Showing posts with label பாராளுமன்றம். Show all posts
Showing posts with label பாராளுமன்றம். Show all posts

Wednesday, December 18, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 13

இரயில் பாதைக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சந்தை விலையை நிர்ணயித்திடுக! நாடாளுமன்றத்தில் #மதிமுக  அ.கணேசமூர்த்தி வலியுறுத் தல்

ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை திட்டம் -விளைநிலம் மற்றும் குடியிருப்பு களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகை தற்போதுள்ள சந்தை மதிப்பில் கொடுக்க வேண்டி, விதி எண்.377 -இன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சனை குறித்து நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வலி யுறுத்தினார்.07.12.2010 அன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரு மாறு:

“ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து வீடு, விளை நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

Monday, December 16, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 12

ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கைக்கு உதவுவதா?

தமிழர் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றம்! இதற்குத்தானா இந்தியாவின்
நிதி உதவி? #மதிமுக அ.கணேசமூர்த்தி கண்டனம்

இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத் தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப் பினர் அ.கணேசமூர்த்தி 25.8.2010 அன்று ஆற்றிய உரை...

சபாநாயகர் அவர்களே! அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சில விஷயங் களைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். தங்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு, முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இலங் கைத் தமிழர்கள் தங்களது பழைய வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டார் களா? என்பதை அறிய விரும்புகிறேன்.

Saturday, December 14, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 11

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை இலங்கை அரசு மீறும்போது,கச்சத் தீவு ஒப் பந்தத்தை இந்தியா ஏன் முறித்துக் கொள்ளக்கூடாது? -#மதிமுக அ.கணேச மூர்த்தி 

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை என்ன?

இந்தியாவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு மீறியே வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்திய அரசு கச்சத் தீவு ஒப் பந்தத்தை ஏன் முறித்துக் கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை யில் 31.8.2010 அன்று கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வினா எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:

Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.


Thursday, December 12, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 10

இரயில் தண்டவாள நாசவேலைகள் பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்திட
வெளிப்படையான விசாரணை தேவை!

நாடாளுமன்றத்தில் இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் தில் கலந்துகொண்டு #மதிமுக உறுப்பினர்அ.கணேசமூர்த்தி அவர்கள் (ஈரோடு
தொகுதி)19.8.2010 அன்று ஆற்றிய உரை:

தலைவர் அவர்களே, இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவா தத்தில் கலந்து கொள்ள தந்த வாய்ப்பிற்கு நன்றி.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இது வரை நடைமுறைக்கு வராமலே அறிவிப்பாகவே உள்ளன.

Saturday, December 7, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 9

ஈரோடு ,திருப்பூர் , கோவை பகுதிகளை இயற்கை வேளாண்மைப் பகுதிகளாக
அறிவித்திடுக!

நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேசமூர்த்தி நிதி மசோதா மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு 29.04.2010 அன்று ஆற் றிய உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே ! நிதி மசோதா மீது பேச வாய்ப்பு தந்த தற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் , எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல் டீசல் மீதான சுங்கவரி 2.4 யில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தப் பட்டதாலும், கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதா லும் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மீது இறக்கு மதி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு உள்ளதாலும் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

Wednesday, December 4, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 8

விவசாயமும் தொழிலும் பாதிக்கப்படாமல் இருக்க , சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிக்க வேண்டும்

சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிப்பு செய்து விவசாயத்தையும் ,தொழிலையும் காப்பாற்ற வேண்டுமென 27-04-2010 அன்று நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேச மூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.

விவரம் வருமாறு

தமிழ் நாட்டில் ஈரோடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் , சுமார் 650 துணி மற்றும் நூல் சாயத்தொழிற்சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கணக்கெடுத்து உள்ளது. கணக்கெடுப்பில் சேராத சுமார் ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிறிய சாயப்பட்டறைகள் இயங்குகின்றன .தினசரி சுமார் 50 இலட்சம் மீட்டர் துணி சலவை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு ஏற்றுமதிக்கு வேண்டிய துணிகள் பதப்படுத்தப்படுகிறது. 

Sunday, December 1, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 7

தமிழக அரசின் மெத்தனப் போக்கு! தமிழக திட்டங்களுக்கு குறைந்த தொகை ஒதுக்கீடு!

இரயில்வே நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் அ.கணேச மூர்த்தி குற்றச்சாட்டு

இரயில்வே நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத் தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேச மூர்த்தி (ஈரோடு தொகுதி) 9-03-2010 அன்று ஆற்றிய உரை:

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! இரயில்வே துறை மானியக்கோரிக் கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

உடனடியாகக் கிடைக்கும் பலனை மட்டும் கருதாமல், நாட்டின் வளர்ச்சியை யும் மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, நமது இரயில்வே துறை நடை போட வேண்டும் என்ற இரயில்வே துறை அமைச்சர் அவர்களின் மு னைப்பை இந்த இரயில்வே துறை நிதி நிலை அறிக்கையில் காண முடிகிறது.
அதற்காக எனது பாராட்டுகள்.

Saturday, November 30, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 6

ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும்
விலை உயர்வா?

நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில், #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 11-03-2010 அன்று ஆற்றிய உரை:

மண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித் ததற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வும் எனது சார்பாகவும் நன்றி.

உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைந்துள்ளது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.உணவு உற்பத்தியைப் பெருக்க வேளாண்மைக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு சலுகைகள் வெறும் கண் துடைப்பே.விவசாயிகள் சுமையை முழுவதுமாக தீர்த்து உற்பத்தியை உயர்த்த இது பயன்படாது. இது வெறும் ஆறுதல் வார்த்தைகளே. விவசாயத்துக்கு பயிரிடும் நிலப்பரப்பை அதி கப்படுத்த எந்த ஒரு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

Thursday, November 28, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 5

தமிழ் œ இன அழிப்பிšல்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!

குடியரசுத் தலைவர் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தி‹ன் மீது, நாடாளு ம‹ன்றத்திšல் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அ‹ன்று ஆ‰ற்றிய உரை:

“குடியரசுத் தலைவரி‹ன் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தி‹ன் மீது பேசும் வாŒப்பளித்தத‰ற்கு நன்‹றி. இந்தத் தீர்மானத்தின் ‹மீது உரையா‰றிய மாண்பு
மிகு அத்வானி அவர்கŸள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி‹ உரைக்கு எனது ந‹றியைத் தெரிவித்துக் கொŸள்கிற அதேநேரத்தில்š,அதில் š உள்Ÿள குறை களையும் சுட்டிக்காட்டும் வாŒய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்‹படுத் திக் கொŸள்ள விரும்புகிறே‹ன்.

Tuesday, November 26, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 4

அறிவிப்பு நிலையிலேயே உள்ள ஈரோடு - செங்கோட்டை புதிய இரயிலை இயக்கிடுக!

இரயில்வே கூடுதல் நிதிநிலை அறிக்கையின்போது நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கை 10.12.2009 அன்று
தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவாதத்தில் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கையில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில், ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை புதிய இரயில் வண்டி இயக்கப் போவதாக அறிவிக்கப் பட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைப் படுத் தப்படாமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.பொதுமக்களுக்கு பெரிதும் பயன் படும் இந்த இரயில் வண்டியினை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, November 25, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 3

ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக கரும்பு விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதா? 

கரும்பு விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் ஈரோடு தொகுதி #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 10.12.2009அன்று ஆற்றிய உரை: 

கரும்பு விவசாயிகளின் உரிமையைப் பறிக்கிறவகையில் 22.10.2009 அன்று
இந்திய அரசு வெளியிட்ட அவசரச் சட்டத்தை சட்டவடிவமாக்க இந்தச் சட்ட
வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது.

22.10.2009 அன்று வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தில்,மாநில அரசுகளுக்கு இந் தக் கூடுதல் விலை (SAP) அறிவிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு இருந்தது. இந் தச் சட்ட வரைவில் மீண்டும் கூடுதல் விலை அறிவிக்க மாநில அரசுகளுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளமைக்கு கரும்பு விவசாயிகளின் சார்பில் இந்திய அர சுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday, November 24, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 2

இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது! தனிஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு!

2009 - 2010ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் போது #மதிமுக நாடாளுமன்றக் கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் மக்க ள வையில் 13.07.2009 அன்று ஆற்றிய உரையின் விவரம்...

அவைத்தலைவர் அவர்களே, 2009-2010 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை யின்போது எனக்குப் பேச வாய்ப்பளித்ததற்கு எனது நன்றி. உலகப் பொருளா தார வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரம் மந்தம் தட்டியுள்ள நிலையில் சமர்ப் பிக்கப்பட்டு உள்ள இந்த நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத் தை அளிக் கிறது.

மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு - தினக்கூலி பெறும் ஏழை மக்களுக்கு ஒரு சிறிய வரி விலக்கு மட்டுமே அளித்து இருப்பது மிகுந்த ஏமாற் றத்தைத் தருகிறது. ஆகவே,இவர்களுக்கு அரசு முழு உதவி செய்ய வேண்டும்.

Saturday, November 23, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 1

பட்ஜெட் இங்கே! ஈரோடு - செங்கோட்டை புதிய இரயில் எங்கே?

#மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மக்களவையில் 07.07.
2009 அன்று இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்று வதற்கு வாய்ப்பளித்த அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து,உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் இயங்கு கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.

மத்திய அமைச்சர் 57 புதிய இரயில்களையும், ரூ. 2921 கோடி மதிப்பில் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், ரூ. 1750 கோடி மதிப்பில் அகலப்பாதை வழித் தடங் களாக மாற்றுவதற்கான திட்டத்தினையும், ஒரு நகரத்திலிருந்து அடுத்த நகரத்திற்குச் செல்லும் பாதையில் எங்கும் நின்று செல்லாத சிறப்பு இரயில் களை அறிமுகப்படுத்து வதற்கும், குறிப்பாக சென்னையிலிருந்து எங்கும் நில் லாமல் நேரடியாக டெல்லி செல்வதற்கு சிறப்பு இரயிலை இயக்கவும் திட்ட மிட்டு உள்ளதாக இரயில்வே நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

Sunday, November 17, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 34

நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்கள் 1978 ஆவது ஆண்டிலிருந்து
2002 ஆம் ஆண்டு வரையில் ஆற்றிய பணிகளையும், தமிழ்நாட்டிற்காக எழுப் பிய உரிமைக் குரல்களையும் ஆவணப்படுத்தும் இந்தக்கட்டுரைத் தொடர் நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்ற பொழுது, தலைவர் வைகோவின் மிகமிக முக்கியமான நாடாளுமன்றக்கோரிக்கை குறித்து பதிவு செய்வது இன்றியமை யாததாகும்.

ஆம்! சேதுக்கால்வாய்த் திட்டம் பற்றிதான் குறிப்பிடுகிறோம்.தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சேதுக்கால்வாய்த் திட்டம், பேசப்பட்டது மறுமலர்ச்சி தி.மு .க. உருவானதற்கு பின்பு தான் அதிகம்.

தமிழ்நாடு முழுவதும் சேதுக்கால்வாய்த் திட்டம் என்றால் என்ன? அது எவ் வா று தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் என்று 1994 ஏப்ரல் 16 எழுச்சிப் பேரணியில்
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரமாண்ட பொதுக்கூட்டம் மெரினா கடற்கரையில்
நடந்தபோது, தலைவர் வைகோ எடுத்துக்காட்டினார். நான்கே ஆண்டுகளில் அதே கடற்கரையில் 1998 செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சிப் பேரணி பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்களை சேதுக்கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற் றும் என்று பிரகடனம் வெளியிடச் செய்தார்.

Saturday, October 19, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 33

மே தினம் பொது விடுமுறை அறிவிப்பு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுப்பு வைகோவின் சரித்திரச் சாதனை!

நாடாளுமன்றத்தில்24 ஆண்டுக்காலம் பணி ஆற்றிய தலைவர் #வைகோ வின்
வரலாற்றுச் சாதனைகளில் முத்தாய்ப்பாகத் திகழ்வது, தொழிலாளர் வர்க்கத் தின் உரிமைகளை நிலை நாட்டிட ஓங்கிக் குரல் எழுப்பியது மட்டுமின்றி, அவற்றைச் சாதித்துக் காட்டியதும்தான். உலகம் முழுவதும் இன்றும் எழுச்சி யோடு கொண்டாடப் படும் மே தினத்திற்கு இந்திய அரசு விடுமுறை அளித்து அங்கீகரிக்கச் செய்த பெருமை தலைவர் வைகோவுக்கு உண்டு. 1990 ஆம் ஆண்டு மே தினத்தின் நூறாவது ஆண்டின் நிறைவை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடிய நேரத்தில், தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை வழங் கக்கோரி தலைவர் வைகோ வைத்த கோரிக்கையை,அன்றைய பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஏற்றுக்கொண்டு அதற்கான உத்திரவைப் பிறப்பித்தார்.

Sunday, September 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 32

காவிரி நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாவிடில்

சோவியத் யூனியன் போல இந்தியா உடைந்து சிதறும்!


கர்நாடகத்தில் முதலமைச்சர் பொறுப்பிற்கு யார் வந்தாலும், அவர்கள் அந்த மாநில அரசியலில் தங்களுக்கு ஒரு தனி இடம் பெற வேண்டும் என்று நினைப் பார்கள். உடனடியாக அதற்கு அவர்கள் செய்வதெல்லாம் தமிழ்நாட்டின் தலை யில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுதான்.

ஆம்! யார் கர்நாடக முதல்வராக வந்தாலும், “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் ஒரு சொட்டு கூட தர மாட்டோம்” என்று கூறுவது வாடிக்கை ஆகி விட்டது. கடந்த
40 ஆண்டுகளாக இதே நிலைதான்.காங்கிரஸ், ஜனதா, பிஜேபி எந்தக் கட்சி
ஆட்சியென்றாலும், ஆட்கள் மாறினார்களே தவிர, இந்தப் பல்லவி மட்டும் மாறவேயில்லை.

Monday, August 26, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 31

மாநில உரிமைகளைப் பறிக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம்!

உலகின் உயர்ந்த ஜனநாயக நாடு என்கிற பெருமை இந்தியாவுக்கு உண்டு.
ஆனால், இங்கே ஜனநாயகம் படும்பாடு இந்நாட்டிற்கு மதிப்பைப் பெற்றுத் தந் திருக்கின்றதா என்றால் இல்லை.

தேர்தல் முறை என்பது சாமான்ய மக்களின் இதயதாகத்தை வெளிப்படுத்துவ தாகவும், அவர்களது உரிமையை நிலை நாட் டுவதாகவும் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் அரசியல் அமைப் புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வாக்குரிமைக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

Thursday, August 22, 2013

நாடாளுமன்றமா? உச்சநீதிமன்றமா?

நாடாளுமன்றத்தின் மாண்பை உச்சநீதிமன்றமா சீர்குலைத்தது?

உச்சநீதிமன்றம் ஜூலை 10 ஆம் தேதி வழங்கிய ஒரு தீர்ப்பு இந்திய அரசியல்
அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள் சிலர் இந்தத் தீர்ப்பை,நாடாளுமன்றத்துடன் உச்சநீதிமன்றம் மோதுவதாக இருக்கின்றது என விமர்சனம் செய்துள்ளனர். நீதித் துறையின் வரலாற்றில் மிக முக்கிய மான தீர்ப்பாகக் கருதப்படும் இந்த வழக்கை கேரளாவைச் சேர்ந்த லில்லி தாமஸ் என்ற 85 வயது மூத்த பெண் வழக்கறிஞரும், லோக் பிரகாரி என்ற அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

“இந்திய அரசியல் குற்றமயமாகி வருவது மட்டுமின்றி நாடாளு மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 இன் உட்பிரிவு 4 ஐ ரத்து செய்ய வேண்டும்” இதுதான் 2005
ஆம் ஆண்டில் வழக்கறிஞர் லில்லிதாமஸ், லோக் பிரகாரி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.என்.சுக்லா இருவரும் தொடுத்த பொதுநல வழக்கின் சாரம்சமாகும்.

Tuesday, July 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 30

குடியரசுத் தலைவர் மாளிகை காங்கிரஸ் சதி ஆலோசனை சபையா?

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி,பாரதிய ஜனதா கட்சியினால் கவிழ்க்கப்பட்டப் பிறகு,டெல்லி ஆட்சி பீடத்தில் நடைபெற்றவை ஜனநாயகத் தை கேலிக் கூத்தாக்கிவிட்டன.

இந்திய நாட்டு சரித்திரத்தில் இல்லாத வகையில், மத்தியில் 54 நாடாளுமன்ற
உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, சந்திரசேகர் -காங்கிரஸ் கட்சியின் ஆதர வுடன் ஆட்சி அமைத்தார்.ராஜீவ்காந்தியின் ஜனநாயக விரோத நடவடிக்கை கள் அனைத்தும் குடியரசுத்தலைவர் பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன்ஆதரவு டன் நடைபெற்றது.