Thursday, May 9, 2013

அடிமை வாழ்வை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்! தமிழ் ஈழம் மலரும்...பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

பகுதி 1 யின் தொடர்ச்சி ....

போர்க்களத்தில் இந்தியா கொடுத்த ஆயுத பலத்தோடும் - சீனா கொடுத்த ஆயு தபலத்தோடும் - உலகநாடுகள் தந்த ஆயுத பலத்தோடும் - உலகில் இதுவரை இவர்களுக்கு நிகரான வீரர்கள் போர்க்களத் துக்கு வந்ததில்லை என்று சொல் லப்பட்ட சாகசம் புரிந்த விடுதலைப்புலிகளை, வான்படை தரைப்படை கடற் படை அமைத்து தரணியை திகைக்கவைத்த விடுதலைப் புலிகளை, உலகத் தில் எந்தப் புரட்சி இயக்கமும் பிறநாட்டு உதவி இல்லாமல் தாங்களாகவே
ஆயுதங்களைத் தயாரித்து பல வல்லரசு நாடுகளின் ஆயுதத்தையும் எதிர்த்து
அலைஅலையாக வந்த ஆயுதபலத்தை எதிர்த்து நின்று போராடிய அந்த வீரர் களை - உலகம் தடை செய்து இருக்கின்ற குண்டுகளை வீசி அழித்தார்கள்.


மனிதகுலம் மன்னிக்கமுடியாத கொடுமைகளைச் செய்தார்கள். அப்படி வீழ்த் தப்பட்ட வேளையில், வளை ஏந்திய கரங்கள் துப்பாக்கி ஏந்திய கரங்கள் புலிப் படையில் இருந்த வீராங்கனை களான பெண்களைக் கொன்றபிறகு, அவர் களது ஆடைகள் அனைத்தும் அவிழ்த்து எறியப் பட்டு, நான் அதை விவரிக்க இயல வில்லை. உலகில் எங்கும் நடக்காத கொடுமையாக சிங்களவக் கொடிய வர்கள் - சிப்பாய்கள் கெக்கெலிக் கொட்டிச் சிரித்துக் கொண்டு, ஆடைகள் அவிழ்த்து எறியப்பட்ட நமது தங்கையரை நம் சகோதரிகளை, உலகில் மிருங் கள்கூடச் செய்யத் துணியாத கொடுமையைச் செய்தார்கள்.இந்த உலகம் இது வரையில் இப்படிப் பட்ட கொடுமையைக் கண்டதில்லை யே? இத்தனைக்கும் துணை நின்றது இந்திய அரசு.



ஆகவே, தமிழர்கள் உள்ளத்தில் ஏற்பட்டு இருக்கின்ற வேதனைக்கு ஒரு வடி கால் வேண்டாமா? முத்துக்குமார் உள்ளிட்ட 14 பேர் தமிழ்நாட்டில் தீக்குளித் தார்கள். முத்துக்குமார் என்ன சொன்னான்? நான் மடிகிறேன். என் மரண சாச னத்தை உயிராயுதமாக எடுத்துக் கொண்டு செல்லுங்கள் இளைஞர்களே,என்று
கூறிவிட்டு, கொல்லப்படுகின்ற அந்தச் சகோதரன் உங்கள் சகோதரனாக இருந் தால், உங்கள் தந்தையாக இருந்தால், நாசமாக்கப்படுகின்ற பெண் உங் களுடைய சகோதரிகளாக இருந்தால், உன் தாயாக இருந்தால் என்று எண்ணிப் பார், என்றுதானே அவனுடைய மரணசாசனத் தில் எழுதினான். அதுதானே அவனை நெருப்பில் குதிப்பதற்குத் தூண்டிற்று.

தமிழர்கள் உள்ளம் எல்லாம் கொதித்துப் போய் இருக்கிற நேரத்தில், ராஜபக்சே
சொல்கிறான் ‘பிரபாகரனின் ஆவிகூட இங்கே எந்தவிதமான அதிகாரத்தையும்
செலுத்த முடியாது’ என்கிறான். அழித்து விட்டோம் என்று சொல்கிறான்.என்ன
திமிரோடு பேசுகிறான்?

என்னுடைய அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, இந்த ஈழப்பிரச்சனையின்
ஆழத்தைத் தயவு செய்து எண்ணிப்பாருங்கள். பிழைக்கப் போனவர்கள் அல்ல தமிழர்கள். இந்த நாள் அக்டோபர் 10 ஆம் நாள். தமிழர்கள் பிழைக்கப்போனவர் கள்தான் அனைவரும் என்று இதே கடற்கரையில் அரிச்சுவடிகூட தெரியாத
ராஜீவ்காந்தி ஆகஸ்ட் 2 ஆம் தேதி 1989 ஆம் ஆண்டு பேசிவிட்டுச் சென்றார்.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்
என்று அவரைப் பெற்றெடுத்த இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில்
சொன்ன உண்மையைக்கூட அறிந்து கொள்ளாமல் பேசினார்.

அப்பொழுது இழைக்கப்பட்ட திலீபனின் சாவுக்குக் காரணமான துரோகம். அன் றைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்து சிங்களவர்களுக்குத் துணை யாக தமிழர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு துரோகம் தொடங்கிய வேளை இதே அக்டோபர் மாதம். செப்டம்பர் 26 இல் திலீபன் மடிந்தான். 12 நாட்கள் துளி நீரும் பருகாமல் மடிந்தான். அதன்பிறகு இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக் கப் பட்ட ஒப்பந்தம். புலிகள் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தம். தமிழர்கள்மீது
திணிக்கப்பட்ட ஒப்பந்தம்.
.
போஃபர்ஸ் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக, சிங்கள ஜெயவர்த்தனா வின் சதிவலையில் சிக்கிக் கொண்டவர்கள் போட்ட ஒப்பந்தம். அந்தக் கட்டத் தில், 12 புலிப்படைத்தளபதிகளின் சாவுக்குக் காரணமானது இந்திய அரசு. அவர் களுக்காக போடப் பட்டு இருந்த கட்டுக்காவலை விலக்கச் சொன்னது இந்திய அரசு. இதே அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கட்டுக் காவல் விலக்கப்பட்டது. சிங் களச் சிப்பாய்கள் நெருங்கினார்கள். நச்சுக் குப்பிகளைக் கடித்து 12 வீரத் தளபதி கள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் மடிந்தார்கள்.

அதற்குப்பிறகு, தமிழர்களின் தொலைக்காட்சி நிறுவனம் - பத்திரிகை காரியா லயங்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. 12 புலிப்படைத் தளபதிகளை தமிழர் கள் நெஞ்சில் வைத்து பூஜித்தார்கள். சிங்களவனுக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீராதி வீரர்கள் பலியானதற்குப்பிறகு, தீர்வை மைதானத்தில் அந்த 12 பேர் உடல் களையும் கொண்டுவந்து வைத்தார்கள்.அங்கு அழுகையும் கண்ணீ ரும் கதறலுமாக இருந்தது

திலீபன் மடிந்தபோது அழுத அதே தமிழர்கள் இலட்சக்கணக்கான தமிழர்கள் அன்றும் அழுதது. அப்பொழுது அந்த இடத்தில்

‘ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத் தா!
உன் காலணிகளை எனக்குத் தா!
உன் ஆயுதங்களை எனக்குத் தா!

என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஆம்! மரணத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு இருந்த வேளை யில், ஒரு புலிப்படை வீரன் தன் ஆயுதத்தை அடுத்த தோழனிடம் தருவான். அவன் சீருடைகளை இன்னொரு தோழனுக்கு தருவான். அடுத்த களத்துக்கு இன்னொருவன் வருவான். அப்படி அலைஅலையாகக் களத்துக்குச் சென்று மடிகிற உணர்ச்சி ஊட்டப்பட்ட அந்த நாளில்தான், உறுதி எடுத்துக்கொண்டார் பிரபாகரன். இந்திய அரசு சொன்னதற்காக ஆயுதங்களை ஒப்படைப்போம் என் று சொன்னவர், இந்தத் துயரம் நேர்ந்ததற்குப்பிறகு, மீண்டும் பிஸ்டலை எடுத் து இடுப்பில் சொருகினார். அந்தப் போர் மூண்ட நாள் தான் இந்த 10ஆம் தேதி. இதே அக்டோபர் 10 ஆம் தேதி.

உலகத்தின் வல்லரசுகளின் முப்படைகளையும் எதிர்த்து நாங்கள் ஆயிரக்
கணக்கானோர் செத்து மடிந்தாலும் மானம் உள்ளவர்களாக மடிவோம் என்று
களத்துக்குச் சென்ற நாள்தான் இந்த அக்டோபர் 10 ஆம் நாள் தியாகத்திருநாள். எனவே இந்த நாளில் நான் தமிழகத்தில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்குச் சொல் கிறேன். 

இந்த நானிலத்தில் தமிழர்கள் நாதியற்றுப்போய்விட்டார்களா? ஒரு இனத்தின் கலாச்சார அடிச்சுவடே இருக்கக்கூடாது என்று கருதி அழித்தான் சிங்களவன். கல்விக் கூடங்களில் நமது பிள்ளைகளுக்கு சம உரிமை இல்லை. வேலை வாய்ப்பில் சம உரிமை இல்லை.நாயினும் கேவலமாக நடத்தப்பட்டனர்.எதிர்த் துக் கேள்வி கேட்டால், குண்டாந்தடியால் அடி. துப்பாக்கிச் சூடு. பச்சிளம் குழந் தைகளை நெருப்பில் தூக்கி வீசினார்கள்.

இங்கே கபாலிஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்துக்கள் வழிபட ஆலயத்துக் குச் செல்கிறீர்கள். அங்கே தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் தாக்கினார்
கள். நான் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவன் தான். ஆனால், தமிழர்களே,
பண்டிகை காலங்களில் நீங்கள் விரும்புகிற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்
கிறீர்களே, இந்த ஐம்பதாண்டு காலத்தில் அங்கே உடைக்கப்பட்ட இந்துக் கோவில் கள் எத்தனை? நொறுக்கப்பட்ட தேவாலயங்கள் எத்தனை? அழிக்கப்
பட்ட வழிபாட்டுத் தலங்கள் எத்தனை? 

தேர் செய்யச் சென்ற தச்சர்களின் மணிக்கை வெட்டப்பட்டு, இரத்தம் சொட்டச் சொட்டக் கொல்லப்பட்டார்கள். ஒரு குருக்களின் மனைவி கர்ப்பிணிப்பெண், அந்தக் கர்ப்பிணித்தாயின் அடி வயிற்றில் துப்பாக்கியால் சுட்டான். ஹேம லதா என்கின்ற 16 வயது இளம் பெண் பள்ளிக் கூடத்துப் பெண்ணை தூக்கிக் கொண்டு சென்று தென்னந்தோப்பில் சிங்களச் சிப்பாய்கள் கற்பழித்த தற்குப் பிறகு, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகச் செய்த அந்தக் கொடுமை யை டாக்டர் பீரிஸ் மருத்துவ பரிசோதனை செய்தபோது சொன்னார்

இங்கே என்னால் சொல்ல முடியவில்லை - சாட்சியத்தை தடயத்தை அழிப்ப தற்காக எறிகுண்டு வெடிக்கப் பட்டது. கர்ப்பக்கிருகம் சிதறியது. யூதர்களுக்குக் கூட இந்தக் கொடுமைகள் நடக்கவில்லையே? அதனுடைய தொடர்ச்சியைத் தான் இன்றைக்குச் சிங்களச் சிப்பாய் செய்கின்றான். எந்த இனம் இதைப் பொறுக்கும்? இந்த உலகத்தின் கண்கள் குருடாகிப் போயின. செவிகள் செவி டாகிப்போயின. மனசாட்சி மரத்துப்போய்விட்டது.

ஆனாலும் சொல்வேன். எப்பொழுதுமே இருள் நிரந்தரமாக இருக்காது. ஒரு காரிருள் வெளிச்சத்துக்கு முன்னால் கட்டியம் கூறும் என்பதுதான் உலகநியதி.
இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் துன்பமும் துயரமும், தன்மான உணர்வுள்ள தமிழர்கள் நெஞ்சில் வேதனைத் தீயை வளர்த்து இருக்கிறது. செய்வது அறி யாது திகைக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் ஒரு இனத்தைக் காக்க வேண்டிய கடமை நம் சகோதர, சகோதரிகளைக் காக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. மனிதாபிமானம் உள்ள அனைவருக்கும் உண்டு.

சர்வதேச பொது மன்னிப்பு சபையினுடைய இலங்கையின் பொறுப்பாளர் நேற் று முன்தினம் சொல்கிறார். அங்கே மனித உரிமைகள் நசுக்கப்பட்டு விட்டன, முகாம்களில் அடிப்படை வசதிகள் கிடையாது, கழிப்பிடம் கிடையாது, மருந்து கிடையாது, உணவு கிடையாது என்கிறார்.

என்னைப் பொறுத்தமட்டில் முகாம்களில் வசதி செய்து கொடுங்கள் என்று நான் கேட்கவில்லை. நீ அடிமைகளைப்போல் அடைத்து வைத்து இருக்கிறாய். அவர்களை உடனே விடுவி. அவர்கள் தங்களது தாயகத்தில் அவர்களது பூர்வீக வீடுகளில் குடியமர்த்தப் படவேண்டும். 1995 ஆம் ஆண்டு இனக்கொலை நடந்த
போது, அப்பொழுது அகதிகளாக வந்து செட்டி குளத்தில் அடைக்கப்பட்ட அகதி கள் இன்றளவுக்கும் அகதிகள் முகாம்களில்தான் இருக்கிறார்கள். இது நேற் றைக் கு வந்த பிரச்சனை அல்ல. அவன் சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கின்ற கொடுமையால் தான், தங்கள் இனம் உரிமையோடு வாழ வேண் டும் என்பதற்காக ஆயுதப்போர் நடத்தினார்கள். அது உலகம் ஏற்றுக்கொண்ட போராட்டம்.

அதை இந்திய வல்லரசின் துணைகொண்டு,தடை செய்த ஆயுதபலம் கொண்டு அழித்தார்கள். நொடி நேரத்தில் உயிர்களைக் கொல்லுகின்ற குண்டுகளை வீசி னார்கள். சுவாசிக்கின்ற பிராணவாயு உறிஞ்சப்பட்டது. இரண்டு மூன்று நிமி டங் களில் செத்து விழுந்தார்கள். அப்படித்தான் புலிகளை அழித்தார்கள்.அதைப் போல அவர்கள் வீசிய குண்டுகள் உடம்பை உருக்கி கறுக்கிப்போட்டதாம். இவ் வளவு ஆயுத பலத்தையும் தந்து, போர்விதிகள் அனைத்தும் மீறப்பட்டு, இவ்வ ளவு கொடுமைகளைச் செய்த ராஜபக்சே கூட்டம், குற்றவாளிக்கூண்டில் நிறுத் தப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.

போர்க்கைதிகளைக்கூட மனித நேயத்தோடு நடத்த வேண்டும் என்ற ஜெனீவா விதிமுறைகளுக்கு மாறாக,அங்கிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களும்அடிமை
களைப்போல மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப் படுகிறார்கள். இங்கே யிருந்து சிலரை அழைத்துக் கொண்டுசென்று, சில பகுதிகளைக் காண்பித்து, ‘நாங்கள் கொஞ்சம் அவர்களுக்குச் சோறுபோடுகிறோம் தண்ணீர் கொடுக்கி றோம் என்று சொல்கிறான்.

இவ்வளவு மக்களைக் கொன்றுகுவித்து, இரத்தம் ஆறாக ஓடிட, எத்தனை குழந் தைகள் செத்து விழுந்தார்கள், எத்தனை இளம்பெண்கள் நாசமாக்கப் பட்டு -கற் பழிக்கப்பட்டு கொடுமைக்கு உள்ளாகினர். மன்னிக்க முடியுமா? கேட்டுச் சகிக் கக்கூடியதா? ஒருக்காலும் கிடையாது.

இரத்தப் பழியை ஏற்படுத்திவிட்டான் இராஜபக்சே. எந்தக்காரணத்தை முன் னிட்டும் மானஉணர்ச்சியுள்ள தமிழன் மன்னிக்கப் போவது இல்லை.இவற்றுக் குத் துணை போன துரோகத்தைச் செய்த இந்திய அரசுக்கு,ஆட்சி பீடத்தில் இருந்த அரசுக்கு -மன்னிப்பு கிடையாது. இவ்வளவு தமிழர் களையும் கொன்று குவிப்பதற்கு நீங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தீர்கள்.

