Showing posts with label பெரம்பலூர். Show all posts
Showing posts with label பெரம்பலூர். Show all posts

Monday, November 11, 2013

நவ 12 -முழு அடைப்பு போராட்டம் தமிழகமும் முழுவதும் தயார் நிலையில்

கரூர் மாவட்டம் 

கரூரில் நவ.12-ல் #மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் பரணி கே. மணி விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கக் கோரி யும், இந்தியா சார்பில் ஒருவர்கூட காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல் லக்கூடாது என வலியுறுத்தியும் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவைத் தெரிவிக்கிறது.

மேலும் மதிமுக சார்பில் அன்று (நவ.12) ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

Monday, August 12, 2013

தமிழர் பிரச்னைகளில் மதிமுக

தமிழர் பிரச்னைகள் தொடர்பாக மதிமுக போராடுகிறது என்றார் பொதுச் செயலாளர்  #வைகோ.

பெரம்பலூரில் பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

திமுகவை எதிர்த்து தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுக அண்ணாவின் கொள்கை வழியில் நடத்தப்படுகிறது. அரசியலில் நேர்மை, நாணயம்,ஒழுக்கம் உள்ள ஒரே கட்சி மதிமுகதான். நேர்மையாக உழைத்து கறைபடாத கரத்திற் குச் சொந்தக்காரர்களாக விளங்கி வருகிறோம். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு கட்சி நடத்தி வந்தவர்கள் எல்லாம், காணாமல் போகும் நிலை உருவாகி வருகிறது. ஆனால் யாராலும் எங்கள் கட்சியை அழிக்க முடியாது. தற்போது மக்களிடையே மாற்றம் ஏற்பட்டுள்ளது.