Thursday, May 2, 2013

நெல்லையில் மதிமுகவின் மே தின கூட்டம்

நேற்று மாலை 7 மணியளவில் பாளை ஜவகர் மைதானத்தில் (திருநெல்வேலி)
ம.தி.மு.க.மாநகர் மாவட்டம்  சார்பாகமே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது .

மக்கள்தலைவர் வைகோ முழங்குகினார்

அவர் மேலும் பேசியதாவது:

இன்று தமிழகத்தை நாலாபுறமும் ஆபத்து சூழந்துள்ளது. அண்டை மாநிலங் கள் மட்டுமின்றி மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிராக துரோகம் செய்து வரு கிறது. மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அந்த மசோதா வால் இந்திய ஒருமைப்பாடு பாதிக்கப்படும். மத்திய அரசின் நிலைப்பாடு இப்படியே நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு நீடிக்காது. 


தேர்தலுக்குப் பிறகு வரப்போகும் புதிய அரசும் இதே விதமாக நடந்து கொண் டால், நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் இனி வரும் காலங்களில் இழக்க போவது எதுவும் இல்லை. இனி பெறப்போவதெல்லாம் வெற்றி ஒன்றே. 

ஆட்சி அதிகாரத்தை ம.தி.மு.க. கைப்பற்றும் காலம் ஒருநாள் வரும். தமிழகத் தில் மாற்றம் வர வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று உருவாக வேண்டும் என இளைஞர்கள் எண்ண ஆரம்பித்துள்ளனர். 

அந்த மாற்று நாம்தான் என இப்போது செல்ல நான் தயாராக இல்லை. ஆனாலும், அந்த மாற்றுத் தேடலுக்கு விடை தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார் வைகோ.

கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலர் எஸ். பெருமாள் தலைமை வகித்தார். தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலர் எஸ்.என். சுப்பையா வரவேற்றார். வ.செ. கோபால்தாஸ் நன்றி கூறினார். சட்டத்துறை துணைச் செயலர் அரசு அமல்ராஜ் தொகுத்து வழங்கினார்.

நேற்று நடந்த பொதுக்கூட்டதின் புகைப்படங்கள்









நன்றி :- ச.இசக்கியப்பன் (படங்கள் உதவி )

No comments:

Post a Comment