Sunday, May 19, 2013

அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

“அணு உலை அறிவோம்” நூல் வழங்கும் ஆணித்தரமான சாட்சியங்கள்;
அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

ஜெ.பிரபாகரன் எழுதிய “அணு உலை அறிவோம்” நூல் வெளியீட்டு விழா 9.5. 2013 அன்று மதுரையில் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் தலைமையில் நடை பெற்றது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நூலை வெளி யிட, கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து.....

அணு உலை மனிதகுலத்தின் உயிருக்கு உலை என்று அணு உலை விபத்துகள் வழங்கிய எச்சரிக்கையை, ஒரு ஆவணமாக, நிழற்படங்களின் தொகுப்பு ஆவ ணமாக, அணு உலை அறிவோம் என்கின்ற, தமிழ்  இனத்தைக்காக்கின்ற ஆயு தமாக நூல் ஆசிரியர் ஆருயிர்த்தம்பி பிரபாகரன் அவர்கள் உருவாக்கித் தந்து இருக்கின்றார்கள். 
மது எனும் கொடிய அரக்கனின் பிடியில் இருந்து தாய்த் தமிழகத்தை மீட்க
வேண்டும் என்ற வேள்வியில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டு, அனல் பறக் கும் வெயிலில் மாமல்லபுரத்தில் இருந்து நான் நடந்து வந்து கொண்டு இருந்த
போது, தம்பி பிரபாகரன் அவர்கள், காளிங்கனோடு அங்கே வந்தார். இன்று
இங்கே வெளியிடப்பட்டு இருக்கின்ற இந்த நூலின் வரைவை என்னிடம்
கொடுத்தார்.

நான் படிக்கத் தொடங்கினேன். அதை முழுவதும் படிக்கின்ற வரையிலும்
நடந்து கொண்டே இருந்தேன். பக்கங்களைப் புரட்டிக் கொண்டே நடந்தேன். இதுவரையிலும் நான் அறியாத பல செய்திகளை அதில் படித்தேன்.ஒவ்வொரு படமும் இருதயத்தைப் பிளக்கின்ற வகையில் இருக்கின்றது.

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதிலும் கூன் குருடு செவிடு நீங் கிப் பிறத்தல் அரிது” என்றார் அவ்வைப் பிராட்டி.

தோழர்களே, இந்தப் படங்களைப்பாருங்கள். இருதயம் இரணமாகி விடும். மூக் கு இல்லாத முகம்; வாய் இல்லாத முகம். மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் ஒரு கண் இருக்கின்ற முகம்.அதை நீங்கள் பார்க்க முடியாது. 

நரகங்களில் இப்படித்தான் வதைக்கப் படுவார்கள் என்று பல பக்திச் சொற் பொழி வாளர்கள் சொல்லக் கேட்டு இருக்கின்றேன். அப்படி ஒரு நரகத்தை இந்த மண்ணில் ஏற் படுத்தி விட்டன அணு உலைகள். அப்படிப்பட்ட கொடூரக்
காட்சிகள். அந்தக் கொடிய அணு உலைகளை அகற்ற வேண்டும் என்பதற்கு, ஏராளமான ஆவணங்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. ஒன்று அல்ல, இரண்டு அல்ல. ஒவ்வொன்றும் ஆணித்தரமான சாட்சியங்கள்.

இந்த நூலை உருவாக்கிய விதம் பற்றி அவர் இங்கே எடுத்து உரைத்தார். 308
நிழற்படங்கள் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. ஆயிரம் பொதுக்கூட் டங்களில் பேசுகின்ற, நா வன்மையால் விளைகின்ற தாக்கத்தை விட, இந்த நிழற்படங்கள் நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

ஆம்; 1975 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாள்,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெருந் துணையோடு, தெற்கு வியட்நாமில் இருந்து சீறிப் பாய்ந்த விமானங்கள், ஹோ சி மின் தலைமையிலான வியட்நாம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்து கிறோம் என்று குண்டுகளை வீசியபோது, அந்தத் தீக்கங்குகள் ஃபான் கிம் பக் என்ற ஒரு ஒன்பது வயதுச் சிறுமியின் மீது பட்ட நிலையில், பிறந்த மேனி யோடு ஆடைகள் அற்ற நிலையில் இதோ மடிந்து விடுவோம் என்ற அலற லோடு இரண்டு கைகளைத் தூக்கியவாறு ஓடி வருகின்ற காட்சியை ஒரு புகைப்படக் கலைஞன் படமாக எடுத்து, டைம்ஸ் ஏட்டில் மூன்றாவது நாள் வெளியிட்ட பிறகு, வியட்நாமில் இருந்து அமெரிக்கப்படைகள் உடனே வெளி யேற வேண்டும் என்று அமெரிக்காவின் பல நகரங்களில் மட்டும் அல்லாமல், ஐரோப்பிய நாடுகளின் பல நகரங்களிலும் மக்கள் கிளர்ந்து எழுவதற்குக் கார ணமாக அமைந்தது

.

அதைப் போலத்தான்,

ஒரு பாலகனாகப் பிறந்ததைத் தவிர அவன் வேறு எதுவும் செய்து இருக்க வில்லை; அவன் அணிந்து இருந்த கால் சட்டையும், மூடி இருந்த போர்வை யும் தவிர வேறு எதுவும் இல்லை; இந்த பூமியில் பாலகர்களாகப் பிறந்ததைத் தவிர அவர்கள் வேறு எந்தக் குற்றத்தையும் செய்து இருக்கவில்லை; அந்த பாலகனின் ஒளி சிந்தும் இரண்டு கண்களை இனி வேறு எங்கே காணப் போகிறோம்?

குற்றங்கள் நிறைந்த வானத்தில் எந்தப் பறவையும் இல்லை; பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, பதுங்கு குழியிலேயே கொல்லப்படுகையில் எஞ்சியது எது வும் இல்லை இரும்புத் துப்பாக்கியின் குண்டுகள் அப்பாலகன் நெஞ்சைத் துளைத்தபோது உடைந்த நிலாவைத் தவிர வேறு எந்த சாட்சியும் இல்லை என்ற கவிதைக்கு உரிய, மாவீரமகன் பாலச்சந்திரனின் இரண்டு கண்கள், காலக் கடைத்தீயெனத் தமிழகத்தின் இலட்சக்கணக்கான மாணவர்கள் கிளர்ந் து எழுவதற்கும், அடுத்து ஒரு களத்தை அமைப்பதற்கும், இனி தமிழ் ஈழ விடு தலையைத் தடுக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கும் காரண மாக அந்த ஒரு புகைப்படம் அமைந்து இருக்கிறது.

அதுபோல, இந்த நூலில் 308 நிழற்படங்கள் இருக்கின்றன. இது ஒரு சரியான ஆவணக் கோப்பு. இது, தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்கள் இடையேயும் கொண்டு சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

கூடங்குளம் அணு உலையைத்திறப்பதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற
வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்ற நிலையில், தமி ழகத்தைக் காக்கின்ற ஒரு ஆயுதமாக இந்த ஆவணப் புத்தகத்தைத் தம்பி பிரபா கரன் உருவாக்கித் தந்து இருக்கின்றார். 608 ஆவது நாளாக, இடிந்தகரையில் மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியத் துணைக்கண்டம் இது வரையிலும் இப்படி ஒரு அறப்போரைச் சந்தித்தது இல்லை. துளி அளவும் வன் முறை இல்லாத ஒரு போர்க்களத்தை அந்த மக்கள் அமைத்து இருக்கின்றார் கள். உலகில் அணு உலைகளை எதிர்க்கின்ற அனைவரின் கவனமும் இன் றைக் கு இடிந்தகரையை நோக்கித் திரும்பி இருக்கின்றது.

நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. 60,000 மக்கள் டோக்யோ வீதிகளில் அணு உலைகளை எதிர்த்துத் திரண்ட போது, அங்கே உரை ஆற்றியவர்கள், இடிந்த கரையைத்தான் எடுத்துக் காட்டாகச் சொன்னார்கள்.

அங்கே தாய்மார்கள், மாணவ மாணவியர்கள் சின்னஞ்சிறு பிள்ளைகள் இரண்டு ஆண்டுகளாகப் போராடுகிறார்கள். தாடீநுத்தமிழகம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கின்றது. உலகமெலாம் அணு உலைகளை எதிர்ப்ப வர் கள் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கின்றார்கள். கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கடல் வழியைத் தேடிப்புறப்பட்டவர்களுக்கு, ஆப்பிரிக்காவில் ஒரு நன்னம்பிக்கை முனை அமைந்ததைப் போல, இன்று உலக மெல்லாம் அணு ஆயுதங்களை எதிர்ப்பவர்களுக்கு, இடிந்தகரை ஒரு நன்னம்பிக்கை முனையாக அமைந்து இருக்கின்றது.

நாட்டுக்கு வருகின்ற மின்சாரத்தைத் தடுக்கின்றார்களே என்று, நம்மீது கசப் பைக் கொட்டுபவர்கள் பலர் இருக்கின்றார்கள். அதனாலேயே கடும் இருட் ட டிப் புக்கு ஆளாகிப்போனவன் நான். எதிர்காலத் தலைமுறையைப் பற்றி நாம்
கவலைப்படுகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு கெடுபிடிப் போரை நடத்திக் கொண்டு, போட்டி போட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை உருவாக்கிய அமெரிக்கா, இரஷ்யாவில் மட்டும் அல்ல, உலகில் இதுவரை நிகழ்ந்த அணு உலை விபத்துகளை, அதன் கொடுமை களை இந்த நூலில் அடுக்கடுக்காகத் தருகிறார் பிரபாகரன். உலகின் பல நாடுகளில் அணு உலை களை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த விவரங்களையும் தருகிறார்.

அணு உலைகளை ஆதரிப்பவர்களே, இந்த நூலை வாங்கிப் படியுங்கள். தெளி வு பெறுங்கள். இந்த நூலை உருவாக்கிய தம்பி பிரபாகரனைப் போல, முல் லைப் பெரியாறு பிரச்சினைக்காக, பொறியாளர் விஜயகுமார் அவர்களும்,
பொறி யாளர் வீரப்பன் அவர்களும் முயன்று, தமிடிநநாடு பொதுப்பணித் துறை யின் மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் தயாரித்த குறுந்தட்டை, இலட்சக் கணக்கில் நாங்கள் படி எடுத்து, எங்கள் பெயரில் வெளியிடாமல், ஊர் ஊராகக் கொண்டு போய்  மக்களிடம் சேர்த்தோம். எங்கள் கட்சியின் அடையாளத்தைக் காட்ட வில்லை.

அதைப்போல, இந்த ஆவணப்புத்தகத்தை ஒரு காணொளியாகவும் ஆக்குங் கள். அப்பொழுதுதான் மக்களுக்கு அபாயம் என்னவென்று புரியும். விளக்கங் கள் புரியும். எல்லாக் கேள்விகளுக்கும் இந்த நூலில் விடை இருக்கின்றது. இப்படிப்பட்ட விளக்கங் களை இதுவரையிலும் நான் வேறு எந்த நூலிலும் பார்த்தது இல்லை. அணு உலையை எதிர்த்து ஒரு வாசகம் கூட இந்த நூலில் இல்லை. அதைப் படிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற வகை யில், இப்படி ஒரு நூலை வழங்கி இருக்கின்ற என் தம்பிமார்களுக்கு மனமார்ந் த பாராட்டுகள். 

தமிழகத்தின் இன்றைய இளைய தலை முறையினர், பிரச்சி னை களைத் தெளி வாக ஆய்ந்து, தீர்வையும் தெளிவாக எடுத்துக் கூறுபவர் களாக இருக்கின்றார் கள். சுதந்திரத் தமிடிந ஈழம்தான் தீர்வு என அறிவித்து, எதிர்காலத்தைப் பற்றிய
நம்பிக்கையை அவர்கள் நெஞ்சில் விதைத்து இருக்கின்றார்கள். இந்த நூலை முன்னெடுத்துச் செல்லுங்கள்.இந்தத் தமிழகத்தின் எதிர்காலத்தைக் காக்க வாருங்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment