Showing posts with label ரயில்வே. Show all posts
Showing posts with label ரயில்வே. Show all posts

Wednesday, December 18, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 13

இரயில் பாதைக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சந்தை விலையை நிர்ணயித்திடுக! நாடாளுமன்றத்தில் #மதிமுக  அ.கணேசமூர்த்தி வலியுறுத் தல்

ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை திட்டம் -விளைநிலம் மற்றும் குடியிருப்பு களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகை தற்போதுள்ள சந்தை மதிப்பில் கொடுக்க வேண்டி, விதி எண்.377 -இன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சனை குறித்து நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வலி யுறுத்தினார்.07.12.2010 அன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரு மாறு:

“ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து வீடு, விளை நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

Thursday, December 12, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 10

இரயில் தண்டவாள நாசவேலைகள் பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்திட
வெளிப்படையான விசாரணை தேவை!

நாடாளுமன்றத்தில் இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் தில் கலந்துகொண்டு #மதிமுக உறுப்பினர்அ.கணேசமூர்த்தி அவர்கள் (ஈரோடு
தொகுதி)19.8.2010 அன்று ஆற்றிய உரை:

தலைவர் அவர்களே, இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவா தத்தில் கலந்து கொள்ள தந்த வாய்ப்பிற்கு நன்றி.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இது வரை நடைமுறைக்கு வராமலே அறிவிப்பாகவே உள்ளன.

Tuesday, December 3, 2013

தென்காசி மதிமுக சார்பில் கறுப்பு கொடி போராட்டம்

தென்காசி நகர #மதிமுக செயலாளரும், ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவ ருமான என். வெங்கடேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கை

வளர்ந்து வரும் நகரமான தென்காசிக்கு ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 மாதங்களுக் கு முன்பே முன்பதிவு முடிந்து விடுகிறது. எனவே கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும். 

Sunday, December 1, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 7

தமிழக அரசின் மெத்தனப் போக்கு! தமிழக திட்டங்களுக்கு குறைந்த தொகை ஒதுக்கீடு!

இரயில்வே நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் அ.கணேச மூர்த்தி குற்றச்சாட்டு

இரயில்வே நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத் தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேச மூர்த்தி (ஈரோடு தொகுதி) 9-03-2010 அன்று ஆற்றிய உரை:

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! இரயில்வே துறை மானியக்கோரிக் கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

உடனடியாகக் கிடைக்கும் பலனை மட்டும் கருதாமல், நாட்டின் வளர்ச்சியை யும் மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, நமது இரயில்வே துறை நடை போட வேண்டும் என்ற இரயில்வே துறை அமைச்சர் அவர்களின் மு னைப்பை இந்த இரயில்வே துறை நிதி நிலை அறிக்கையில் காண முடிகிறது.
அதற்காக எனது பாராட்டுகள்.

Thursday, November 28, 2013

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவி கலெக்டர் அலுவலகத்தை , #மதிமுக வினர் முற்றுகையிட்டனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் , வைகோ சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த பொது பெற்று தந்தார் .கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட்டில் கடந்த 2009–ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து அந்த ரயில்வே கேட்டை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதனால் இனாம் மணி யாச்சி பஞ்சாயத்து, இந்திரா நகர், அத்தைகொண்டான், சீனிவாச நகர் உள்ளிட் ட பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. என வே ரயில்வே கேட்டை மூடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2–2–2009 அன்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ரயில்வே கேட் டுக்கு பதிலாக அப்பகுதியில் ரூ.80 லட்சம் செலவில், வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்க வழிப்பாதை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து தற்போது வரை ரயில்வே கேட் மூடப்படாமல் பொதுமக்களின் பயன் பாட்டுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

Tuesday, November 26, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 4

அறிவிப்பு நிலையிலேயே உள்ள ஈரோடு - செங்கோட்டை புதிய இரயிலை இயக்கிடுக!

இரயில்வே கூடுதல் நிதிநிலை அறிக்கையின்போது நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கை 10.12.2009 அன்று
தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவாதத்தில் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கையில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில், ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை புதிய இரயில் வண்டி இயக்கப் போவதாக அறிவிக்கப் பட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைப் படுத் தப்படாமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.பொதுமக்களுக்கு பெரிதும் பயன் படும் இந்த இரயில் வண்டியினை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, November 23, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 1

பட்ஜெட் இங்கே! ஈரோடு - செங்கோட்டை புதிய இரயில் எங்கே?

#மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மக்களவையில் 07.07.
2009 அன்று இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்று வதற்கு வாய்ப்பளித்த அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து,உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் இயங்கு கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.

மத்திய அமைச்சர் 57 புதிய இரயில்களையும், ரூ. 2921 கோடி மதிப்பில் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், ரூ. 1750 கோடி மதிப்பில் அகலப்பாதை வழித் தடங் களாக மாற்றுவதற்கான திட்டத்தினையும், ஒரு நகரத்திலிருந்து அடுத்த நகரத்திற்குச் செல்லும் பாதையில் எங்கும் நின்று செல்லாத சிறப்பு இரயில் களை அறிமுகப்படுத்து வதற்கும், குறிப்பாக சென்னையிலிருந்து எங்கும் நில் லாமல் நேரடியாக டெல்லி செல்வதற்கு சிறப்பு இரயிலை இயக்கவும் திட்ட மிட்டு உள்ளதாக இரயில்வே நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

Wednesday, November 6, 2013

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-மதிமுக ஆதரவு

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-#மதிமுக ஆதரவு 

தென்காசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 27 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவ திப்பட்டனர்.

சுமார் 2 ஆண்டுகள் கழித்து சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. கனரக வாக னங் கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக மாற்றிவிடப்பட்டன. இலகுரக வாக னங்கள் சர்வீஸ் ரோட்டில் சென்று வருகின்றன. ஆமை வேகத்தில் நடை பெற் ற மேம்பாலப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது.மேம்பாலப்பணி நிறைவு பெற்றதால் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத்திறக்கப் படும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

Sunday, October 27, 2013

பாதுகாப்பான இரயில் பயணத்தை உறுதி செய்க! -வைகோ

பாதுகாப்பான இரயில் பயணத்தை உறுதி செய்க!- #வைகோ கோரிக்கை 

மக்கள் பெரும்பாலும் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு விரும்பி பயணம் செய்வது இரயில் வண்டிகளைத்தான். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும்,100 க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து, நாள் ஒன் றுக்கு பல இலட்சம் ரூபாய் இரயில்வே துறைக்கு இலாபம் ஈட்டித் தருகின்ற இரயில் போக்குவரத்தை பாதுகாப்புடன் இயக்குவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டுகிறேன். காரணம் 

தமிழ்நாட்டில் கடந்த 21.10.2013 அன்று திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே கரூர் வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை, அப்பகுதி பாலகி ருஷ்ணாபுரம் ஊராட்சி கவுன்சிலர் கருப்பையா என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு தகவல் சொன்னதால் மும்பை தாதரில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்று கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி பெரும் விபத்திலிருந்து தவிர்க் கப்பட்டுள்ளது.

Thursday, October 10, 2013

கோவை மெட்ரோ ரயில் -முதல்வருக்கு மதிமுக மனு

கோவை மெட்ரோ' திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக "கோவைக்கு வரும் "மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுடன் மாநகராட்சி மற்றும் மாநில அரசு அதிகாரி கள், அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்'  #மதிமுக இளைஞரணி வலியுறுத்தல்.

முதல்வருக்கு மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அனுப்பி யுள்ள மனு:

டில்லி மெட்ரோ திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய ஸ்ரீதரன், கோவைக்கு வரும் 25ம் தேதி வரவுள்ளார். 

Monday, October 7, 2013

ரயில்வே கட்டண உயர்வு - வைகோ கண்டனம்

ரயில்வே கட்டண உயர்வு #வைகோ கண்டனம்

காங்கிஸ் கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்கும் கடைசி மணித்துணி வரை மக்களை வாட்டி வதைக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் என்பதற்கு இன்னொரு உதாரணம்தான் ரயில் கட்டண உயர்வு.

கடந்த ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இரயில் கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்திவிட்டு, பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இல்லை என்று மோசடி அறி விப்பைச் செய்தார் ரயில்வே அமைச்சர்.

Sunday, March 31, 2013

இரயில்வே துறையின் குறைபாடு


ரெயில் பெட்டிகளில் பராமரிப்பின்மை... 
பயணிகளுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு!

இரயில்வே துறையின் குறைபாடுகளை, நாடாளுமன்றத்தில்
மதிமுக கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி பட்டியலிட்டார்!

நாடாளுமன்றத்தில் இரயில்வே நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு 11.03.2013 அன்று நாடாளுமன்ற மதிமுக  கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே துறை அமைச்சர் பொறுப்பை ஏற்று முதன் முதலாக நிதி நிலை
அறிக்கையினை பவன்குமார் பன்சால் அவர்கள் இம்மன்றத்தில் அறிவித்து
உள்ளார். அவருடைய நிதி நிலை அறிக்கையினை நான் பாராட்டத்தான்
விரும்புகிறேன். இந்த அறிவிப்பிலே பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட
வில்லை. பாராட்ட விரும்புகிற எனக்கு அடுத்து வருகிற செய்தி பயணிகள்
கட்டணத்தை உயர்த்தவில்லை, தவிர புற வழியாக பயணிகள் முன்பதிவுக்
கட்டணம். அதேபோல அதை இரத்து செய்கிற கட்டணம், சரக்குக் கட்டணங்
களை எல்லாம் உயர்த்தி பயணி களுடைய கட்டணங்களை எல்லாம்
மறைமுகமாக உயர்த்தியிருக்கிறார்கள். ஆகவே என்னால் பாராட்ட
முடியவில்லை.