Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts

Monday, March 3, 2014

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் தந்தையார் மறைவு! -வைகோ அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் தந்தையார் மறைவு!

#மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் அவர்களின் தந்தையார் டி.சாமுவேல் அவர்கள் இன்று (03.03.2014) காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார்.

Thursday, November 28, 2013

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவி கலெக்டர் அலுவலகத்தை , #மதிமுக வினர் முற்றுகையிட்டனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் , வைகோ சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த பொது பெற்று தந்தார் .கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட்டில் கடந்த 2009–ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து அந்த ரயில்வே கேட்டை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதனால் இனாம் மணி யாச்சி பஞ்சாயத்து, இந்திரா நகர், அத்தைகொண்டான், சீனிவாச நகர் உள்ளிட் ட பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. என வே ரயில்வே கேட்டை மூடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2–2–2009 அன்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ரயில்வே கேட் டுக்கு பதிலாக அப்பகுதியில் ரூ.80 லட்சம் செலவில், வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்க வழிப்பாதை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து தற்போது வரை ரயில்வே கேட் மூடப்படாமல் பொதுமக்களின் பயன் பாட்டுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

Thursday, November 21, 2013

சுங்கச் சாவடி வழக்கு நிலுவையில் உள்ளது , வசூல் செய்வதை நிறுத்துக

தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் புதுக்கோட்டையில் உள்ள சுங்கச் சாவடி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என #மதிமுக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல் மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பியுள்ள கோரிக்க மனு விவரம்:

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அரு கே  தட்டப்பாறை விலக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி யில் விதிமுறைகளை மீறி வாகனங்களுக்கு பணம் வசூல் செய்யப்பட்டு வந்த து தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது. 

Saturday, November 16, 2013

தூத்துக்குடி மாவட்ட மாணவ– மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி



கோவில்பட்டியில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) #மதிமுக சார்பில் மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ம.தி.மு.க.மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.‘‘நாடாளுமன்றத்தில் வைகோ’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணி சார்பில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி பஸ் நிலையம் அரு கில் உள்ள சவுபாக்கியா டவர்சில் உள்ள கூட்ட அரங்கில் போட்டி நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ–மாணவிகள், கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடனோ அல்லது கல் லூரியில் படிப்பதற்கான அடையாள அட்டையுடனோ பங்கேற்கலாம்.

Wednesday, November 13, 2013

உலகத் தமிழர்களே, ஒருசேர எழுவோம்; நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

உலகத் தமிழர்களே, ஒருசேர எழுவோம்;நீதி கிடைக்கும் வரை போராடுவோம்! என்று புன்னக்காயல் புது நன்மை விழாவில் பேசிய #மதிமுக பொதுச் செயலா ளர் #வைகோ அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தட்டுங்கள்; திறக்கப்படும்!
கேளுங்கள்; தரப்படும்!
தேடுங்கள்; கண்டு அடைவீர்கள்! 

வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கின்ற வர்களே, என்னிடத்தில் வாருங்கள்; நான்
உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன். இரக்கப்படுகின்றவர்கள் பாக்கிய வான்கள்; சாந்த குணம் உடையவர்கள் பாக்கியவான்கள்.பசியோடு நீதிக்காகப் போராடு கின்றவர்கள் பாக்கியவான்கள். என்ற,விவிலியத்தின் இனிமையான மறை மொழிகளை மனதில் நிறுத்தி, மகிழ்ச்சி அலைமோதுகின்ற புன்னக் காயல் வளனார் மண்டபத்தில், உங்களையெல்லாம் சந்திக்கின்ற பேறு பெற்ற மைக்காக மகிழ்ச்சி அடைகின்றேன்.

Monday, November 11, 2013

ஸ்டெர்லைட் வழக்கு; வைகோ மேல்முறையீடு ஏற்பு !

ஸ்டெர்லைட் வழக்கு; #வைகோ மேல்முறையீடு ஏற்பு !

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதற்காக, கடந்த 17 ஆண்டுகளாக, நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி வருகின்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஆகஸ் ட் 8 ஆம் தேதியன்று, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில்,ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று வழங்கிய ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் மேல்முறையீடு, விசார ணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பட்நாயக், நீதிபதி நிஜார், நீதிபதி இப்றாஹிம் கலிஃபுல்லா ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பசுமை அமர்வு, இன்று அறிவித்தது.

Tuesday, October 29, 2013

மதிமுக நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி , அயன்வடமலாபுரத்தில் #மதிமுக சார்பில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், பாட்டு போட்டி நடந்தது. 

இப்போட்டியில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 167 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ.1000ம்,  2வது பரிசாக ரூ.701ம், 3வது பரிசாக ரூ.501ம் வழங்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வேஷ்டி, கைலி, சேலைகள், சட்டைகள் வழங்கப் பட்டது. 

Monday, October 28, 2013

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோவின் மேல் முறையீடு !

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் #வைகோ வின் மேல் முறையீடு !

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, கடந்த 17 ஆண்டுகளாக,மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகப் பொதுசசெலயாளர் வைகோ மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத் திலும் பேராடி வருகிறார். 

வைகோ தொடுத்த ரிட் மனு மீது, 2010 செப்டெம்பர் 28 இல் சென்னை உயர்நீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து , ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்று, ஆலையை இயக்கியது. 

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற 33 அமர்வுகளிலும், வைகோ கலந்து கொண்டு வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் உச்நீதிமன்றம், இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்து, ஆலையை இயக்கத் தீர்ப்பு அளித்தது. 

Thursday, October 17, 2013

வீரபாண்டிய கட்டபொம்மன் 214 வது நினைவஞ்சலி

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் 214 வது நினைவஞ்சலி பொதுக் கூட்டத்தில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ உரையாற்றிய போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்ட புகைப்படம்..


Thursday, October 10, 2013

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்-பகுதி 2

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ


ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!


தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


அலைமோதும் நினைவுகள்

முதன் முதலாக என் கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை சவேரியார் கல் லூரியில் பயில்வதற்காக வந்தேன்.நான் என் கிராமத்துப் பள்ளிக்கூடத்திலே
படித்துவிட்டு, அதிகம் மதிப்பெண் பெற்றதனால் பரிந்துரை இல்லாமல் பாதர் கத்தோலிக்க சாமியார் சூசைஅவர்கள் முதல்வராக இருக்கும்போது நான் சேவியர் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். எனக்கு பட்டணமே தெரியாது. எனக்குத் திருநெல்வேலியே சொர்க்கலோகமாகத் தெரிந்தது. மாடுகள் பூட்டப் பட்ட வில்வண்டிதான் எங்களுக்கு கார்.அங்கு நான் சந்தித்த என் உயிர் நண்பன் நான்கு ஆண்டுகள் உயிருக்கு உயிராகப் பழகிய நண்பன் இந்த ஏரலைச் சேர்ந்த ஆனந்த முதலியாருடைய குடும்பத்துப் பிள்ளை மாரி இராமச்சந்திரன். நாங் கள் உயிருக்கு உயிராகப் பழகினோம்.சித்திரம்போல் எழுதுவார்.சிறந்த கவிஞர் உயர்ந்த ஒழுக்கமான குடும்பத்திலே உள்ளவர்.நானும் அவரும் உயிர் நண்பர் கள்.

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மறுமலர்ச்சிப் பயணம்

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டு மக்கள் தலைவர் #வைகோ அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக (09.10.2013) கோவில்பட்டி ஒன்றியத்தின் புகைப்படங்கள்


மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் எந்த கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது என #மதிமுக பொதுச்செயலர் #வைகோ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்தில் ம.தி.மு.க மாவட் டச் செயலர் ஜோயல் தலைமையில், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை அன்னை தெரசா நகரில் நேற்று (09.10.13) புதன்கிழமை தொடங்கிய வைகோ அங்கு பேசியதாவது: 

Wednesday, October 9, 2013

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்.

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ

ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு  எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!

தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவை யின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


தூத்துக்குடி மாவட்ட - தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவ சாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டு - செப்டம்பர் 29 அன்று ஏரலில் நடைபெற்றது.மாநாட்டில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் #வைகோ இரண்டாம் கட்டமாக மறுமலர்ச்சி பயணம்

நேற்று (08.10.13) தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி பயணத்தை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற் கொண்டிருக் கிறார்கள். உடன் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் உள்ளார். இப்பயணத்தில் கழக முன்னணினரும், தோழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பயண காட்சிகள்


Tuesday, October 8, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்-பகுதி 2

மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ மேற்கொண்டு வருகிறார். நேற்று (07.10.13 )மாலை கன்னியாகுமரி யில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளம் யூனியன் பகுதி யில் சுற்றுப்பயணம் செய்தார். குளத்தூரில் இருந்து வைகோ தனது சுற்றுப்பய ணத்தை தொடங்கினார். முன்னதாக அங்கு அவர் பேசியதாவது:- 

578 தமிழக மீனவர்களின் படுகொலைக்கு மத்தியஅரசு தான் காரணம். இலங் கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், சாத்தான் (இலங்கை அதிபர் ராஜபக்சே) கையால் பதவி ஏற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து 17 ஆண்டுகளாக போராடி வருகிறேன். 

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்-பகுதி 1

தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தலைவர் #வைகோ அவர்கள் இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி பிரச்சார பயணத்தை புகைப்படங்கள்.


Sunday, October 6, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2–வது கட்டமாக #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ மறுமலர்ச்சி பயணத்தை நாளை (07.10.13) தொடங்குகிறார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் விவ சாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அண்ணாவின் கனவை நன வாக்குவதற்காகவும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடவும், தமிழக மீனவர்களின் நலனுக்காகவும், மதுவை அடியோடு ஒழிப்பதற்காகவும் மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு உள்ளார்.

Saturday, October 5, 2013

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-வைகோ உரை

மாற்றத்தைத் தருகின்ற வலிமையோடு,மக்களைச்சந்திக்கின்றது மறுமலர்ச்சி தி.மு.கழகம் தமிழ்நாட்டு வாக்காளர்களே,நேர்மையான அரசியலை ஊக்கு விக்க, ஆதரவு தாரீர்!

மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்து மக்கள் தலைவர் #வைகோ வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் - செய்துங்கநல்லூரில் 30.09.13 அன்று,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத் தைத் தொடங்கினார்.நிகழ்ச்சியின்போது அவர் ஆற்றிய உரையில் இருந்து.....

Thursday, October 3, 2013

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ம.தொ.மு. கொடி உயர்ந்தது!

#வைகோ வின் திருக்கரத்தால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ம.தொ.மு கொடி உயர்ந்தது!

திராவிட இயக்கத்தில் தொழிலாளர்களின் பங்கு எத்தகையது என்பதை இந்த நாடறியும். ஆளுங்கட்சியாக ஒரு இயக்கம் இருக்கும்பொழுது பலனை எதிர் பார்த்து வரும் வேடந்தாங்கல் பறவைகள் போலல்லாமல், ஒட்டியும் ஆம்ப லும் போல இருக்கும் தொழிலாளர்கள்தான் அந்தக் காலக் கட்டங்களில் உணர் வுபூர்வமாக இயக்கத்திற்குப் பணியாற்றி, ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலாளர்களை அசைத்துப்பார்க்க முயன்ற ஆளுங்கட்சிகள் தோல்வியைத் தான் சந்தித்து இருக்கின்றன.

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-2 வது நாள்-பாகம் 2

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். 01.10.13 அன்று   ஆறுமுகநேரி, திருச்செந்தூர் வ.உ.சி. திடல், அமலிநகர், ஆலந்தலை ஆகிய இடங்களில் பேசினார். 

பிரசாரத்தில் வைகோ பேசியது:–

ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் பச்சிளங் குழந் தைகளையும், பெண்களையும், இளைஞர்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது இலங்கை அரசு. அதேபோல் சிங்கள ராணுவம் 578 தமிழக மீனவர் களை இதுவரை கொன்று குவித்துள்ளது. ஆனாலும் மத்தியில் ஆளும் காங் கிரஸ் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக வேடிக் கை பார்க்கிறது.