Thursday, May 2, 2013

ஈழத் தமிழினம் தனித் தமிழ்த் தேசம் அமைக்க உதவுவோம்...!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின், ‘குற்றம் சாட்டுகிறேன்!, ‘I Accuse’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 15.07.2009 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. இரு நூல்களை யும் பழ.நெடுமாறன் வெளியிட, கவிஞர் இன்குலாப் பெற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழா நிறை வில் ஏற்புரை ஆற்றிய வைகோவின் உரையில் இருந்து...

இந்த நூல், ‘I Accuse’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, ஏற்க னவே வெளியில் உலவிய போதிலும், அதில் புதிதாக சில அத்தியாயங்கள்
இணைக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், ‘குற்றம் சாட்டு கிறேன்’ எனும் தலைப்போடு இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று நான்
விரும்பியபோது, எங்கள் வேண்டுகோளை அன்போடு ஏற்றுக்கொண்டு, இங்கே வந்து சிறப்பித்து இருக்கிற அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கும், இந்த மேடையில் வீற்றிருக்கின்ற, தமிழ் ஈழ விடுதலைக்குப்போராடிக் கொண்டு இருக்கின்ற என் இனிய சகோதரர் களுக்கும் என் உளம் நிறைந்து இருக்கின்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



பிரெஞ்சு நாட்டில், குற்றமற்ற டிரைபஸ் சதிக் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப் பட் டான். வஞ்சகமாக சதிகாரர்கள் அவனை பூதத்தீவு என்கின்ற டெவில் தீவில் சிறை வைத்து இருந்த காலத்தில், நீதிக்காகப் போராடிய தலைசிறந்த எழுத் தாளர் எமிலி ஜோலா தன் நாட்டு மக்கள் மத்தியில் அக்கிரமக்காரர்களைக் கூண்டில் நிறுத்துவதற்காக வெளியிட்ட பிரசுரத்தின் தலைப்புதான் ‘I Accuse’ - ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்பது ஆகும்.அந்த அறிக்கை, இலட்சக்கணக்கான பிரதிகள் பிரெஞ்சுநாட்டு வீதிகளில் வலம் வந்தது. அந்தப் பிரசுரத்தை வெளி யிட் டதற்காகவே எமிலி ஜோலா கைது செய்யப்பட்டார்.

ஆனால், மாதங்கள் கரைந்து ஓடின. டிரைபஸ் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது.பூதத்தீவில் சிறைவைக்கப்பட்டு எலும்பும் தோலு மாக உருமாறிப் போயிருந்த டிரைபஸ் மீண்டும் அழைத்து வரப்பட்டான். அதே இராணுவத் தளபதியின் உடைகள் அவனுக்கு அணிவிக்கப்பட்டன. அவன் ஏந் திய உடை வாளையும் கையில் பெற்றுக்கொண்டான். அவன் தலை நிமிர்ந்து நடக்கவும், சதிகாரர்கள் கூண்டில் அடைக்கப் படவுமான காட்சியாக அது மாறியது.

ஆகவே, ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் இந்தத் தலைப்பிலே வைக்கப்பட்டு இருக்கிற நூலில் தொடுக்கப்பட்டு இருக்கிற குற்றச்சாட்டுகள், எங்கள் இனத் தைக் கரு அறுப்பதற்கு, தமிழ் இனத்தை ஈழத்தில் கரு அறுக்க வேண்டும் என் று திட்டமிட்ட கொடியவன் ராஜபக்சேவுக்கு, இந்திய அரசு செய்த மன்னிக் க முடியாத உதவி களான துரோகத்தை, இந்த இனத்தின் வருங்கால இளைஞர் களுக்கும், இன்றையத் தலைமுறைக்கும் எடுத்துவைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில்தான் இந்த நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

2004 ஆம் ஆண்டிலேயே, இந்திய-இலங்கை இராணுவக்கூட்டு ஒப்பந்தம் போட வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டது. அதை அறிந்த நாளில் இருந்து, அதைத் தடுப்பதற்கு முயன்று போராடிப்போராடி, மன்றாடி மன்றாடி, ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை என்று அவர்கள் எங்களிடத்தில் உறுதிமொழி கொடுத்த போதிலும்கூட, அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் நிறை வேற்றப்படும் என்று அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் கொழும்பில் சென்று பேசி யபோது, அடுத்த நாள் மீண்டும் நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து, ‘வெளிவிவகாரத் துறை அமைச்சர் இப்படிச் சொல் லி இருக்கிறாரே?’ என்று பத்திரிகை ஆவணங்களைக் காட்டியபோது, பிரதமர்
‘அது அவரது தனிப்பட்ட கருத்து’ என்று கூறியதைஅன்றைக்கு நான் நம்பி னேன்.

அதன்பிறகு, இந்திய இராணுவத்தின் செலவில், இந்திய விமானப்படையின் உதவியோடு பலாலி விமான தளத்தைப் புதுப்பித்துக் கொடுக்கக்கூடாது என்று ரேஸ் கோர்ஸ் சாலை 7ஆம் எண் வீட்டில் பிரதமரிடத்திலும்,ஜன்பத் சாலை 10 ஆம் எண் வீட்டில், சோனியா காந்தி யிடத்திலும் முறையிட்டேன். அதற்குப் பின்னரும், வெளியில் தெரியாமல், பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தார்கள். ஆனால், அந்த விமான தளத்துக்குப் பன்னாட்டுச் செய்தி யா ளர் களை அழைத்துக் கொண்டுசென்ற இலங்கை இராணுவ அதிகாரி டொமி னிக் பெரைரா, இது இந்திய நாட்டு விமானப்படையின் துணையோடு, இந்திய அரசின் செலவில் அவர்களுடைய நிதியில், இது புதுப்பித்துக் கொடுக்கப் பட் டது’ என்று பகிரங்கமாகச் சொன்னார்.இலங்கைக்கு ரேடார்கள் கொடுக்கக் கூடாது, அது ஈழத் தமிழர்களை அழிப்பதற்குத் தான் என்று பிரதமரிடம் சொன் னபோது, ‘பாகிஸ்தானும் சீனாவும் தந்துவிடக் கூடும்’ என்று அதற்கொரு விளக்கத்தைக் கொடுத்தார்.

அண்ணன் நெடுமாறன் அவர்கள் கூறியதைப் போல -அப்படியானால் தமிழர் கள்மீது குண்டு வீசுகிறபோது அதைத்தடுப்பதற்கு நீங்கள் தமிழர்களுக்கு வேறு என்ன சாதனங்களைத் தரப் போகிறீர்கள்? என்று கேட்டோம்.

அதற்குப் பதில் சொல்ல முடியாத இந்தியப் பிரதமர்,‘அப்படி ஓர் போர்மூளுமா னால் ரேடார் களைத் திரும்பப்பெறுவோம்’ என்றார். அவர் சொன்னதை நான் உடனடியாக ஏடுகளுக்கும் செய்தியாகத்தந்தேன். மறுநாள் சென்னைக்குவந்து அண்ணன் நெடுமாறனைச் சந்தித்து பிரதமருடன் நடந்த உரையாடலையும் குறிப்பிட்டேன்.இவை எல்லாம் கடந்துபோன செய்திகள்.நான் காலத்தின் அருமை கருதி அதற்குள் விரிவாகச் செல்ல விரும்பவில்லை.

இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிற துயர நிலையைப்பற்றி, நம் சகோதரர்கள் மனதில் நம்முடைய துன்பங்களை தெரியப்படுத்துகிறவிதத்தில் எடுத்துச் சொன்னார்கள்.இவ்வளவு ஆயுதங் களையும் கொடுத்து ரே டா ர் 
க ளைக் கொடுத்து, எறிகணைகள், ஏவுகணைகள், மல்டிபர்பஸ் ராக்கெட் லாஞ்சர்ஸ், பீரங்கிகள், ஃபோபர்ஸ் வழக்கில் சிக்கிய அந்தப் பீரங்கிகள் உள்பட இத்தனை ஆயுதங்களையும் அள்ளிவழங்கி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தையும் கொடுத்தனர்.

பாகிஸ்தான், சீனா, ஈரான், இஸ்ரேல், ரஷ்யா என உலகின் பல நாடுகளில் இருந்தும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஆயுதங்களைப் பெருமள வில் வாங்கிக் குவித்து வைத்துக் கொண்டு, விடுதலைப்புலிகளைத் தாக்கி னார்கள்.

ஓயாத அலைகளில், அக்னி அலைகளில் வெற்றி முரசு கொட்டிய விடுதலைப் புலிகள், பன்னாட்டு ஆயுத பலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட் டது.ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலைசெய்யப் படுகிறார்களே என்ற துயரக்குரல் தமிழகத்தில் எழுந்தது. அதன் பிரதிபலிப்பாக சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒட்டு மொத்தத் தமிழகத்தின் எதிர்ப்புக் குரல் பதிவுசெய்யப்பட்ட, பிறகும்கூட கடைசிநிமிடம் வரையிலும் இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லவில்லை. இறுதிவரை சொல்லவில்லை. ஒப்புக்குக்கூடச் சொல்லவில்லை.

இந்தப் புத்தகத்தில் நான் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன். ‘தமிழன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் நீங்கள் பொறுப்பாளி. ஒவ் வொரு தமிழனின் தமிழச்சியின் சாவுக்கும் உங்கள் அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம் சாட்டி, கூண்டில் நாங்கள் நிறுத்துவோம்’ என்று பிரதமருக்கு எழுதி இருக்கிறேன்.எனவே, இன்றைக்கு விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டு
இருக்கிற பின்னடைவுகளுக்கு இந்திய அரசு செய்த துரோகம்தான் காரணம்.

‘தேசிய இனங்களின் கூட்டு அமைப்புதான் இந்தியத் துணைக்கண்டம்’ என்று நம்முடைய கவிஞர் இன்குலாப் இங்கே எடுத்துச் சொன்னார். தமிழ் இனத் துக்கு இந்திய அரசின் துரோகம் இன்று நேற்று அல்ல, 1987 இல் தொடங்கியது. அன்றைக்கு இந்திய - இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டது.சுதுமலை கூட்டத் தில் பிரபாகரன் சொன்னார்: ‘சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங் கிவிடும். மகத்தான தியாகங்களைச் செய்து நாங்கள் கட்டி எழுப்பி இருக்கக் கூடிய எங்கள் விடுதலைக் கோட்டைகளை உடைத்து நொறுக்குகின்றார் கள். எங்கள் பாதுகாப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது’ என்று குறிப்பிட்டார்.

திலீபனின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு.குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப்படை தளபதிகளின் சாவுக்குக் காரணம் இந்திய அரசு. ஏன்
திலீபன் உண்ணா விரதத்தைத் தொடங்குவதற்கு முதல்நாள் இரவு, இந்தியா வின் தூதராகக் கொழும்பில் இருந்த தீட்ஷித், இந்திய இராணுவத்தின் மதிக்கத் தக்க தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்கிடம் ‘நாளைய தினம் பிரபாகரன் உன்னைச் சந்திக்க வரும்போது, அவரைச் சுட்டுப் பொசுக்கிவிடு’ என்று கூறினார்.

அதிர்ச்சி அடைந்த இந்தியத் தளபதி, இந்தத் துரோகத்தை ஒருபோதும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறியதற்கு, இது என்னுடைய உத்தரவு அல்ல. தில்லி யின் கட்டளை. இராஜீவ் காந்தியின் உத்தரவு’ என்று கூறியதாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் புத்தகம் இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை. அதை எழுதிய ஹர்கிரத் சிங்கும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.ஆக, ஸ்ரீபெரும்புதூர் சம்பவங்களுக்கு முன்னால், திலீபனின் உண்ணா விரதத்துக்கு முன்னாலேயே நடைபெற்ற சம்பவம்தான் இந்த உரையாடல்.

தூதராக அனுப்பிய ஜானியைச் சுட்டுக்கொன்ற துரோகத்தை செய்தது இந்திய அரசு. இந்து மாக்கடலில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானது இந்திய அரசு.அந்தத் துரோகங்களின் தொடர்பாகத்தான் கடைசிக் கட்டத்தில் 2004 ஆம் ஆண்டுக்குப்பிறகு திட்டமிட்டு விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்று
ராஜபக்சேவோடு சேர்ந்து சோனியா காந்தியின் ஆலோசனைப்படி இந்திய அரசு திட்டம் வகுத்தது.

தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையை அழித்துவிட வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கம். விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கம். அதற்காகத்தான் இவ்வளவு உதவிகளையும் செய்தார்கள். இது மன்னிக்கமுடியாத துரோகம். இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் மனதில் நாங்கள் விதைத்துக் கொண்டே இருப்போம். இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

இங்கே தமிழகத்தில் இருக்கிற அரசு சட்டத்தைப் பயன்படுத்தி எங்களைச் சிறையில் பூட்ட முயற்சிக்கலாம்.பூட்டி இருக்கிறது கடந்த நாட்களில். தமிழர் களைக் கொல்ல ஆயுதம் கொடுக்கிறது இந்திய அரசு என்கிற போது, துடிக் காதா தமிழன் இரத்தம்? எங்கள் சொந்தச் சகோதரர்கள் வெட்டிச் சாய்க்கப் படு கிறபோது கொன்று குவிக்கப்படுகிறபோது அவனுடைய உள்ளம் வேதனைத்
தணலில் வெந்து தவிக்காதா? அப்படித்துடித்ததன் விளைவுதானே இதோ வீரத் தியாகி முத்துக்குமார்.அவனோடு சேர்ந்து 14 பேர் தீக்குளித்து மடிந்தார்கள்.
அந்தத் தணல் எங்கள் நெஞ்சில் அணையவில்லையே!

தமிழனின் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டு இருந்த நிலையிலும், இந்திய அரசு கடைசிநிமிடம் வரையில் போரை நிறுத்து என்று சொல்லவில்லை. ஆனால்,
இப்பொழுது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவம் செல்லும்’ என்று சிவசங்கரமேனன் பகிரங்கமாக அறிவிக்கிறார்.

நான் பிரதமருக்குச் சொல்வேன். இந்திய அரசுக்குச் சொல்வேன். நீங்கள் மறை முகமாக பல உதவிகள் செய்தீர்கள் - ஆயுதங்கள் வழங்கினீர்கள் அப்படி ஆயு தங் கள் வழங்குகிறபோது தமிழனைக் கொல்வதற்கு இந்தியா ஆயுதம் தரு கிறது என்றால், தமிழன் தடுப்பதற்கு முயற்சிக்க மாட்டானா? அதுவும் எங்கள் தமிழ்நாட்டு வீதிகளில் செல்கிறது ஆயுதங்களைத் தாங்கிய வண்டிகள் என்ற செய்தி பரவுகிறபோது அவர்களது உள்ளம் தணலாக மாறித் துடிக்காதா?

மத்திய அரசு அலுவலகத்துக்குமுன்பு மாநில அரசு அலுவலகத்துக்கு முன் னால் மறியல் செய்கிறோம். அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கிறோம். சட் டத் தைப் பயன்படுத்துகிறீர்கள் - கைது செய்கிறீர்கள். சிறை செல்வதைப் பற் றிக் கவலைப்படவில்லை. பெரியார் திராவிடர் கழகத்தினரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும்,தமிழ் உணர்வாளர்களும்,கோவை மாநகரில் வாகனங்களில் ஆரோகணித்துச் செல்கிற ஆயுதங்கள் நமது தமிழ னின் உயிர்குடிக்க என்று கருதிக் கொண்டு, கோவை இராமகிருஷ்ணனும் மற்ற தோழர்களும் சென்று தடுத்தார்கள்.

பாதுகாப்புச் சட்டத்தை ஏவினாரே, சீமான்மீது ,கொளத்தூர் மணி மீது ,நாஞ்சில் சம்பத் மீது பாதுகாப்புச் சட்டம். அந்தப் பாதுகாப்புச் சட்டம் தவறானாது. பிணை யில் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வந்ததற்குப் பிறகு, பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது என்று உயர்நீதிமன்றத்தில் நான் வாதாடினேன். என் வாதத்தை ஏற்றுக் கொண்டு,மாட்சிமை தங்கிய நீதிபதிகள் நாஞ்சில் சம்பத் மீது போடப்பட்ட பாதுகாப்புச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்
பாளர் சந்திரசேகர் மீது பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. அவர், ‘நான் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவன் அல்ல, ஆனால், எங்கள்மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது.நீதி குழிதோண்டி புதைக்கப் பட்டு இருக்கிறது, நீதி கேட்கிறேன்’ என்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கு,ஒரு முறையீட்டை வைத்தார். இந்தியக் குடியரசுத் தலைவர், சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோ சித்து, ‘தமிழ் நாட்டில் தேசப் பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன் படுத் தப்பட்டு இருக்கிறதுதமிழ்நாட்டில். அது இரத்து செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்து விட்டார். (பலத்த கைதட்டல்).

இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்ந்து எடுக்கப்
பட்டவர்தான். ஆனால், சட்ட வல்லுநர் கள் தந்த ஆலோசனையின்படி, தமிழ்
நாட்டு தி.மு.க. அரசு கோவை வழியாக ஆயுதங்களை ஏந்திச் சென்ற வாகனங்
களைத்தடுக்கமுயன்ற ஒரு இயக்கத் தொண்டன் மீது போடப்பட்ட பாதுகாப்புச் சட்டம் தவறானது. அது இரத்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப் பிக் கப்பட்டு இருக்கிறது.இது தி.மு.க. அரசின் கன்னத்தில் விழுந்த அறை என்பதை மறந்துவிடக்கூடாது. (பலத்த கைதட்டல்)

ஆனால்,இதற்குப் பின்னரும் எங்கள் தோழன் வேலுசாமியின் மீது நான்கைந்து
நாள்களுக்கு முன்னால் பாதுகாப்புச்சட்டம் ஏவப்படுகிறது. அதைப்போலவே,
தமிழர் உரிமைக்குப் போராடிய வீரமணி என்ற இளைஞன்மீது பாதுகாப்புச் சட்டம் ஏவப்படுகிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிமலை வெடித்தது. திருப்பூரில் காவல்துறை யைச் சேர்ந்த இருவரைத் தீயில் தூக்கிப் போட்டார்கள். தமிழகமே கொந்தளிக் கும் கடலாயிற்று. அதன் பின்னர் அண்ணா முதல் அமைச்சராக வந்து, அனைத் து வழக்குகளையும் திரும்பப் பெற்றார்.

1968 இல் மீண்டும் கிளர்ச்சி வெடித்த போது, சென்ட்ரல் இரயில் நிலையம் தீப் பற்றி எரிந்தது. இரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்டன. சட்டமன்றத்தில் விநா யகம், காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா? என்று கேள்வி எழுப் பினார். அதற்கு அண்ணா ‘இரயில் பெட்டிகள் எரிந்தால் நாம் மீண்டும் செய்து கொள்ளலாம். ஒரு மாணவனின் உயிர் பறிபோகுமானால், அதைத்திரும்பப் பெற முடியாது’ என்று சொன்னார்.

உணர்ச்சியின் அடையாளமாகத்தான் அந்தப் போராட்டம். தமிழ் இன உணர் வின் அடையாளமாக. ஆனால், இங்கே இப்பொழுது, மாநிலத்தில் இருக்கின்ற அரசு - மத்திய அரசோடு சேர்ந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளை அழிப் பதற்காக அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அண்ணா வின் உணர்வு இருந்திருந்தால்- தமிழக அரசு போர்க் கோலம் பூண்டு இருந் தால் - தமிழ் இனப்படுகொலை யைத் தடுத்து இருக்கலாம்.அண்ணாவின் கல் லறை ஒரு போதும் கருணாநிதியை மன்னிக்காது.

எங்கள் இனத்துக்காரனைப் படுகொலை செய்யாதே, நெருங்காதே, ஆயுதம்
கொடுக்காதே, போரைநிறுத்துகிறாயா இல்லையா? சொல்! என்று இந்த அரசு
முடிவெடுத்து சொல்லி இருக்குமானால்,மன்மோகன் சிங்குக்கு நிச்சயமாக இந்தத் தைரியம் வந்து இருக்காது. இந்திய அரசுக்கு இந்தத் தைரியம் வந்திருக் காது.தமிழக மக்களின் உள்ளம் எரிமலையாக வெடித்து விடாமல் தடுப்புச் சுவராகப் பயன்படுவேன், என் எழுத்தும் பேச்சும் அதற்குப் பயன்படும் என்ற வகையில் அவற்றைப் பயன்படுத்தினார் கலைஞர் கருணாநிதி.

ஆகவே, இவ்வளவு பெரிய கொடுந்துயரம் நேர்ந்துவிட்டது. எவராலும் வீழ்த்த முடியாத புலிகள் இந்தப் போர்க் களத்தில் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்
கள். போரில் புலிகளுக்கு நிகரான வீரர்கள் இல்லை. தமிழ் ஈழ உரிமைப்போர் முடிந்துபோய் விடவில்லை. உணர்வுகள் விதைக்கப்பட்டு இருக்கிறது. அது
மேலும் வீறுகொண்டு எழப்போகிறது என்ற நிலைமையில் ஒரு புதிய பரிணா மம்தான் இன்றைக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர் கள் உள்ளத்தில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவத்தை அனுப்புவது,
அயோக் கியத்தனமான நடவடிக்கை. நீ யார் கண்ணி வெடிகளை அகற்றுவத
ற்கு? எங்கள் இளைஞர்களைத் தேடித் தேடிக் கொல்வதற்காகச் செல்கிறாயா?
எங்கள் புலிப்படைத் தோழர்களைத் தேடித் தேடி படுகொலை செய்வதற்கா?

மூன்று இலட்சம் தமிழர்களை முள் வேலிக்கு உள்ளே அடைத்து வைத்துக்
கொடுமைப் படுத்துகிறான். இங்கே இருக்கிற ‘இந்து’ ராம்கள் விளக்கம் கொடுத் துக் கொண்டு இருக்கிறார்கள்.

கொழும்பில் இருக்கிற இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி,
அகதிகள் படும் துயரத்தை நேரடியாகப் பார்த்து விட்டுச் சொன்னார். இதற்கு
என்ன பதில்?

சிங்களத்துக்காரனுக்கு கைக்கூலியாக மாறிய ஒருவன் அவன்கூட நேற்றைக் குப் பார்த்து விட்டு, ஐயோ, என் நெஞ்சம் பதறுகிறதே, சித்ரவதை முகாம்களுக்
குள் இப்படி துன்புறுத்தி குவிக்கிறார் களே,என்று வேதனைப்பட்டதாகச் செய்தி வருகிறதே?

தமிழ்ப்பெண்கள் பாலியல் கொடுமை களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உலகம்
இதுவரை சந்தித்திராத அக்கிரமம் அங்கே நடைபெறுகிறது. இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். உணவு இல்லை, மருந்து இல்லை. இதுதான் இன்றைக்கு அங்கே இருக்கிற நிலைமை.

எல்லாவற்றையும்விட, மானத்தை உயிரினும் பெரிதாக கருதக்கூடிய நமது
சகோதரிகளின் மானத்துக்குப் பாதுகாப்பு இல்லை. அந்தச் சித்ரவதை முகாம் களில் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுஇருக்கும் மக்களுக்கு எந்தவித மான உரிமைகளும் இல்லை. சரி இவர்கள் எங்கு போய்ச் சேர்வார்கள்? சிங்க ளக் குடியயேற்றம் கிடையாது என்கிறான் இராஜபக்சே. இலங்கை விடுதலை
பெறும்போது, ஒரு சதவிகிதமாக கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள நாய் கள், நீங்கள் இன்றைக்கு அங்கே 34 சதவிகி தமாக எப்படிக் குடியேற முடிந்தது? இனி வடக்கிலும் நீங்கள் கால் வைப்பீர்கள்.

‘தமிழர்களின் தாயகம்’ என்கின்ற கோட்பாடு ஏற்கனவே முடியாது என்று சொல் லி விட்டான் ராஜபக்சே.நேற்றைக்குச் சொல்கிறான் ‘இனம் என்ற பேச் சுக்கே இந்த மண்ணில் இடம் இல்லை’ என்கிறான். அந்த வார்த்தை யையே என்னால் ஏற்க முடியாது என்கிறான். எல்லோரும் சிங்கள தேசத்து மக்கள் என்கிறான்.

தமிழ்நாட்டு முதல்வர் இதை ஏற்றுக் கொள்கிறாரா? ஈழத்தில் தமிழ் இனம் என் பதே கிடையாதா?

‘ஈழத்தில் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள்தான் அம்மண்ணின் பூர் வீகக் குடிமக்கள்’ என்று இந்திரா காந்தி 1983 ஆம் ஆண்டு இந்திய நாடாளு மன்றத்தில் சொன்னார். தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் என் றார். அவர்கள் ஒரு தனி இனம். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனி அரசு அமைத்து வாழ்ந்த இனம். அவர்கள் சுதந்திர தமிழ் ஈழம் அமைப் பதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்? இந்திய அரசுக்கு அதில் என்ன உரிமை?

இந்தப் புத்தகத்தில் ஒரு கடிதத்தை நான் பதிவுசெய்து இருக்கிறேன். இந்தியப்
பிரதமர் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில்
இலங்கையில் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு நாங்கள் இராணுவ உதவி
செய்கிறோம்’ என்று அதில் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீங்கள் யார்? இந்தியாவுக்கு
என்ன உரிமை? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு நீங்கள்
ஆயுதம் கொடுத்தால், தமிழ் ஈழம் அமைப்பதற்கு நாங்கள் எல்லா உதவிகளும் செய்வோம்.

இலங்கையின் ஒருமைப்பாட்டைக்காப்பதற்கு நீங்கள் ஆயுதம் கொடுப்போம்
என்றால், அந்த ஒருமைப்பாட்டை உடைப்பதற்கு, தமிழ் ஈழம் மலர்வதற்கு,
தன்மானம் உள்ள தமிழன் ஒவ்வொரு வனும் தன்னையே தருவான்.

இது என்ன நிலைப்பாடு? இது எங்கள் நிலைப்பாடு. நாங்கள் இந்த நாட்டுக்குத்
துரோகிகள் அல்லவே? உலகத்தில் இருக்கிற அனைத்து நிலப்பரப்பும் ஒன் றாக இருக்க வேண்டும் என்று உபதேசிக்கின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர் களா? பூமிப்பந்துக்கே நீங்கள் காவல்காரனா?

அப்படியானால் கிழக்கு தைமூர் பிரிந்ததே? வாய்மூடிக் கிடந்தீர்களே? இந்திய இராணுவம் டாக்காவுக்குள் நுழைந்து புதிய தேசம் உருவாக்கப் பட்டதே, அதற்கு என்ன பதில்? கொசோவா தனிநாடாகிவிட்டதே? உலகம் அதைக் கண்டுகளித்து விட்டதே?

தமிழ் இனத்தின் நாகரிகத்தையும்,பண்பாட்டையும் விடாமல் காத்து - வீரம்,
மானம், கற்பு, பண்பு, விருந்தோம்பல் என அனைத்தையும் இன்றைக்கும் பின் பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஈழத்துத்தமிழர்கள்தான், நம் தமிழ் இனத் தின் முகவரியைத் தொலையவிடாமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தனி அரசாக வாழவேண்டும் என்ற நிலைமைக்கு எப்பொழுது வந்தார்கள்?
அவர்கள் ஒடுக்கப் பட்ட பிறகு, நாயினும் கேவலமாக நடத்தப்பட்ட பிறகு, சம
உரிமை உள்ளவர்களாக மக்களோடு மக்களாக வாழமுடியாத நிலைமை தெளி வுபடுத்தப்பட்ட பிறகுதான் தந்தை செல்வா பிரகடனம் செய்தார். காங்கேசன்
துறை இடைத்தேர்தலுக்குப் பிறகு,ஈழத்துத் தமிழர்கள் அனைவரும் இனி தனி தேசம் தான் தீர்வு என்ற வகையில் அந்தத் தேர்தல் முடிவு நுழைவாயில்
அமைத்ததற்குப்பிறகு, வட்டுக்கோட்டை தீர்மானத்தில், மே 16 ஆம் தேதி 1976
ஆம் ஆண்டு இனி தனித்தமிழ் ஈழமே என்று அறிவித்ததற்குப்பிறகு, ‘இளைய
தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்வார்கள்’ என்றார்.

அந்தப் போராட்டம் எவ்வளவு மக்கள் தங்கள் இரத்தம்சிந்தி உயிர்களைக்
கொடுத்த போராட்டம்? எத்தனை மகத்தான தியாகங்கள்? வாழ்க்கையின்
மகிழ்ச்சிகளை, சுகங்களை வாலிபத்தின் இன்பங்களை வாழ்க்கையின் எந்தக்
கட்டத்திலும் அதை எண்ணிப்பாராது, மடிந்துபோனார்களே! எத்தனை இளை
ஞர்கள், எத்தனை இளம் பெண்கள்,வாழ்க்கைச் சுகம் எதுவுமே அவர்கள் அறிந் தது இல்லையே?

அப்படி மகத்தான தியாகங்களையும் இரத்தத்தையும் சிந்தி உருவாக்கப்பட்ட
ஒன்றை அழிப்பதற்கு நீங்கள் யார்?

உபதேசம் செய்கிறார் முதல் அமைச்சர்.‘அண்ணா திராவிட நாட்டைக் கை விட்டார். அதைப்போல, அங்கு சக வாழ்வு சாத்தியமாகலாம். எனவே, தமிழ் ஈழம் என்ற கோரிக்கைக்காகப் போராடுவது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று உபதேசம் செய்கிறார்.

அப்படியானால், தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்கள் இந்தியாவில் நடத்தப்படு கிற நிலைமையும், ஈழத்தில் சிங்கள நாய்களின் கரங்களில் சிக்கி அவதிப்படு கின்ற ஈழத்துத் தமிழர்களின் நிலைமையும் ஒன்றா? ஏன் இப்படி தவறான வாதத்தை வைக்கிறீர்கள்?

அப்பொழுதே அண்ணா சொன்னார். ‘திராவிட நாட்டைக் கைவிட்டதற்கான
காரணங்கள் உயிரோடு இருக்கின்றன’ என்றார். அதே நிலைமை, ஈழத்தில்
தமிழர்கள் வதைபடுவதைப்போன்ற நிலைமை இந்தத் துணைக்கண்டத்தில்
ஏற்பட்டால், அண்ணா எந்தக் கொள்கையைக் கைவிட்டாரோ அந்தக்கொள்கை மீண்டும் உயிர்த்து எழும். எனவே, இரண்டையும் ஒப்புமை காட்டிப்பேசுவது தவறு.

தோழர்களே, அத்தனை நாட்டு ஆயுதங்களுக்கும் ஈடுகொடுக்கும் மாவீரர்கள் தான் பிரபாகரன் தலைமை யில் இருந்த விடுதலைப்புலி வீரர்கள். ஆனால், சிங்கள இராணுவத்தினர் உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத் தி னார்கள். இதுவரை எந்த யுத்தக்களத்திலும் பயன்படுத்தாத நாசகார ஆயுதங் களைப் பயன்படுத்தினார்கள்.

ஆயிரம் ஆயிரமாக அலை அலையாக சிங்களப் படைகள் வந்தாலும் எதிர்
கொண்டு சின்னா பின்னமாக்கக்கூடிய விடுதலைப்புலி வீரர்களை, புலிப் படைத் தளகர்த்தர்களை, சிங்கள விமானப் படை வீசிய குண்டுகள் நிமிடநேரத் தில் எலும்பு உடம்பு அனைத்தையும் உருக்கிப் போட்டுவிட்டது. தணலில்
உலோகங்கள் உருக்கப்படுவதைப் போல, இந்தக் குண்டுகள் பாய்ந்த இடங் களில் சிக்கிய விடுதலைப் புலிகளின் வீரத்தளபதிகளும் வீரர்களும் அப்படியே உருகிப் போனார்கள்.

அதுமட்டும் அல்ல. அந்த மண்டலத்தில் இருந்த பிராண வாயு முழுமையாக
உறிஞ்சப்பட்டது. உடம்பில் காயமே படாமல் செத்து விழுந்தார்கள். இரத்தம்
சிந்தாமலே செத்து விழுந்தார்கள். இது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள். இது வரை இப்படிப்பட்ட ஆயுதங்களை எவரும் பயன்படுத்தியது இல்லை. இந்த
ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டன.இதன் விளைவாகத் தான் பின்னடைவு
ஏற்பட்டது.

ஸ்பார்ட்டாவின் வீரர்களை மீண்டும் நினைவூட்டுகின்றான் என்று லார்ட்
பைரனைப்பற்றி சொன்னாரே நமது கவிஞர் இன்குலாப். 300 ஸ்பார்ட்டா வீரர் கள் தெர்மாபிளை யுத்த களத்தில் நடத்திய வீரசாகசத்தை அன்று முதல் இன்று வரை மனிதகுலம் பாராட்டிக்கொண்டு இருக்கிறது. போற்று கிறது. வாலிபர் கள் அதை முன்னுதாரண மாகக் காட்டுகிறார்கள். செகுவேரா காட்டினார்- கரி பால்டி காட்டினார் - நெப்போலியன் காட்டினான் - ஃபிடல் காஸ்ட்ரோ காட்டி னார். எல்லோரும் அதை முன்னுதாரணமாகச் சொல்கிறார் கள்.நான் சின்னஞ் சிறு மாணவனாக பள்ளிப்பருவத்தில் படித்தபோது ஏற்பட்ட உணர்ச்சி என அவர் சொன்னார்.ஷெல்லியும் அதைத்தான் சொன்னார்.

நாமோ சிலர், அவர்களோ பலர். நாம் ஒரு தெர்மாபிளை யுத்தத்தை உருவாக்கு
வோம் என்று ஷெல்லி கவிதை பாடினான். அந்த தெர்மாபிளை வீரர்களைவிட பிரபாகரனின் வீரர்கள் இன்னும் வீரம் செறிந்த சாகசத்தை நிலைநாட்டினார் கள்.

அவன் சொல்வான். பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரசீகப் பெரும்படை
களின் ஆயுதங்கள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறபோது, இதோ ஆகாயத்தில்
இருந்து வருகிற சூரியனின் கிரணங்கள் உங்கள்மீது படாத அளவுக்கு எங்கள்
அம்புகள் உங்கள்மீது பாயும். இந்த அம்புகள் ஆதவனின் கிரணங்களை மறைக் கின்ற அளவுக்கு உங்கள்மீது பாயும் என்கிற போது, பதிலுக்குச் சொன்னான். அந்த அம்புகளின் நிழலுக்குள் இருந்து உங்களை எதிர்த்து களத்தில் வீழ்த்து வோம் என்று சொன்னான்.அப்படிப்பட்ட வீரத்தை நிலை நாட்டியவர்கள்.

இவ்வளவு கொடூரமான முறையில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத் தை அழிக்க வேண்டும் என்று இந்திய அரசு வகுத்துக் கொடுத்த சதித்திட்டத் தின் விளைவாக பன்னாட்டு ஆயுத பலத்தோடு விடுதலைப்புலிகள் களத்தில் தோற்கடிக்கப்பட்டார்கள்.எவ்வளவு அக்கிரமமான முறையில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

இன்றைக்கு பேரழிவு அருங்காட்சியகம் இருக்கின்றது. அங்கு செல்கின்ற அதி பர்கள் அமெரிக்க அதிபரும் மற்ற அதிபர்களும் எங்கே செல்கிறார்கள்? அவர் கள், அந்த வதைமுகாமைப் பார்க்கிறார்கள். இன்னும் இருக்கிறது நானே பார்த் து இருக்கிறேன். அந்த பேரழிவு அருங்காட்சியகம் Holocaust museum. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அதை வைத்து இருக்கிறார்கள். யூதர்கள் எப்படி வதைக்கப் பட்டார்கள் என்பதைக் காட்டுகின்ற சித்திரிக்கின்ற அருங்காட்சி
யகம். அதைப்பார்த்துவிட்டு வெளியே வருகிற போது பெரிய பரந்த மண்டபம் -
அரங்கம் இருக்கிறது.

அங்கே ஆயிரக் கணக்கான மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டு இருக் கின்றன. அதன் உள்ளே நுழைகிறவர்கள் யாராக இருந்தாலும் அங்கே மெழுகுவர்த்திகள்
ஏற்றலாம். அந்த இடத்தில் ஒரு வாசகம் எழுதிப்போட்டிருக்கிறார்கள் ‘இங்கே
பார்த்த காட்சிகளை உங்கள் பிள்ளை களுக்குச் சொல்லாதீர்கள். அவர்கள்
அதைத் தாங்கிக் கொள்ளமாட் டார்கள் என்று எழுதி இருக்கிறார்கள்.

ஆனால், அதைவிடக் கொடுமை ஈழத்தில் நடந்ததே, யூதர்களுக்கு ஹிட்லர் இழைத்த கொடுமைகளைவிட இங்கே நடத்தப்பட்டது. கூட்டம் கூட்டமாகக் கொன்றார்கள். விஷவாயு அறைகளில் போட்டு சாகடித்தார்கள். ஆனால், யூதப் பெண்களின் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுக் களை வெட்டி எரிகின்ற கொடுமையை ஹிட்லர் செய்யவில்லை - நாஜிகள் செய்ய வில்லை. ராஜபக்சேவின் கொடிய கூட்டம் அதைச் செய்தது. மனிதகுல வர லாற்றில் இப்படிப்பட்ட இனக்கொலை இதுவரை நடந்ததே இல்லை.

பாராண்ட இனம் - நானிலம் போற்ற வாழ்ந்த இனம் - உலகத்துக்கே நாகரிகத் தைக் கற்றுக் கொடுத்த இனம் -வீரத்தை, மானத்தை இருகண்களாகப் போற்றி வாழ்ந்த இனம். இப்படியா அழிக்கப்படுவது? அன்றைக்கு யூதர் களுக்கு தேச மில்லை. இன்றைக்கு தமிழகத்தில் ஆறரைக் கோடிபேர் ஓரிடத்தில் சேர்ந்து இருக்கிறோம்.யூதர்கள் அப்படி ஐரோப்பிய நாடுகளால் நாஜிகளால் கொல்லப் பட்ட போது ஊர் ஊராக விரட்டப்பட்டபோது நாதியற்றவர் களாக அவர்கள் துரத்தப்பட்டபோது அவர்கள் இனம் கூட்டமாக ஒரு மண்ணில் இருந்தது கிடை யாது. ஆனால், அவர்கள் ஒன்றுசேரவில்லையா?

தமிழ்ப் பெண்கள் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்து
சிசுக்களை எடுத்துத் தெருவில் வீசுகின்ற கொடுமையினை ஹிட்லர் செய்ய
வில்லை. நாஜிகள் செய்யவில்லை.இங்கு விடுதலை இராஜேந்திரன் பேசும்
போது, இனி இளைஞர்களிடம் உணர்ச்சியூட்டி முன்னெடுத்துச் செல்ல வேண் டும் என்று சொன்னார். தமிழ் ஈழத்தை உருவாக்கி தமிழ் ஈழம் மலர்வதை நம்
கண்களால் கண்டு விட்டுத்தான் இந்த மண்ணில் மறைய வேண்டும் என்ற
உணர்வோடு நாம் போராடுவோம். இது ஒவ்வொரு தமிழனின் கடமை. தன் மான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழச்சியின் கடமை!

நம் வாழ்நாளில் இந்தப் பூமிப்பந்தில் ஈழத்தமிழனுக்கு ஒரு நாட்டை அமைப்ப
தற்கு, எல்லாவிதத்திலும் தன்னலமற்று,அரசியல் எல்லைகளைக் கடந்து,
மாச்சர்யங்களைக் கடந்து சுயநலத்துக்குக் கடுகு அளவும் இடம்கொடுக்காமல்,
தமிழ் ஈழம் மலர்வதற்கு எல்லா விதத்திலும் தோள் கொடுப்போம்; துணை
நிற்போம் என்று சூளுரை மேற்கொள்ள வேண்டிய நாள் இந்தத் திருநாள்.

உலகின் பல நாடுகளில் சிதறிக் கிடந்தயூதர்களுக்கு, அமெரிக்கச் செல்வந்த
யூதர்கள் அள்ளிக் கொடுத்தார்களே? ‘நாங்கள் அநாதைகளாகிவிட்டோம்;யுத்த களத்தில் செத்து மடிகிறோம்,எங்களுக்கு உதவ வேண்டும்’ என்று கோல்டா அம்மையார் வந்தபோது இலட்சக்கணக்கான டாலர் பணத்தை அள்ளிக் கொடுத் தார்களே, ஆயுதங்களை வாங்கிக் கப்பல்களில் அனுப்பி வைத்தாரே? உலகில் சிதறிக்கிடந்த யூதர்கள் ஒருவன் பேசுவது ஒருவனுக் குத் தெரியாது. அந்த மொழிதெரியாது. ஜெர்மனியில் இருந்து போகின்ற யூதனுக்கு செக்கோசு லாவியாக்காரன் மொழி தெரியாது. ஆனாலும் யூதர்கள்என்று ஒரு இனத்தில் நின்று கொண்டு இன்றைக்கும் சர்ச்சைக்குரிய இடம் அதற்குள் நான் செல்ல விரும்ப வில்லை.இடம் யாருக்குச் சொந்தம் பாலஸ்தீனியர்களுக்கா? யூதர் களுக்காக? என்று.

ஆனால், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா
பேசுகிறார். இரண்டு தேசங்கள். பாலஸ்தீனியர்களுக்கும் ஒருதேசம். யூதர்
களுக்கு ஒருதேசம். அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதோடு நிறுத்த வில்லை. யூதக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும் என்கிறார்.அதைவிட ஈழத்தில் எங்களுக்கு ஆயிரம்மடங்கு நியாயம் இருக்கிறதே?

எங்கள் தாயக மண் அல்லவா? அங்கே அவன் குடியேற்றம் அமைத்து இருக் கிறான். தனி தேசிய இனம் தானே தமிழ் இனம்? அவர்களுக்கும் ஒரு நாடு
அமையவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தக் கோரிக்கையை
உலகம் முழுவதும் எடுத்துச் செல்வோம்.தாய்த் தமிழகத்து இளைஞர்களுக்கு
அந்த உணர்ச்சியை ஊட்டுவோம். அந்த உணர்வில் மாறுபட்ட கருத்து இருக்க வே முடியாது.

கோபித்துக் கொள்வான் ராஜபக்சே என்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத் தில் பேசுகிறார். வெள்ளைக் காரன் கோபித்துக் கொள்வான் என்று கருதி இருந் தால், பகத்சிங் ஆயுதம் ஏந்தி இருப்பானா? கோபித்துக் கொள்வான் வெள்ளைக் காரன் என்று கருதி இருந்தால், வாஞ்சிநாதன் மணியாச்சிக்குப் போயிருக்க முடியாது. கோபித்துக் கொள்வான் வெள்ளைக்காரன் என்று கருதி இருந்தால், நேதாஜி படை திரட்டி இருக்க முடியாது. கோபித்துக் கொள்வான் வெள்ளைக் காரன் என்று கருதி இருந்தால், அன்றைக்கு விடுதலைப் போராட்டம் நடந்து இருக்க முடியாது. விடுதலைப்போராட்டம் நடத்தினால் வெள்ளையன் இன் னும் கொடுமை செய்வான் என்று கருதி இருந்தால், இந்தியர்கள் இன்றைக்கும்
அடிமைகளாகவே இருந்திருப்பார்கள். 

கோபித்துக் கொள்வாராம் ராஜபக்சே? கொடுமை செய்வதன் குலையை அறுப் பேன் என்று முடிவு எடுத்தான் பகத்சிங். எங்கள் இனத்தை அழித்தவன் சங்கை அறுப்பேன் என்று முடிவு செய்வான் தமிழன். (பலத்த கைதட்டல்)

எத்தனை குழந்தைகள் சாகடிக்கப்பட்டனர் - எத்தனை பெண்கள் நாசமாக்கப் பட்டனர் - எத்தனை இளம் பெண்களின் கற்பு நாசமாக்கப்பட்டது -எத்தனை பேர் வீடுவாசல் எல்லாம் இழந்து பூர்வீக மண்ணைஇழந்து நாயினும் கேவலமாக நடத்தப்பட்டு கடைசியில் சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு இப்பொழுது மிருகங்களைவிடக் கேவ ல மாக நடத்தப்படுகிற நிலைமைக்கு ஆளாகி இருக்கிறார்களே? இனிமேலா அவன் கோபித்துத் துன்பத்தை விளைவிக்கப் போகிறான்?

ஆகவே, சூடான் நாட்டில், தர்பூரில் பழங்குடி இனமக்கள் வதைக்கப்படுகிறார் கள். சூடான் ஆதிக்கத்துக்குள் வதைக்கப்படுகிறார்கள். அதை எடுத்துச் சொன் னால் இன்னும் அக்கிரமத்தைச் செய்வான் என்று தர்பூர்க்காரன் அமைதியாக இருக்கிறானா? சூடான் அதிபரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறான். எங்கே? சர்வதேச குற்றவாளிக் கூண்டில். தர்பூர் இன மக்களை சூடான் நாட்டு இராணுவம் வேட்டையாடியது என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார் சூடான் அதிபர். இன்றைக்கு அவர்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநிலைமையில் இராஜபக்சேவை கூண்டில் நிறுத்தவேண்டிய கடமை
இருக்க, அவனுடன் சேர்ந்து இந்தக் கொலைபாதகத்துக்குத் துணைபோன இந் தி ய அரசு ஐ.நா. மன்றத்தில் இராஜபக்சேவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்கிறது.
இன்று நேற்று அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அக்கிரமத்தைச்செய்து கொண்டு இருக்கிறது. ஆகவே தான் இந்திய அரசு செய்த துரோகங்களை மக் கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதோடு முடிந்து விடவில்லை. 


இன்றைக்குச் செய்திகளைப் பார்க்கிறோம். சின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்தி ரன் செத்துப் போய் இருப்பதாக நீ புகைப்படம் போட்டு இருக்கிறாயே,நெஞ்சம் பதறுகிறதே அதைப் பார்க்க முடியவில்லையே. எத்தனைத் தமிழர் களின் உள்ளங்கள் நெஞ்சங்கள் கொதிக்கும்?

மனிதநேயத்தின் உருவமாகத் திகழ்ந்த செய்திகளை எல்லாம் சொன்னார்கள்.
நானும் அண்ணன் நெடுமாறனும் சொல்கிறோம். பிரபாகரன் உயிரோடு வாழ் கிறார். ஈழ விடுதலைப்போரை முன்னெடுத்துச் செல்வதற்கு உரிய நேரத்தில் வருவார். அதே இராஜபக்சே படைகளை பின்னங்கால் பிடறியில் அடிபட ஓட வைப்பதற்குத் தமிழன் வருவான். அங்கு சிந்தப்பட்ட இரத்தம் வீண் போகாது. முளைக்கின்ற புல்பூண்டு கூட சிங்களவனுக்குத் தலைவணங்காது அங்கே. இந்த வீராவேச சூறாவளிப்பேச்சால் பயன் ஏதும் இல்லை என்று சுட்டிக் காட் டுகிறார் சட்டமன்றத்துக்குள் சண்டபிரசண்டமாய் முதல் மந்திரிகலைஞர் கருணாநிதி.

இது வெறும்பேச்சு அல்ல. நெஞ்சில் இருந்து பீறிட்டு வருகிற ஆவேச உணர்ச் சி. எங்கள் இரத்தச் சுழற்சியோடு கலந்து இருக்கிற தமிழ் ஈழ மக்களைக்காக்க வேண்டும். அவர்களுக்கும் ஒரு தனிநாடு என்று அமைய வேண்டும் என்று எங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கக்கூடிய விடுதலை உணர்ச்சி.

ஆகவே, தமிழகத்தில் இருக்கிற இளைஞர்கள் உள்ளம், தமிழ் ஈழம் மலர்வ தற்குத் துணை செய்யட்டும்.கொலைகாரன் ராஜபக்சே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.மனிதகுலத்தின் மனசாட்சி தட்டிஎழுப்பப்படவேண்டும். மனிதகுலத்தின் காதுகள் செவிடாகிப் போய்விட்டன,கண்கள் குருடாகிப் போய்விட்டன என்றுநாம் கடமையை விட்டுவிட முடியாது.உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட இனத்தின், பகுதியின் பிரச்சனை அல்ல. அது அகிலத்தின் மனிதாபிமானப் பிரச்சனை, மனித உரிமைப் பிரச்ச னை என்றவகையில் இந்தப் பிரச்சனையை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
அந்தவகையில் இந்த நூல் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கத்
தக்கதாக ஆதாரங்களோடு வெளியிடப்பட்டு இருக்கிறது.ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம். கேலி பேசு கிறவர்கள் கேலி பேசட்டும். கருத்துப் படங்களைக் கிண்டல்செய்து போடு கிறவர் கள் போடட்டும். அதை எல்லாம் நாம் அலட்சியம் செய்வோம். ஈழ விடுதலை உணர்வு என்பது, நம்முடைய சிந்தை செயல் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்தது. நம் வாழ்நாளில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற் காகவே நம்மால் முடிந்த அளவுக்கு பாடுபடுவோம். அவர்களைப்போன்ற
தியாகத்தை எவரும் செய்ய இயலாது.அப்படிப்பட்ட தியாகங்கள் வீண் போகக் கூடாது. ஈழத் தமிழ் இனம் தனித்தமிழ் தேசத்தை அமைக்கின்ற வகையில் அவர் களுக்கு உறுதுணையாக நாம் குரல் கொடுக்க, மக்களின் ஆதரவைத் திரட்ட, அனைத்து வழிகளிலும் ஈடுபடுவோம் என்று சூளுரை மேற் கொள் வோம்!

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment