Saturday, May 18, 2013

விருதுநகரில் வியூகம் அமைக்கும் மதிமுக

விருதுநகரில் மதிமுக சார்பில் 20-வது ஆண்டு விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு சிறப்பாக நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதி ஆகியவைகளுக்கு சீட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலையில் நடைபெற்றது. இதில், வைகோ பங்கேற்று பேசியதாவது:

இதே நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் 16-ம் தேதி மக்களவை தேர்த லில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதே தொகுதியில் தோற்க போகிறேன் என் ற கவலையிலும், ஈழத்தில் தமிழர்கள் படுகொலைச் சம்பவமும் நடந்து கண்டு ஆழ்ந்த துயரத்திலும் இருந்தேன். இதையடுத்து தேர்தல் தோல்விச் செய்தி கேட்டு வத்திராயிருப்பைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் உடலில் நெருப்பு வைத் துக் கொண்ட சம்பவங்களும் நடந்தேறியது. இத்தனை இடையூறுகளுக்கு இடையிலும் மதிமுகவை 20 ஆண்டு காலம் தோழர்களால் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர். விருதுநகரில் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரதப் போராட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் மாற்றத் தை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்தில் தொண்டர்கள் அனைவரும் விவ சாயிகளின் துயரம் துடைப்பதற்காக ஏராளமான பேர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து, வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட தமிழக அரசு அமைச் சரவை குழுவை அனுப்பியது. பின்னர் மத்திய நிவாரணக் குழுவினரும் பார் வையிட்டுச் சென்றுள்ளனர்

.

அதற்கு முன்னதாக மதுவை ஒழிப்பதற்காக நடைபயண போராட்டம் உள் ளிட் ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்போராட்டங்கள் தமி ழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், வழியெங்கும் லட்சக் கணக்கான பெண்களை சந்தித்துள்ளேன். இந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி நன்றாக வளர்ந்து பொதுமக்களிடையே நம்பிக்கையை பெற்றுள்ளது. 

இதுபோன்ற காட்சியை நான் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. ஆனால், விரைவில் மக்களவை தேர்தல் வரப்போகிறது. விருதுநகர் தொகுதியில் மதிமுக போட்டியிடும் என்பதையும் கூறிக் கொள்கிறேன். ஆனால், இப்போது தேர்தல் வளர்ச்சி நிதிக்காகவும், கழக வளர்ச்சி நிதிக்காகவும் சீட்டுக்கள் வழங் கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கினங்க வந்துள் ளேன். அதனால், மறுபடியும் தொண்டர்களை கஷ்டப்படுத்துவதாக யாரும் நினைக்க வேண்டாம். உங்களுக்காகவே நாள்தோறும் அதிகமாக உழைப்பவன் தான் வைகோ. மேலும், இலங்கை அதிபர் ராஜபட்ச ஈழத்தமிழர்களை கொண்டு குவித்தவன் என்று கூறி இந்தியா முழுவதும் எடுத்துரைக்கும் வகையிலான போராட்டத்தையும் நடத்தியுள்ளேன்.

மேலும், விருதுநகரில் செப்-15ம் தேதி மதிமுக 20-வது ஆண்டு விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கிறது. 

இதுவரையில் நடந்த மாநாடுகளிலேயே அதிகம் பேர் கலந்து கொள்ளும்வகை யில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கட்சி தொண்டர் கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொண் டர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், மதிமுகவின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவும் ஆன வரதராஜன் மற்றும் முன்னாள் எம்.பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment