Saturday, May 18, 2013

விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன்! பகுதி 2

அருமைத் தோழர்களே! கட்சியை மறந்துவிடுங்கள். வைகோ பேசுவது மறு மலர்ச்சி தி.மு.கவின் மேடை என்பதை மறந்துவிடுங்கள். இந்த மண்ணில் பிறந்த வீரவாலிபர்களே! நம் வாழ்நாளில் நம் சொந்தச் சகோதரர்கள் அழிக் கப்பட்டார்களே, அந்த மண்ணில் அவர்கள் சுதந்திரம் உள்ள மக்களாக,மானம் உள்ள மக்களாக உரிமை உள்ள மக்களாக வாழ்வதற்கு கொலைகாரச்சிங்களக் கூட்டத்தின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாவீரர்கள் பெயரால் உறுதி எடுப் போம். மாவீரர்களின் தியாகத்தால் சூளுரை மேற்கொள்வோம்.-வைகோ (27.11.2009)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

அண்ணன் நெடுமாறன் வரிசைப்படுத்தினாரே! சிங்களப்படைகளைச் சின்னா பின்னம் செய்து, பின்னங்கால் பிடறியில் அடிபட ஓட வைத்து, அக்னி அலை களில், ஓயாத அலைகளில், பரந்தனிலே, மாங்குளத்திலே,கிளிநொச்சியிலே, யானை இறவிலே உலகம் திகைக்கின்ற பெரிய வெற்றிகளைப் பெற்ற விடுத லைப்புலிகளை, இனி யுத்தக் களத்திலே அழிக்கமுடியாது,வெளிநாடுகளின் ஆயுத பலம் வேண்டும் என்று அவன் எண்ணிய நேரத்தில், தேடிச்சென்று கை யெழுத்திடாத ஒப்பந்தத்தைப் போட்டு ஆயுதம் கொடுத்தாய், ரேடார் கொடுத் தாய். பலாலி விமானதளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தாய்.அங்கிருந்து சீறிப் பாய்ந்த விமானங்கள் தான் எங்களது பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட் டுப் போயின, செஞ்சோலையில்.


அதற்குப்பிறகு, இலங்கையோடு அந்நாட்டுக்கடற்படையோடு தகவல் பரிமாற் ற ஒப்பந்தம்போட்டாய்.விடுதலைப்புலிகளுக்கு வந்த கப்பல்களை நடுக்கட லில் மூழ்கடித்தாய். இத்தனை துரோகங்களும் செய்து முழுக்க முழுக்க யுத்தத் தை நடத்திய இந்திய அரசின் துரோகத்தை மன்னிக்க முடியாது. இதை மறக்க டிக் கலாம், பிரச்சனையைத் திசைதிருப்பலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். முத்துக்குமாரின் உடம்பைப் பற்றி எரித்த நெருப்பின்மீது சத்தியம் வைத்துச் சொல்வோம்.இந்த இனத்தை அழிப்பதற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு மன் னிப்பு கிடையாது. பதினாறுபேர் தீக்குளித்து மடிந்தார்கள். அதற்குப் பிறகு, ஈவு
இரக்கமற்ற முறையில், மனசாட்சியற்ற ஒரு மனிதர்,யாரைக் குற்றம் சாட்டு கிறார்?

நெஞ்சம் கொதிக்கிறது. என் வாயால் அந்த வார்த்தைகளை உச்சரிப்பதற்கு
மனம் இல்லை.உலகத்தில் தமிழனுக்கு மதிப்பைத்தேடிக்கொடுத்தானே தமிழ்த் தாயின் தவமைந்தன் பிரபாகரன், அவரைக்குற்றம் சாட்டுகிறார். ‘மாவீரன் மாத் தையா’ என்றார்.பிரபாகரனைப் படுகொலை செய்ய இந்திய உளவு நிறுவனத் தோடு சேர்ந்து திட்டமிட்ட துரோகியா மாவீரன்? இனம் இனத்தோடுதானே சேரும். துரோகி தானே துரோகியை வர்ணிக்கமுடியும்.

கருணாவின் படை அணிகள் மோதின என்றார். நீங்களா காக்கை வன்னிய னைப் பற்றி எழுதுவது? என்றைக்கோ எழுதியது. காக்கை வன்னியன் இன் றைக்கு யார்? உலகம் கேட்கிறது. கருணா இன்றைக்கு யார்? உலகம் கேட்கிறது.

மதிப்புக்குரிய முதலமைச்சர் அவர்களே, தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. அப்படித்தான் அர சியல் நடத்த வேண்டும் என்ற எண்ணமும் அல்ல.

ஆனால், கேள்வி கேட்பார் இல்லை என்று நினைத்துக்கொண்டு, துரோகங்க ளுக்கு எல்லாம் உடந்தையாக இருந்துவிட்டு இன்றைக்குப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறீர்கள். மாத்தையா வையும் கருணாவையும் நீங்கள்
மாவீரர்களாக சித்தரித்ததை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

14 பேர் தீக்குளித்தபோது ஒருவருக்காவது நீங்கள் இரங்கல் தெரிவித்தது உண் டா? இதோ அமரேசனின் பிள்ளைகள் இந்தக் கூட்டத்துக்கு வந்து இருக்கிறார் கள். முத்துக்குமாரின் குடும்பத்தினர் இந்தக் கூட்டத்துக்கு வந்து இருக்கிறார் கள். அவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அமரேசன் தீக்குளித் தபோது மனநிலை சரியில்லாததால் தீக்குளித்தார் என்று காவல்துறை அதி காரி களைவிட்டு அறிக்கைவிட வைத்தவர் யார்? பள்ளப்பட்டி ரவி கடைசி நிமிடத்தில் அவன் உயிர் பிரிகின்றவரை ஈழம் ஈழம் என்று சொல்லித்தானே மதுரை மருத்துவமனையில் செத்துப்போனான்.

வீட்டில் ஸ்டவ் வெடித்து அதன் காரணமாக தீக்காயம் ஏற்பட்டது என்று அடி ஷனல் டி.ஜி.பி.யைவிட்டு அறிக்கை விட வைத்தவர் யார்? அந்த பள்ளப்பட்டி
ரவியின் மனைவி அந்த ஏழைப் பெண் குடிசையில் இருக்கின்ற பெண் அழுது
கொண்டு சொன்னாள், எங்கள் வீட்டில் விறகுவைத்துத்தான் அடுப்பு மூட்டு கிறோம். நாங்கள் ஏழைகள். எங்கள் வீட்டில் ஸ்டவ்வே கிடையாது என்று. பத் திரிகை யாளர்களை அழைத்துச் சொன்னேன், காவல்துறை அதிகாரிகளை அழைத்துச் சொன்னேன்.மிரட்டிப் பார்த்தார்களே, ‘ஈழத் தமிழர்களுக்காகத் தீக் குளித்ததாக யாராவது அறிக்கை விட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக் கும் என்று அறிக்கை விட வைத்தவர் கருணாநிதிதானே?

அமரேசன் மனநோயால் தீக்குளித்தார் என்று சொல்ல வைத்தது கருணாநிதி
தானே? திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இருவர் தீக்குளித்தார்களே சிவப்பிரகாசம், கோகுல ரத்தினம். அவர்களுக்காவது, ஒரு வார்த்தை இரங்கல் தெரிவித்தது உண்டா நீங்கள்?

இன்றைக்கு என்ன மெளனத்தில் அழுகை?யாரை ஏமாற்றுகிறீர்கள்?பதினான்கு பேர் தீக்குளித்து இறந்தபோது ஒருவரி எழுதுவதற்கு மனம் இல்லாத நீங்கள், இன்றைக்கு மெளனத்தின் வலியை யார் அறிவார்? என்று எழுதுகிறீர்களே?

யாரும் அறிய முடியாது, நீங்கள் மெளனமாக குதூகலித்ததை. பிரபாகரன் படைக்குப் பின்னடைவு என்பதில் நீங்கள் உள்ளுக்குள் குதூகலித்துக் கொண் டா டியதை யார் அறிய முடியும்? ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்றான்
வள்ளுவன். உங்களுக்காகவே எழுதிவிட்டுப் போனான்.

நிராயுதபாணிகளைத் தாக்கக்கூடாது என்பதுதான் தமிழர்களின் போர் மரபு. ஆனால், நீங்கள் நிராயுதபாணிகளைத் தான் தாக்குகிறீர்கள். உங்கள் கைக்குள்
கட்டுப்பட்டுக் கிடக்கிறது பத்திரிகை உலகம். நான் பத்திரிகையாளர்களைக்
குறைசொல்லவில்லை. பத்திரிகை முதலாளிகளை ஆசிரியர்களைக் குறை
சொல்லவில்லை. அவர்களது மனதிலும் வேதனை இருக்கிறது.

ஆனால், கட்டுப்பட்டுக் கிடக்கிறது.இந்தத் தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு ஏற் பட்டு இருக்கின்ற மிகப்பெரிய ஆபத்தாக, பத்திரிகைகள் முடக்கப்படுகின்றன. கருத்துகளைச் சொல்ல முடியாத நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவருடைய அறிக்கையை எட்டுக்காலம் போட்டீர்கள் அல்லவா? பிரபாகரன் மீது பழி சுமத்தித்தானே அந்த அறிக்கை? முழுவதும் படித்துப்பாருங்கள். அவ ரின் அறிக்கையின் நோக்கம் என்ன? இந்த அழிவுக்குக் காரணம் பிரபாகரன் என்பதுதான், அந்த அறிக்கையின் நோக்கம்.

கருப்பட்டிக்குள் விஷத்தை வைப்பதைப்போல மந்திரிப் பதவிகளை தமிழ்நாட் டுக்கு வாரி வழங்கிவிட்டு, எலும்புத்துண்டுகளைப் போட்டுவிட்டு, படைகளை அனுப்பி ஈழத்தமிழர்களைக்கொன்றதே இந்திய அரசு.அதேபோலத்தானே இவர்

வண்ணத்தமிழில் வசனம் எழுதிவிட்டு, கடைசியில் இவ்வளவுக்கும் காரணம் பிரபாகரன் என்று குற்றம் சாட்டி அதை எட்டுக்காலம் எல்லா பத்திரிகைகளும் போட வைத்தார். அதை மறுத்து வெளியிட்ட அறிக்கை அண்ணன் நெடுமாறன் அறிக்கை தினமணி வெளியிட்டது.அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் வெளி யிட்ட அறிக்கை தினமணி வெளியிட்டது.எளியவன் அறிக்கை தினமணி வெளி யிட்டது.

நான் கேட்கிறேன், உங்கள் அறிக்கையை முழுப் பக்கம் போட்டுவிட்டு, எங்கள்
அறிக்கையை முழுமையாகப் போடவில்லை. நான் என் கட்சிக்கு விளம்பரம் கேட்டு அறிக்கையைப்போடவில்லை. ஆனால், அறிக்கையைப் பத்திரிகை க ளில் போடவிடாமல் செய்து விட்டு நீங்கள் முரசொலியில் ஒரு கேள்வி பதில் எழுதினீர்கள்.முதலமைச்சர் அவர்களே அந்தக் கேள்வி பதிலின் தொடக்கமே என்ன எழுதியிருக்கிறீர்கள்? அவருக்கு மனச்சாட்சி இல்லையென்று கள்ளத்
தோணி வைகோ சொல்லி இருக்கிறாரே, இதுதான் உங்கள்கேள்வி.

ஏன் நீங்கள் அந்தத் தலைப்பைப் போட்டீர்கள்? என் அறிக்கையில் அந்த ஒரு பகுதி மட்டும்தான் தினமணியில் வந்தது. மீதமுள்ள பகுதிகள் வரவில்லை.
நீங்கள் இதை எடுத்து வைத்துக்கொண்டு ‘கள்ளத்தோணி வைகோ’ என்றீர்கள்.
சிங்களவன் நமது தமிழனை கள்ளத்தோணி என்கிறான் என்று அண்ணா சொன் னார். என்னைக் கடுமையாக விமர்சித்த நண்பர்கள் பலர் வேறு அரசியல் இயக் கங்களில் இருப்பவர்கள் என்னைச் சொல்லி இருக்கிறார்கள்.அதற்காக நான் வருத்தப்பட்டது இல்லை.

ஆனால், அண்ணா உருவாக்கிய இயக்கத்தைக் கபளீகரம் செய்து கொண்டு, குடும்பத்துக்காகக் கட்சி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிற நீங்கள், என் னைக் கள்ளத்தோணி என்கிறீர்கள். சபாஷ்! நீங்கள் சிங்களவர்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டதற்கு இதைவிட ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வேறு எதுவும் இருக்க முடியாது. (பலத்த கைதட்டல்)

அதில் கடைசியில் என்ன எழுதி இருக்கிறீர்கள்? சீ, நீ ஒரு மனுஷனா? நீ ஒரு ஜென்மமா? என்று முடித்து இருக்கிறார். சீ நீயெல்லாம் மனிதன் தானா? என்று உங்கள் வக்கரித்த புத்தியை எழுத்தில் வடித்துள்ளீர்கள்.

நான் மனிதர்கள் கண்பார்வையில் மட்டும்தான் மனிதராகத் தெரிவேன்.(பலத்த கை தட்டல்) மனிதனுக்கு மட்டும்தான் வைகோ மனிதனாகத் தெரிவான்.

நீங்கள் என்ன கேட்டு இருக்கிறீர்கள்? குற்றச்சாட்டு என்ன? அனைத்திந்திய
அண்ணா தி.மு. கழக ஆட்சியில் 2002 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சட்ட மன்றத் தில் பிரபாகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அதை மென் மையாகக் கண்டிப்பதுபோலக் கண்டித்துவிட்டு, இன்றைக்கு போயஸ் தோட் டத்தில் போய் அடைக்கலமாகி விட்டாய் என்று நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். நான் இந்த மன்றத்தின் வாயிலாகக் கேட்கிறேன்.

முதலமைச்சர் அவர்களே, 2002 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அண்ணா திரா விட முன்னேற்றக் கழக ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரபா கரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை இன்றைக்குச் சுட்டிக் காட்டி என்மீது பாய்ந்து விழுகிறீர்களே, நான் கேட்கிறேன்.உங்களைப் போன்ற ஆட்சி, அதிகாரம், ரதகஜதுரகபதாதிகள் எதுவும் இல்லாத, இந்தத் தமிழ் மண் ணுக்கு உழைக்கின்ற ஒரு எளிய தொண்டனாகக் கேட்கிறேன்.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, சட்டமன்றத்தில் பாட்டாளி மக் கள் கட்சி வெளிநடப்பு செய்ததே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு
செய்ததே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலைப்புலிகளை பல கட்டங் களில் இன்றுவரை ஏற்றுக் கொள்ளாத மார்க்சிஸ்ட் கட்சி அன்றைக்கு வெளி நடப்பு செய்ததே, நீங்கள் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை? திராவிட முன் னேற்றக் கழகம் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை? அந்தத் தீர்மானம்,நீங்களும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானம் என்று குற்றம் சாட்டுகிறேன்.

அன்றைக்கு வெளியேறினீர்களா? சட்டமன்றத்தில் எதிர்ப்புத்தெரிவித்தீர்களா? பிறகு ஏன் அதைப்பற்றிப் பேசுகிறீர்கள்?

இவ்வளவும் செய்துவிட்டு இத்தனை கொடுமைகள் செய்வதற்கு நீங்கள் உடந் தையாக இருந்து விட்டு இன்றைக்கு எங்களைக் கூண்டில் நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்களே?அண்ணன் கேட்டாரே, தமிழ் ஈழ விடுதலைப் புலி களைப் பற்றி தடை செய்யப்பட்ட இயக்கத்தைப்பற்றிப் பேசக்கூடாது. தடை செய்து இருக்கின்ற நாடுகளில் பிரபாகரன் படம் வைக்கப்படுகிறது. தடை செய்து இருக்கின்ற நாடுகளில் விடுதலைப்புலிகளின் கூட்டங்களுக்கு அனு மதி இருக்கின்றது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மேடையில் இருந்து நான் தெரி விக்க விரும்புகிறேன். போர் முனையில் விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட என்ன காரணம்? உலகம் தடை செய்த ஆயுதங்களை ஏவினான். அத னால் தான், அனந்தபுரத்தில் நம் நெஞ்சம் நடுங்க வைக்கின்ற யுத்தக் களத்தி லே வீராதி வீரன் விதுஷா கொல்லப்பட்டார்.வீரர்களின் போற்றுதலுக்கு உரிய துர்கா கொல்லப்பட்டாள். தீபன் கொல்லப்பட்டான். கடாபி கொல்லப்பட்டான்.
யாரும் நெருங்க முடியாத மாவீரர்களை உலகம் தடைசெய்த ஆயுதங்களைப்
பயன்படுத்திக் கொன்றார்கள்.

சர்வதேசச் செஞ்சிலுவைச்சங்கத்தின் முன்னணியில் பேசலாம் என்று அழைத் துவிட்டு நடேசனை பூலித்தேவனை - சந்தோசை - கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றார்கள்.தங்கள் தாயக மண்ணின் உரிமைக்காகப் போராடி எத்த னை மாவீரர்கள் மடிந்து போனார்கள்.அவர்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத் து கிறோம். அந்த வீரர்கள் ஒரு இலட்சியத்துக்காக இறந்தார்கள். ஒரு உன்னத மான நோக்கத்துக்காக உயிர்களைத் தந்தார்கள். அவர்கள் வாழ்கிறார்கள்.அவர் கள் இயக்குகிறார்கள். போரை முன் எடுத்துச் செல்வதற்கு இயக்கு கிறார் கள்.

ஈழப் பிரச்சனைக்கு எது தீர்வு? நான் கேட்கிறேன். அன்றைக்கு வட்டக் கோட் டை யில் தந்தை செல்வா தலைமையில் தமிழர் அமைப்புகள் பண்ணாகத்தில் நிறைவேற்றிய தீர்மானம். அதுதான் தீர்வு. சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேச அரசு, அதுதான் தீர்வு. வேறு தீர்வே கிடையாது. அந்தத் தீர்வுக் காகத்தானே இத்தனை பேர் மடிந்தார்கள்.

சிதறிக்கிடந்த யூதர்களுக்காக ஒரு நாட்டை அமைக்க முடிந்தது என்றால் நம் மால் ஏன் முடியாது? பத்துக் கோடி பேர் இருக்கிறோம். இங்கு ஏழு கோடிப்பேர் இருக்கிறோம். உணர்ச்சி செத்துப்போய் விடவில்லை. தமிழர்கள் உள்ளத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது முத்துக்குமார் வைத்த நெருப்பு.அவன்தானே சொன்னான், மிகக்கெட்டிக்காரத்தனமாக இவர் போய் மருத்துவமனையில் போய் பதுங்கிக் கொண்டார் என்று வைகோ சொல் லவில்லை.உயிரைத்தந்த முத்துக்குமார் அன்றைக்குச் சொன்னான்.

ஆகவே, இவ்வளவு சோதனைகளுக்குப்பிறகு,ஈழத்துத் தமிழ் மக்கள் இவ்வளவு பேர் மடிந்ததற்குப்பிறகு அவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்த வேண்டிய
கடமை தமிழ் மக்களுக்கு உண்டு.அவர்களது தியாகம் ஒருபோதும் வீண் போ காது. 28 பேரை வைத்துக் கொண்டு, 1987 ஆம் ஆண்டு வன்னிக் காட்டுக்கு உள் ளே சென்ற பிரபாகரனால் இலட்சம் பேர்கொண்ட படையை எதிர்த்து கான கத்தில் பாசறை அமைக்க முடிந்தது என்றுசொன்னால், அவர்களால் இயலும்.
அடுத்த கட்டம் என்ன என்பதையும், யுத்த களங்களையும் வரலாறுதான் தீர்மா னிக்கும்.

ஸ்பார்ட்டா வீரர்களைப்பற்றிப் பாராட்டினாரே. அதைவிடச் சிறந்தவர்கள். ஒவ் வொரு வீரனும் தன் உடம்பில் இருக்கின்ற கடைசிச் சொட்டு இரத்தம் சிந்து கின்றவரை அந்த மண்ணுக்காகவே மடிந்தவர்கள். பெற்றதாயும் தகப்பனும்
பிள்ளைகளை வாரிக் கொடுத்தனர் போர்க்களத்துக்கு. திரும்பி வரமாட்டான்
என்று தெரிந்தே அனுப்பி வைத்தனர். திரும்பமாட்டோம் வீட்டுக்கு என்று
எண்ணித்தான் சென்றார்கள்.

வாழ்க்கைச் சுகங்களைத் தேடாத அந்த மாவீரர்கள் மரணத்துக்கு அழைப்பிதழ்
கொடுத்து கழுத்தில் நச்சுக்குப்பிகளைக் கட்டிக்கொண்ட அந்த வீரர்கள் மண் ணின் விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்கள். வாழ்க்கையில் எந்த உல்லா சத்தையும் நாடாதவர்கள் அல்லவா? அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்து கின்றோம். அவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர். அந்த மண்ணின் ஆன்மா வோடு கலந்துவிட்டனர்.நெருப்பு நதியாக வந்து கொண்டு இருக்கின்றனர். இந் த நெருப்பு நம் நெஞ்சில் எரியட்டும்; அணையாத விடுதலைத் தீயாக எழட்டும் என்றார் அண்ணன் நெடுமாறன்.

‘தணலாக எழுக’ என்றார் ஞானசம்பந்தர். அதைப்போல, வீரத் தணலாய் எழுக!
நெஞ்சில் எழுக! உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களே, குழப்பவாதி களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.குதர்க்கம் பேசுபவர்களுக்கு இடம் கொடுக்கா தீர்கள். ஒரே இலக்குதான் தமிழ் ஈழம். அதைத்திசை காட்டும் கருவியின் பெயர் தான் பிரபாகரன்.

என் அன்புச் சகோதரர்களே, மாவீரர்கள் மடிந்து விடவில்லை. அவர்கள் கல்ல றைகளுக்குள் போய்விட்டார்கள் என்று கருதாதீர்கள். அவர்கள்தாம் உயிர்ச் சக்தி. தமிழ் ஈழ விடுதலைப்போரின் ஆன்மாவில் அவர்கள் நுழைந்து விட்டார் கள். அதற்கு அழிவில்லை. இந்தப் போரை இயக்குகின்ற சக்தியே மாவீரர் களின் தியாகம்தான். அவர்கள் சிந்திய இரத்தம்தான். அவர்கள் தந்த உயிர்கள் தான். இந்தப் போரை நடத்துகின்ற சக்தியே மாவீரர்கள்தான்.

எங்கள் வாழ்நாளில் தமிழ் ஈழ விடுதலை மலரும் என்று நம்பிக்கையோடு அதை முன்னெடுத்துச் செல்கின்றவராக பிரபாகரன் வருவார். எங்கு? எப்பொ ழுது? எந்தக் காலத்தில்? அது உரியநேரத்தில் தெரிய வரும். அடுத்தக் களம்
வெற்றிக்களமாக அமைகின்ற கட்டத்துக்கு அவர் முன்னெடுத்துச் செல்ல வருவார். இந்த உணர்ச்சி நம்மை இயக்கட்டும்.

அருமைத் தோழர்களே! கட்சியை மறந்துவிடுங்கள். வைகோ பேசுவது மறு மலர்ச்சி தி.மு.கவின் மேடை என்பதை மறந்துவிடுங்கள். இந்த மண்ணில் பிறந்த வீரவாலிபர்களே! நம் வாழ்நாளில் நம் சொந்தச் சகோதரர்கள் அழிக் கப்பட்டார்களே, அந்த மண்ணில் அவர்கள் சுதந்திரம் உள்ள மக்களாக,மானம் உள்ள மக்களாக உரிமை உள்ள மக்களாக வாழ்வதற்கு கொலைகாரச்சிங்களக் கூட்டத்தின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாவீரர்கள் பெயரால் உறுதி எடுப் போம். மாவீரர்களின் தியாகத்தால் சூளுரை மேற்கொள்வோம்.

மலரப் போகின்ற தமிழ் ஈழத்தை உருவாக்க, ஒவ்வொருவரும் அவரவர்களுக் கு முடிந்தமட்டில் கருத்துகளைப் பரப்புவோம். பொய்ப் பிரச்சாரத்தை முறிய டிப்போம். மான உணர்ச்சியை வளர்த்து எடுப்போம். தமிழ் ஈழத் தாயக விடுத லைக் களத்துக்கு, நாம் வாழ்ந்த காலத்தில் நமது பங்கைத் தந்தோம் என்ற மன நிறைவையாவது நாம் பெறுவோம்.

மாவீரர்கள் கல்லறைகளின் கதவுகள் திறந்துகொண்டன. அவர்களின் ஆவி கள் யுத்தகளத்துக்கு வருகின்றன. தீட்டிய வாளுடன் புகழ்மலர்களுடன் வரு
கின்றன. தமிழ் ஈழ இளைஞனே! தமிழ் இன இளைஞனே, உருக்கிய வாளுடன்
வா! தமிழ் ஈழ வேட்கையுடன் வா! ஆக்கிரமிப்பாளனே வெளியேறு! சிங்களக் கொடியவனே! வெளியேறு! எங்கள் தமிழ் ஈழ மண்ணைவிட்டு வெளியேறு!

மலரட்டும் தமிழ் ஈழம்! மலரட்டும் தமிழ் ஈழம்! மலரும் தமிழ் ஈழம். நிச்சயமாக
மலரும். தியாக பூமியில் ஆழ்ந்த மண்ணுக்கு அடியிலே உறங்கிக் கொண்டு
இருக்கின்ற மாவீரர்களே, நீங்கள் எங்கள் ஊனில் உதிரத்தில் உணர்ச்சியில் கலந்து இயக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் வணக்கம் செலுத்துகின்றோம். போரை முன்னெடுத்துச் செல்கின்ற பிரபாகரனுக்கு நாங்கள் தோள் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment