Showing posts with label உணவுப் பாதுகாப்புத் திட்டம். Show all posts
Showing posts with label உணவுப் பாதுகாப்புத் திட்டம். Show all posts

Thursday, September 26, 2013

உழவர்களுக்குப் பாதக மசோதா!

உணவுப் பாதுகாப்பு மசோதா ,உழவர்களுக்குப் பாதக மசோதா!

நீண்ட நெடிய சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மசோதா,சோனியா காந்தியின் கனவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி இந்தியாவில் உணவு இல்லாமல் யாரும் பட்டினி கிடக்கும் நிலை நீக்கப்
பட்டுவிட்டது. 80 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் அதாவது அரிசி கிலோ ரூ 3 க்கும், கோதுமை கிலோ ரூ.2 க்கும் கிடைக்கும். கிராமப்புறங்களில் 67 சதவிகித மக்களும், நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்களும் பயன்பெறுவர்.
மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் அமுலில் இருக்கும். இதற்கு ஆகும்
மானியம் ஆண்டு ஒன்றுக்கு 1,25,000 கோடி ரூபாய்.

Monday, September 2, 2013

உ.பா.ச அவசரத்தில்..

சங்கொலி தலையங்கம் 

உணவுப் பாதுகாப்புச் சட்டம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மீண்டும் ஒருமுறை தேசி ய உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங் கிரஸ் தலைவர் திருமதி சோனியா மூளையில் உதித்த திட்டம் என்று வெகு வாகப் புகழப்படும் உணவுப் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்கிவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 26 ஆம் தேதி மக்களவையில், உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் உண வுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, கிராமப் புறங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீத மக் களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மசோதாவை அறி முகம் செய்த அமைச்சர் கே.வி.தாமஸ் குறிப்பிட்டார்.

Saturday, August 31, 2013

உ.பா.ச - போகாத ஊருக்கு

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் போகாத ஊருக்கு வழி தேடுகிறது!

தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில்,#மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் 26.08.2013 அன்று ஆற்றிய உரை:

நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அந்நியர்களால் சுரண்டப் பட்டு, உண்ணும் உணவிற்குக் கூட உத்தரவாதம் இல்லாத நிலையில் நம் நாட்டு மக்கள் இருந்தனர்.நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆவது ஆண்டை கொண் டாடிக் கொண்டு உள்ளோம். பல ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவு செய்துள் ளோம்.

Tuesday, August 20, 2013

உ.பா.ச மக்களுக்கா? நிறுவனங்களுக்கா?

உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம்;

மக்களுக்கா? வர்த்தக கார்பரேட் நிறுவனங்களுக்கா?

என் பெயரே “சைக்கிள்” சித்தார்த்தன்.நான் சைக்கிளிலேயே சென்னையை வலம் வந்ததால் எனது தோழர்கள், நண்பர்கள் எனக்கு சூட்டிய பட்டம் இந்த
“சைக்கிள்”. சமீபத்தில்தான் 25 ஆண்டு பழசான எனது பிரியமான ஹெர்குலிஸ்
சைக்கிளை எவரோ “தள்ளிக்” கொண்டு போய்விட்டார்கள். அன்றைய நாளில்
நான் அடைந்த துக்கம் எனக்குத்தான் தெரியும்.

நல்லவேளை. நான் 25 ஆண்டுகளாக சைக்கிள் வைத்திருந்தது திட்டக்கமிஷ னுக்குத் தெரியாது. தெரிந்து இருந்தால் எனது குடும்பத்தை வறுமைக் கோட் டிற்கு கீழானவர் என்கிற தகுதியிலிருந்து “பொதுவானவர்” பட்டியலில் சேர்த்து எமது குடும்ப பொதுவிநியோக அட்டையைப் பறித்து இருப்பார்கள்.

Tuesday, August 6, 2013

சூழ்ச்சியும் சூதும் கேடும்

சூழ்ச்சியும் சூதும் கேடும் நிறைந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம்!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, ரயில்வே அமைச்சரின் உறவினர் செய்த ஊழல், நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை கூறுபோட்டு விற் பனை செய்யும் முயற்சி போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் கண்டனமும், வெறுப்பும் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது.

இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும்,எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலின்
வாக்குகளைக் குறிவைத்தும், உணவுப் பாதுகாப்பு மசோதா என்ற நீண்ட நெடுங்கால வாக்குறுதியை தூசிதட்டி எடுத்து வைத்துக்கொண்டு, மக்களை
ஏமாற்றும் முயற்சியில் காங்கிரசு அரசு காரியமாற்றி வருகிறது!