Showing posts with label ரயில் மறியல். Show all posts
Showing posts with label ரயில் மறியல். Show all posts

Tuesday, December 3, 2013

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!
பொதுவாக்கெடுப்பில் தமிழ் ஈழம் மலரச் செய்வோம்!!

விருத்தாசலம் இரயில் மறியல் கிளர்ச்சியில் #மதிமுக ஆ.வந்தியத்தேவன் சூளுரை

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந் து கொள்வதைக் கண்டிப்பதற்காக, முழு அடைப்பு மற்றும் இரயில் மறியல்
போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்த்தெழுந்து போராட அணி திரண்டு வந் துள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகம், வணிகர்சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழுவுரிமைக்கட்சி, தமிழ் தேச பொது உடமைக் கட்சி, மனித நேய மக் கள் கட்சி, ஆகிய அமைப்புகளின் தோழர்களுக் கெல்லாம் கனிவான வாழ்த்து
களையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இப்போது போராடிக் கொண்டு இருக்கி றோம். ஆனால், இது மட்டுமே நமது கோரிக்கை அல்ல! காமன் வெல்த்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் கழுத்தைப் பிடித்து
வெளியேற்ற வேண்டும்.இனப்படுகொலை நடந்த இலங்கைத் தீவில் மாநாட் டை நடத்தக் கூடாது. கொடியவன் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்க வேண்டும். பொது வாக் கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போருக் குப்பின்னரும் ஈழத்தமிழர்கள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் அரச வன் முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதையெல்லாம் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இதற்காகப் போராடி வருகிறோம்.

Tuesday, November 12, 2013

சென்னை சென்ட்ரல் நடந்த ரயில் மறியல் போராட்டம் ஒரு தொகுப்பு

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மதி.மு.க.பொதுச்செயலாளர் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார், மாவட்டச் செய லாளர் வடசென்னை-சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாஸ், டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும் பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி-சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட் சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாஸ்கர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எஸ்.ஆர்.விசு, அண்ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோ கரன, வில்லிவாக்கம்-சு.நவநீதகிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாஸ், வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

மதுரை மறியல் ...குமுறிய வைகோ

மதுரையில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, வைகை எஸ்பிரஸ் ரயில் முன் நின்று கட்சியினர் உடன் ஆர்பாட்டம் நடந்த்தினார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ ரயில் மறியலை ஆரம்பிக்கும் முன்னதாக, மாநில உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட தோடு, வைகோவிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் தெரிகிறது. இத னால் கோபம் கொண்ட வைகோ பதிலுக்கு, உன் உடம்பில் ஓடுவது சிங்கள ரத்தமா?, உளவுத்துறைக்கு இங்கு என்ன வேலை, உங்க வேலையை இங்கு காட்டாதீர்கள். நீ தமிழன் இல்லையா?, இறந்த தமிழர்கள் உங்கள் உறவுகளாக இருந்தால் இப்படி நடந்துகொள்வாயா? என்று கடுமையாக பேசினார்.

சென்னை சென்ட்ரல் -மதிமுக இரயில் மறியல்

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் #மதிமுக துணைப் பொதுச்செய லாளர் மல்லை சத்யா,உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார்,மாவட்டச் செயலாளர் வடசென்னை சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாஸ், டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும்பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி - சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட்சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாஸ்கர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எஸ்.ஆர்.விசு, அண் ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோகரன, வில்லிவாக்கம்-சு.நவநீத கிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாஸ், வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த வைகோ

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த #வைகோ

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இர யில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக் கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012) காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல் லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி,மாநில மருத்துவர் அணித் துணைச் செய லாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மக பூப்ஜான் ,மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர்.