Showing posts with label கச்சத் தீவு. Show all posts
Showing posts with label கச்சத் தீவு. Show all posts

Saturday, December 14, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 11

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை இலங்கை அரசு மீறும்போது,கச்சத் தீவு ஒப் பந்தத்தை இந்தியா ஏன் முறித்துக் கொள்ளக்கூடாது? -#மதிமுக அ.கணேச மூர்த்தி 

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை என்ன?

இந்தியாவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு மீறியே வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்திய அரசு கச்சத் தீவு ஒப் பந்தத்தை ஏன் முறித்துக் கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை யில் 31.8.2010 அன்று கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வினா எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:

Monday, June 24, 2013

“கச்சத் தீவு” தமிழருக்குச் சொந்தம்!

அன்னைத் தமிழகத்தின் இராமேசுவரத்தில் இருந்து 17 கி.மீ. வடக்கில் ஆள் அர வம் இல்லாத உயரம் குறைவான குட்டித்தீவு கச்சத்தீவு. 

பறவைகளின் ஒலிகளும், கடல் அலையின் ஒலியும்,மரங்கள் அசைவினால் ஏற்படும் ஒலியும் தவிரவேறு ஒன்றையும் கேட்க முடி யாத அமைதித்தீவாக இருந்த கச்சத்தீவு தற்போது இந்திய அரசியலில் புய லைக் கிளப்பி வருகிறது.

தமிழர் தலைவர் வைகோ
சுதந்திரத்திற்குப் பின் இந்தியக் கடலோரப் பகுதியில்,அதுவும் குறிப்பாக கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்குப் பின்னர், 600 தமிழக மீனவர்கள் சிங் கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Wednesday, June 5, 2013

வைகோ எம்.பி. ஆனால் மட்டுமே கச்சத் தீவு முதல் காவிரி, முல்லைப் பெரியாறு வரை தீர்வு காண முடியும்!

இந்தியப் பிரதமர் நேரு மட்டுமல்ல,அவர் மகள் இந்திராகாந்தி வரை தமிழினத் திற்குத் துரோகம் இழைப்பதில் குறியாகவே இருந்தனர். இலங்கையின் சார் பில், எந்த நிர்ப்பந்தமும் இல்லாமலேயே அநீதியாக நமது கச்சத்தீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து சிறிமாவோ பண்டார நாயகாவுக்குத்தாரை வார்த்துக் கொடுத்தவர் பிரதமர் இந்திரா காந்தி.

Agreement between India and Srilanka on the boundary in historic waters between the two countries and related matters (26 June 1974)

இந்த ஒப்பந்தத்தின் 5 ஆவது விதியின்படி இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர் கள்) கச்சத் தீவுக்கு எப்போதும் போல் வந்துபோகவும், கச்சத் தீவை அனுபவிப் பதற்கும் முழுஉரிமை உடையவர்களாவர். அதற்காக சிங்கள  அரசிடமிருந்து நுழைவு அனுமதி எதுவும் பெறவேண்டியதில்லை (will not be required)

Saturday, June 1, 2013

கச்சத் தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம்: கட்டுக் கட்டாக ஆதாரங்கள் !

டச்சுக்காரர்களும் போர்ச்சு கீசியர்களும் இலங்கைத் தீவை வளைத்தபோதும்
கூட, கச்சத் தீவில் அவர்கள் கால் வைக்கவில்லை.

1874 ஆம் ஆண்டு கர்னல் வாக்கர்,அவரது உதவியாளர் மேஜர் பிரான் ஃபீல்டு ஆகியோர் இந்தியாவின் அளவைத்துறைக்காக கச்சத் தீவை அளந்தார்கள். அப் போது அந்தோணியார் கோவிலுக்கு முன்புறம் இந்திய அரசின் சர்வே துறை யினர் நட்ட தூண் இன்றும் உள்ளளது.

1895,1930 ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு,மீண்டும் அளவை செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வரை படங்கள் அனைத்திலும் கச்சத் தீவை இராமேசுவரத்தின் ஒரு பகுதியாகவே சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.