Friday, December 6, 2013

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை இரத்து செய்ய வேண்டும்

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் உள்துறைஅமைச்சருக்கு #வைகோ கோரிக்கை

#மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி. உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது, சேலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு அப்பட்டமான பொய்வழக்கு காவல்துறையால் போடப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள வெற்று மைதானத்தில், ஒரு கோணிச் சாக்கு பொட்டலத்தை யாரோ ஒரு சிலர் தீ வைத்து எரித்துப் போட் டுள்ளனர். அதில் அங்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் நடந்த போது கொளத்தூர் மணி சென்னையில் இருந்தார். அதன் பின்னர் மறுநாள் நள்ளிரவில் கொளத்தூர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறை யினர் கைது செய்து,பொய் வழக்குப்போட்டு சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். அவர் பிணையில் விடுதலை பெறுவார் என்று அறிந்து, தேசப் பாதுகாப் புச் சட்டத்தை அவர் மீது ஏவி, சிறைவாசத்தை நீட்டித்தனர். இது ஜெயலலிதா அரசு மேற்கொண்ட பாசிச அடக்குமுறை ஆகும். ஜனநாயகத்தின் குரல் வளை யை அறுக்க முயலும் அக்கிரமம் ஆகும்.

இதுகுறித்து, மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே அவர் களிடம் தொலைபேசியில் நான் பேசினேன். இந்தியாவில் சமூக நீதியை, பகுத் தறிவை நிலையாட்டிய தந்தை பெரியாரின் கொள்கை வீரர்தான் கொளத்தூர் மணி. கொள்கைக்காகவும், தமிழர்கள் உரிமைக்காவும் போராடி பலமுறை சிறை சென்றவர். அவர் எந்த வன்முறையிலும் எப்போதும் ஈடுபட்டது இல்லை.

தற்போது, அண்ணா தி.மு.க. அரசு, காவல்துறையின் மூலம் கொளத்தூர் மணி மீது பொய்வழக்குப் போட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தையும் ஏவியுள்ளது. வழக்கின் முதல் தகவல் அறிக்கையும், காவல்துறையினர் பொய்யாகப் புனைந்த வழக்கின் கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டால் உண்மை புலப்படும்.

எனவே, தேசப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டுகிறேன்.


இதுகுறித்து நேரில் விளக்க மறுமலர்ச்சி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களை, உங்களைச் சந்திக்க அனுப்பி வைக்கிறேன் என்று தொலைபேசியில் கூறியதோடு, இதுகுறித்த விளக்கமான கடிதத்தை யும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பினேன்.

இன்று 06.12.2013 அன்று காலை 9.30 மணிக்கு, உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அவர்களை, அ.கணேசமூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து பிரச்சினை யை விளக்கமாக எடுத்துக் கூறி, கொளத்தூர் மணி மீது எடுக்கப்பட்ட நடவடிக் கையை இரத்துச் செய்ய வேண்டினார். அதற்கு உள்துறை அமைச்சர் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து தன்னால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்வதாக உறுதி அளித்தார்.

‘தாயகம்’                                                                  வைகோ
சென்னை - 8                                                 பொதுச்செயலாளர்
06.12.2013                                                        மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment