தன்னை முன்னிறுத்தாமல் இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்த உத்தமர் என்று 30.11.2013 அன்று மறைந்த எஸ்.ரெத்த்தினராஜ் இரங்கல் கூட்டத்தில் (01.12.2013) உரை ஆற்றும்போது #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ குறிப் பிட்டார். அவரது உரை வருமாறு:
நான் வாழ்க்கையில் மிகவும் நேசிக்கிற ஆருயிர்ச்சகோதரர் ரெத்தினராஜ்அவர் களே என்று, ஆயிரக்கணக்கான மேடைகளில் அவரை அமர வைத்துக்கொண் டு பேச்சைத் தொடங்கி இருக்கிறேன். இனிமேல், இந்த இரங்கல் நிகழ்ச்சியில் இருந்து, என் நினைவில் நிறைந்து விட்ட சகோதரனே என்று சொல்ல வேண் டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறேன்.இங்கே பல்வேறு இயக்கங்களின்
தலைவர்கள், முன்னணியினர்,நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர்கள், எங்கள் இயக்கத்தின் ஒரு மாணிக்கக் கட்டியின் மறைவுக்கு,தங்கள் இரங்கல் உரையைத்தெரிவித்து இருக்கின்றார்கள்.
