Sunday, December 15, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 35

நாள்:-29.4.2009

ஈழத் தமிழர் பிரச்சனையில், இந்திய அரசின் துரோகங்களுக்கு, கருணா நிதிதான் கூட்டுப் பங்காளி!

இரண்டாம் உலகப் போரின்போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்க நாஜி கள் திட்டமிட்டுப் படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அதிபர் மகிந்த இராஜபக்ஷே, தமிழ் இனத்தையே கரு அறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக் கிறான். இந்தத் தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு,முழுக்க முழுக்க ஆயுத உதவி செய் தது இந்திய அரசுதான்.

1998ஆம் ஆண்டில், அன்றையப் பிரதமர் வாஜ்பாய அவர்கள், டெல்லியில் கூட் டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,‘இலங்கையில் தமிழ்  இனக் கொலை நடத் தும் சிங்கள அரசுக்கு, இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களைக் கொடுக்காது என்றும், ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது இல்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். 2004ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதைக் கடைப்பிடித்தது.

சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மத்தி யில் மன்மோகன் சிங் அவர்களைப் பிரதமராகக் கொண்டு அரசு அமைத்த பின், வாஜ்பாய் அரசு எடுத்த முடிவைக் காற்றில் பறக்கவிட்டு,இலங்கை அரசோடு, இந்திய-இலங்கை கூட்டு இராணுவ ஒப்பந்தம் செய்யத் தீர்மானித்தது.

2004 நவம்பரில் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், அப் போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் ம.தி.மு.க. இடம் பெற்று இருந்த
சூழலில், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், சோனியா காந்தி மற்றும் சரத்ப வார், லாலு பிரசாத் யாதவ், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட மத்திய
அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செய லாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் ஏ.பி.பரதன், அதன் தேசியச் செயலாளர் ராஜா ஆகியோரையும் நான் மூன்று முறை சந்தித்து எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக, இந்திய-இலங்கை இராணுவ ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை.

ஆனால், ஒரு மாதம் கழித்து கொழும்பு சென்ற அன்றைய வெளி விவகார
அமைச்சர் நட்வர்சிங், ‘இராணுவ ஒப்பந்தம் செய்யப்படாவிடினும், ஒப்பந்தத் தில் குறிப்பிட்டு உள்ள பிரிவுகள் நிறைவேற்றப்படும்’ என்று 2005 ஜனவரி 9-இல், கொழும்பில் அறிவித்தார்.

நான் மறுநாள் டெல்லிக்குச் சென்று, பிரதமரிடம் என் எதிர்ப்பைத் தெரிவித்த போது, ‘நட்வர்சிங் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து’ என்று பிரதமர் கூறி யது, ஏமாற்று வேலை என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.

தமிழர் பகுதிகளின் மீது குண்டு வீச்சு நடத்தும் விமானங்கள் இயங்குவதற்கு,
பலாலி விமானத் தளத்தை இந்திய அரசு பழுது பார்த்துக் கொடுக்க முதலில்
உத்தேசிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் முடிவாகி இருந்தது. அப்படிச் செய்வது தமிழ் 
இனத்திற்கே செய்கின்ற துரோகம் என்று, அப்போது இராணுவ அமைச்சர்
பொறுப்பில் இருந்த பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங்
ஆகியோரிடம் விளக்கமாகச் சொல்லி, அத்திட்டத்தைக் கைவிடுமாறு வற்பு றுத்தினேன்.

பலாலி விமானத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட விமானக் குண்டுவீச்சில்தான்,
1995ஆம் ஆண்டில் ஏராளமான தமிழ்  மக்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட தையும், குறிப்பாக, நவோலி புனித பீட்டர் தேவாலயத்தில் இருந்த குழந்தை கள், பெண்கள் உட்பட 168 பேர், இக்குண்டு வீச்சால் படுகொலை செய் யப்பட்ட தையும் எடுத்துச் சொன்னேன்.

ஆனால், ‘ஒப்பந்தம் செய்யப் போவது இல்லை’ என்று பிரணாப் முகர்ஜி உறுதி
அளித்து ஏமாற்றிவிட்டு, இந்திய விமானப் படை நிபுணர்களை அனுப்பி வைத் து, இந்திய அரசின் செலவிலேயே பலாலி விமான தளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தனர் என்ற உண்மையை இலங்கையின் விமானப் படைத் துணைத் தளபதி டொமினிக் பெரைரா, 2005 டிசம்பர் 9-ஆம் தேதி,பகிரங்கமாக அறிவித் தார்.

2005-ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கை விமானப் படைக்கு இந்திய அரசு ராடார்களைக் கொடுக்கப் போகிறது என்ற செய் தியை அறிந்து, டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து, ராடார்களைக் கொடுக்காதீர்கள்என்று மன்றாடி னேன்.

முதல் தடவை நான் சந்தித்தபோது,‘கொடுக்க மாட்டோம்’என்று பிரதமர்சொன் னார். ஆனால், ராடார்களைக் கொடுத்துவிட்டார்கள் என்று அறி வித்தவுடன், இரண்டாவது தடவை பிரதமரை நான் சந்தித்துக் கேட்டேன்.‘இந்திய அரசு கொடுக்காவிட்டால்,பாகிஸ்தான்,சீனா கொடுக்கும் என்பதால் நாங்கள்கொடுத் தோம்’ என்றார். அந்தச் சொத்தை வாதத்தை எதிர்த்து நான் வாதாடினேன். அங்கே, பாகிஸ்தான், சீனா வம்சாவழியினரோ அவர்களின் தொப்புழ்  கொடி உறவுகளோ இல்லை என்பதையும், இந்தியா தந்த ராடார்களின் உதவியால், சிங்கள விமானப்படை நடத்தும் குண்டுவீச்சால் தமிழ் மக்கள் கொல்லப்படு வார்கள் என்று வாதிட்டேன். அதற்கு பிரதமர்,‘அப்படி போர்மூளும் பட்சத்தில், இந்தியா கொடுத்த ராடார்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வோம்’ என்று என் னிடம் கூறியதை, அப்போதே ஏடுகளில் செய்தியாக வெளியிட்டேன்.

1. இலங்கை விமானப்படைக்கு ரடார்களையும், இராணுவத்துக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் இந்திய அரசு வழங்கிய உண்மையை, ஈழத்தமிழர்
பிரச்சினையில் இந்திய அரசுக்கும், சிங்கள அரசுக்கும் சாதகமாகவே செயல் பட்டுவருகின்ற, ‘இந்து’ ஆங்கில ஏடும், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏடும் ஒப்புக் கொண்டு செய்திகளை வெளியிட்டு உள்ளன.

2007 ஆகஸ்ட் 6 ஆம் தேதி, ‘இந்து’ ஏட்டின் பன்னாட்டுப் பதிப்பில், கீழ் க்கண்ட வாறு செய்தி வெளியாகி இருக்கிறது:

2005 ஆம் ஆண்டு, இந்தியா இலங்கைக்கு இரண்டு ரடார்களைத் தந்தது. இந்த
ஆண்டு, 2007 ஜனவரியில் ஒரு ரடாரும், ஜூன் மாதம் இன்னொரு ரடாரும்,
இந்திய விமானப்படையின் சார்பில் அனுப்பப்பட்டன. டெல்லிக்கு அருகாமை யில் உள்ள, ஹிண்டன் இராணுவ விமான தளத்தில் இருந்து இந்த ரடார்கள் அனுப்பப்பட்டன. இலங்கைக்கு எந்த ஆயுதங்களும் வழங்குவது இல்லை என்று தனக்குத்தானே இந்தியா விதித்துக்கொண்ட தடையை மீறி, (1998 இல் வாஜ்பாய் தலைமையில்,அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு), 2005 இல் இலங்கை பிரதமர் ராஜபக்சே, இந்தியாவுக்கு வந்தபோது, இந்த விமா னப்படை ரடார்கள் கொடுக்கப்பட்டன’ என்று செய்தி வெளியிட்டு உள்ளது. 

2007 அக்டோபர் 15 ஆம் நாள், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழும், மேற்கூறிய செய் தியை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய அரசு, இலங்கைக் கு, சக்தி வாய் ந்த விமான எதிர்ப்பு தானியங்கி பீரங்கிகளைத் தந்தது. ஏற்கன வே, நான்கு வான்படை ரடார்களை இந்தியா தந்து உள்ளது.மேலும், கனரக பீரங்கிகள், சக்திவாய் ந்த ஏவுகணைகள், நவீன ஆயுதங்களை இந்தியா இலங் கைக்குத் தந்து உள்ளது. 

இந்திய ராடார்களின் உதவியோடுதான், சிங்கள விமானப்படை, தமிழர் பகுதி களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அப்படிப்பட்ட குண்டு வீச்சில் தான், செஞ்சோலையில் 61 தமிழ் ச் சிறுமிகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப் பட் டனர். இந்திய அரசு இதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2008 செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு, சிங்கள இராணுவ முகாம் மீது விடு தலைப்புலிகளின் வான்படை விமானத் தாக்குதல் நடத்தியபோது, இந்திய ராடார்களை இயக்கிக் கொண்டு இருந்த ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரவூட் எனும் இரண்டு இந்தியர்கள் படுகாயமுற்ற செய் தி வந்தது. இந்தியாவின் துரோகத் தைக் கண்டித்து, மறுநாள் செப்டம்பர் 9 அன்று, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன்.

அதற்கு, 2008 அக்டோபர் 2-ஆம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், ‘இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, இந்தியா இராணுவ உதவி செய் து உள்ளது’ என்று ஒப்புக் கொண்டு, கடிதம் எழுதி உள் ளார்.

இதற்கு இடையில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந் தம், 2007 ஆம் ஆண்டிலேயே செய் யப்பட்டது. இந்தியக் கடற்படை,விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் மூழ் கடிப்பதில் நேரடியாகவே ஈடுபட்டது.

இந்திய விமானப்படை நிபுணர்கள், சக்தி வாய் ந்த சேட்டிலைட் கேமராக்கள்
மூலம், புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சிங்கள விமானப்படைக் குத் தெரிவித்ததன் விளைவாகவே, புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் தமிழ் ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2004 இல் இருந்து இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்தும், வட்டி யில்லாக் கடனாக 1000 கோடி ரூபாய் கொடுத்தும் உதவியதால், பாகிஸ்தான், சீனாவில் இருந்து ஏராளமான ஆயுதங்களை சிங்கள அரசு வாங்குவதற்கு வழிவகுத்துக் கொடுத்து, தமிழர்களுக்குச் செய்த துரோகம் அனைத்தையும் நன்றாக அறிந்து இருந்த கலைஞர் கருணாநிதி, இதற்கு எந்தக் கட்டத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இந்திய-சிங்கள அரசுகளின் கூட்டுச் சதிக்கு கலைஞர் கருணாநிதியும் ஒரு
பொறுப்பாளி ஆவார். பின்னாளில் தன் மேல் வரும் பழியில் இருந்து தப்பிப்ப தற்காக, தமிழ் ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதினார்.

கடந்த சில மாதங்களாக, சிங்கள அரசு, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான்,
இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வாங்கிக் குவித்து உள்ள சக்தி
வாய்ந்த நவீன ஆயுதங்களைக் கொண்டு, விடுதலைப் புலிகளை முற்றாக
அழித்துவிடத் திட்டமிட்டு, போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தானாக முறித்துக் கொண்டு, இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இதில், தமிழ்  மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்படுவதைப் பற்றித் துளியும்
கவலைப்படாமல், ஈழத்தில் தமிழ் இனத்தையே கரு அறுத்துவிட்டு, மிஞ்சுகிற தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளத்திட்டமிட்டவாறு, புலிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் திட்டம் ஆகும்.

அதனால்தான், ‘போர்நிறுத்தம் வேண்டும்’ என தமிழ் நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு,இன்று கலைஞர் கருணாநிதியால் தூயவர் என்று புகழப்படும் பிரணாப் முகர்ஜி, சென் னையில் முதல் அமைச்சரின் வீட்டுவாசலில் நின்று, ‘போர் நிறுத்தம் கேட்பது எங்கள் வேலை அல்ல’ என்று திமிராகச் சொன்னார். 

கொழும்புக்குச் சென்ற பிரணாப் முகர்ஜி, போர்நிறுத்தம் கேட்கவேயில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டான்.
‘தமிழர்கள் முல்லைத் தீவில் இருந்து வெளியேற,நாங்கள் 48 மணி நேரம் கெடு விதித்தோமே தவிர, அது போர் நிறுத்தம் அல்ல’ என்றும், இந்திய அரசு சொன் னது உண்மை அல்ல என்றும், தமது அமைச்சர் சமரசிங்கே மூலம் உலகத் துக்கு அறிவித்தான்.

2009 பிப்ரவரி 18ஆம் தேதி அன்று இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி கொடுத்த அறிக்கை, பாம்பின் விஷத்தைவிட நச்சுத்தன்மை நிறைந்தது ஆகும். அதில், போரில் சிங்கள இராணுவம் வெற்றிமேல் வெற்றி பெறுவதாகவும், கிளிநொச்சி வீழ் ந்தது என்றும், ஆனைஇறவு வீழ் ந்தது என்றும், முல்லைத் தீவு கைப்பற்றப்படும் என்றும், போரின் இறுதிக்கட்டம் விரைவில் நிறைவேறி விடும் என்றும் அறிவித்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜபக்ஷே, ‘விடுதலைப் புலிகளின் கடைசி மூச்சு அணையப் போகிறது’ என்று சொன்ன தையே பிரணாப் முகர்ஜியும் இங்கே கூறினார்.

முல்லைத் தீவில் இருந்து வெளியேறிச் செல்லும் தமிழர்களை விடுதலைப்
புலிகள் படுகொலை செய்வதாக ராஜபக்ஷே சொன்னதையே, பிரணாப் முகர்ஜி யும் தன்னுடைய குற்றச்சாட்டாக அந்த அறிக்கையில் சொன்னார். எல்லா வற்றையும்விடக் கொடுமை என்னவென்றால், முல்லைத் தீவில் 70 ஆயிரம் பேர் இருப்பதாகச் சொன்னதுதான். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர் களை நெருப்பு மண்டலக் குண்டு வீச்சில் கொன்றுவிட்டு, கொல்லப்பட்டவர் கள் எல்லோரும் விடுதலைப்புலிகள்தான் என்று சிங்கள அரசு அறிவிக்கத் திட்டமிட்டு உள்ளது.

அதனால்தான்,35ஆயிரம் தமிழர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று ராஜபக்ஷே வும், பிரணாப் முகர்ஜியும் சொன்னார்கள். அதைத்தான், கலைஞர் கருணாநிதி யும் அவர்களின் ஊதுகுழலாக மாறி, 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறி வந்த தாகவும், அவர்களுள் காயம்பட்டவர்களுக்கு மருந்துகளும், மருத்துவர்களும் அனுப்பத் தயார் என்று அறிவித்தார்.

கழுத்தை அறுத்துவிட்டு கைக் காயத்துக்கு முதல் உதவி செய்யும் அயோக்கி யத்தனம்தான் இந்த அறிவிப்பு ஆகும். துரோகத்தின் உச்சகட்டமாக, பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் யைச் சொன்னார். அதில், தமிழ் மக்களை முல்லைத் தீவில் இருந்து வெளியேற்றுவதற்கு விடுதலைப் புலிகள் முன் வந்து இருப்பதாகவும், சிங்கள அரசு தமிழர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்’ என்றும் கூறி னார். இது பச்சைப் பொய் 

விடுதலைப் புலிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கும், இணைத் தலைமை நாடு களுக்கும் அனுப்பிய அறிக்கையில், சிங்கள அரசு தமிழ்  மக்களைக் கொன்று குவிக்கிறது என்றும், அந்த அரசின் அறிவிப்பை நம்பி, பாதுகாப்பு வளையத்துக் குள் சிக்கிய இரண்டாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதையும், மூவாயிரம் பேர் காயம் அடைந்ததையும் சுட்டிக் காட்டியதோடு, உணவும், மருந்தும் இன்றி இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மரணத்தின் பிடியில் தவிப்பதாகவும், தமிழர் களுக்கு நிரந்தர அரசியல் விடியலுக்கு உலக நாடுகளின் துணையோடு கூடிய உத்தரவாதம் கிடைக்கும்வரை தங்களின் ஆயுதப் போராட்டம் நிற்காது என் றும், உண்மை நிலையைக் கண்டு அறிய பன்னாட்டு ஊடகவியலாளர்களும், மனித உரிமைக் காவலர்களும் தங்கு தடையின்றி முல்லைத் தீவுக்கு நேரில் வந்து உண்மையைக் கண்டு அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றும் அறிவித்து உள்ளனர்.

2001 இறுதியில், முதலில் போர் நிறுத்தம் செய் தது விடுதலைப் புலிகள்தான்.
அதன் பின்னர்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவித்தது. அதனை முறித்த தும் சிங்கள அரசுதான்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக் குத் தாங்கள் தயார் என்று அறிவித்ததை, சிங்கள அரசு ஏற்கவே இல்லை. உண் மை இவ்வாறு இருக்க, பிரணாப் முகர்ஜி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, தூத்துக்குடிக்கு வந்து, போர் நிறுத்தம் பற்றி மோசடியான கருத்துகளை உதிர்த் துவிட்டுப் போனார். கலைஞர் கருணாநிதி அதற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித் துவிட்டு, என்மீது வேறு எவரும் சொல்லத் துணியாத களங்கத்தைச் சுமத்த முற்பட்டு, ‘புலிகள் பிரச்சனையை மாசாக்கி, மண்ணாக்கி, காசாக்கிவிட்டேன்’ என்றும், ‘அரசியல் நாணயத்தை நாசப்படுத்தி விட்டேன்’ என்றும் புழுதி வாரித் தூற்றி உள்ளார்.

நான் கைது செய் யப்பட்ட மறுநாள், மார்ச் 1-ஆம் தேதி, இலங்கை வெளி விவ காரச் செயலாளர் பலித கோகனா, ‘போர் நிறுத்தம் செய் யுமாறு எங்களை இந்த நிமிடம் வரை இந்திய அரசு கேட்கவில்லை’ என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டான்.

பிரணாப் முகர்ஜியின் பொய் யும், பித்தலாட்டமும் வெட்ட வெளிச்சமாகி விட் டது. பிரணாப் முகர்ஜிக்கு பல்லாண்டு பாடி வரவேற்கும் முதல் அமைச்சர்,
இந்திய அரசின் அனைத்துத் துரோகத்துக்கும் கூட்டுப் பங்காளி என்பதால்,
தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் நயவஞ்சகமான அறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளார்.

நானும், அண்ணன் நெடுமாறனும் புலிகளிடம் பணம் பெறுகிறோம் என்று
துரோகி கருணாவும், கொலைகாரன் சரத் பொன்சேகாவும், வீசிய கொடும் பழி யைத்தான், கலைஞர் கருணாநிதியும் கூறுகிறார்.

அதனால்தான் அண்ணன் நெடுமாறன் அவர்களை, ‘புலிகளிடம் பணம் பறிக் கும் இனத்துரோகி’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதினார்.இப்போது என்மீது களங்கச் சேற்றை வீசுகிறார்.

கலைஞர் கருணாநிதியின் முகத்திரையை வீரத்தியாகி முத்துக்குமார் கிழித்து
எறிந்தபின்பு, என்னை முதல் அமைச்சர் பழித்ததன் மூலம் தன்னுடைய சுய ரூபத்தைக் காட்டிவிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவரின் பெயரால் என்னைக்கீழ்த் தரமாக வசைபாடி அறிக்கை தந்ததை, அப்போதே கழகக் கண்மணிகள் உணர்ந்து கொண்டனர். பாதுகாப்பு என்றும் சட்டம் என்றும் முதல் அமைச்சர்
காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிறவன் அல்ல இந்த வைகோ.

(பாளையங்கோட்டை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வைகோ அவர்கள், நேர்காணலில் தம்மைச் சந்தித்த நாஞ்சில் சம்பத்  அவர்களிடம் கூறி யதை எழுதி வெளியிடப்பட்ட அறிக்கை)


No comments:

Post a Comment