Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Saturday, December 7, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 9

ஈரோடு ,திருப்பூர் , கோவை பகுதிகளை இயற்கை வேளாண்மைப் பகுதிகளாக
அறிவித்திடுக!

நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேசமூர்த்தி நிதி மசோதா மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு 29.04.2010 அன்று ஆற் றிய உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே ! நிதி மசோதா மீது பேச வாய்ப்பு தந்த தற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் , எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல் டீசல் மீதான சுங்கவரி 2.4 யில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தப் பட்டதாலும், கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதா லும் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மீது இறக்கு மதி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு உள்ளதாலும் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது.