Monday, May 20, 2013

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 4

மல்லிகையில் கொண்டுபோய் ஐந்து நாட்கள் விசாரித்துவிட்டு, திருபெரும்புதூர் படுகொலை சம்மந்தமாக என்னை சாட்சிக் கூண்டில் 250 ஆவது சாட்சியாக ஏற்றியபோது, எடுத்த எடுப்பிலேயே இது பொய் வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று சொன்னேன்.-வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 3 தொடர்ச்சி ....

அந்தக் கூட்டத்தில்தான் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக்கூடாது என்று
முடிவெடுத்தார்கள். பணம் கொடுத்தாலும் விற்கக்கூடாது என்று முடிவெடுத் தார்கள். அந்த முடிவை உடைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தானே. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை சிதறடிப்பது சோனியா காந்தி இயக்கு கின்ற மன்மோகன் சிங் அரசுதானே.


இந்திய அரசு இந்தக் கொடுமைகளைச்செய்ததனால்தானே பாலச்சந்திரன் கொல்லப்பட்டான். அந்த ஒளி சிந்துகிற இரண்டு கண்கள் எங்கே? ஒரு பால கனாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் அவன் செய்திருக்க வில் லை. மாவீரன் மகனாகப் பாலச்சந்திரன் பிறந்ததைத் தவிர வேறு எதுவும் செய் திருக்கவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது குழந்தைகளுக்கு ஆபத்து வந்ததா?
தமிழ்ப் பெண்களுக்கு ஆபத்து வந்ததா? சிங்களப் பெண்களுக்கும் கூட ஒரு
கேடும் நடக்கவில்லை. ஈழத்தமிழர்களின் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கலால் துறையும், கல்வித் துறையும், நீதித்துறையும், வேளாண் துறையும், ஆராய்ச்சித் துறையும், அனைத்துத்துறைகளும் வடிவமைக்கப் பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழம் என்று பிரபாகரன் பிரகடனம் செய்ய வேண்டியது தான் பாக்கி என்ற நிலையில், பாவிகளே அழிக்க வேண்டும் என்று ஆயுதங் களை அள்ளிக் கொடுத்தீர்களே, யுத்தத்தை நடத்தினீர்களே, இன்றைக்கு நீங் கள் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும், உங்களுக்கும் பிரச்சினை இருக்கிறது.
ஆனால், எங்கள் மக்களை அழிப்பதற்கு பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆயுதங் கள், இந்தியாவின் ரடார்கள் பயன்பட்டு இருக்கிறது.


இந்தியாவின் முப்படை தளபதிகளும் அங்கே சென்று ஆலோசனைகள் தந்தீர் கள். ஏழு அணு ஆயுத வல்லரசு களின் ஆயுதங்களை எதிர்த்து பிரபாகரன் போரிட நேர்ந்தது. உணவு, மருந்து,ஆயுதங்கள், எதுவும் இல்லை.பசியோடும், பட்டினியோடும் கிடந்து போராடினார்கள். இலட்சக்கணக்கான மக்கள் உண வின்றி, காயங்களுக்கு மருந்து இன்றி மடிந்தார்கள். பதுங்கு குழிகளில் இருந்த சின்னஞ்சிறிய குழந்தைகள் குண்டுவீசிக் கொல்லப்பட்டார்கள்.

ஐ.நா.வின் மூன்று பேர் குழு அளித்த அறிக்கை நெஞ்சைப் பதற வைக்குமே. தாய் மார்க்ள பால் பவுடர் வாங்க வரிசையில் நிற்கிறார்கள். சீறி வந்த குண்டு கள் பாய்கிறது. அந்தக் குண்டு வீச்சில் பலியான குழந்தையினுடைய கையில் பால் பவுடரினுடைய அட்டை இருக்கிறது. புலிகளை அழிக்கப் போகிறோம் என்று இந்திய அரசு ஆயுதம் தந்து அனைத்து மக்களையும் கொன்று விட்டார் கள். அவ்வளவு கொடூரமானபடுகொலைகள். குழந்தைகள், பெண்களை நாசப் படுத்தியப் படுகொலைகள்.

இத்தனைக்கும் காரணமான கூட்டுக் குற்றவாளி, இனப்படுகொலை செய்த
இந்திய அரசுதான். இந்திய அரசு தப்ப முடியாது. அதற்கு சாட்சியங்கள் இருக் கின்றன. சரியான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. சாட்சியம் இருக்கிறது. அதில் இருந்து இந்திய அரசு தப்ப முடியாது. சிங்களக் கொடியவர்கள் செய்த இந்த அக்கிரமங்களுக்கு என்ன தீர்வு? சிங்களவர்கள் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அது நடக்கும். சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று நாங்கள் தீர்மானம் போட்டோம். 1995 ஜூலை 1 ஆம் தேதி காவிரி ஆற் றங் கரையில் தீர்மானம் போட்டோம். அதில் முதல் தீர்மானத்தை முன் மொழிந்தவன் என்ற தகுதியோடு நான் நிற்கிறேன்.

விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கிறேன்; நாளை யும் ஆதரிப்பேன் திருமங்கலத்தில் என்ன? நாடாளுமன்றத்தில் என்ன? பொடா நீதிமன்றத்திலேயே நான் சொன்னேன். அதுமட்டும் அல்ல. மல்லிகையில் கொண்டுபோய் ஐந்து நாட்கள் விசாரித்துவிட்டு, திருபெரும்புதூர் படுகொலை சம்மந்தமாக என்னை சாட்சிக் கூண்டில் 250 ஆவது சாட்சியாக ஏற்றியபோது, எடுத்த எடுப்பிலேயே இது பொய் வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று சொன்னேன்.

அரசு வழக்கறிஞர் டேனியல் நீ ஒரு பிறழ் சாட்சி என்று சொல்லிவிட்டு, விடு தலைப்புலிகளை வைத்துக்கொண்டு கட்சித் தலைவரை கொலை செய்ய முயன்றதற்காக நீங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்தானே என்று முதல் கேள்வியைத் தொடுத்தார். நான் நீதிபதியைப் பார்த்து இந்த வழக்குக்கு சம்மந் தம் இல்லாத அபாண்டமான குற்றச்சாட்டை இவர் என் மீது தொடுக்கிறார், இதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றேன். நீங்கள் எந்தக் கருத் தை யும் தாராளமாகச் சொல்லாம் என்றார், நீதிபதி. அந்த ஒரு கேள்விக்கு மட்டும் நான் 35 நிமிடம் பதில் சொல்லியிருக்கிறேன். அந்த வழக்கினுடைய விசார ணை யில் என்னுடைய சாட்சியங்கள் மொத்தம் 67 பக்கங்கள் இருக்கின்றன.

அப்பொழுது இந்திய அரசு தன் முதுகில் குத்திவிட்டதாக பிரபாகரன் உங்களி டம் சொன்னாரா? அப்படி நீங்கள் பேசினீர்களா? என்று கேட்டார்கள். அவர் என் னிடம் சொல்லவில்லை என்றேன். அதற்கு முன்பே நான் டேனியலிடம் சொன்னேன், என்னை ஏன் சாட்சியாகப்போட்டிருக்கிறீர்கள்? நீங்கள் 161 எழுதி
வைத்திருப்பதை நான் சொல்ல வேண்டுமா? என்றேன். 161 என்பது காவல் துறையினரே அவர்களுடைய விருப்பத்திற்கு எழுதிக்கொள்வது. அது அயோக் கியத்தனமானது.

அப்படித்தானே பேரறிவாளன், சாந்தன், முருகன் மென்னியை முறிப்பதற்குத்
தூக்குக் கயிறை தயாரித்திருக்கிறீர்கள்.புல்லர் வழக்கிற்கும் இதற்கும் வித்தி யாசம் இருக்கிறது. இவர்கள் தடாவில் இருந்து விடுவிக்கப் பட்டார்கள். ஆகை யினால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். நீ எழுதி வைத்திருப்பதை நான் எப்படிச் சொல்வேன். பகத் சிங் வழக்கை நான் படித்திருக்கிறேன். உடன் இருந் தவன் அப்ரூவராகி விட்டான். அப்ரூவரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத் தினார்கள். பகத் சிங், சுகதேவ், ராஜகுருவிற்கு எதிராக சாட்சி சொன் னான். சுகதேவை கைவிலங்கோடு கூண்டில் நிறுத்தியிருந்தார்கள்.அவன் அந்த விலங்கோடு காலில் இருந்த செருப்பைக் கழட்டி அவன் மீது எறிந்தான். இது நீதிமன்றத்தில் பதிவாகி இருக்கிறது.

நான் டேனியலிடம் சொன்னேன்,ஆயிரம் வருடம் ஆனாலும் அந்த அப்ரூவ ருக்கு செருப்படி விழுந்ததுதான் நினைவில் இருக்கும் என்று.என்னுடைய சாட்சியத்தை வைத்து, நான் நேசிக்கின்ற தலைவர் பிரபாகரனை கூண்டில் ஏற் றப் போகிறாயா? உன்னைப் போல் பைத்தியக்காரன் யாரும் இல்லை என் று. இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றார். அப்படி என்றால், இந்திய அரசு தன் முது கில் குத்திவிட்டதாக பிரபாகரன் சொன்னதாக நீங்கள் சொன்னீர்களா? பிரபா கரன் சொல்லவில்லை. இந்திய அரசு முதுகில் குத்திவிட்டது என்று நான்
சொன்னேன். நாடாளுமன்றத்திலும் சொன்னேன்,இந்த பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்திலும் சொல்கிறேன் என்றேன்.

37 கை கால்கள் இழந்த பிள்ளைகளைப் பராமரித்து என் தாய் எங்கள் வீட்டில்
ஒன்றரை வருடமாக உணவு வழங்கினார். என் தம்பி ஒன்றரை வருடம் கவ னித் தான். அதற்காக ஒரு வருடம் சிறைக்குச் சென்றான். கை, கால், கண் இல் லாதவர்களை மனசாட்சிப்படி ஒன்றரை வருட காலம் வீட்டில் வைத்திருந் தோம். ஈழத்தமிழர்களை ஆதரித்துப் பேசுகிறோம் என்பதற்காக நாங்கள் நிந்திக் கப்பட்டோம்.இருட்டடிப்புக்கு ஆளானோம். பழி சொன்னார்கள், இவன் புலி களை ஆதரிக்கிறான். இவன் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறான் என்று.

என்னுடைய அன்புக்குரியவர்களே, இன்றைக்கு வீதி தோறும் விடுதலைப் புலி கள் வாழ்க என்ற சத்தம் கேட்கிறது. எங்கள் தலைவர் பிரபாகரன் வாழ்க என்ற
முழக்கம் கேட்கிறது. இளம்பிள்ளைகளின் சட்டைகளில் சேகுவேரா படத்தைப் பார்த்தேன். இன்றைக்கு தலைவர் பிரபாகரன் படத்தைப் பார்க்கிறேன். காலம் வேகமாக மாறி இருக்கிறது. இந்த நிலைமை ஏற்படும் என்று சொன்னோம். சுதந்திரத் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு, அதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2011 ஜூன் 1 ஆம் தேதி பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல் சில் நடைபெற்ற ஈழத் தமிழர்களினுடைய ஆதரவு மாநாட்டில் பேசினேன்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள்ளே அமர்ந்திருந்த போது தான் இலண்டனில் இருந்து வந்த தமிழ்வாணி ஞானகுமார் முதல் அமர்வில்
பேசினார். அவர் மருத்துவத்துறையில் பணியாற்றும் ஒரு தாதி. அவர் பேசுகிற போது எதிர் வரிசையில் நான் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது அந்தத் தங்கை கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பேசினாள், நான் மருத் துவத்துறையில் இருக்கிற நர்ஸ். நான் முள்ளிவாய்க்கால் சம்பவ காலங் களில் அங்கு இருந்தேன்.

மருத்துவ மனைகளுக்கு முன்பே பிணங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்தன. அறு வைச் சிகிச்சை செய்வதற்கு மயக்க மருந்து கொடுக்க முடியவில்லை. கசாப் புக் கடையில் பயன்படுத்துகின்ற வெட்டுக் கத்திகள் கொண்டுதான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் மருத்துவமனை களில் விழுந்த குண்டுவீச்சில் இறந்து போனார்கள். மருத்துவம் படித்திருந்தும் உதவி செய்வ தற்கு எந்த மருந்தும் கிடைக்கவில்லை. கண்ணுக்கு எதிரிலேயே அதிகம்பேர் இறந்து போனார்கள். இன்றைக்கும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய
நாடுகளே ஏதாவது செய்யுங்கள் என்று கதறிய அந்தத் தங்கையால் தொடர்ந்து
பேச முடியவில்லை. அழுதுகொண்டே பேச்சை பாதியில் நிறுத்திக் கொண் டார்.

கொலைகாரன் கோத்தபய ராஜபக்சே பேட்டி கொடுத்தான். தமிழ்ப் பெண்கள்
எல்லாம் கற்பழிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வருகிறதே? ஈழத் தமிழ்ப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பல பேர் கொல்லப்
பட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? என்றதற்கு, அப்படி யெல் லாம் ஒன்றும் நடக்கவில்லை. ஒரு அழகான தமிழ்ப் பெண் கூட இலண்டனில் இருந்து வந்தாளே, அவளை கற்பழிக்காமலேயே அனுப்பி விட்டார்களே என்று கோத்தபய ராஜபக்சே சொல்கிறான். எவ்வளவு கொடுமை.

அவனையும், அவன் அண்ணன் மகிந்த ராஜபக்சேவையும் திருப்பதி கோயி லுக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள். 2017 கோயில்களை உடைத்து நொறுக் கிய அந்தக் கொலைகாரப் பாவிக்கு திருப்பதியில் என்ன வேலை என்று கேட் டேன். அவனை சாஞ்சிக்கு அழைத்து வருவதாகச் சொன்னார்கள். நாங்கள் சாஞ்சிக்கு படை எடுத்து வருவோம் என்றோம். 1200 தோழர்கள், மூன்று மாகா ணங்களைக் கடந்து, விந்திய சாத்பூரா மலைகளுக்குப் பக்கத்தில் போய் நெருப் பு வெயிலில் அந்த வெயிலுக்கு மத்தியில் துணை இராணுவப் படை யினர் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் எதிர்த்துப் போராடி தமிழனின் தன் மா னத்தைத்தரணிக்குப் பறைசாற்றினோம்.

தமிழ் ஈழ மண்ணில் இருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்படவேண்டும். இப் பொழுதும் கொடுமை நடக்கிறது. இன்றளவும் நடக்கிறது.சித்திரவதை நடக் கிறது. இளம் பெண்களுக்கு கேடு விளைகிறது.நம்முடைய நினைவாலயங் கள், கல்லறைகள் உடைத்து எறியப்படுகின்றன.

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களின் உள்ளத்தில் முத்துக்குமார்
வைத்த தணல் எரிகிறது. 19 தமிழர்கள் மேனிக்கு வைத்த நெருப்பு எரிகிறது.
விழித்துக்கொண்டுவிட்டது தமிழர் தரணி. புதிய போர்க்குரல் எழுகிறது மாண வர் சமுதாயத்தில். புதிய நம்பிக்கை விளைந்திருக்கிறது. சுதந்திரத் தமிழ் ஈழத் துக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் பிரஸ்ஸல்சில் சொன்னேன்.

உலகத்தில் பல்வேறு தேசங்களில் பரவியிருக்கிற புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் கள் அந்தந்த நாடுகளில் ஓட்டுப்போட வேண்டும் என்ற வாக்கெடுப்பு உலகத் தில் இதுவரை நடந்தது கிடையாது. நான் உலக நாடுகளில் நடந்த பொது வாக் கெடுப்பைப் பற்றி முறையாக படித்திருக்கிறேன். எத்தனை நாடுகள் பொது வாக்கெடுப்பில் தனி நாடுகளாகிவிட்டன. நார்வே, ஸ்வீடன், குரோசியா,ஜார் ஜியா, எரித்திரியா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் தனி நாடு ஆகிவிட்டது.
ஸ்காட்லாந்து தனிநாடு ஆகலாம் பொது வாக்கெடுப்பில். இத்தனை நாடுகள்
பொது வாக்கெடுப்பில் தனி நாடுகள் ஆகிவிட்டன. சுதந்திரத் தமிழ் ஈழம் என்ப தற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

முதன் முதலாக பிரஸ்ஸல்சில் கேட்டேன். உலகத்தின் எல்லா நாடுகளிலும் எங்கள் ஈழத் தமிழ் குலக்கொடிகள் இருக்கிறார்கள். அனைவரும் ஈழத்திற்கு இப்போது போக முடியாது. எனவே, அந்தந்த நாடுகளில் அவர்களுடைய ஆவ ணங்களைப் பதிவு செய்துவைத்துக்கொண்டு, ஈழத்தமிழர் களுக்கான ஆதாரங் களை பதிவு செய்து, அந்தந்த நாடுகளில் அவர்களை ஓட்டுப்போட ஏற்பாடு செய்யுங்கள்.வாக்கெடுப்பில் பங்கேற்க ஏற்பாடுசெய்யுங்கள். அந்த வாக்கெ டுப்பு சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு.

அதற்கு முன்பு சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்
படட்டும். இராணுவமும், போலிசும் அகற்றப்படட்டும். 99.9 சதவிகிதத்தினர்
சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். ஒரு பக்கத்தில் சுதந் திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு. இன்னொரு பக்கத்தில் இனப்படு கொலை செய்தவனை கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்கான அடுத்த கட்டம்.இது தான் நமது இலக்கு.அதை நோக்கிச் செல்வோம்.

கலைஞர் அவர்களே, இத்தனை இலட்சம் தமிழர்களின் படுகொலைக்கும் ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடர்ந்து இருந்து, படுகொலை நடந்த போது ஆயுதம் கொடுத்த அரசில் பங்கெடுத்த பாவத்திற்கு ஆளாகி விட்டீர் களே. அந்தக் கறையை உங்களால் எப்படிப் போக்க முடியும்? அந்தப் பழியில் இருந்து நீங்கள் எப்படி மீள முடியும்? நடந்த கொடுமைகளைத் தடுக்கத் தவறி னீர்கள். பிரணாப் முகர்ஜி கொடுத்த வாக்குமூலங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு பேசினீர்கள். முத்துக்குமார் தீக்குளித்து மடிந்து, அதன் பிறகு பலபேர் தீக்குளித்து தங்களை அழித்துக்கொண்டபோது, அந்தத் துயர மரணத்தைக்கூட கொச்சைப்படுத்துவதற்கு உங்களிடமிருந்த காவல்துறை பயன்பட்டது. அது வும் தமிழர்களால் மறக்க இயலாது.

தமிழ்ச் சமுதாயத்துக்குச் சொல்கிறேன்.இன்றைக்கு இருக்கின்ற பிரச்சினை
களில் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்காக, தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழகத்தை தமிழர் நலனைப்பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை நமது இயக் கத்துக்கு உள்ளது. அதே நேரத்தில், ஊழலற்ற அரசியலைவென்றெடுக்க மக் கள் துடிக்கிறார்கள். பெரும் ஆபத்தில் சிக்கி இருக்கிறோம்.ஸ்பெக்ட்ரம் ஊழல், அது முடிவதற்குள்ளாகவே வந்துவிட்டது நிலக்கரி அனுமதி ஊழல்,ஒரு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் கோடி. சி.பி.ஐ.ஆடிப்போயிருக்கிறது நீதிமன் றத் தில்.தவறுகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துவிட்டன. ஊழல் குற் றக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது அரசு.எனவே மக்கள் இந்த அரசைத் தூக்கி எறிவார்கள்.

ஊழலற்ற அரசு வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் அரும்பி நிற்கிறது. இளைய உள்ளங்களில் அது பூத்து நிற்கிறது. ஒரு மாற்று வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது. இணைய தளத்தில், வலை தளத்தில், டுவிட்டரில், முகநூலில் இலட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் கருத்து களைப் பறிமாறுகிறார்கள் கட்சிகளைக் கடந்து. அது எப்படி வரும் என் று யூகித்துச் சொல்லிவிட முடியாது. எகிப்தில் மல்லிகைப் புரட்சி சொல்லிக் கொண்டா வந்தது? எப்படி திடீரென்று வெடித்தது.டுனிசியாவில் எப்படி வெடித் தது. அதைப்போல இங்கும் மாற்றம் வரும். இளைய தலைமுறை அந்த நோக் கம் கொண்டு வளர்கிறது. அந்தத் தேடலுக்கு விடையாக நம்மைத் தகுதியாக் கிக்கொள்வதற்கு முயலவேண்டும் என்றுதான் மறுமலர்ச்சி திராவிட முன் னேற் றக் கழகம் விளங்குகிறது.

மாற்று? என்று ஒரு கேள்வி வருகிற போது, அதற்கு ஒரு தேடல். திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கும் - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற் றக்கழகத்துக்கும் மாற்று என்றால், அதுவும் திராவிட இயக்கத்தின் பரிமாணமா கவே அமையும் என்ற எண்ணத்தோடு நம் இயக்கம் இருக்கிறது. தமிழ்க் குலத் துக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழகத்துக்கும் அண்ணா செய்த தொண்டு. அண் ணா இல்லையேல் இந்த உணர்வு ஏது? அண்ணா இல்லையேல் இந்த எண்ணம் ஏது? அண்ணா வழியில் தூய்மையான அரசியலை நடத்த முனைகிறோம்.

தமிழக மக்களே... எங்களுக்கு எல்லா சோதனையும் வைத்துப் பார்த்து விட்டீர் கள். இவ்வளவு துன்ப ங்களையும் கடந்து பத்தொன்பது வருடங்கள் கடந்து நாங் கள் நிமிர்ந்து நிற்கிறோம்.தியாக நெருப்பில் தொடங்கிய இயக்கம்இது. நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன்,உப்பிலியாபுரம் வீரப்பன்,மேலப் பாளையம் ஜகாங்கீர்,கோவை-காமராஜபுரம் பாலனும் தங்களை அழித்துக் கொண்டு உருவாக்கிய இயக்கம் இது. எதிர்காலம் ஒளிமயமாகக் காட்சி தரு கிறது. தமிழக மக்கள் நமக்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை யோடு நாங்கள் வளர்கிறோம். நமக்கும் ஒரு வாய்ப்பை தமிழகம் நிச்சயமாகக் கொடுக்கும். அந்த

வாய்ப்பை தமிழகத்தின் உயர்வுகாகவும்,தமிழர்களின் விடியலுக்காகவும் நாம்
பயன்படுத்துவோம். மாறி வருகிற காலத்தில் மறுமலர்ச்சி திராவிடமுன்னேற் றக் கழகத்திற்கு ஒரு இலக்கு இருக்கிறது. முன்னேறிச் செல்;கண்மணியே, தோழனே முன்னேறிச்செல்; அதிகாரத்தைக் கைப்பற்று! அந்த நாள் விரைவில் வரும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment