Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Thursday, November 28, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 5

தமிழ் œ இன அழிப்பிšல்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!

குடியரசுத் தலைவர் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தி‹ன் மீது, நாடாளு ம‹ன்றத்திšல் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அ‹ன்று ஆ‰ற்றிய உரை:

“குடியரசுத் தலைவரி‹ன் உரைக்கு ந‹ன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தி‹ன் மீது பேசும் வாŒப்பளித்தத‰ற்கு நன்‹றி. இந்தத் தீர்மானத்தின் ‹மீது உரையா‰றிய மாண்பு
மிகு அத்வானி அவர்கŸள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி‹ உரைக்கு எனது ந‹றியைத் தெரிவித்துக் கொŸள்கிற அதேநேரத்தில்š,அதில் š உள்Ÿள குறை களையும் சுட்டிக்காட்டும் வாŒய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்‹படுத் திக் கொŸள்ள விரும்புகிறே‹ன்.

Sunday, August 25, 2013

கடலுக்கு இறைத்த (காவிரி) நீர்!

சங்கொலி தலையங்கம் 

தமிழகம் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பேரபாயம், நீர் பற்றாக்குறையாக
இருக்கும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. தமிழ்நாட்டில்
மழையின் மூலம் கிடைக்கும் நீர் குறைந்து வருவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகத்தில் ஆண்டு தோறும் மழை சராசரியாக 925 மி.மீ. பொழிகிறது. தென்மேற்கு பருவ மழை 307.60 மி.மீ. வடகிழக்குப் பருவ மழை 438.70 மில்லி மீட்டர் பொழிகிறது.

குளிர்காலத்தில் பொழியும் மழை நீரின் அளவு 42.20 மில்லி மீட்டர்; கோடை
காலத்தில் 136. 50 மில்லி மீட்டராக மொத்தம் 925 மில்லி மீட்டர் மழைநீரை
தமிழகம் பெறுகிறது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து விடுவதால்,
தமிழ்நாட்டிற்கு தென் மேற்கு பருவக் காற்றால் பொழியும் பருவ மழையின் பயன் கிடைப்பது இல்லை. வடகிழக்குப் பருவக் காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களை உருவாக்கிப் பொழியும் மழை, கனமழையாக கொட்டிவிடுகிறது.

Thursday, July 11, 2013

உத்தரகாண்ட் உணர்த்தும் பாடம்

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு உணர்த்தும் பாடம்:

நாட்டின் நதிகள் இணைக்கப்பட வேண்டும்!

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசப் பகுதிகளில் ஏற்பட்ட பெரு வெள்ள மும் அதனால் விளைந்த உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் கண்ட பின்பாவது மத்திய அரசு விழித்தெழுந்து, மக்கள் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நதிகள் இணைக் கப்பட வேண்டும்’ என்ற மசோதாவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் நதிகள் இணைக்கப்பட்டால் வெள்ளச் சேதத்தையும், உயிர்ப் பலிகளையும் தவிர்த்து, வறட்சிப் பகுதிகளில் வளம் காணலாம் என் பது உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு மத்திய அரசுக்கு உணர்த்தும் பாடமாகும்.

Saturday, June 15, 2013

அழிவின் விளிம்பில் விவசாயம் ! அச்சுறுத்தும் ஏற்திர்காலம் !

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை’

உழவர்கள் பயிர்த்தொழிலை விட்டு விட்டால் இந்நில உலகில் பற்றற்ற துறவி களும் வாழ முடியாது என உலகப் பொதுமறை நூலில் சொன்ன வள்ளுவப் பெருந்தகை, ‘உழவு’ எனும் அதிகாரத்தில் வேளாண்மையின் சிறப்புக்கு பத்து
குறட்பாக்களைத் தந்தார்.

வைகோவின் வாதத்திற்கு வலுசேர்க்கும் விவசாய அமைப்பு...

வறட்சி நிவாரனம் பற்றி வேளாண்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கத் திற்கு மறுப்பு அறிக்கை.

கி.வே.பொன்னையன்-அமைப்பாளர்

தற்சார்பு விவசாயிகள் சங்கம்.

13/06/2013 அன்று வேளாண்துறை அமைச்சர் மாண்பு மிகு தாமோதரன் அவர்கள் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் கொடுத்துள்ள விளக்கம் பற்றி விவசாயிகள் சார்பில் நாங்கள் சில உண்மைகளை தெரிவிக்க விரும்பிகிறோம்.

Thursday, June 13, 2013

வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன் கவனத்திற்கு.....

1998-99 ஆம் ஆண்டு 94.12 இலட்சம் மெ.டன் உணவு உற்பத்தி அடைந்த தமிழகம்  படிபடியாக குறைந்து உள்ளது , நீங்கள் அமைச்சரான பின் 83.51 இலட்சம் மெ.டன் இருகிறதே ?...

வைகோவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உங்களின் அறியாமையை சுட்டி காட்டவும் புள்ளி விவரங்களோடு இந்த பதிவை தருகிறேன் ...

வைகோ தனது அறிக்கையில், 'விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வா தார மாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலையில் விவ சாயத்தை விட்டு விட்டு, மாற்று வழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதாகவும், கிராமங்களில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டதாகவும், அதனால் நகர்ப்புறத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது எனவும் இதனால் விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும், கோடிக்கணக்கான விவசாயி கள் வாழ்வு பாலைவனமாகி விடும்' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Friday, April 26, 2013

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!-வைகோ

விளைநிலங்கள் பாழாகும்

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!
வைகோ அறிக்கை

“தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார் குடியின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எரிவாயுத் தேவைக்காக மீத்தேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈÞடெர்ன் எனர்ஜி கார்ப்பொரேசன் லிமிடேட்” என்ற நிறுவனத்திற்கு 29 ஜீலை 2010லேயே உரிமம் வழங்கி உள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கும் நிலப்பரப்பு பகுதிகளாக தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்களும் இதற்கு உட்பட்ட 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நிலங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

Thursday, February 14, 2013

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க- வைகோ

விவசாயிகளின் நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க காவல்துறை அடக்குமுறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க!

வைகோ கோரிக்கை

கொடிய வறட்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு விடிவே இல்லையா? என்று ஏங்கி பரிதவிக்கும் நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களை (கொச்சி முதல் பெங்களூரூ வரை) உள்ளடக்கிய 136 கிராமங்கள் வழியாக 310 கி.மீ. தூரம் கியாஸ் குழாய்களை அமைக்கும் பணியினைத் தொடங்கி உளள்ளது.

Sunday, February 10, 2013

ஐ.நா. மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் -வைகோ

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் இன படுகொலையை செய்த இலங்கை அதிபர் ராஜபச்சேவை காங்கிரஸ் அரசு அவரை சந்தோஷபடுத்தி அழைத்து இருக்கிறது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.

இதனை எதிர்த்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பதியில் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்களை கைது செய்தது. இலங்கையில் இந்துக்கோவில்களை இடித்துவிட்டு பவுத்த நாடாக இலங்கை மாற்றிவருகிறது. இந்தியாவிற்கு ராஜபக்சேவை வரவழைத்து ராஜ மரியாதை செய்வது 7 கோடி தமிழர்களின் நெற்றியில் எட்டி உதைப்பது போன்று உள்ளது. இந்திய அரசு வினையை விதைத்துள்ளது. அதனுடைய பலன் இந்திய ஒருமைபாட்டுக்கு கேடு விளைவிக்கப்போகிறது.

Monday, March 5, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 6

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2500

கடந்த ஆட்சியின்போது, ஒரு டன் கரும்புக்கு விலை ரூ 2000 வழங்கப்பட்டது. அது கட்டுப்படியாகாது; ரூ 3000 கொடுக்க வேண்டும் என்று கோரி, இன்றைய ஆளும் கட்சியின் சார்பில், சர்க்கரை ஆலைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2500 வழங்குவோம் அறிவித்தார்கள். ஆனால், இப்போது, ரூ 2100 மட்டுமே அறிவித்து இருக்கின்றார்கள்.