Tuesday, May 7, 2013

திருச்சியில் மதிமுகவினர் மதுவிலக்கு பிரச்சாரம்

இன்று (06.05.2013 ),ம.தி.மு.க. சார்பில் மண்ணச்சநல்லூர் பகுதியில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பிரச்சார பயணம் நடந்தது. பிரச்சார பயணத்துக்கு ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்புசெல்வம் தலைமை தாங்கினார்.

பூனாம்பாளையம், காளவாய்பட்டி, திருவெள்ளறை, சாலைப்பட்டி, எஸ்.
மேட்டூர், வீராணி, சிறுப்பத்தூர், ஓமாந்தூர், ராசாம்பாளையம், அய்யம் பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, தளுதாளப்பட்டி, தத்தமங்கலம் ஆகிய ஊர்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.


பிரச்சாரத்தில் மாவட்ட பொறுப்பாளர் டி.டி.சி. சேரன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் கிரிஜா சுப்ரமணியன் மது வால் வீட்டுக்கும், நாட்டுக்கும் விளையும் தீமைகளை விளக்கி பேசி, தமிழக பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பேசினர்.

ஒன்றிய துணை செயலாளர் டி.எம். சின்னதம்பி, ஒன்றிய பொருளாளர் ஆவுளி, மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், பேரூர் கழக துணை செயலாளர் பொன்னுதுரை, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன், துணை அமைப்பாளர் சிவகுமார், தத்தமங்கலம் சுப்ரமணியன் உள்பட ம.தி.மு.க.-வினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment