இரண்டு கட்சிகளும், இந்த மாநிலத்தை பாழ்படுத்திவிட்டன, வழக்கறிஞர்களே,
உங்களுக்கு நிறையக் கடமை இருக்கின்றது!என்று சென்னையில் நடந்த வழக் கறிஞர்கள் மாநாட்டில் #வைகோ உரை ஆற்றினார்.சென்ற பாகத்தின் உரை யின் தொடர்ச்சி வருமாறு:
கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டிப் பேசினார்கள்.நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு, நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஸ்டெர்லைட் வழக்குக்காக,
நான் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக நன் மாறன் சொன்னார்.அந்த ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறும்போது, அதைச் சுவாசிக்கின்ற மக்கள் புற்று நோயால் மடிவார்கள்; 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நிலங்கள் பாழாகிப் போய்விடும்;கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்பதற்காக, அந்த ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கின்றோம்.