Saturday, May 18, 2013

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை

மே 17-2013 அன்றைய பொதுக்கூட்டதின் காணொளி.....

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் புலிகளின் குரல் அந்தணனின் முகவுரையுடன் புலவர் புலமைப் பித்தன், புலவர் மறத்தமிழ்வேந்தன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் இராஜேஷ் ஆகியோரின் வரிகளுடன் உருவான “விடுதலைக்கு மரணமில்லை” ஒலிப்பேழை குறுந்தட்டு வெளியிடப்பட்டது. மதிமுக தோழர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு “பிரபாகரன்” என்று பெயரினை வைகோ அவர்கள் இந்நிகழ்வில் சூட்டினார்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை எழும்பூர் பகுதி மதிமுகவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வைகோ அவர்களின் உரை

கொளத்தூர் மணி அவர்களின் உரை

 பழ.நெடுமாறன் அவர்களின் உரை

நன்றி :- பெரியார் தளம் (காணொளி உதவி )

No comments:

Post a Comment