Tuesday, December 10, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 33

நாள்:-14.05.2009

இலங்கை இராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இருந்து ஈழத்தமிழர் களைக் காப்பாற்றுங்கள்!

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு #வைகோ வேண்டு கோள்

இலங்கையில் சாவின் விளிம்பில் உள்ள மூன்று இலட்சம் தமிழர்களையும்
முழுமையாக அழித்து ஒழிப்பதற்கு, முப்படைகளையும் தீவிரமாகப் பயன் படுத்தி வரும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரி, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இன்று (14.05.2009) மின் அஞ்சல் மற்றும் தொலை நகல் (ஃபேக்ஸ்) மூலமாக அவசர வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:

அன்புடையீர்,

வணக்கம்.

இலங்கை இராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி, மரணத்தின் பிடி யில் சிக்கி இருக்கின்ற மூன்று இலட்சம் தமிழர்களைக் காப்பாற்றுமாறு, உல கெங்கும் வாழ் கின்ற 10 கோடி தமிழர்களின் சார்பாக வேண்டுகிறேன்.

தாங்கள் நேரடியாகத் தலையிட்டு, இலங்கையில் நடைபெறும் மனித அழி வைத் தடுக்க, உறுதியான, உடனடி நடவடிக்கை எடுத்து, இலங்கையில் தவித் துக் கொண்டு இருக்கின்ற மூன்று இலட்சம் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டு கிறேன்.

அமெரிக்க அரசாங்கம் மனிதாபிமான அக்கறையோடு,வான்வழித் தாக்குதலை நிறுத்தவும், இராணுவத் தாக்குதலை நிறுத்தவும் விடுத்த வேண்டுகோளை, இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆணவத்தோடு நிராகரித்து உள்ளார்.

இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் முப்படைகளையும் தீவிரமாகப் பயன் படுத்தி, காட்டுமிராண்டித்தனமான, கொடூரத் தாக்குதலை நடத்தி,தமிழர்களை முற்றிலுமாக அழித்து விடத் துடிக்கின்றது.

மே மாதம் 12-ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து ஒவ்வொரு மணி நேரத் துக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுகின்றார்கள்.இலங் கை அரசு, மே மாதம் 17-ஆம் தேதிக்கு முன்பாக, முல்லைத் தீவில் இருக்கின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று அழித்துவிடக் கங்கணம் கட்டிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒட்டுமொத்தத் தமிழ்  இனமும் பட்டினி யால் நாள்தோறும் செத்துக்கொண்டு இருக்கிறது. சிறுவர்கள்,பெண்கள், வய தானவர்கள் என்று வகைவகையாக இறந்து போகின்ற தமிழர்களின் உடல் களைப் புதைக்கவோ அல்லது எரிக்கவோ வழி இல்லை. 

ஈழத்தில் நடந்து கொண்டு இருக்கின்ற பேரழிவை விவரிக்க வார்த்தை இல் லை. மாட்சிமை பொருந்திய தாங்கள், நேரடி நடவடிக்கை மூலமாக இலங் கையில் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்; இல்லை யென்றால், கொடிய மனிதப் பேரழிவு நிகழும். ஜெர்மனியில் நடைபெற்ற நெஞ்சைப் பிளக்கின்ற யூதர்கள் படுகொலையை விளக்குகின்ற, வாஷிங்ட னில் உள்ள மனிதப் பேரழிவு அருங்காட்சியகத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ள காட்சிகளுக்கு ஒத்த நிகழ்வுகள், இன்று இலங்கையில் தமிழ் இனத்தை முற்றி லுமாக அழிக்கும் வகையில் நடைபெறுகின்றது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற, உலகெங்கும் வாழ்கின்ற
தமிழர்கள் சார்பில், கூப்பிய கைகளோடு உங்களையும், உங்கள் அரசாங்கத் தையும் வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ


வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 32

No comments:

Post a Comment