Showing posts with label தமிழருவி மணியன். Show all posts
Showing posts with label தமிழருவி மணியன். Show all posts

Sunday, March 2, 2014

2016ல் மறுமலர்ச்சி தி.மு.க தலைமையேற்கும் அரசு -வைகோ பேட்டி

மார்ச் மாத ரௌத்திரம் இதழுக்கு #மதிமுக பொது செயலாளர் #வைகோ அளித்த சிறப்பு பேட்டி யில் மதிமுக அரசு அமையும் போது செய்யப்போகும் செயல்கள் குறித்து விளக்கி உள்ளார் ..

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரௌத்திரம் இதழுக்கு மதிமுக இணையதள நண்பர்கள் சார்பாக வாழ்த்துகளை சொல்லுவோம் ... 

அந்த பேட்டியிலிருந்து குறிப்பிட்ட ஒரு கேள்வியை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம் ... 

முழு பேட்டியை படிக்க ரௌத்திரம் இதழ் வாங்கி படிக்கவும் ...

Thursday, October 31, 2013

காலம் வழங்கிய கற்பகத் தரு தமிழருவி என்னும் ஞான நதி...!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாசற்ற அமைப்பை இரு பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,மக்கள் சமுத்திரமாய் அது உருவெடுத்து, மாநாடுகள், இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் என பல களங்கள் கண்டு, காயங்களையும் பெற்று, இன உணர்வு என்னும் தீ பந்தத்தைத் தாங்கிய அரசியல் தொடர் ஓட்டத்தில்,பல போராட்டக்களங்களில் முந்தி நிற்பதும், முத லில் இருப்பதும் நமது இயக்கம் என்ற பெருமையைப்பெற்றுத் தந்த பெருமகன் தலைவர் #வைகோ. அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்த இவரால் ஆன் மிகத்தைப் பற்றி எப்படி பேச முடிகிறது? நித்தமும் சோர்வின்றிப் பயணிக்கும் இவரால் எப்படி இலக்கியத் தளங்களில் அச்சுப் பிசகாது உரையாற்ற முடிகின் றது? புள்ளி விபரங்களை அடுக்கடுக்காக வைத்து விவாதிக்கும் ஆற்றல், வி னைத் திட்பம், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத் தில் உறுதி என்ற மூன்றையும் கடைபிடிக்கும் அறவாழ்வு என தலைவர் வைகோ வின் அரசியல் பயணம் தியாகம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகளாகும்.

Monday, October 14, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 3

கச்சத்தீவு யார் சொத்து?

கச்சத் தீவு எவனுடையது. மோதிலால் நேரு தானாகச் சம்பாதித்து, தான் சம்பா தித்த பணத்தில் வாங்கியதுதான் ஆனந்த பவனம். அந்த ஆனந்த பவனத்தை, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்துகிறபொழுது உப்புச் சத்தியாகிரகம் நடத்தி ஒரு ஆட்சியை மாற்றிவிட முடியுமா? என்று மோதிலால் நேரு சிரித் தார். ஆனால், காந்தி தொடங்கிய அந்தப் பயணத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தார்கள். இந்தத் தேசமே அவர் பின்னால் நின்றது. பார்த்து வியந்தார்கள்.

அந்த மனிதனுடைய அரசியல் வியூகத்தை உணர்ந்து, என்னுடைய சம்பாத்தி யத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆனந்த பவனத்தையே நான் தேசத்திற்கு அர்ப் பணிக்கிறேன் என்று மோதிலால் நேரு சொன்னார். அது சரி,அது அவர் சம்பா தித்தது. கச்சத் தீவு என்ன நேருவின் குடும்பம் சம்பாதித்த சொத்தா?மோதிலால் நேரு சம்பாதித்து கச்சத் தீவை நேருவுக்கு வைத்துவிட்டுப் போனாரா? நேரு அதை அப்படியே எடுத்துப் பாதுகாத்து மகள் இந்திரா காந்தியிடம் கொடுத்து விட்டுப் போனரா?இந்திராகாந்தி தன்னிடம் இருக்கும் சொந்தச் சொத்து கச்சத் தீவு என்று சிறிமா வோ பண்டாரநாயகாவுக்கு சீதனமாக எடுத்துக்கொடுத்தா ரே, யார் சொத்து? சேது சமஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்து இல்லையா அது?

Sunday, October 13, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 2

வித்தியாசமானவர்கள்

முதலில் மூன்று பேர் ஒன்றாக நில்லுங்கள். நாங்கள் அதற்கு மேடை போடுகி றோம். திருப்பூரில் என் நண்பர்கள் தெருத் தெருவாக துண்டு ஏந்தி வசூலித்து பிரம்மாண்டமாக ஒரு கூட்டத்தை நடத்தினோம். நான் சொன்ன அடுத்த கண மே வைகோ மிகுந்த விருப்பத்தோடு மேடைக்கு வந்தார். எந்தத் தயக்கமும் இல்லை.அண்ணே,இடதுசாரிகளோடு நானும் சேர்ந்து ஒரு மாற்று அரசியலை
உருவாக்குவது என்றால், இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கிறது?வரு கிறேன் என்றார். உங்களிடம் நான் வந்து பேசினேன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டுகள் வித்தியாச மானவர்கள்.அவர்கள் மண்ணில் வலம் வருவதைவிட,விண் ணிலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களே என்பதில்தான் எனக்கு வருத்தம்.

Saturday, October 12, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 1

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்! தமிழ்ச் சமுதாயத் தின் நலன் காப்போம்! 

மதுரை மாநாட்டில் தமிழருவி மணியன் பேச்சு காந்திய மக்கள் இயக்கத்தின்
நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

வணக்கத்திற்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளரும், 2016 இல் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
மக்களின் பேராதரவோடு பெரு வெற்றியைப் பெற்று, கோட்டையில் முதல்வ ராக வீற்றிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ள, நெறிசார்ந்த தூய்மையான அகத்திலும் புறத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத, எந்த மனிதனாலும் எதைக் கொடுத் தும் விலைக்கு வாங்க முடியாத, யாருக்கும் தரகுவேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத, வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன்.

Thursday, October 3, 2013

காந்திய மக்கள் இயக்க 4 ஆம் ஆண்டு தொடக்க விழா

மதுரையில் நேற்று (02.10.13 புதன்கிழமை) மாலையில் நடந்த காந்திய மக்கள் இயக்கத்தின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #மதிமுக பொது செயலளார் #வைகோ பங்கேற்று உரையாற்றினார்..

திரு.தமிழருவி மணியன் உட்பட்ட காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகள் , 
மதிமுக நிர்வாகிகள் ... பொது மக்கள் என்று பெரும் திரளாக பங்கேற்றனர் ...

விழா காட்சிகள்

Saturday, May 4, 2013

தமிழ் இனத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!-தமிழருவி மணியன்

நேர்மையாளராக, நெறி சார்ந்தவராக, தமிழ் இனத்துக்காகத்

தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!


தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட விழிப்புணர் வுப்பிரச்சாரத்தையொட்டி, 18.04.2013 அன்று உடுமலைப்பேட்டைப் பொதுக்கூட் டத் தில் தமிழருவி மணியன் அவர்கள் உரை மணியன் ஆற்றினார்.

விவரம் வருமாறு:

அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் 2016 இல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிகிறபொழுது, தமிழகத்தின் கோட்டையில் முதல்வராகஅமர இருக் கின்ற என் நெஞ்சு நெகிழ்ந்த நிலையில், மிகுந்த பாசத்தோடு,ஒரு தலைவனை, காமராஜருக்குப் பிறகு நான் நேசித்துக்கொண்டிருக்கிறேன் என்றால், அந்தத் தலைவனாக இருக்கிற வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த மகத்தான அவை
யை நான் வணங்கி மகிழ்கிறேன்.

Wednesday, May 1, 2013

மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கம் பொதுக்கூட்டம் படங்கள்

மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கம் சார்பில் மரணதண்டனையை எதிர்த்து சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் நேற்று (30.04.13 )மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழின கட்சித் தலை வர்களும், இயக்கத்தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தனர்.

நேற்று நடந்த பொதுக்கூட்டதின் புகைப்படங்கள்



Sunday, April 21, 2013

2016 தேர்தலில் ம.தி.மு.க தலைமையில் புதிய அணி உருவாகும்.-தமிழருவிமணியன்

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலந்தர் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் இலக்கியராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவிமணியன் பேசினார். கூட்டத்தில் மாநில பொது செயலாளர்கள் கணேசன், லட்சுமிகாந்தன்பாரதி, மாநில துணைத்தலைவர்கள் நரசிம்மன், கந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் குமரய்யா, தலைமை நிலைய செயலாளர் இனியண்ணன், மாநில செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்திஆதித்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.