Showing posts with label கடலூர். Show all posts
Showing posts with label கடலூர். Show all posts

Sunday, December 8, 2013

வைகோ விடம் லால்பேட்டை மக்கள் சார்பாக கோரிக்கை

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் (07.12.13 ) காட்டுமன்னார் குடி யில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முன்னாள் இரவில் லால்பேட் டை அரசினர் பயனியர் ஆய்வு மாளிகையில் ஒய்வு எடுத்தார் அவரை சனிக் கிழமை காலை லால் பேட்டை இஸ்லாமிய சமூக பெரியவர்கள் சந்தித்தனர்

லால்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவ மனை யும் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியும் தொடங்க பல ஆண்டுகளாக முயற்சி வருவதையும்,ஆனால் அரசுகள் அலட்சிய போக்கினையும் கையாள் வதாகவும் வைகோ அவர்களிடம் லால்பேட்டை ஐக்கிய ஜமாஅத் செயலாளர் எம்.ஏ.பத்ஹூத்தீன் விளக்கமாக எடுத்து கூரினார்.

Wednesday, December 4, 2013

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி டெல்டா பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக்குழு வினர் நேற்று (03.12.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் #மதிமுக உட்பட பல கட்சிகள் பங்கேற்றன .

தஞ்சையில் 

ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் உதய குமார், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், வக்கீல் நல்லதுரை, அயனாவரம் முருகேசன் உள்பட மீட்புக்குழு நிர்வாகிகள் பங் கேற் றனர்.

Saturday, November 16, 2013

காவிரி நீர் எங்கே ?-மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி,மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!!

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் நடை பெற்றது. குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் , ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் துரை பால கிருஷணன், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியான், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச் செயலர் தமிழ் நேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, August 24, 2013

தமிழனத்திற்காக மதிமுக

நேற்று (23.08.13 ) கடலூர் மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் ,  நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் ம.தி.மு.க.தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் கூட்டம் மாவட்ட செயலாளர் ராம லிங்கம் தலை மையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட #வைகோ, தமிழனத்திற்காக போரா டும் ஒரே இயக்கம் ம.தி.மு.க. என்று கூறினார்.

மாநில பொருளாளர் மாசிலாமணி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் குணசேகரன், வெளியீட்டு அணி செயலாளர் வந்தியதேவன், மாவட்ட அவை தலைவர் பெருமாள், பொருளாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிச்சை வரவேற்றார்.

Wednesday, July 10, 2013

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு பங்குகள் விற்பனை முயற்சியைக் கைவிட வேண்டும்

#வைகோ அறிக்கை
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யின் பங்குகளை விற்கக்கூடாது என்ற கோரிக்கையை மட்டும் முன் வைத்து, ஜூன் 3ஆம் தேதியில் இருந்து ஒருவார காலமாக என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள னர். பதிமூன்றாயிரம் நிரந்தரப் பணியாளர்களும், பதிமூன்றாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றினைந்து உறுதியுடன் போராட்டம் நடத்தி வருகின் றனர். மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக, நாட்டின் அனைத் துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் போராடி வரும் என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

Tuesday, July 9, 2013

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழு வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியதாவது:

தமிழகத்திற்கு கர்நாடகம் 489 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று 1924-ல் மைசூர் அரசுடன் ஒப்பந்தம் செய்தவன் வெள்ளையன். ஆனால் இன்று 192 டிஎம்சி கர்நாடகம் நீர் தர வேண்டும் என்று காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பைக் கூட மத்தியஅரசு நிறைவேற்றித்தர மறுக்கிறது. கர்நாடக அணை களில் இருப்பில் உள்ள நீரில் 46 விழுக்காடு தமிழகத்திற்கும், 54 விழுக்காடு கர்நாடகத்திற்கு என பகிர்ந்து கொள்வதுதான் காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் சாரம். ஆனால் நீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அடாவடிக்கு மத்தியஅரசு கை கொடுக்கிறது.

Saturday, June 22, 2013

என்.எல்.சி. பங்குகள் விற்பனை- வைகோ கண்டனம்

என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை: வைகோ கண்டனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதி பெற்று தனிச் சிறப்புடன் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.