Showing posts with label 1992. Show all posts
Showing posts with label 1992. Show all posts

Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.


Sunday, September 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 32

காவிரி நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாவிடில்

சோவியத் யூனியன் போல இந்தியா உடைந்து சிதறும்!


கர்நாடகத்தில் முதலமைச்சர் பொறுப்பிற்கு யார் வந்தாலும், அவர்கள் அந்த மாநில அரசியலில் தங்களுக்கு ஒரு தனி இடம் பெற வேண்டும் என்று நினைப் பார்கள். உடனடியாக அதற்கு அவர்கள் செய்வதெல்லாம் தமிழ்நாட்டின் தலை யில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுதான்.

ஆம்! யார் கர்நாடக முதல்வராக வந்தாலும், “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் ஒரு சொட்டு கூட தர மாட்டோம்” என்று கூறுவது வாடிக்கை ஆகி விட்டது. கடந்த
40 ஆண்டுகளாக இதே நிலைதான்.காங்கிரஸ், ஜனதா, பிஜேபி எந்தக் கட்சி
ஆட்சியென்றாலும், ஆட்கள் மாறினார்களே தவிர, இந்தப் பல்லவி மட்டும் மாறவேயில்லை.

Monday, August 26, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 31

மாநில உரிமைகளைப் பறிக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம்!

உலகின் உயர்ந்த ஜனநாயக நாடு என்கிற பெருமை இந்தியாவுக்கு உண்டு.
ஆனால், இங்கே ஜனநாயகம் படும்பாடு இந்நாட்டிற்கு மதிப்பைப் பெற்றுத் தந் திருக்கின்றதா என்றால் இல்லை.

தேர்தல் முறை என்பது சாமான்ய மக்களின் இதயதாகத்தை வெளிப்படுத்துவ தாகவும், அவர்களது உரிமையை நிலை நாட் டுவதாகவும் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் அரசியல் அமைப் புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வாக்குரிமைக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

Saturday, June 8, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 28

இந்து ராஷ்டிரம் ஏற்படுத்த முயன்றால்  இந்தியா துண்டாடப்படுவதைத் தடுக்கவே முடியாது!

1992, டிசம்பர் 6, இந்திய வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாள். பாகிஸ்தான் பிரி வினைக்குப் பின்னர் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்கா லம் குறித்த கவலையுடன் கண்ணீர் சிந்திய நாள். எது நடந்துவிடக்கூடாது என் பதற்காக நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ கர்ஜித்தாரோ, அந்தத் துயர சம்பவம் நடந்தேறிவிட்டது;

ஆம்: மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்;
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அரசு காவிக்கூட்டத்தின் கொட்டத் திற்கு அடிபணிந்தது. இந்திய பூபாகம் இரத்தக்கோடுகளால் கிழிக்கப்பட்டு விட் டது. மதவெறி அமைப்புகளின் கரசேவை(?)யைத் தடுத்து நிறுத்தி பாபர் மசூதி யைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசும்; பிரதமர் நரசிம்மராவும் இராணுவப் பாதுகாப்புடன் மசூதியை இடிக்கத் துணைபோன கொடுமையைக்கண்டு நாடே கொதித்துக் கொந்தளித்தது.