளைத் திருத்தி அமைக்கச் செய்திடும் வல்லமை வைகோ ஒருவருக்குத் தான் உண்டு.ஆம், அது அவரால் முடியும்.

இயற்கைச் சூழல், அரசியலில் நமக்கு எதிராகவே இருந்து வருகிறது. அடர்த்தி யான புளியமரத்திற்கு அடியில் இன்னொரு மரம் வளராது. இரண்டு புளிய மரங்களுக்கு அடியில் ஒரு மல்கோவா மாமரத்தை வளர்க்க விரும்புகிறோம். இயற்கைதான் இடைவெளி தரவேண்டும்.

தென்மாவட்டங்களில் வைகோ பேசும்போதெல்லாம் “நில புலன்களை விற்று விடாதீர்கள்” எனும் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் பார்த்திருக் கிறோம். அதற்குக் காரணம் என்ன? மக்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடக் கூடாது என்பதுதான்.ஆளவந்தாரின் அலட்சியத்தால் இழந்த நீர் வளத்தை மீட்க முடியும் என்கிற நம்பிக்கை வைகோவுக்கு உண்டு.அதற்கான வழிமுறை களும் உண்டு.அதற்கான வாய்ப்புகளும் உண்டு.நாளை வரும் ஆபத்தினின்று
காப்பாற்றும் திறனுள்ளவன்தான் தலைவன். விபரீத விளைவுகளைத் தடுப்ப வன்தான் தலைவன். இத்தகைய தலைமைத் தகுதியைப் பெற்றிருப்பவர்
வைகோ ஒருவர்தான்.

தேனி மாவட்ட மேற்கு மலைத் தொடரில், தமிழ்நாட்டுப் பகுதிகளின் அடி வாரங்களில் உள்ள விளை நிலங்களை அதிக விலை கொடுத்தாவது தமிழர் களிடமிருந்து வாங்கு வதற்காக கேரள அரசு மலையாளி களுக்குக் கோடிக்க ணக்கில் கடன் வசதி செய்து கொடுக்கிறது. 30 சதவீதம் மானியத்துடன் கோடிக் கணக்கில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் அறிந்த காரணத் தால் தான் “நிலங்களை விற்காதீர்கள்” என்று வைகோ எச்சரித்து வருகின்றார்.

கூலிக்கு (பிட்டுக்கு) மண்
சுமந்தான் சிவபெருமான்
ஊருக்கு மண் சுமந்தார் மக்கள்
தலைவர் வைகோ

சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை உணர்ச்சி இருக்கவேண்டும்.
இத்தகைய பொதுநலக் கருத்தை பாமர மக்களிடமும் பதிய வைப்பதற்காகவே
பண்டைக் காலத்தில் கதை புனையும் கலையைத் தமிழர்கள் பெற்றிருந்தனர்.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு மதுரை நகருக்குள் புகும் அளவுக்கு வரு கிறது. வீட்டுக்கு ஒருவர் வந்து தடுப்பு அணை கட்டி வெள்ளத்தைத் தடுக்க வேண்டும். பாண்டிய மன்னரின் அவசர உத்தரவு.பிட்டு உணவு விற்றுப்பிழைக் கும் மூதாட்டி தன் சார்பில்,ஒரு ஆளை வேலைக்கு அனுப்ப முயன்றார். யாரும் கிடைக்கவில்லை. இதை அறிந்த சிவபெருமான் கூலி ஆளாய் மாறு வேடம் தரித்து கிழவியிடம் வந்து நின்றான். “ஒரு வேளை உணவு (பிட்டு)
மட்டும் கொடுத்தால் போதும், உன் சார்பில் நான் வேலைக்குப் போகிறேன்”
என்றான். பாண்டிய மன்னரின் மேற்பார்வையில் தடுப்பு அணை கட்டும் வேலை நடைபெறுகிறது.மூதாட்டி அனுப்பிய வேலைக்காரன் சரியாக வேலை செய்யாததால், அவனது முதுகில் பாண்டிய மன்னர் தனது கைப்பிரம் பால் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். அந்தப் பிரம்பு அடி அனைத்து மக்களின் முது கிலும் தடித்து வீங்கி வலித்தது என்பது கதை.

மக்களைக் காக்க வேண்டிய கடப்பாடுடைய சிவபெருமான்கூட (பிட்டுக்கு) கூலிக்குத்தான் மண் சுமந்தான். ஆனால், மக்கள் தலைவர் வைகோ அவர்கள் ஊர் நலம் காக்கும் குளம் தூர்வாறும் பொருட்டு, கடமைக்கு மண் சுமந்த வர லாறு உண்டு. ஊதியம் இல்லாமல் ஊருக்கு உழைக்கும் தொண்டுத் தலைவன் வைகோ அவர்களுக்கு இணையாகத் தமிழகத்தில் வேறு எவரும் இல்லை என் பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

அரசியல் அடிப்படையில் எம்.பி. பதவி எனும் ஒரு ஊன்றுகோல் மட்டும் வைகோவுக்கு இருந்தால் போதும். அதை வைத்துக்கொண்டு எவரெஸ்ட் சிக ரத்தைக்கூட தன் பாதத்திற்கு அடியில் இருக்கும் நிலையை உருவாக்கி விடு வார். தக்க தருணத்தில் அதை வழங்கிட தமிழக மக்களை நாம் தயார் படுத்த வேண்டும்.

இனி மூன்றாவது உலக மகாயுத்தம் ஏற்பட்டால், அது தண்ணீருக்கு ஆன யுத்த மாகத்தான் இருக்கும் என்று சில ஏடுகளும், தொலைநோக்குச் சிந்தனையாளர் களும் எச்சரித்து இருக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் 2030 இல் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் மிகக் கடுமையான
வறட்சியாலும் தண்ணீர் பற்றாக் குறையாலும் பாதிக்கப்படுவர் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மிகவும்
குறைவான அணைகளையே கட்டியுள்ளது. சீனாவில் உள்ள பெரிய அணை களின் எண்ணிக்கை 22,000 ஆகும். அமெரிக்காவில் உள்ள பெரிய அணைகள் 6557 என்றால், இந்தியாவில் 4291 அணைகளே உள்ளன.இந்தியாவில் உள்ள தமிழ்நாடு ஒரே ஒரு பெரிய அணையை மட்டுமே வைத்துள்ளது.

உலகின் மக்கள் தொகையில் 40 விழுக்காடு மக்கள் 214 மிகப்பெரிய அணை களையே நம்பியுள்ளனர்.ஒருவேளை நாடுகள் இடையே ஏதாவது யுத்தம் ஏற் பட்டால், முதலில் குடி தண்ணீரையே ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் நிலை ஏற்படக் கூடும் என்பதற்கு ஒரு முன்மாதிரி உண்டு.

1991 இல் வளைகுடாப்போர் நடந்தபோது, அணைகள் மீது அமெரிக்க வல்லரசு நச்சுக் குண்டுகளை வீசியது.அதனால் குடிக்கக்கூட நீர் கிடைக்காமல் செய்தது. அதைப்போல இராக் போரிலும் பாக்தாத்தின் நீர் ஆதாரத்தைக் கொடிய விச மாக்கியது. 1999 இல் நேட்டோ குண்டுகளை வீசி யூகோஸ்லோ வியாவின் நீரை முழுவதுமாக விசமாக்கியது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் அந்த நாடுகள் எல்லாம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தித் தான் தப்பிக்க நேர்ந்தது. நம் தமிழ்நாட்டில் நிலத்தடி நீரும் வற்றிப்போய்விட்டது. அண்டை மாநிலங்கள் செய்யும் அக்கப்போர் என்றும் நம்மைக் கவலைக்கு ஆளாக்கி வருவதை மறந்து விட முடியாது.

மழைக்காலத்தில் வீணாகும் நீரைச் சேமித்து வைத்தாலே போதும்

குழாயின் வாயிலாக ஒரு சொட்டு நீர் விணானால் ஒரு நாளுக்கு 60 லிட்டரும்,
ஒரு மாதத்திற்கு 1,800 லிட்டர் அளவிலும் நீர் வீணாகிறது.

மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீர் 50 சதவிகிதம் வரை வீணாகிறது. இவற்றில் 30 சதவிகித நீர் கடலில் சென்று கலந்துவிடுகிறது.ஆறுகள் மூலம் கடலுக்குச் செல்லும் நீரின் அளவு 170 டி.எம்.சி. என்று தமிழகப் பொதுப்பணித் துறை நீர்வள நிறுவனத் தலைமைப் பொறியாளர் இராமன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்குள் நதிநீர் இணைப்பைச் செயல்படுத்தினாலே - அதன் மூலம்
இன்னொரு காவிரிநதி ஓடும் அளவுக்குத் தண்ணீர் நமக்குக் கிடைக்கும் என் பதற்கான ஆதாரங்களை அவர் தெளிவுபடுத்துகின்றார்.

