Showing posts with label கன்னியாகுமரி. Show all posts
Showing posts with label கன்னியாகுமரி. Show all posts

Saturday, December 7, 2013

மக்களுக்காக உழைத்த உத்தமர் ரெத்த்தினராஜ்

தன்னை முன்னிறுத்தாமல் இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்த உத்தமர் என்று 30.11.2013 அன்று மறைந்த எஸ்.ரெத்த்தினராஜ் இரங்கல் கூட்டத்தில் (01.12.2013) உரை ஆற்றும்போது #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ குறிப் பிட்டார். அவரது உரை வருமாறு:

நான் வாழ்க்கையில் மிகவும் நேசிக்கிற ஆருயிர்ச்சகோதரர் ரெத்தினராஜ்அவர் களே என்று, ஆயிரக்கணக்கான மேடைகளில் அவரை அமர வைத்துக்கொண் டு பேச்சைத் தொடங்கி இருக்கிறேன். இனிமேல், இந்த இரங்கல் நிகழ்ச்சியில் இருந்து, என் நினைவில் நிறைந்து விட்ட சகோதரனே என்று சொல்ல வேண் டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறேன்.இங்கே பல்வேறு இயக்கங்களின்
தலைவர்கள், முன்னணியினர்,நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர்கள், எங்கள் இயக்கத்தின் ஒரு மாணிக்கக் கட்டியின் மறைவுக்கு,தங்கள் இரங்கல் உரையைத்தெரிவித்து இருக்கின்றார்கள்.

Sunday, December 1, 2013

கண் தானத்தொடு ,கடைசி பயணத்தை நிறைவு செய்த திரு.ரத்தினராஜ்

கன்னியாகுமரி  மாவட்ட முன்னாள் #மதிமுக செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.ரத்தினராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந் தார். நேற்று பிற்பகல் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

ரத்தினராஜின் உடல் உரப்பனவிளையில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத் தில் அடக்கம் செய்யப்படுகிறது. ரத்தினராஜின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ரத்தினராஜ், வெள்ளிச்சந்தை அருகே உள்ள உரப்பனவிளையில் 1940–ம் ஆண்டு பிறந்தார்.

Monday, November 11, 2013

நவ 12 -முழு அடைப்பு போராட்டம் தமிழகமும் முழுவதும் தயார் நிலையில்

கரூர் மாவட்டம் 

கரூரில் நவ.12-ல் #மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் பரணி கே. மணி விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கக் கோரி யும், இந்தியா சார்பில் ஒருவர்கூட காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல் லக்கூடாது என வலியுறுத்தியும் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவைத் தெரிவிக்கிறது.

மேலும் மதிமுக சார்பில் அன்று (நவ.12) ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

Tuesday, October 8, 2013

காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: வைகோ பேச்சு

#மதிமுக. பொதுச் செயலாளர் #வைகோ குமரி மாவட்டம் திருவரம்பு பகுதி யில் நேற்று (07.10.13)நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:–

இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க தவறிய காங்கிரஸ் கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக அனைத்து கட்சி யினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கட்சி பாகுபாடின்றி அனைவரும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற கட்சி பாகுபாடின்றி அனைவ ரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக தான் எங்கள் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

Saturday, September 14, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி! 
மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்ட ங்கள்

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 26.08.2013 காலை 10 மணிக்கு, தென்காசியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் தலைமையில்
நடைபெற்றது.தென்காசி ஒன்றியச் செயலாளர் இ.குட்டீஸ் வரன், செங்கோட் டை நகர செயலாளர் சங்கரநாராயணன், இளைஞர் அணி முகமது ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.இராமையா வரவேற்புரையாற்றினார். ஆயிரப்பேரி எம்.முத்துசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

Thursday, August 8, 2013

கூட்டுறவு வங்கித் தேர்தலில் மதிமுக. வெற்றி

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலில் #மதிமுக வெற்றி

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக மறுமலர்ச்சி
தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் சம்பத் சந்திரா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி இன்று நாகர்கோவிலில், கன்னியகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷை விட 9 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, மறுமலர்ச்சி தி.மு.க.வைச் சேர்ந்த சம்பத் சந்திரா வெற்றி பெற்றார்.

சம்பத் சந்திரா செய்தியாளர்களிம் கூறியதாவது:

"கன்னியாகுமரியில் தொடங்கிய மறுமலர்ச்சி தி.மு.க.வின் இந்த வெற்றி, கும்மிடிபூண்டி வரை தொடரும்" என்று கூறினார். 

Tuesday, May 21, 2013

தமிழகத்தை பாதுகாப்பது நமது கடமை

குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லைசெல்வம் இல்ல திருமண விழா வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அவர் பேசியதாவது:

குமரி மாவட்டம், இது புராதன தமிழர்பூமி. கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் உடன் இருக்கிற தீரர்களை இங்கு நான் பார்க்கிறேன். தமிழகத்துக்கு வழிகாட்டுகிற பூமி கன்னியாகுமரி மாவட்டம். தமிழகத்தின் நாலாபுறமும் இன்னல்கள் சூழ்ந்துள்ளன.