Monday, March 5, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 6

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2500

கடந்த ஆட்சியின்போது, ஒரு டன் கரும்புக்கு விலை ரூ 2000 வழங்கப்பட்டது. அது கட்டுப்படியாகாது; ரூ 3000 கொடுக்க வேண்டும் என்று கோரி, இன்றைய ஆளும் கட்சியின் சார்பில், சர்க்கரை ஆலைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2500 வழங்குவோம் அறிவித்தார்கள். ஆனால், இப்போது, ரூ 2100 மட்டுமே அறிவித்து இருக்கின்றார்கள்.

அதேபோன்று, நெல் கொள்முதல் விலையையும், குவிண்டாலுக்கு ரூ 100 மட்டுமே உயர்த்தி உள்ளனர்.

சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு உர விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது. விவசாயக்கூலி, டிராக்டர் வாடகையும் உயர்ந்து விட்டது.

கரும்பு வெட்டுக்கூலி, லாரி வாடகை, ஒரு டன்னுக்கு ரூ.700 முதல், ரூ.1000 வரையிலும் ஆகிறது. நெல்லுக்கும் இதே விகிதத்தில் செலவுகள் கூடி உள்ளன.

எனவே, விவசாயிகள், கரும்பு, நெல் உற்பத்தியை விட்டு விலகி, வேறு பணப்பயிர்கள் சாகுபடிக்கு மாறும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, கரும்பு மற்றும் நெல் பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாக்கின்ற வகையில்,

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000/-

நெல் 1 குவிண்டாலுக்கு ரூ.2500/-

மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ 10,000/-

மரவள்ளிக் கிழங்கு குவிண்டாலுக்கு ரூ 5,000/-

தேங்காய் கொப்பரைக்கு, கிலோவுக்கு ரூ.70/-

விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment