Saturday, May 25, 2013

கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்த டி.எம்.எஸ். மறைந்தார்!

வைகோ இரங்கல்

அறுபது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்ததும் நாதவெள்ளமாக தமிழக மக்கள் சிந்தையைக் கவர்ந்ததுமான பாடல்களை தன் கானக் குரலால் பாடிய இசைவேந்தர் டி.எம். சௌந்தர்ராஜன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

‘உள்ளம் உருகுதய்யா...’ என்பது உள்ளிட்ட அவரது பக்திப் பாடல்கள் கேட்போ ரை பரவசத்தில் ஆழ்த்தும்.
நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களது குரலுக்கு ஏற்ற வாறு அவரது பின்னணிக் குரல் ஒலிக்கும்.

தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், மான உணர்ச்சிப் பாடல்கள் அனைத்து மே காலத்தை வென்றவையாகும். டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் மறைந்தா லும் அவரது பாடல்கள், அவரது தேனினும் இனிய இசைக்குரல் காலத்தால் அழி யாது நிலைத்து நிற்கும். அவரது மறைவால், துயரத்தில் துடிக்கும் இசை உலகத்திற்கும், திரை உலகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கம், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                                           வைகோ
சென்னை - 8                                                                                             பொதுச்செயலாளர்
25.05.2013                                                                                                     மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment