Showing posts with label 1985. Show all posts
Showing posts with label 1985. Show all posts

Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.


Saturday, April 6, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 6


முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

இந்திய அரசு, தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்!

ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள கொலைவெறிக் கூட்டத்தை,
சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் குரல்
எழுப்பி வரும் நிலையில், தாயகத்தமிழர்களும் அயலகத் தமிழர்களும் ஐ.நா. மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்பார்த்திருக்கும் சூழலில், 2011 ஆகஸ்டு 1 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில், ராஜபக்சே கொலைகாரக் கூட்டத்திற்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்திருக்கிறது இந்திய அரசு.

தமிழர்களின் குடலை உருவி, சிவந்த மாலையாக போட்டுக் கொண்டதைப்
போல துண்டு போட்டுக்கொண்டு ராஜபக்சே சகோதரன் சமல் ராஜபக்சே
இந்திய மக்களவையின் மாடத்தில் சிறப்பு விருந்தினராக சிங்கள எம்.பி.கள்
புடைசூழ உட்கார்ந்திருக்க அவைத்தலைவர் திருமதி மீராகுமார் வரவேற்பு
பாசுரம் வாசித்தார்.