Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts

Monday, August 5, 2013

தண்ணீர், தனியார் வசமா?

தண்ணீர், 21 ஆம் நூற்றாண்டின் நீலத் தங்கம் (Blue Gold) என்று அழைக்கப் படு கிறது. ‘தண்ணீர் தங்கத்திற்கு நிகரானது. அது ஒரு திரவத் தங்கம்.’(Water is liquid gold) என்றார் சர்.ஆர்தர் காட்டன். இவர் சென்னை இராஜ தானியின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கல்ல ணைத் தொழில் நுட்பத்தைப் பின்பற்றி ஆந்திர மாநிலத்தின் தவனேஸ்வரம் என்ற இடத்தில் கோதாவரி நதியின் குறுக்கே ஓர் அணையைக் காட்டன் கட்டி னார்.அணை கட்டி முடியும் வரை, தன் மனைவி மகளுடன் ஒரு குடிசையில்
அணை கட்டும் பகுதியிலேயே வசித்தவர். இவரும் நம் மக்கள் தலைவர்
வைகோவைப் போன்று நதிகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி னார்.