Showing posts with label நதிகள். Show all posts
Showing posts with label நதிகள். Show all posts

Wednesday, December 11, 2013

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் வைகோ!

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் #வைகோ வோடு நாமும் பாடுபடுவோம் என்று விருதுநகர் மாநாட்டில் ஆர்.ஞானதாஸ்
உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

66ஆண்டுகால இந்தியநாடாளுமன்ற வரலாற்றில் நாட்டின் நதிகளை இணைத் து, நாட்டை செழிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதிநீர் இணைப்பு என் ப தை தனிநபர் மசோதாவாக முதன் முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் து சரித்திரம் படைத்து, தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட்ட மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.

செய்தித்தாளிலே ஒரு கவிதைப் படித்தேன். அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.

Saturday, November 16, 2013

காவிரி நீர் எங்கே ?-மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி,மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!!

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் நடை பெற்றது. குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் , ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் துரை பால கிருஷணன், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியான், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச் செயலர் தமிழ் நேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Wednesday, October 30, 2013

கீழப்பாவூர் ராமநதி திட்டம் ? என்ன ஆனது மதிமுக எழுப்பும் கேள்வி

ராமநதி மேல்மட்ட கால்வாய் குறித்த #மதிமுக வின் கேள்விக்கு பதில் தந்த தமிழக அரசு 

கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறி வித்தார். பின் திட்ட மதிப்பீடு தயார் செய்து வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

Friday, September 6, 2013

உப்பனாற்றில் தடுப்பணை

கடலில் தண்ணீர் வீணாவதை தடுக்க உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்:  #மதிமுக வலியுறுத்தல்

தடுப்பணை ஏன் ?

சீர்காழி அருகே தேனூர் புதுமண்ணியாற்றிலிருந்து உப்பனாறு பிரிந்து கொண் டல், பனமங்கலம், துறையூர், சட்டநாதபுரம், காரைமேடு, புதுதுறை, திருநகரி வழியாக சென்று திருமுல்லைவாசல் கடலில் கலக்கிறது.

இந்த ஆறு மழைக்காலங்களில் வடிகாலாக இருந்து வருகிறது.கோடைகாலங் களில் திருல்லைவாசல் கடலில் இருந்து உப்பு தண்ணீர் ஆற்றின் வழியாக சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள பனமங்கலம் வரை சென்று விடுகிறது. 

Sunday, August 25, 2013

கடலுக்கு இறைத்த (காவிரி) நீர்!

சங்கொலி தலையங்கம் 

தமிழகம் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பேரபாயம், நீர் பற்றாக்குறையாக
இருக்கும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. தமிழ்நாட்டில்
மழையின் மூலம் கிடைக்கும் நீர் குறைந்து வருவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகத்தில் ஆண்டு தோறும் மழை சராசரியாக 925 மி.மீ. பொழிகிறது. தென்மேற்கு பருவ மழை 307.60 மி.மீ. வடகிழக்குப் பருவ மழை 438.70 மில்லி மீட்டர் பொழிகிறது.

குளிர்காலத்தில் பொழியும் மழை நீரின் அளவு 42.20 மில்லி மீட்டர்; கோடை
காலத்தில் 136. 50 மில்லி மீட்டராக மொத்தம் 925 மில்லி மீட்டர் மழைநீரை
தமிழகம் பெறுகிறது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து விடுவதால்,
தமிழ்நாட்டிற்கு தென் மேற்கு பருவக் காற்றால் பொழியும் பருவ மழையின் பயன் கிடைப்பது இல்லை. வடகிழக்குப் பருவக் காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களை உருவாக்கிப் பொழியும் மழை, கனமழையாக கொட்டிவிடுகிறது.

Monday, August 5, 2013

தண்ணீர், தனியார் வசமா?

தண்ணீர், 21 ஆம் நூற்றாண்டின் நீலத் தங்கம் (Blue Gold) என்று அழைக்கப் படு கிறது. ‘தண்ணீர் தங்கத்திற்கு நிகரானது. அது ஒரு திரவத் தங்கம்.’(Water is liquid gold) என்றார் சர்.ஆர்தர் காட்டன். இவர் சென்னை இராஜ தானியின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கல்ல ணைத் தொழில் நுட்பத்தைப் பின்பற்றி ஆந்திர மாநிலத்தின் தவனேஸ்வரம் என்ற இடத்தில் கோதாவரி நதியின் குறுக்கே ஓர் அணையைக் காட்டன் கட்டி னார்.அணை கட்டி முடியும் வரை, தன் மனைவி மகளுடன் ஒரு குடிசையில்
அணை கட்டும் பகுதியிலேயே வசித்தவர். இவரும் நம் மக்கள் தலைவர்
வைகோவைப் போன்று நதிகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி னார்.

Thursday, July 11, 2013

உத்தரகாண்ட் உணர்த்தும் பாடம்

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு உணர்த்தும் பாடம்:

நாட்டின் நதிகள் இணைக்கப்பட வேண்டும்!

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசப் பகுதிகளில் ஏற்பட்ட பெரு வெள்ள மும் அதனால் விளைந்த உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் கண்ட பின்பாவது மத்திய அரசு விழித்தெழுந்து, மக்கள் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நதிகள் இணைக் கப்பட வேண்டும்’ என்ற மசோதாவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் நதிகள் இணைக்கப்பட்டால் வெள்ளச் சேதத்தையும், உயிர்ப் பலிகளையும் தவிர்த்து, வறட்சிப் பகுதிகளில் வளம் காணலாம் என் பது உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு மத்திய அரசுக்கு உணர்த்தும் பாடமாகும்.