Showing posts with label நெல்லை. Show all posts
Showing posts with label நெல்லை. Show all posts

Wednesday, October 30, 2013

கீழப்பாவூர் ராமநதி திட்டம் ? என்ன ஆனது மதிமுக எழுப்பும் கேள்வி

ராமநதி மேல்மட்ட கால்வாய் குறித்த #மதிமுக வின் கேள்விக்கு பதில் தந்த தமிழக அரசு 

கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறி வித்தார். பின் திட்ட மதிப்பீடு தயார் செய்து வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

Wednesday, October 23, 2013

நெல்லை ஜான்ஸ் கல்லூரியில் உள்ளிருப்பு போர் – மதிமுக ஆதரவு

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக சஸ் பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 3வது நாளாக பேராசிரியர்கள், மாணவர் கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு #மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களின் ஓய்வு அறைகளை திறக்க வேண்டும். மாணவர் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வரலாற்றுத் துறை தலை வர் பீட்டர் பேரின்பராஜ், ஆங்கிலத் துறை பேராசிரியர் ஹெய்ஸ் தாசன் ஆகி யோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Sunday, October 13, 2013

நெல்லை ரயில்வே கோட்டம்-மதிமுக வலியுறுத்தல்

திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என #மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகர், புறநகர் மதிமுக வழக்கறிஞர் அணி  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சட்டத்துறை துணைச் செயலர் அரசுஅமல்ராஜ் தலை மையில் நேற்று  (12.10.13 ) நடைபெற்றது.

Saturday, October 12, 2013

வாலிபால் போட்டியும் வைகோவும்

பாளையங்கோட்டை சேவியர் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக் கான மின்னொளி மாநில வாலிபால் போட்டி இறுதி விழாவில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ

 14 வது லூயிஸ் வெர்டியர் சுழற்கோப்பை மற்றும் புரொபசனல் கூரியர் சுழற் கோப்பைக்கான மின்னொளி மாநில வாலிபால் போட்டியில் மாநிலம் முழு வதும் இருந்து பங்கேற்றுள்ள 14 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3 நாட் கள்  போட்டிகள் நடத்தப் பட்டன.

நேற்று (11.10.13 )இரவு நடந்த இறுதி போட்டியில் பாளை.,சேவியர் பள்ளி அணி, தஞ்சாவூர் அரசு பள்ளி அணிகள் மோதின. இதில் பாளை.,சேவியர் பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், தஞ்சாவூர் அரசு பள்ளி 2ம் இடத்தையும்,திரு வாரூர் பள்ளி அணி 3ம் இடத்தையும், திருப்பூர்  வித்யவிகாசி பள்ளி அணி 4ம் இடத்தையும் பிடித்தன.

Saturday, September 14, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி! 
மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்ட ங்கள்

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 26.08.2013 காலை 10 மணிக்கு, தென்காசியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் தலைமையில்
நடைபெற்றது.தென்காசி ஒன்றியச் செயலாளர் இ.குட்டீஸ் வரன், செங்கோட் டை நகர செயலாளர் சங்கரநாராயணன், இளைஞர் அணி முகமது ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.இராமையா வரவேற்புரையாற்றினார். ஆயிரப்பேரி எம்.முத்துசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

Monday, May 20, 2013

இயற்கையைக் காப்போம்!



அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் நீண்ட ஆராய்ச்சிகள் செய்து ஒரு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இன்னும் எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்குள், இந்த உலகம் பெரும் வறட்சியை, பஞ்சத்தைச் சந்திக் கப் போகிறது.அதனால், ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என் கிறார்.

Sunday, May 19, 2013

தொழிலாளர்களுக்காக உரிமைப் போர்க்கொடியை உயர்த்திய திராவிட இயக்கம்!

நெல்லை மாநகர் மாவட்ட ம. தி.மு.க.மற்றும் மறுமலர்ச்சி தொழிலாளர் முன் னணி சார்பில், 1.5.2013 அன்று,நெல்லை - பாளையங்கோட்டையில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை யில் இருந்து....

உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுங்கள்;
நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை;
உங்களைப் பூட்டி இருக்கின்ற அடிமை விலங்குகளைத் தவிர!

Workers of the World, Unite;
You have to lose nothing but your chains

Saturday, April 13, 2013

சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் ம.தி.மு.க. கோரிக்கை

தூத்துக்குடி–நெல்லை 4 வழிச்சாலையில் பணிகள் முடிவதற்கு முன்பே சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் எஸ்.ஜோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடி–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைகள் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை.சாலையை பயன் படுத்துபவர்களுக்கு எந்தவித முன்அறிவிப்பும் செய்யப்படாமல், கடந்த 5–ந் தேதி முதல் புதுக்கோட்டை அருகே சுங்க வரி வசூல் மையம் அவசரமாக அமைக்கப்பட்டு சுங்க வரியை வசூல் செய்து வருகிறது. இது விதிமுறைகளை மீறிய செயல்.

Wednesday, April 10, 2013

கடைகளில் புளி என்று சொல்லக்கூட பலரும் பயந்தார்கள்

ஸ்டெர்லைட்டை மூடும்வரை போராட்டம்தொடரும்: வைகோ

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூரில் நேற்றிரவு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கபுலி பாண்டியன் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

உரையின் சுருக்கம் :-

உலக கோடீஸ்வரன் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வால் பல தலைவர்களை அசைத்து பார்த்துவிட்டாலும், அசைக்கமுடியாத ஆள் நான் ஒருவன் தான். வைகோவிடம் நெருப்பு கூட அண்டமுடியாது. ஆலையை மூடும் வரை என் போராட்டம் தொடரும். ஆலையை மூட ஐகோர்ட தீர்ப்பு வழங்கியது, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் ஆலை தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டாலும், மார்ச் 30ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தமிழக மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் தடையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்பதால் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந் திருக்கிறது.