பருவ மழைக் காலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங் களில் பெய்யும் மழை நீர் அப்படியே கடலுக்குச் சென்று விடுகிறது. அந்தச் சமயத்தில் காவிரியிலும் பெருவெள்ளம் வருகிறது.எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கடலுக்குப் போய்விடுகிறது. எனவே கடலோரத்திலிருந்து 30 - 40 கிலோ மீட்டர் முன்பாக தடுப்பு அணைகள் கட்டுவது காவிரி நீர் பற்றாக்குறை யைச் சரிப்படுத்துவதற்குச் சிறந்த வழியாகும் என்பதே பொறியாளர்களின்
எண்ணமாகும்.

கர்நாடகா காவிரி வழியாக அளிக்கும் 205 டி.எம்.சி.யும் சேர்த்து, தமிழகத்தில்
பெய்யும் மழை மற்றும் ஆறுகள் வழியாகக் கிடைக்கும் தண்ணீர் அளவு 1163 டி.எம்.சி. ஆகும். தமிழ் நாட்டில் எந்தெந்த நதிகளை - எந்தெந்த நதிகளுடன் இணைத்தால், அதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் எவ்வளவு என்பதனை, நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆளவந்தார்க்கு அறிவித்துள்ளனர்.அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து வழியிலான நீர் வள ஆதாரங்களையும், சேமிப் பதற்குதமிழக எல்லைக்குள் உட்பட்டு ஓடும் ஆறுகள் ஆகியவை அனைத்தை யும் இணைக்க வேண்டும்.அப்போது தான் தமிழகத்தின் நீர்வளம் உள்ள பகுதி களில் இருந்து நீர்வளம் இல்லாத பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்க முடியும்.

ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்டப்பட வேண்டும். தரைப்பகுதி பாறைகளாக இருப்பின் அத்தகைய இடங்களில் ப வடிவத்தில் தடுப்புச் சுவர் எழுப்பினால், சுவர் மட்டத்திற்குத் தண்ணீரைத் திசைமாற்றி பாறைப் பகுதிகளிலும் நீரைச் சேமிக்க முடியும். இப்படி எத்தனையோ பல திட்டங்களை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளன.அவற்றையெல்லாம் ஆளவந்த வர்கள் பயன்படுத்தவில்லை. மக்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வைகோ வந்தால் மட்டுமே இத்தகைய
நீர்வளத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அந்த நாள் எப்போது வரும்?
காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

நிலத்தடி நீர் கொள்ளையோ கொள்ளை

தமிழ் நாட்டில் நிலத்தடி நீர் சுவடு தெரியாமல் கொள்ளையடிக்கப்பட்டு வரு கிறது. அரசின் ஆதரவோடு நடைபெறும் பகல் கொள்ளை இப்படியே தொடரு மானாhல், நீராதாரம் அறவே இல்லாமல் மக்கள் அல்லற்படும் பரிதாபநிலை ஏற்படும்.

தண்ணீர் தனியார் மயம் ஆவதைத் தடுப்பதற்குப் போதிய சட்டம் இல்லை.தண் ணீர் விற்பனையில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பார்லே, பிஸ்லரி, கோக், பெப்சி, பார்லே அக்ரோ, மோகன் மீக்சின்ஸ், SKN Beverages ஆகிய நிறு வனங்கள் ஆற்றுநீரை மட்டுமின்றி, நிலத்தடி நீரையும் கொள்ளையடித்து வரு கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டில் தண்ணீர் விற்பனையைத் தொடங்கியது பார்லே நிறுவனம்.

மொத்தப் பங்குச் சந்தையில் பார்லே மட்டும் 40 விழுக்காடும், இன்னும் பல
சிறிய வணிக நிறுவனங்களுமாகச் சேர்ந்து தமிழ்நாட்டு நீர்வளத்தை கொள் ளையடிக்கின்றன. இந்தியாவின் தென் மாநிலங்களில் அக்வா ஃபீனா மட்டும் 1800 இடங்களில் தண்ணீர் பிளாண்ட்கள் அமைத்திருக்கின்றது.தமிழ் நாட்டில் மட்டும் 615 பிளாண்ட்கள் செயல்படுகின்றன.

தற்போதுள்ள சட்டம் எதனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சுவததைத் தடுக்க முடியவில்லை. “நிலம் வைத்திருக்கும் நபர் ஒருவருக்கு நிலத்தின் கீழ் இருக் கும் தண்ணீரும் அவருக்கே சொந்தம்” எனச் சட்டம் கூறுகிறது.

பெப்சியும், கோக்ககோலாவும் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்நாடு உள்பட
இந்தியாவின் நீர் வளங்களைக் கொள்ளையடித்து வணிகம் செய்வதில், கோக்கக் கோலாவின் மொத்த வருவாய் 20,458 பில்லியன் டாலர்கள் என்றும்
கணக்கிடப்பட்டுள்ளது. (ஆதாரம்: அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலின் மத்திய அமைப்பு)

இன்னொரு முக்கியமான செய்தியையும் இங்கே சொல்லியாக வேண்டும். தென் மாவட்டங்களில் கங்கைகொண்டான் என்ற ஊர் எல்லாருக்கும் தெரி யும். இப்பகுதியில் அடிக்கடி சாதிக்கலவரம் நடப்பதால் இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் பிரச்சினை தீரும் என்று கருதப்பட்டது. அதனால் கங்கை
கொண்டானில் ரூ. 30 கோடி மதிப்பில் சிப்காட் நிறுவனத்தை அரசு அமைத்தது.
பாட்டில் குடிநீர் நிலையம் அமைக்க (Beverage Bottling Plant) கோக் நிறுவனம் முடி வெடுத்தது.

அதற்கான நிலையத்தை நிறுவும் பணியை தென் இந்திய பாட்லிங் கம்பெனி (பி) லிட் வசம் ஒப்படைக்கப் பட்டது. இச்செய்தி அறிந்ததும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.நெல்லை மாவட்த்தைச் சுற்றியுள்ள தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் விழிப்புணர்வு இயக்கங் கள் போராடின.

சிப்காட் நிறுவனம் 2017 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இதில் விற்பனைக்கு உரிய நிலப்பரப்பு மட்டும் 1543 ஏக்கர். இதில் அமைந்துள்ள தொழில் நிறுவனங் களுக்கு நாள் ஒன்றுக்கு 45 இலட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு வழங்கப்பட்டிருக்கிறது.

* சீவலப்பேரி வழியாக சிப்காட்டிற்கு * குடிநீர் வாரியம் 1,000 லிட்டர் தண்ணீரை ரூ.15க்கு வழங்கி வருகிறது.ஒரு ஏக்கர் ரூ. 3 இலட்சம் என்ற மதிப்பில் கோக் நிறுவனத்திற்கு 3164 ஏக்கர் நிலத்தை விற்க 21.10.2006 இல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. (மகா யோக்கியர் கருணாநிதி ஆட்சிதான் அப்போது நடந்தது) கோக் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பதினைந்தே நாட்களில் அவ சரம் அவசரமாக கருணாநிதி உத்தரவு போட்டு கோக் நிறுவனத்திற்கு நிலத்தை விற்பனை செய்தது அரசு.

எதற்காக இவ்வளவு அவசரமாக உத்தரவு போட்டார் கருணாநிதி என்று சொல் லவா வேண்டும்? எல்லாம் ஆதாயமாகத்தான்.

* நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் லிட்டர் * தண்ணீரை கோக் நிறுவனத்திற்கு வழங் குமாறு அரசு உத்தரவு போட்டது.

* 1000 லிட்டர் தண்ணீரை ரூ. 18 க்கு * கோக் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது.

* ஆனால், கோக் நிறுவனம் ஆண்டுக்கு *  2190 இலட்சம் லிட்டர் தண்ணீரை
எடுத்து ஒரு லிட்டர் நீர் ரூ. 20 என விற்கிறது.

1,000 லிட்டர் தண்ணீரை வெறும் 18 ரூபாய்க்கு வாங்கி, அதே தண்ணீரை ஒரு லிட்டர் ரூ. 20க்கு விற்றால் இதற்குப் பெயர் கொள்ளை என்று தானே சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் மாற்றுத் திட்டம் வேண்டுமானால், மறுமலர்ச்சி நாயகன் வைகோ அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே


நன்றிகள் 


கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment