Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Saturday, December 14, 2013

வாழும் கலை , தலைவர் பண்டிட் ரவிசங்கருடன் வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பின் தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜியுடன்

#வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பு உலகில் 180 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த அமைப்பு நதிநீர் ஆதாரங்களை வளப்படுத் துதல்,நோயுற்றுவர்களுக்கு சிகிச்சை தருதல்,உடல் நலம் காக்க மூச்சு பயிற்சி கொடுத்தல், பழங்குடி மாணவர்களுக்கு இலவச பள்ளிகள் நடத்துதல் போன்ற மனிதநேய சேவை செய்து வருகிறது.

Thursday, December 12, 2013

அருளானந்தா கல்லூரி பண்பாட்டுக் கலாச்சார விழாவில் வைகோ

அருளானந்தா கல்லூரி பண்பாட்டுக் கலாச்சார விழாவில் #வைகோ

மதுரை அருளானந்தா கல்லூரியில் நடைபெற்ற துறை சார்பான பண்பாட்டுக் கலாச்சார நிகழ்வில் மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்நிகழ்வில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


Saturday, December 7, 2013

பழிக்கு பழி எண்ணம் இளைஞர்களிடம் கூடாது-வைகோ வேண்டுகோள்

மதுரையில் நடந்த வெடிகுண்டு வீச்சில் காயமுற்றோருக்கு ஆறுதல் கூறி னார் #மதிமுக பொது செயலாளர் #வைகோ

மதுரையில் கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு வந்த போது சிந்தாமணி அருகே வெடிகுண்டு வீச்சுக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைதான நபர்கள் ஒரு ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வரும் போது பழிவாங்கும் விதமாக வெடிகுண்டு வீசப்பட்டதில் முத்து விஜயன் என்பவர் கொல்லப்பட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Friday, November 22, 2013

மதுரை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துக;

மதுரை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துக; முழுமையான அளவில் பன்னாட்டு விமான நிலையமாக இயங்கிட ஆவன செய்திடுக! பிரதமருக்கு #வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தென் தமிழ்நாட்டின் மையமா கவும் திகழ்கின்ற மதுரை மாநகரில் அமைந்து உள்ள விமான நிலையத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பன்னாட்டு விமான நிலையமாக முழு அளவில் தரம் உயர்த்திடக் கோரி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் தங் களுக்கு விடுத்து உள்ள கோரிக்கை விண்ணப்பத்தினை, இத்துடன் இணைத்து உள்ளேன். 

தென் தமிழ்நாட்டில், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் களின் மையமாகத் திகழ்கின்ற மதுரை மாநகரம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தாகும்.

Wednesday, November 20, 2013

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி கம்பத்தில் போராட்டம்

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி கம்பத்தில் வருகிற 4–ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று #வைகோ அறிவிப்பு 

மதுரை புதூரில் #மதிமுக  பிரமுகர் திருமண விழா இன்று (20.11.13 ) நடைபெற் றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசிய தாவது:–

ம.தி.மு.க.வில் மிக பற்றுள்ள இந்த குடும்பத்தின் திருமண விழாவில் வரலாற் று சிறப்புமிக்க ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் முது கெலும்பாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க மத்திய அரசு நிபுணர் குழு கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

Tuesday, November 12, 2013

மதுரை மறியல் ...குமுறிய வைகோ

மதுரையில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, வைகை எஸ்பிரஸ் ரயில் முன் நின்று கட்சியினர் உடன் ஆர்பாட்டம் நடந்த்தினார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ ரயில் மறியலை ஆரம்பிக்கும் முன்னதாக, மாநில உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட தோடு, வைகோவிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் தெரிகிறது. இத னால் கோபம் கொண்ட வைகோ பதிலுக்கு, உன் உடம்பில் ஓடுவது சிங்கள ரத்தமா?, உளவுத்துறைக்கு இங்கு என்ன வேலை, உங்க வேலையை இங்கு காட்டாதீர்கள். நீ தமிழன் இல்லையா?, இறந்த தமிழர்கள் உங்கள் உறவுகளாக இருந்தால் இப்படி நடந்துகொள்வாயா? என்று கடுமையாக பேசினார்.

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த வைகோ

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த #வைகோ

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இர யில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக் கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012) காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல் லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி,மாநில மருத்துவர் அணித் துணைச் செய லாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மக பூப்ஜான் ,மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர்.

Monday, November 11, 2013

நவ 12 -முழு அடைப்பு போராட்டம் தமிழகமும் முழுவதும் தயார் நிலையில்

கரூர் மாவட்டம் 

கரூரில் நவ.12-ல் #மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் பரணி கே. மணி விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கக் கோரி யும், இந்தியா சார்பில் ஒருவர்கூட காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல் லக்கூடாது என வலியுறுத்தியும் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவைத் தெரிவிக்கிறது.

மேலும் மதிமுக சார்பில் அன்று (நவ.12) ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

Thursday, October 31, 2013

காலம் வழங்கிய கற்பகத் தரு தமிழருவி என்னும் ஞான நதி...!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாசற்ற அமைப்பை இரு பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,மக்கள் சமுத்திரமாய் அது உருவெடுத்து, மாநாடுகள், இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் என பல களங்கள் கண்டு, காயங்களையும் பெற்று, இன உணர்வு என்னும் தீ பந்தத்தைத் தாங்கிய அரசியல் தொடர் ஓட்டத்தில்,பல போராட்டக்களங்களில் முந்தி நிற்பதும், முத லில் இருப்பதும் நமது இயக்கம் என்ற பெருமையைப்பெற்றுத் தந்த பெருமகன் தலைவர் #வைகோ. அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்த இவரால் ஆன் மிகத்தைப் பற்றி எப்படி பேச முடிகிறது? நித்தமும் சோர்வின்றிப் பயணிக்கும் இவரால் எப்படி இலக்கியத் தளங்களில் அச்சுப் பிசகாது உரையாற்ற முடிகின் றது? புள்ளி விபரங்களை அடுக்கடுக்காக வைத்து விவாதிக்கும் ஆற்றல், வி னைத் திட்பம், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத் தில் உறுதி என்ற மூன்றையும் கடைபிடிக்கும் அறவாழ்வு என தலைவர் வைகோ வின் அரசியல் பயணம் தியாகம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகளாகும்.

Sunday, October 20, 2013

மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -2

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர் கள் ஆற்றிய உரை பகுதி 1 தொடர்ச்சி....

அமைச்சரவை முடிவு முட்டாள்தனம் 

அஜய் மேக்கன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களுள் ஒருவர். அவர் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவசரச் சட்டம் நூற் றுக்கு நூறு சரி என்கிறார்.அதேபோலத்தான் கபில் சிபலும், இது மிகச் சரியான சட்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அதைச் சரியாகப் படிக்கா மல், நுனிப்புல் மேய்ந்தவர்கள் தான் எதிர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிறார்.அமைச்சர்கள் எல்லாம் பல்வேறு இடங்களில் ஆதரித்துப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.

Saturday, October 19, 2013

மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -1

தண்டனைக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்க முயன்ற, ஊழல் காங் கிரஸ் அரசை மக்கள் தண்டிப்பார்கள்!

மதுரை - காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் #வைகோ

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர் கள் ஆற்றிய உரை வருமாறு:

மதுரை மாநகரில், பிரம்மாண்டமான கூட்டங்கள்பலவற்றை நான் பார்த்து இருக்கின்றேன். ஆனால், இப்படி உணர்ச்சிமயமான ஒரு கூட்டத்தை மிக அபூர் வமாகத்தான் மதுரை சந்தித்து இருக்கின்றது.

Monday, October 14, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 3

கச்சத்தீவு யார் சொத்து?

கச்சத் தீவு எவனுடையது. மோதிலால் நேரு தானாகச் சம்பாதித்து, தான் சம்பா தித்த பணத்தில் வாங்கியதுதான் ஆனந்த பவனம். அந்த ஆனந்த பவனத்தை, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்துகிறபொழுது உப்புச் சத்தியாகிரகம் நடத்தி ஒரு ஆட்சியை மாற்றிவிட முடியுமா? என்று மோதிலால் நேரு சிரித் தார். ஆனால், காந்தி தொடங்கிய அந்தப் பயணத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தார்கள். இந்தத் தேசமே அவர் பின்னால் நின்றது. பார்த்து வியந்தார்கள்.

அந்த மனிதனுடைய அரசியல் வியூகத்தை உணர்ந்து, என்னுடைய சம்பாத்தி யத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆனந்த பவனத்தையே நான் தேசத்திற்கு அர்ப் பணிக்கிறேன் என்று மோதிலால் நேரு சொன்னார். அது சரி,அது அவர் சம்பா தித்தது. கச்சத் தீவு என்ன நேருவின் குடும்பம் சம்பாதித்த சொத்தா?மோதிலால் நேரு சம்பாதித்து கச்சத் தீவை நேருவுக்கு வைத்துவிட்டுப் போனாரா? நேரு அதை அப்படியே எடுத்துப் பாதுகாத்து மகள் இந்திரா காந்தியிடம் கொடுத்து விட்டுப் போனரா?இந்திராகாந்தி தன்னிடம் இருக்கும் சொந்தச் சொத்து கச்சத் தீவு என்று சிறிமா வோ பண்டாரநாயகாவுக்கு சீதனமாக எடுத்துக்கொடுத்தா ரே, யார் சொத்து? சேது சமஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்து இல்லையா அது?

Sunday, October 13, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 2

வித்தியாசமானவர்கள்

முதலில் மூன்று பேர் ஒன்றாக நில்லுங்கள். நாங்கள் அதற்கு மேடை போடுகி றோம். திருப்பூரில் என் நண்பர்கள் தெருத் தெருவாக துண்டு ஏந்தி வசூலித்து பிரம்மாண்டமாக ஒரு கூட்டத்தை நடத்தினோம். நான் சொன்ன அடுத்த கண மே வைகோ மிகுந்த விருப்பத்தோடு மேடைக்கு வந்தார். எந்தத் தயக்கமும் இல்லை.அண்ணே,இடதுசாரிகளோடு நானும் சேர்ந்து ஒரு மாற்று அரசியலை
உருவாக்குவது என்றால், இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கிறது?வரு கிறேன் என்றார். உங்களிடம் நான் வந்து பேசினேன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டுகள் வித்தியாச மானவர்கள்.அவர்கள் மண்ணில் வலம் வருவதைவிட,விண் ணிலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களே என்பதில்தான் எனக்கு வருத்தம்.

Saturday, October 12, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 1

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்! தமிழ்ச் சமுதாயத் தின் நலன் காப்போம்! 

மதுரை மாநாட்டில் தமிழருவி மணியன் பேச்சு காந்திய மக்கள் இயக்கத்தின்
நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

வணக்கத்திற்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளரும், 2016 இல் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
மக்களின் பேராதரவோடு பெரு வெற்றியைப் பெற்று, கோட்டையில் முதல்வ ராக வீற்றிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ள, நெறிசார்ந்த தூய்மையான அகத்திலும் புறத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத, எந்த மனிதனாலும் எதைக் கொடுத் தும் விலைக்கு வாங்க முடியாத, யாருக்கும் தரகுவேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத, வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன்.

Thursday, October 3, 2013

காந்திய மக்கள் இயக்க 4 ஆம் ஆண்டு தொடக்க விழா

மதுரையில் நேற்று (02.10.13 புதன்கிழமை) மாலையில் நடந்த காந்திய மக்கள் இயக்கத்தின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #மதிமுக பொது செயலளார் #வைகோ பங்கேற்று உரையாற்றினார்..

திரு.தமிழருவி மணியன் உட்பட்ட காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகள் , 
மதிமுக நிர்வாகிகள் ... பொது மக்கள் என்று பெரும் திரளாக பங்கேற்றனர் ...

விழா காட்சிகள்

Wednesday, September 25, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி -பகுதி 2

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி!

மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள்



திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் 5.9.2013 அன்று பல் லடத்தில் ப.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ரத்தினசாமி
வரவேற்புரை ஆற்றினார். என்.ஈஸ்வரன், ப.மணி, சிவக்குமார், மு.சுப்பிர மணி யம், மா.பாலு, அப்புக்குட்டி, எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

Saturday, September 14, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி! 
மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்ட ங்கள்

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 26.08.2013 காலை 10 மணிக்கு, தென்காசியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் தலைமையில்
நடைபெற்றது.தென்காசி ஒன்றியச் செயலாளர் இ.குட்டீஸ் வரன், செங்கோட் டை நகர செயலாளர் சங்கரநாராயணன், இளைஞர் அணி முகமது ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.இராமையா வரவேற்புரையாற்றினார். ஆயிரப்பேரி எம்.முத்துசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

Thursday, August 8, 2013

வாக்குகளை உறுதி செய்யுங்கள்!

நமக்கு ஆதரவான வாக்குகளை உறுதி செய்யுங்கள்!
மருத்துவர் ரொகையா

மாற்று அரசியல் குறித்த கருத்துக்களம் நிகழ்ச்சிக்கு வருகை தந்து இருக்கின்ற
உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.மாற்று அரசியல் என்று பேசுவது எளிது.ஆனால், நேரடியாக நாம் களத்தில் இறங்கிப் பார்த்தால்தான், எவ்வளவு
கடினம் என்பது புரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட் சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு, கழகத்தின் சார்பில் நான் வேட்பாளராகப் போட்டியிட்டேன். மிகவும் நம்பிக்கையோடு இருந்தேன்.

Tuesday, August 6, 2013

நான் ஏன் மதிமுக.வில் சேர்ந்தேன்?

மருத்துவர் சரவணன்

இன்று இங்கே நாம் ஒரு ஆயிரம் பேர் திரண்டு இருக்கின்றோம். மாற்று அரசி யல் குறித்துச் சிந்திக்கின்ற புதிய இளைஞர்கள் நிறைய வந்து இருக்கின்றார் கள். எல்லோருமே ம.தி.மு.க.வில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களைப் போன்று ஒருவனாகத்தான் நானும் இருந்தேன். 

நான் ஒரு மருத்துவர். மதுரை நரிமேடு மருதுபாண்டியன் நகரில், 200 படுக்கை கள் கொண்ட சரவணன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை நடத்திக் கொண்டு இருக்கின்றேன்.எல்லா மருத்துவர்களையும் போலவே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. ஆனால், நான் ஈட்டுகின்ற பணத் துக்கு உரிய வரியை அரசாங்கத்துக்குச் செலுத்தி விட வேண்டும் என்ற கொள்கை கொண்டவன்.

Sunday, August 4, 2013

திருப்பரங்குன்றத்தில் வாலிப முறுக்கு!

இணையதள இளைஞர்கள் சந்திப்பு 
திருப்பரங்குன்றத்தில் வாலிப முறுக்கு!

“மாற்று அரசியல்: இளந்தலைமுறையின் கருத்துக் களம்” என்ற தலைப்பில்
திருப்பரங்குன்றத்தில் இணையதள இளைஞர் சந்திப்புக்கூட்டம், 28.07.2013 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஆற்றிய உரையில் இருந்து.

திருப்பரங்குன்றம்;தமிழக அரசியலில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத் திய இடம்; ஆம்; அங்கேதான், இந்திய விடுதலைக்கு முன்பு, சென்னை மாகா ணத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைமை, காமராசரின் கைகளுக்கு வருவதற்கான அடித்தளம் அமைந்த மாநாடு நடைபெற்றது.