விவசாயமும் தொழிலும் பாதிக்கப்படாமல் இருக்க , சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிக்க வேண்டும்
சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிப்பு செய்து விவசாயத்தையும் ,தொழிலையும் காப்பாற்ற வேண்டுமென 27-04-2010 அன்று நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேச மூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.
விவரம் வருமாறு
தமிழ் நாட்டில் ஈரோடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் , சுமார் 650 துணி மற்றும் நூல் சாயத்தொழிற்சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கணக்கெடுத்து உள்ளது. கணக்கெடுப்பில் சேராத சுமார் ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிறிய சாயப்பட்டறைகள் இயங்குகின்றன .தினசரி சுமார் 50 இலட்சம் மீட்டர் துணி சலவை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு ஏற்றுமதிக்கு வேண்டிய துணிகள் பதப்படுத்தப்படுகிறது.