Wednesday, December 4, 2013

டிச 21 யில் அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்திக்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இடிந்தகரையில் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மை.பா.சேசுராஜ், தமிழர் தேசிய இயக்க பொதுச்செயலர் பரந்தாமன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர் தியாகு, ம.தி.மு.க. இளைஞரணி செயலர் ஈஸ்வரன், மதிமுக நெல்லை மாவட்ட செயலர் சரவணன், மார்க்சிஸ்ட் கட்சி சங்கரன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தை சேர்ந்த அரங்ககுணசேகரன், தமிழ் தேசப்பொதுவுடமை கட்சி ராசு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல் ஜாபர், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கட்சி அகம்மது நவாபி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி (விடுதலை) ரமேஷ், தமிழ்நாடு மக்கள் கட்சி அருண்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர்
மணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வருகிற 21–ந்தேதி மாவட்ட தலைமையிடங்களில் அணுசக்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment