தமிழ் இன அழிப்பில்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நாடாளு மன்றத்தில் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அன்று ஆற்றிய உரை:
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தின் மீது பேசும் வாப்பளித்ததற்கு நன்றி. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாறிய மாண்பு
மிகு அத்வானி அவர்கள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி உரைக்கு எனது நறியைத் தெரிவித்துக் கொள்கிற அதேநேரத்தில்,அதில் உள்ள குறை களையும் சுட்டிக்காட்டும் வாய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்படுத் திக் கொள்ள விரும்புகிறேன்.