சுமூகத் தீர்வு ஏற்பட்டு விட்டது என்று சொல்கிறார் நாடாளும் முதல் அமைச் சர். எது சுமூகத்தீர்வு? இத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது சுமூகத்
தீர்வா? இப்படிப்பட்ட அக்கிரமங்கள் இன்னும் தொடரலாமா? இந்தப் பிரச்ச
னைக்கு என்ன தீர்வு? சொல்லட்டும் மேதாவிகள்.

தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்கு -ஈழத்தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கு
என்ன தீர்வு? தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு. வேறு எதுவும் தீர்வாக இருக்க முடி யாது. ராட்டையும் தக்களியும் கொண்டு போராடியதைப் போல அங்கு போராட முடியுமா? துப்பாக்கிக் கொண்டு தாக்கும்போது பிரபாகரனின் துப்பாக்கி தான் தமிழனைக் காத்தது.

அழியவில்லை அவர்கள். வருவார்கள்.உரியநேரத்தில் வருவார்கள். ஒவ்வொ ரு நெஞ்சிலும் கொலுவீற்றிருக்கின்ற, இந்தத் தமிழ்குலத்துக்கு 20 ஆம் நூற் றாண்டின் கடைசியில் 21 ஆம் நூற்றாண்டின் வைகறையிலும் முகவரியைத் தேடிக்கொடுத்த மாவீரர் திலகம் பிரபாகரனின் தலைமையில் அவர்கள் போரா டு வார்கள். 

பிரபாகரனின் ஆவிகூட உலவ முடியாது என்று சொல்கிறான் ராஜபக்சே. அட
மடையா! ஆவிகள் எப்படி வேலையைச் செய்யும் என்பதற்கு குமரப்பா புலேந்
திரன் உள்ளிட்ட வீரர்கள், இதுவரை கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உயிர் களைக் கொடுத்த விடு தலைப் புலிகள், உன்னால் கொல்லப்பட்ட ஜோசப் பர ராஜ சிங்கம் போன்ற உரிமைக்குக் குரல் கொடுத்து உன்னால் கொல்லப் பட் டவர்களின் கல்லறைகள் திறந்து கொள்ளும்.

‘கல்லறைகள் திறந்து கொள்ளும். அந்தக் கல்லறைகளில் இருந்து ஆவிகள் வரும்; இறந்துபோன மாவீரர்களின் ஆவிகள் அது போர்க்களத்துக்கு வரும். கீர்த்திக் கொடிகளோடும், உருவிய வாளோடும் வரும். நம்முடைய கொடி உய ரட்டும், நமது முரசம் ஒலிக்கட்டும். வெளியேறு; ஆக்கிரமிப்பாளனே வெளி யேறு;  எங்கள் மண்ணைவிட்டு வெளியேறு; எங்கள் ஈழத்தை விட்டு வெளி யேறு என்று உன்னை வெளியேற்றும். 

இதுவரை சிந்தப்பட்ட இரத்தம் - தரப்பட்ட உயிர்கள், எந்தக் காரணத்தைக் கொண் டும் அடிமை வாழ்வை ஈழத்துத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.தமிழ் ஈழம் மலரும். அந்தத் தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு, சிங்களக்கொடியோரின் கொட்டத்தை ஒடுக்கி அடிமை விலங்குகளை உடைத்து எறிவதற்கு, தமிழகத் தில் உணர்வுள்ள தமிழர் கூட்டம் உணர்ச்சியுள்ள இளம் தலைமுறையினர் நீங்கள் புறப்பட வேண்டும். வயதில் குறைந்த வாலிபர் கூட்டம் இளம் தங்கை யர் கூட்டம் புறப்பட வேண்டும்.

வரலாற்றுச் சிறப்புக்கு உரிய இந்த இனம் இவ்வளவு பெரிய துன்பத்துக்கும்
துயரத்துக்கும் கொடுமைக்கும் ஆளாகி இருக்கின்ற நேரத்தில் எலின் சாண்டர்
சொன்னார். அன்று யூதர்கள் இன்றைக்கு நீங்கள் தமிழர்கள். ஜெருசலத்துக்குச்
செல்கிற வேளை வருகிறபோது, நாம் ஜெருசலத்தில் சந்திப்போம். புதிய யூத
தேசத்தில் சந்திப்போம். சுதந்திரமான யூத தேசத்தில் சந்திப்போம்.நம் நாட்டின் தலைநகரத்தில் சந்திப்போம்’ என்று யூதர்தகள் சொன்னதைப்போல, ‘இனி மேல் ஒவ்வொரு தமிழனும் சந்திக்கிறபொழுது, மலரப்போகின்ற தமிழ் ஈழத் தில் சந்திப்போம் என்று சொல்லுங்கள்’ என்று சொன்னார்.

அதைப்போல, நீங்கள் கரம் கொடுக்கிறபோது தமிழ் ஈழத்தில் சந்திப்போம் என் று சொல்லுங்கள். நம்பிக்கை ஊட்டுங்கள். ஏன் முடியாது? உலகம் முழுவதும் ஒன்பது கோடித் தமிழர்கள் இருக்கிறோம். இது கரிகாலன் வாழ்ந்த நாடு. செங் குட்டுவன் படை நடத்திய நாடு. அப்படிப்பட்ட உணர்ச்சியுள்ள கூட்டத்தில்தான் மண்ணின் மானம் காக்க மருதுபாண்டியர்களும் தெற்குச்சீமையில் அதைப் போல எத்தனையோ மாவீரர்கள் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

விடுதலைக்காகத் தங்கள் இரத்தத்தைத் தாரைவார்த்துக் கொடுத்த வீரர்கள்
உலவிய பூமி இந்தப் பூமி. அந்த உணர்ச்சி செத்துப் போகாது. முத்துக்குமார் ஏற்றிவைத்த உணர்ச்சித் தீ நமது மனதை விட்டு ஒருபோதும் அகலாது. ஆக வே, நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, நடந்த செய்திகளை அவர்களது உள்ளத்தில் விதைத்து, தமிழ் ஈழ சகோதர, சகோதரிகளைக் காப்பதற்கு அணிதிரள்வோம்.

அலைகடல் நம்மைப் பிரித்துவிட முடியாது. இந்திய அரசே!நீ கேட்டுக்கு மேல் கேட்டைச் செய்து சீனர்களை வந்து குவிந்திட ஏற்பாட்டைச் செய்துவிட்டாய்.
நமது கடலில் வருகிற இலங்கைக் கடற்படைக் கப்பல்களில் சீனர்கள் வரு கிறார் கள். இராமேஸ்வரம் மண்டபம் மீனவர் கள் நேரிடையாக தருகின்ற சாட் சியங் கள். பாகிஸ்தானும் சீனாவும் குவிந்து விட்டது. நாளைக்கு ஆபத்து தெற்கே இருந்து வருமானால், பாதிக்கப்படப்போவது எங்கள் தாயகம், தமிழ கம். கல்பாக்கம் இருக்கிறது, விஜயநாராயணம் இருக்கிறது, ஆவடியில் துப் பாக்கித் தொழிற்சாலை இருக்கிறது, கூடங்குளம் அமைகிறது. தெற்குச்சீமை யில் பேராபத்து வருகிறது என்றால் எங்கள் தலையில் அல்லவா ஆபத்து வந்து முடியும்? இந்திய நாட்டின் அரசியல் பூகோள நலன்களையும், இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வையையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு எல்லாம் அழித்து விட்டீர்கள்.எல்லாக் கேடுகளும் செய்தீர்கள். 

யாரோ ஒரு பெண்மணியின் ஆக்ரோஷத்துக்காக, எங்கோ இருந்துவந்த ஒரு
பெண்மணியின் ஆத்திர உணர்ச்சிக் காகத் தமிழ் இனத்தை அழிக்கின்ற வேலை யைச் செய்தீர்கள். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். தாய்த் தமிழகத்து வாலி பர் கூட்டமே, ஈழம் மலர்வதற்கு ஈழத்துப் போருக்கு நாம் தொடர்ந்து குரல்
கொடுப் போம், ஆதரிப்போம். 

தமிழ் ஈழம் மலர்வதற்கு ஆதரிப்போம் எனக்கூறி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
இயக்கத்திற்கு இவ்வளவு சிறப்பான வகையில் இந்தக் கூட்டத்துக்கு வருகை
தந்து இருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே,உங்கள் காலடிகளைத் தொட்டு வணங் கி மரண பூமியில் போராடும் தமிழ் ஈழத்தைக்காக்க நாம் உறுதி கொள்வோம்.

மலர்க தமிழ் ஈழம்! வெல்க தமிழ் ஈழம்!

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment