Wednesday, July 10, 2013

தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 3

யாழ் கோட்டையைப் பிடித்து விட்டோம்; புலிக்கொடி பறக்கிறது; கோட்டை யை உடைத்து நொறுக்குவோம் என்று சொன்னான்.

இப்படிப் போராடக்கூடிய அந்த ஆற்றலில்தான் அங்கே இன்னொரு அதிசயம் நடந்தது. நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

சிறைக்குள் இருந்து மண்ணை வெட்டிச் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகத் தப்பித்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது,
ஜெர்மனியரின் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களைப் பற்றிய கிரேட் எஸ்கேப் (Great Escape) என்ற ஒரு படம் 1965 ஆம் ஆண்டு, சென்னை குளோப் தியேட்டரில் ஓடியது. ஜேம்ஸ் ஸ்டூவர்ட்தான் கதாநாயகன். நான் நான்கைந்து முறை அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறேன்.


ஜெர்மனியரின் சிறையில் இருந்து தப்பித்துச் செல்ல வேண்டும். அவர்கள் இருக்கின்ற அறைக்கு உள்ளேயே தரைக்குள் பள்ளம் தோண்டுகிறார்கள். அதில் வருகின்ற மண்ணை வெளியே கொண்டு போக வேண்டும் அல்லவா? அதை, தங்கள் கால்சட்டைக்கு உள்ளேயே ஒரு சுருக்குப் பை ஒன்றைத் தைத்து, அதில் நிரப்பிக்கொண்டு வந்து, வெளியே வேலை செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக்கொண்டே போவார்கள்.


அந்தச் சிறையில் வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது; கண்காணிப்புக் கோபு ரங்கள் உள்ளன; அப்படிப் பல நாள்கள் முயற்சி செய்து பள்ளம் தோண்டி, உள்ளே இருந்து வெளியே வந்து தப்பிச் செல்கின்றபோது, கண்காணிப்புக் கோபுரத்தில் இருப்பவன் பார்த்து விடுகிறான். உடனே விரட்டுகிறார்கள். அதற்குப்பிறகு பரபரப்பான காட்சிகள். இரண்டு பேர் பிடிபட்டு விடுகிறார்கள்; ஒரே யொருவன் மட்டும் தப்பித்து விடுகிறான். கதாநாயகனை மீண்டும் சிறைக்குக் கொண்டு வந்து அறையில் போட்டுப் பூட்டுகின்ற காட்சியோடு தான் படம் முடியும்.

ஆனால், நம்முடைய புலிகள் அதைவிட அசகாய சூரர்கள். அந்த ஜெர்மானியச் சிறையில் அகழி கிடையாது. ஆனால், வேலூர் கோட்டையில் அகழி இருக் கின்றது.1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், விடுதலைத் திருநாளைக் கொண்டாடுகிறோம். அதே நாளில், அங்கே இருந்த 43 புலிகள் தப்பிச் சென்ற னர். எப்படித்தப்பித்தார்கள் எனபது உங்களுக்குத் தெரிய வேண்டும். அண்ண னுக்கு எழுதுகிறார்கள்.

வேலூர் கோட்டையில் திப்பு மகால், ஹைதர் மகால் இருக்கின்றன. அங்கே தான், திப்புவின் பிள்ளைகளும், அடைக்கப்பட்டார்கள். அங்கே பல அறைகள் உள்ளன.அவற்றுள் சிமெண்டைக் கொண்டு வந்து போட்டு அடைத்து விட் டார்கள்.அங்கே மாடியில் இவர்களை அடைத்து வைத்து இருக்கிறார்கள். கீழே உள்ள அறைகளில் சிமெண்டைப் போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள். இவர் கள், மேலே உள்ள அறையின் தளத்தைத் தோண்டுகிறார்கள். கீழே உள்ள அறைக்கு வந்து விட்டார்கள்.

அதற்கு அடுத்த அறையிலும் தரையைத்தோண்டி,இரண்டு அடிக்கு நான்கு அடி அகலத்தில் பத்து அடி ஆழத்துக்குத் தோண்டி,அங்கிருந்து 3 அடிக்கு 4 அடி என்ற வீதத்தில் 102 அடிக்குத் தோண்டினார்கள். அதற்கு எத்தனைக் கம்பிகள், என் னென்ன பொருள்கள் என்பதையெல்லாம் எழுதி இருக்கிறார்கள்.

இப்படி இவர்கள் தோண்டுகின்ற நாள்களில், நான்கு முறை,150 காவலர்களோ டு வந்து, சிறை அதிகாரிகள் சோதனை போட்டு இருக்கிறார்கள். இவர்கள் எந்த
அறையைத் தோண்டி ஓட்டை போட்டு இருக்கின்றார்களோ, அங்கேயும் வரு கிறார்கள். இவர்கள் அதை மூடி வைத்து விட்டு, சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கிறார் கள்.

நாங்கள் சமைத்துக் கொண்டு இருக்கிறோம் என்கிறார்கள். பத்து வாரங்கள், இரண்டரை மாதங்களாகக் குழி தோண்டி இருக்கின்றார்கள். அப்படி வெளியே வந்து அகழியையும் கடந்து செல்கின்றபோது, அதில் மூன்று பேர் இறந்து போகிறார்கள்.

இதிலே செய்தி என்னவென்றால், இந்தப் புத்தகத்தில் எழுதாமல், அண்ணன் மூலமாகத் தெரிந்து கொண்ட செய்தி, அவர்களைச் சிறையில் பார்ப்பதற்காக
வழக்கம்போல ஆள்களை அண்ணன் அனுப்புகிறார்.அவர்களிடம் தலைய ணை கேட்கிறார்கள்.வாங்கிக்கொடுத்து விடுங்கள் என்கிறார் அண்ணன்.அதை ரப்பர் தலையணையாக வாங்கிக் கொடுக்கும்படிக் கேட்கிறார்கள். அப்படியே வாங்கிக் கொடுத்தாகி விட்டது.

அதற்குப்பிறகு, ஏடுகளில் எழுதுகிறார்கள். அவர்கள் தப்பிச் சென்ற இடத்தில், அகழிக்குப் பக்கத்தில் ரப்பர் தலையணைகள் கிடந்தன என்று. அதாவது, அவர் களுள் ஒரு சிலருக்கு நீந்தத் தெரியாது என்பதால், அகழியைக் கடப்பதற்கு அவர்களுக்கு ரப்பர் தலையணைகள் தேவைப்படும் என்பதற்காகத்தான், அவர் கள் அதைக் கேட்டு வாங்கி இருக்கின்றார்கள்.

குழி தோண்டும்போது, கல், மண்ணை எல்லாம் ஒரு பக்கமாகச் சேர்த்து வைத் துக் கொண்டே வந்தார்கள்.நடக்கிற காரியமா? எந்தத் தடையும், எந்த மதிலும்,
விடுதலைப் போரின் வெற்றியைத் தடுக்க முடியாது. (கைதட்டல்).

1995 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தின் மீது சிங்களவர்கள் தாக்குதல் தொடுத்த போது, அங்கிருந்த ஐந்து இலட்சம் மக்களும் வெளியேறட்டும் என்று பிரபா கரன் அழைப்புக் கொடுத்து வெளியே கொண்டு போய் விட்டார். அவர்கள்
எல்லோரும் ஓடிப்போய் விட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், என்ன நடந்தது? அதற்குப்பிறகுதான், வீர காவியங்கள் தீட்டப்பட்டன.ஒன்றன்பின் ஒன்றாக, வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்று வந்தார்கள்.

1991 இல் யானை இறவைக் கைப்பற்ற முடியவில்லை.அதற்குப் பல காரணங் கள் உண்டு. ஆனால், 2001 ஏப்ரல் 22 ஆம் நாள்,அவர்கள் யானை இறவைக் கைப் பற்றினார்கள். 25,000 சிங்களப் படையினர் இருந்த படை அணிகளைத் தகர்த் தார்கள். மற்ற இடங்களில் இருந்து சிங்களவர்கள் வர முடியாதபடிக்கு, அந்தத்
தளத்தைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டார்கள்.உலகமே அதிசயித்தது, யாரும் நம்பவே இல்லை.

நான் இன்றைக்குச் சொல்லுகிறேன்: அப்போது வாஜ்பாய் என்னிடம் கேட்டார்: When Jaffna will fall in the hands of LTTE?யாழ்ப்பாணம் எப்போது புலிகள் கைக்கு வரும்? என்று கேட்டார். (கைதட்டல்).

வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக, மணலாற்றுப் போரிலே வெற்றி; சிலாவத் துறைப் போரிலே வெற்றி; முகமாலைப் போரிலே வெற்றி; பரந்தனிலே வெற்றி,மாங்குளத்திலே வெற்றி, ஓயாத அலைகள் ஒன்றிலே வெற்றி, இரண் டிலே வெற்றி, அக்னி அலைகளிலே வெற்றி; சிங்களவனின் ஜெயசிக்குறு திட்டம் தரைமட்டமாகத் தகர்த்து எறியப்பட்டது.

இரத்தம் சிந்தி, மகத்தான தியாகங்கள் செய்து, இத்தனைக் களங்களிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று, கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை உண்டாக்கி, அதை
சுதந்திரத் தமிழ் ஈழ நாடு என்று பிரகடனம் செய்கின்ற அளவுக்கு வலுப்பெற்ற னர்.

பெண்கள் தளபதி விதூஷா சொல்லுகிறாள்; இரவு வேளையில் எந்த இடத்தி லாவது ஒரு இருமல் சத்தம் கேட்டாலும் போதும், தலைவர் அங்கே வந்து விடுவார். இங்கே இருமியது யார்? யாருக்கு உடல் நலம் இல்லை? என்று விசாரிப்பார்.

சிங்களத் தேசியக் கொடி எரிக்கப்பட்டபோது, அதற்குக் கண்டனம் தெரிவித் தார்.

இவர்களுடைய அமைப்பைச் சாராத வேறு ஒருவரால்,தமிழ்ப் பெண்கள் பாலி யல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் ஆத்திரமுற்றதாகச் சொல்லி, ஒரு சிங்களப் பெண்ணைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி விட்ட செய்தி அறிந் து, அந்தச் சிங்களப் பெண் அங்கிருந்து பாதுகாப்பாகச் செல்லுவதற்கு முன்பு அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிட் டவர் பிரபாகரன். (கைதட்டல்).

எங்காவது ஒரு சிங்களப் பெண்ணைப் புலிகள் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கினார்கள் என்று உலகம் சொல்ல முடியுமா?

அவரது இதயம் எவ்வளவு மென்மையானது? அவர் விரும்பி வருகின்ற இடம்
செஞ்சோலை அல்லவா? சின்னஞ்சிறு பிள்ளைகள் அல்லவா? தாயையும்,
தந்தையையும், போர்க்களத்திலே இழந்த பிஞ்சுக் குழந்தைகள் அல்லவா?

மொத்தம் எட்டுச் செஞ்சோலைகள். அங்கே போகின்றபோது, தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு போவார். அத்தனைப் பிள்ளைகளும் அப்படியே ஓடிவந்து, அவரை ஆரத் தழுவிக்கொள்ளும்.கவலைகளெல்லாம் மறந்து சிரித்து மகிழ்ச்சி யோடு இருப்பார். தாயும், தந்தையும் இல்லையே என்ற கவலை அந்தப் பிள் ளைகளுக்கு வரக்கூடாது; இவர்களைப் போர்க்களத்துக்கு நாங்கள் பயிற்று விக்க மாட்டோம்; தாய் தந்தை இல்லாத குறை தெரியாமல் இந்தப் பிள்ளை களை இயக்கம் வளர்க்க வேண்டும் என்று சொன்னார்.

அதைப்போலத்தான் காந்தரூபன் அறிவுச் சோலை. செஞ்சோலை பெண் பிள் ளைகளுக்கு, இது ஆண்பிள்ளைகளுக்கு. களத்தில் பிள்ளைகளை இழந்த வயது
முதிர்ந்தவர்களுக்கு மூதாளர் இல்லம். என்ன அருமையான ஏற்பாடுகள்?அவரா பதவிக்கு ஆசைப்பட்டார்?

மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கம் அமைக்க வேண்டும் என்று அவர் ஒரு திட்டத்தைச் சொன்னபோது, அதற்குத் தலைவராக மாத்தையாவை நிய மித்தார்.தமிழ் ஈழம் அமைந்தபிறகு, அதிபராக மாட்டேன். ஒரு பெரிய கடல் படையை அமைக்க வேண்டும்; போரிலே உயிர் இழந்தவர்களின் குடும்பங் களுக்கு மறுவாழ்வு தர வேண்டும்; உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு மறு வாழ்வு தர வேண்டும். அந்தப் பணிகளை மட்டுமே நான் பார்ப்பேன் என்று சொன்னவர் அல்லவா?

2001 இல் காட்டநாயக விமான தளத்தைத் தாக்கி, 23 போர் விமானங்களைப் படு சூரணமாக்கி, இனி எழவே முடியாது சிங்கள வான்படை என்ற நிலையை உரு வாக்கியதற்குப்பிறகுதானே போர்நிறுத்தத்தை அறிவித்தார்.

இனி இவர்களை எதிர்கொள்ள முடியாது என்று அதற்கு ஒப்புக்கொண்டு வந் தான் சிங்களவன். ரணில் விக்கிரமசிங்கே காரணமாக இருக்கட்டும்; நோர்வே
மத்தியஸ்தம் செய்ததாக இருக்கட்டும்; பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

போர் முனையில் வெற்றி பெற்றதற்குப் பிறகு, ராஜதந்திர முனையில் காய் களை நகர்த்தினார்.

2004 இல், இந்தியாவில் காட்சி மாறியது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் பொறுப்பு ஏற்றது.வஞ்சகம் சூழ்ந்தது, சூழ்ச்சி வளைத்தது. இந்தியா
ஆயுதங்களைக் கொடுத்தது. முப்படைத் தளபதிகளை அனுப்பி, திட்டங்களை வகுத்துக் கொடுத்தது.

அணு ஆயுத வல்லரசுகள் ஆயுதங்களைக் கொடுத்தன.எத்தனை வல்லரசுகள்? பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா, ஈரான். இத்தனை நாடுகளின் ஆயுத பலத்தை எதிர்த்து நின்றார்கள்.இப்படிப்பட்ட வலிமை உள்ள படைவேறு எங்கும் இல்லை.

சாட்டிலைட் கேமராக்கள் மூலமாக அவர்களுடைய நகர்வுகளைக் காட்டிக் கொடுத்தனர். நேரடியாகக் களத்தில் அவர்களை ஒருபோதும் வென்று இருக்க
முடியாது. நான்காம் கட்டப் போர் என்பது, இந்தியா நடத்திய யுத்தம்தான். புலி களின் கடல் படையை அழிக்கத் துணை நின்றது.

இராசராசன் வழிவந்தவர்கள் அல்லவா? எனவே, கடல்புலிகள் அமைப்பை ஏற் படுத்தி இருந்தார்கள். அது மட்டும் அல்ல; ஒரு அரசுக்குத் தேவையான வேளாண்மைப் பிரிவு, கலால் பிரிவு, கல்விப்பிரிவு, நீதித்துறை,நடேசன் தலை மையில் உள்ளூர்க் காவல்துறை, இத்தனைப் பிரிவுகளையும் அமைத்து ஒரு
அரசையே அமைத்து விட்டாரே?

அவ்வளவையும் பாழாக்கித் துரோகம் செய்தது இந்தியா. பணம் கொடுத்து, ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து, திட்டம் வகுத்துக் கொடுத்து, ஒரே நேரத்தில்
பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கக்கூடிய குண்டுகளைக் கொடுத்ததால்தான்,களத்திலே புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. சிங்கள வர்களால் அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

இதுபோன்ற செய்திகள், இந்த நூலில் ஏராளம் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அதனால்தான் சொன்னேன், ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு காவியமாக
ஆக்குங்கள் கவிஞர்களே. இது கற்பனை அல்ல, உண்மை. எதற்கு? உணர்ச்சி யை ஊட்டுவதற்கு மட்டும் அல்ல. ஒரு மிகப்பெரிய வரலாற்று ஆவணத்தை, வீர காவியத்தை உருவாக்கி இருக்கின்றீர்கள். யாரும் செய்ய முடியாததைச் செய்து இருக்கின்றீர்கள். இந்த நூலுக்கு அழிவே கிடையாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும், இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இந்த நூலே அடிப்படையாக அமையும். இதை வைத்து,இன்னும் பல நூல்கள் வெளி வரும்.

வால்மீகி எழுதியதற்குப் பிறகு,இராமாயணத்தைப் பலர் எழுதினார்கள், கம்ப னும் எழுதினான். ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைகளைக் கொண்டு எழுதி னார்கள். இந்த நூல், உண்மைச் சம்பவங்களைக் கொண்டது; இதை வைத்துக் கொண்டு பல பேர் எழுதுவார்கள்.

நான்காவது கட்டப் போர்குறித்து, களத்தில் நின்ற வீரர்களோடு பேசித்தான் நான் பதிவு செய்ய முடியும் என்று நீங்கள் சொன்னீர்கள்.அதையும் நீங்கள் எழுதுவீர்கள். அந்த நூல் வெளியாகும்போது, தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும்; அந்த நூலின் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணத்திலே நடக்கும். (பலத்த கைதட் டல்). அந்த நாள் வரும். அதற்கான மாற்றங்கள் வேகமாக ஏற்பட்டு வருகின் றன.இந்தக் கணினி யுகத்தில், எண்ணற்ற இளைஞர்கள் ஆர்வம் கொண்டு
வருகின்றார்கள். கட்சி எல்லைகளைக் கடந்த வாலிபர்கள், இளம் நங்கைகள்,
ஈழத்தமிழர் பிரச்சினையில் நாட்டம் கொண்டவர்களாக, இந்தப் புவியெங்கும்
இருக்கின்றார்கள். தகவல் தொடர்புச் சாதனங்கள், நமக்கு எத்தனையோ
வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றது.

அடுத்தது என்ன? இங்கே குறிப்பிட்டார்கள்,கிழக்கு மாகாணம் சிங்களமயமாக் கப்பட்டு விட்டது என்று. சிங்களவர்களின் சுக்கிலங்களைச் சுமக்கின்ற தமிழ்ப் பெண்கள், தற்கொலை செய்துகொண்டு மடிகின்றார்கள். புதிய குடியேற்றங் கள் தடுக்கப்பட வேண்டும் என்பது மட்டும் அல்ல, அக்கிரமமாகக்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஏன் முடியாது?

பதினெட்டுக் கல் தொலைவில், ஏழரைக் கோடித் தமிழர்கள் இருக்கின்றோம். வருங்கால இளைஞர்கள்,வீரம் உள்ளவர்களாக, மானம் உள்ளவர்களாக, ஈழத் தமிழர்களைக் காக்கின்றவர்களாக வருவார்கள். சிங்கள இராணுவமும், போலீ சும், தமிழர் பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.

தெற்கு சூடானில் நடந்ததுபோல், கிழக்குத் தைமூரில் நடந்ததுபோல், கொசோ வா, மால்டோவாவில் நடந்தது போல், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். (கைதட்டல்).

புவியெங்கும் பல்வேறு கண்டங்களில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள், ஏதிலிகளா கச் சென்றவர்கள், அந்தந்த நாடுகளிலேயே அந்தப்பொதுவாக்கெடுப்பில் பங்கு
ஏற்கக்கூடிய வழிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும்.உலக நாட்டு மன்றம் இதைச் செய்ய முன்வர வேண்டும். இது நடக்கும். ஏன் நடக்காது?

2009 ஆம் ஆண்டு, சிங்களவனுக்கு ஆதரவாகத் தீர்மானம் போட்ட மனித உரிமைகள் கவுன்சிலில்,அதற்கு மாறாக, முழுமையாக நமக்கு மன நிறைவு
கொடுக்கவில்லை என்றாலும், சிங்களவனை எதிர்த்துத் தீர்மானம் போடு
கின்ற அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது அல்லவா? சேனல் 4 தொலைக் காட்சி, இதயங்களைப் பிளந்து இருக்கிறது அல்லவா? உலக நாடுகளின் மன சாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது அல்லவா? ஈழத்தமிழர் களின் போராட்டத்தின் நியாயம், உலகத்தின் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்து இருக்கிறது அல்லவா?

அப்படியானால், தீர்வு என்ன? சுதந்திரத் தமிழ் ஈழம்தான். அது எந்த முறையில்? அமைதியான பொது வாக்கெடுப்பு முறையிலா? அல்லது, இரத்தம் சிந்திய அந்த மண்ணில், உயிர்களைப் பலி கொடுத்த மண்ணில், மீண்டும் ஆயுதங் களை ஏந்தியா? அதை வரலாறுதான் தீர்மானிக்கும். உலகம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இப்படிச் சொன்னால், பார் பார் ஆயுதப் புரட்சியை ஆதரித்துப் பேசுகிறான் என் பார்கள். ஆயுதப் புரட்சியை அகிலத்துக்குச் சொல்லி, அது சோவியத் புரட்சி யாக இருக்கட்டும், சீனத்துப் புரட்சியாக இருக்கட்டும், வியட்நாம் விடுதலை யாக இருக்கட்டும்; ஆயுதம் ஏந்தித்தானே வென்றார்கள்?

நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்கிறேன். வடலூர் வள்ளலாரைப் போல வாழ்கின்ற அண்ணன் நெடுமாறன், மனதில் துணிவு உள்ளவர். அதை நான் கடலூரில் பார்த்தேன். நாலாபுறங்களிலும் இருந்து கற்கள் பாய்ந்து வந்து கொண்டு இருக்கின்றன, அதையும் மீறி முன்னேறிச் செல்கிறார். நெஞ்சிலே பிரபாகரனைத் தாங்கி இருப்பதால், அந்தத் துணிவு அவரிடம் இருக்கிறது.

நாங்கள் கேட்கிறோம். ஆயுதப் போராட்டம் என்றால் விமர்சிக்கின்றீர்களே, இந்த உலகத்தில் ஆயுதங்கள் எதற்காக? இந்தியாவுக்கு ஆயுதங்கள் எதற்காக? எதற்கு அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, கோபால்ட் குண்டு? ஏன் ஒவ்வொரு நாடும், தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை இராணுவத்துக்குச் செலவழிக் கின்றன? அணுகுண்டுகளை அழித்து விட்டீர்களா? ஆயுதங்களை அழித்து விட்டீர்களா? யாருக்கு உபதேசம்? இனி ஆயுதம் ஏந்துவது இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா? சொல்லுங்கள்.

தாயக மண்ணின் உரிமை காக்க ஆயுதங்களை ஏந்தினார்கள், பிரபாகரனின் படை வீரர்கள். அவர்கள் மீண்டும் அந்த மண்ணில் ஆயுதம் ஏந்துவதா? வேண் டாமா? என்பதை இந்த அகிலம்தான் தீர்மானிக்க வேண்டும். அப்படித் தீர்மா னிப்பதற்கு, இந்த நூல் உந்துதலாக இருக்கும்.

அன்றைக்கு இராஜராஜ சோழன் உலா எழுதியதுபோல்,இந்த நூல், பிரபாகர னைப் பாராட்டுவதற்காக அல்ல. உலகில் இதுவரை எவரும் சாதிக்க முடியா ததைச் சாதித்தவர் எங்கள் பிரபாகரன். அவருக்கு நிகராக வியூகம் வகுக்கக் கூடியவர் ஆசியாவிலேயே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் அருண் சிங் சொன்னார்.

தனிமனித ஒழுக்கமும், உன்னதமான பண்புகளும் நிறைந்தவர். தமிழேந்தி தான் எனக்கு நிதி தருகிறார் என்றார் தன்மகளிடம் அவரது பிள்ளை, சார்லஸ்
ஆண்டனிக்குப் படைப்பயிற்சி, துவாரகாவுக்குப் படைப்பயிற்சி. வேலுப்பிள் ளையும் பார்வதி அன்னையும், நீ இலட்சியத்துக்காக மரணம் வரையிலும் போராடு என்று சொன்னது அந்தக் குடும்பம்.

தமிழ் ஈழம் மலரும். நம்மை இயக்குகின்ற சக்தி பிரபாகரன். அவர் வாழ்கிறார். அவர் நம்மை இயக்குவார். (பலத்த கைதட்டல்). கரும்புலிகளை நெருப்பு மனி தர்கள் என்று சொன்னாரே பிரபாகரன்? மாவீரர்கள் உயிர்களைத் தந்தார்களே? நஞ்சுக் குப்பிகளைக்கழுத்திலே கட்டிக் கொண்ட நெருப்பு மனிதர்கள் அவர்கள். இதற்கு நிகரான வீர காவியத்தை வேறு எவரும் படைத்தது இல்லை.

அதை அற்புதமான காவியமாக ஆக்கித் தந்து இருக்கின்றீர்கள். பிரபாகரன்; தமி ழர் எழுச்சியின் வடிவம் என்ற இந்த நூல், தமிழர்களின் வீர வரலாற்றுக் காவி யம். அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமாவதற்கு, இது நல்ல படைக் கருவியாக இருக்கும். அன்றைக்குப் பயிற்சி கொடுப்பதற்காக அழகிரிசாமியின் தோட்டத் தையும், கொளத்தூர் மணியின் தோட்டத்தையும் கேட்டார்கள்.

இன்றைக்கு நீங்கள் ஒரு ஆயுதச்சாலையை உருவாக்கித் தந்து இருக்கின்றீர் கள். நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும். முழு உடல் நலத் தோடு, இன்னும் எண்ணற்ற நூல்களை எழுத வேண்டும்.

அரசியல் எல்லைகளைக் கடந்து,தமிழர் உலகம் உங்களை நெஞ்சிலே போற்று கிறது. இளைஞர்கள், வாலிபர்கள், அருமைத் தங்கைகள், தமிழ் ஈழ விடு தலைக்கு ஏதாவது செய்தோம் என்ற பெருமையைப் பெறுங்கள் உங்கள் வாழ் நாளிலே! தமிழ் ஈழ விடுதலையில் நாமும் பங்கு ஏற்றோம் என்ற பெருமை யைப் பெறுங்கள்.

இந்த நூல், தமிழ்நாட்டிலே எல்லோரிடமும் இருக்க வேண்டும். தம்பிகளே, தங்கைகளே, ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை வாங்கி, வீட்டிலே போய்ப் படியுங்கள்.இந்த நூல், எல்லா நூலகங்களுக்கும் செல்ல வேண்டும்.இது தமி ழரின் வரலாற்றுக் காவியம். தமிழர்களுக்குச் சரித்திரக் குறிப்புகள் இல்லை என்ற குறையைப் போக்கி விட்டீர்கள். தமிழர் உலகம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கின்றது. நீங்கள் பல்லாண்டு வாழ்க!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment