Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Monday, April 8, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 8

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

“ எம்.ஜி.ஆர். அவமதிக்கப்பட்டதற்கு கொதித்தெழுந்த வைகோ”

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் “குற்றம் சுமத்தப்பட்டு” தடா எனும் கொடிய சட்டத்தின் மூலம் கொடூர சித்ரவதைகள் செய்து காவல்துறை பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். மூன்று தமிழர்களைத் தூக்கி லிடுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மத்திய அரசின் பரிந்துரை அறிக்கையில் கையெழுத்திட்டு இருப் பவர் ப.சிதம்பரம் என்ற தமிழனே என்பதுதான் வரலாற்று முரண். இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம்.செப்டம்பர் 9 என்று நாள் குறித்துவிட்டார்கள்.

மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பதற்கு எல்லா தளங்களிலும் சக்தி முழுமை யும் திரட்டிப் போராடி வருகிறார் தமிழர் தலைவர் வைகோ.தமிழகத்தைஆளும் அண்ணா தி.மு.க. கட்சியின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைவர் வைகோ மூன்று பேரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு தொடர்ந்து வேண்டு கோள் விடுத்து வருகிறார்.