Showing posts with label அ.கணேசமூர்த்தி. Show all posts
Showing posts with label அ.கணேசமூர்த்தி. Show all posts

Wednesday, December 18, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 13

இரயில் பாதைக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சந்தை விலையை நிர்ணயித்திடுக! நாடாளுமன்றத்தில் #மதிமுக  அ.கணேசமூர்த்தி வலியுறுத் தல்

ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை திட்டம் -விளைநிலம் மற்றும் குடியிருப்பு களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகை தற்போதுள்ள சந்தை மதிப்பில் கொடுக்க வேண்டி, விதி எண்.377 -இன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சனை குறித்து நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வலி யுறுத்தினார்.07.12.2010 அன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரு மாறு:

“ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து வீடு, விளை நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

Monday, December 16, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 12

ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கைக்கு உதவுவதா?

தமிழர் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றம்! இதற்குத்தானா இந்தியாவின்
நிதி உதவி? #மதிமுக அ.கணேசமூர்த்தி கண்டனம்

இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத் தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப் பினர் அ.கணேசமூர்த்தி 25.8.2010 அன்று ஆற்றிய உரை...

சபாநாயகர் அவர்களே! அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சில விஷயங் களைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். தங்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு, முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இலங் கைத் தமிழர்கள் தங்களது பழைய வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டார் களா? என்பதை அறிய விரும்புகிறேன்.

Saturday, December 14, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 11

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை இலங்கை அரசு மீறும்போது,கச்சத் தீவு ஒப் பந்தத்தை இந்தியா ஏன் முறித்துக் கொள்ளக்கூடாது? -#மதிமுக அ.கணேச மூர்த்தி 

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை என்ன?

இந்தியாவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு மீறியே வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்திய அரசு கச்சத் தீவு ஒப் பந்தத்தை ஏன் முறித்துக் கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை யில் 31.8.2010 அன்று கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வினா எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:

Thursday, December 12, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 10

இரயில் தண்டவாள நாசவேலைகள் பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்திட
வெளிப்படையான விசாரணை தேவை!

நாடாளுமன்றத்தில் இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் தில் கலந்துகொண்டு #மதிமுக உறுப்பினர்அ.கணேசமூர்த்தி அவர்கள் (ஈரோடு
தொகுதி)19.8.2010 அன்று ஆற்றிய உரை:

தலைவர் அவர்களே, இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவா தத்தில் கலந்து கொள்ள தந்த வாய்ப்பிற்கு நன்றி.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இது வரை நடைமுறைக்கு வராமலே அறிவிப்பாகவே உள்ளன.

Monday, December 9, 2013

தில்லில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

 #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி தலைமையில் கரும்பு விவசாயிகள்போராட்டம் அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பு ..

அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று  நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை ...

Saturday, December 7, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 9

ஈரோடு ,திருப்பூர் , கோவை பகுதிகளை இயற்கை வேளாண்மைப் பகுதிகளாக
அறிவித்திடுக!

நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேசமூர்த்தி நிதி மசோதா மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு 29.04.2010 அன்று ஆற் றிய உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே ! நிதி மசோதா மீது பேச வாய்ப்பு தந்த தற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் , எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல் டீசல் மீதான சுங்கவரி 2.4 யில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தப் பட்டதாலும், கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதா லும் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மீது இறக்கு மதி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு உள்ளதாலும் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

Friday, December 6, 2013

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை இரத்து செய்ய வேண்டும்

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் உள்துறைஅமைச்சருக்கு #வைகோ கோரிக்கை

#மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி. உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது, சேலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு அப்பட்டமான பொய்வழக்கு காவல்துறையால் போடப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள வெற்று மைதானத்தில், ஒரு கோணிச் சாக்கு பொட்டலத்தை யாரோ ஒரு சிலர் தீ வைத்து எரித்துப் போட் டுள்ளனர். அதில் அங்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் நடந்த போது கொளத்தூர் மணி சென்னையில் இருந்தார். அதன் பின்னர் மறுநாள் நள்ளிரவில் கொளத்தூர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறை யினர் கைது செய்து,பொய் வழக்குப்போட்டு சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். அவர் பிணையில் விடுதலை பெறுவார் என்று அறிந்து, தேசப் பாதுகாப் புச் சட்டத்தை அவர் மீது ஏவி, சிறைவாசத்தை நீட்டித்தனர். இது ஜெயலலிதா அரசு மேற்கொண்ட பாசிச அடக்குமுறை ஆகும். ஜனநாயகத்தின் குரல் வளை யை அறுக்க முயலும் அக்கிரமம் ஆகும்.

Wednesday, December 4, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 8

விவசாயமும் தொழிலும் பாதிக்கப்படாமல் இருக்க , சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிக்க வேண்டும்

சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிப்பு செய்து விவசாயத்தையும் ,தொழிலையும் காப்பாற்ற வேண்டுமென 27-04-2010 அன்று நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேச மூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.

விவரம் வருமாறு

தமிழ் நாட்டில் ஈரோடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் , சுமார் 650 துணி மற்றும் நூல் சாயத்தொழிற்சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கணக்கெடுத்து உள்ளது. கணக்கெடுப்பில் சேராத சுமார் ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிறிய சாயப்பட்டறைகள் இயங்குகின்றன .தினசரி சுமார் 50 இலட்சம் மீட்டர் துணி சலவை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு ஏற்றுமதிக்கு வேண்டிய துணிகள் பதப்படுத்தப்படுகிறது. 

Tuesday, December 3, 2013

டிச 12 தில்லில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்களின் ஆதரவை திரட்டும் விவசாய சங்க தலைவர்களுடன் #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி

அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று  நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ...

Sunday, December 1, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 7

தமிழக அரசின் மெத்தனப் போக்கு! தமிழக திட்டங்களுக்கு குறைந்த தொகை ஒதுக்கீடு!

இரயில்வே நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் அ.கணேச மூர்த்தி குற்றச்சாட்டு

இரயில்வே நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத் தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேச மூர்த்தி (ஈரோடு தொகுதி) 9-03-2010 அன்று ஆற்றிய உரை:

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! இரயில்வே துறை மானியக்கோரிக் கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

உடனடியாகக் கிடைக்கும் பலனை மட்டும் கருதாமல், நாட்டின் வளர்ச்சியை யும் மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, நமது இரயில்வே துறை நடை போட வேண்டும் என்ற இரயில்வே துறை அமைச்சர் அவர்களின் மு னைப்பை இந்த இரயில்வே துறை நிதி நிலை அறிக்கையில் காண முடிகிறது.
அதற்காக எனது பாராட்டுகள்.

Saturday, November 30, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 6

ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும்
விலை உயர்வா?

நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில், #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 11-03-2010 அன்று ஆற்றிய உரை:

மண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித் ததற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வும் எனது சார்பாகவும் நன்றி.

உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைந்துள்ளது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.உணவு உற்பத்தியைப் பெருக்க வேளாண்மைக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு சலுகைகள் வெறும் கண் துடைப்பே.விவசாயிகள் சுமையை முழுவதுமாக தீர்த்து உற்பத்தியை உயர்த்த இது பயன்படாது. இது வெறும் ஆறுதல் வார்த்தைகளே. விவசாயத்துக்கு பயிரிடும் நிலப்பரப்பை அதி கப்படுத்த எந்த ஒரு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

Thursday, November 28, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 5

தமிழ் œ இன அழிப்பிšல்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!

குடியரசுத் தலைவர் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தி‹ன் மீது, நாடாளு ம‹ன்றத்திšல் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அ‹ன்று ஆ‰ற்றிய உரை:

“குடியரசுத் தலைவரி‹ன் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தி‹ன் மீது பேசும் வாŒப்பளித்தத‰ற்கு நன்‹றி. இந்தத் தீர்மானத்தின் ‹மீது உரையா‰றிய மாண்பு
மிகு அத்வானி அவர்கŸள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி‹ உரைக்கு எனது ந‹றியைத் தெரிவித்துக் கொŸள்கிற அதேநேரத்தில்š,அதில் š உள்Ÿள குறை களையும் சுட்டிக்காட்டும் வாŒய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்‹படுத் திக் கொŸள்ள விரும்புகிறே‹ன்.

Tuesday, November 26, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 4

அறிவிப்பு நிலையிலேயே உள்ள ஈரோடு - செங்கோட்டை புதிய இரயிலை இயக்கிடுக!

இரயில்வே கூடுதல் நிதிநிலை அறிக்கையின்போது நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கை 10.12.2009 அன்று
தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவாதத்தில் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கையில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில், ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை புதிய இரயில் வண்டி இயக்கப் போவதாக அறிவிக்கப் பட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைப் படுத் தப்படாமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.பொதுமக்களுக்கு பெரிதும் பயன் படும் இந்த இரயில் வண்டியினை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, November 25, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 3

ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக கரும்பு விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதா? 

கரும்பு விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் ஈரோடு தொகுதி #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 10.12.2009அன்று ஆற்றிய உரை: 

கரும்பு விவசாயிகளின் உரிமையைப் பறிக்கிறவகையில் 22.10.2009 அன்று
இந்திய அரசு வெளியிட்ட அவசரச் சட்டத்தை சட்டவடிவமாக்க இந்தச் சட்ட
வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது.

22.10.2009 அன்று வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தில்,மாநில அரசுகளுக்கு இந் தக் கூடுதல் விலை (SAP) அறிவிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு இருந்தது. இந் தச் சட்ட வரைவில் மீண்டும் கூடுதல் விலை அறிவிக்க மாநில அரசுகளுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளமைக்கு கரும்பு விவசாயிகளின் சார்பில் இந்திய அர சுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday, November 24, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 2

இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது! தனிஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு!

2009 - 2010ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் போது #மதிமுக நாடாளுமன்றக் கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் மக்க ள வையில் 13.07.2009 அன்று ஆற்றிய உரையின் விவரம்...

அவைத்தலைவர் அவர்களே, 2009-2010 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை யின்போது எனக்குப் பேச வாய்ப்பளித்ததற்கு எனது நன்றி. உலகப் பொருளா தார வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரம் மந்தம் தட்டியுள்ள நிலையில் சமர்ப் பிக்கப்பட்டு உள்ள இந்த நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத் தை அளிக் கிறது.

மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு - தினக்கூலி பெறும் ஏழை மக்களுக்கு ஒரு சிறிய வரி விலக்கு மட்டுமே அளித்து இருப்பது மிகுந்த ஏமாற் றத்தைத் தருகிறது. ஆகவே,இவர்களுக்கு அரசு முழு உதவி செய்ய வேண்டும்.

Saturday, November 23, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 1

பட்ஜெட் இங்கே! ஈரோடு - செங்கோட்டை புதிய இரயில் எங்கே?

#மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மக்களவையில் 07.07.
2009 அன்று இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்று வதற்கு வாய்ப்பளித்த அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து,உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் இயங்கு கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.

மத்திய அமைச்சர் 57 புதிய இரயில்களையும், ரூ. 2921 கோடி மதிப்பில் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், ரூ. 1750 கோடி மதிப்பில் அகலப்பாதை வழித் தடங் களாக மாற்றுவதற்கான திட்டத்தினையும், ஒரு நகரத்திலிருந்து அடுத்த நகரத்திற்குச் செல்லும் பாதையில் எங்கும் நின்று செல்லாத சிறப்பு இரயில் களை அறிமுகப்படுத்து வதற்கும், குறிப்பாக சென்னையிலிருந்து எங்கும் நில் லாமல் நேரடியாக டெல்லி செல்வதற்கு சிறப்பு இரயிலை இயக்கவும் திட்ட மிட்டு உள்ளதாக இரயில்வே நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

Sunday, October 20, 2013

தமிழக உரிமைகளை, வாழ்வாதாரங்களைக் காப்பவராக

தமிழக உரிமைகளை, வாழ்வாதாரங்களைக் காப்பவராக மக்கள் தலைவர் #வைகோ திகழ்கிறார்!

- விருதுநகர் மாநாட்டில் அ.கணேசமூர்த்தி எம்.பி.,

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில், ஆட்சிமன்றக்குழுசசெய லாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., ஆற்றிய அ.கணேசமூர்த்தி உரை...

Monday, September 9, 2013

நிலம் கையகப்படுத்துதல்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கிறது அரசு...
நாட்டின் விளைநிலங்களை தனியாரிடம் ஒப்படைக்கவே இச்சட்டம் பயன் படும்!

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் வரும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி மக்கள வையில் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி பேச்சு

Friday, September 6, 2013

மஞ்சள் வளர்ச்சி நிறுவனம்

ஆன்லைன் வர்த்தகத்தால் மஞ்சள் விவசாயிகளுக்குப் பாதிப்பு...
மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்துக!

பிரதமரிடம் #மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி., கோரிக்கை

தேசிய பண்டக வகையீடு சந்தையில் (NCDEX) முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.
விசாரணை கோரியும், மஞ்சள் விவசாயிகளுக்கு தனியாக மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்தித் தரவேண்டியும் 26 ஆகஸ்டு 2013 ஆம் நாள் ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி இந்தியப் பிரதமரிடம்
அளித்த கோரிக்கை மனு வருமாறு:

Saturday, August 31, 2013

உ.பா.ச - போகாத ஊருக்கு

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் போகாத ஊருக்கு வழி தேடுகிறது!

தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில்,#மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் 26.08.2013 அன்று ஆற்றிய உரை:

நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அந்நியர்களால் சுரண்டப் பட்டு, உண்ணும் உணவிற்குக் கூட உத்தரவாதம் இல்லாத நிலையில் நம் நாட்டு மக்கள் இருந்தனர்.நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆவது ஆண்டை கொண் டாடிக் கொண்டு உள்ளோம். பல ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவு செய்துள் ளோம்.