மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழும் பெரியார், வரலாற்று
அண்ணா, எங்களின் வழிகாட்டி உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர் #வைகோ அவர்களே,மேடையிலே வீற்றிருக்கின்ற கழகத்தின் முன்னோடி களே,கழகத்தின் கண்மணிகளாம் வைகோவின் வரிப்புலிகளே, உங்கள் அனை வருக்கும் என் பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஈழ விடுதலைக்காக தீக்குளித்த தியாகிகளின் திரு உருவப் படங்களை திறந்து வைக்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மீண்டும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, ஈழத்தில் நான்காம் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபொழுது குழந்தைகள், சிறுவர் கள், பெண்கள்,வயதானவர்கள், ஆதரவற்றவர்கள், நிராயுதபாணிகள் என்று எந்தவித பாகுபாடுமின்றி உலகத்திலே தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டு களை வீசி குற்றுயிரும் கொலைஉயிருமாக கொன்று குவிக்கப்பட்ட பொழுது,
தமிழகத்திலே தாய் தமிழகத்து மக்கள் அமைதியாக இருக்கின்றார்களே,ஆர்த் தெழ வில்லையே, அரசாங்கங்களும் கேளா காதினராக இருக்கின்றார் களே, உணர்ச்சி வேகத்தில் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் தனது மேனிக்கு தீயிட் டுக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து பள்ளப்பட்டி ரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவானந்தம், கடலூர் தமிழ்வேந்தன்,அரியலூர் இராஜ சேகரன், சிவகாசி கோகுலகிருஷ்ணன், மாரிமுத்து,பெரம்பலூர் எழில் வள வன்,புதுக்கோட்டை பாலசுந்தரம்,பண்ருட்டி சுப்பிரமணி, சுவிட்ஸர் லாந்து ஜெனிவாவில் முருகதாஸ்,மலேசியாவில் நஞ்சுண்டு இறந்த இராஜா முகமது, காஞ்சியிலே செங்கொடி, சேலத்தில் விஜயராஜ்,கடலூர் மணி போன்ற எண் ணற்ற தமிழ் உள்ளங்கள் தங்களது மேனியை தீக்கு இறையாக்கினர்.