ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் #வைகோ வின் மேல் முறையீடு !
தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, கடந்த 17 ஆண்டுகளாக,மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகப் பொதுசசெலயாளர் வைகோ மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத் திலும் பேராடி வருகிறார்.
வைகோ தொடுத்த ரிட் மனு மீது, 2010 செப்டெம்பர் 28 இல் சென்னை உயர்நீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து , ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்று, ஆலையை இயக்கியது.
அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற 33 அமர்வுகளிலும், வைகோ கலந்து கொண்டு வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் உச்நீதிமன்றம், இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்து, ஆலையை இயக்கத் தீர்ப்பு அளித்தது.