Showing posts with label திருவள்ளூர். Show all posts
Showing posts with label திருவள்ளூர். Show all posts

Friday, December 6, 2013

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளையொட்டி #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாலை அணிவித்து மாரியாதை செலுத்தி னார்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை-புழ லில் இருக்கும் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க உயர்நிலைக்குழு உறுப்பினரும், திரு வள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகி யோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Saturday, September 14, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி! 
மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்ட ங்கள்

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 26.08.2013 காலை 10 மணிக்கு, தென்காசியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் தலைமையில்
நடைபெற்றது.தென்காசி ஒன்றியச் செயலாளர் இ.குட்டீஸ் வரன், செங்கோட் டை நகர செயலாளர் சங்கரநாராயணன், இளைஞர் அணி முகமது ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.இராமையா வரவேற்புரையாற்றினார். ஆயிரப்பேரி எம்.முத்துசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

Saturday, August 10, 2013

மாற்று சக்தி மறுமலர்ச்சி தி.மு.க.

திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் நிதி அளிப்பு நிகழ்ச்சி 19.07.2013 அன்று
சென்னை தாயகத்திலும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

தமிழகம் முழுவதும் கழகக் கண்மணிகள் நிதி திரட்டுவதற்கான பெரும் ஊக்கத் தையும்,உந்துதலையும் வழங்கியது காஞ்சி மாவட்டம்.மிகக் குறைந்த கால அவகாசமே இருந்தபோதிலும்,நீங்கள் ஜூன் மாதத்திலேயே தொடங்கி வைத் தால், அதை மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பாக இருக்குமே என்று மாவட்டச் செயலாளர் ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சுடர்விடும் இரு விழிகளான, எனது ஆருயிர் இளவல், கழகத்தின்
துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும், காஞ்சி மாவட்டக் கழகச் செயலாளர்,ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களும், தலை மைக் கழகம் எண்ணுவதைச் செயல் முடித்துக் காட்டும் ஆற்றலோடு, 1 கோடி யே 5 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கி, இன்ப அதிர்ச்சியை வழங்கினார்கள். வானத்து மழைத்துளிகளுக்கு நடுவில், தாம்பரம் பொதுக்கூட்டத்தில், அமுதத்
துளிகளாக அந்தத் தொகையை வழங்கினார்கள்.