Sunday, December 8, 2013

தேர்தல் முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி

காங்கிரஸ் கட்சிக்கு, மீள முடியாத படுதோல்வி; தமிழக மக்களுக்கு ஆறுதல்!
மோடி அலை வீசுகிறது #வைகோ கருத்து

ஐந்து மாநிலச் சட்டமன்றத்தேர்தல் முடிவுகளில்,மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு, இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்து உள்ளது.

தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத்தமிழர் படுகொலையில் பங் காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக் களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது. 

2014 இல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி
பிரதமர் ஆவார் என்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன. 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஓராண்டு காலத்தில் மக்களின் மதிப்பையும், ஆதரவையும் பெற்று,மதிக்கத்தக்க இடங்களைப் பெற்று உள்ளது,பாராட்டுக்கு உரியதாகும். 

2014 நாடாளுமன்றத் தேர்தலில்,தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யம் தான் மக்களின் தீர்ப்பாக இருக்கும். 

ஏற்காடு இடைத்தேர்தலில், வினியோகம் செய்யப்பட்ட ஊழல் பணத்தின் விகி தாச்சாரத்தின் அடிப்படையில், இரண்டு கட்சிகளுக்கும் வாக்குகள் கிடைத்து உள்ளன.

‘தாயகம்’                                                                              வைகோ
சென்னை - 8                                                          பொதுச்செயலாளர்
08.12.2013                                                                மறுமலர்ச்சி தி.மு.க.


No comments:

Post a Comment