Showing posts with label கரும்பு. Show all posts
Showing posts with label கரும்பு. Show all posts

Saturday, December 14, 2013

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது -வைகோ

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது; கரும்பு விவசாயிகளின் அறப் போர் வெல்லும்! என்று சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் 09.12. 2013 அன்று டெல்லி செல்லும் விவசாயிகளை வழி அனுப்பி #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

தேனாகத் தித்திக்கின்ற கரும்பை, வியர்வை கொட்டி விளை விக்கின்ற விவ சாயிகளே, இரும்பினும் உறுதியாகப் போராடினால்தான், உங்கள் கவலையும்,
கண்ணீரும் துடைக்கப்படும். எந்த வொரு போராட்டமும், கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு, நிலை நாட்டப்படுகின்ற உறுதியினால் தான் வெற்றியைத் தேடித் தரும்.விவசாயிகளை மீறிய சக்தி,இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் பிரளயமாகப் புறப்பட்டபோது,அரசுகள் நடுங்கின; அதன்பின்னர் அடக்குமுறையை ஏவினர்;விவசாயிகளின் கை கால் களை முறித்து, மண்டையை உடைத்து,அவர்கள் மீதே பொய்வழக்கு களைப் போட்டு நசுக்கியதாலும்,அரசியல் கட்சிகள் சுயநலத் திற்காக விவசாயிகளின்
போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், விவசாயிகளின் சக்தி சிதறி யது. இனி நாம் போராடிப் பயன் இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். வாழ வழி இன்றித் தவிக்கிறார்கள்.

Monday, December 9, 2013

தில்லில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

 #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி தலைமையில் கரும்பு விவசாயிகள்போராட்டம் அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பு ..

அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று  நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை ...