Showing posts with label நாகைபட்டினம். Show all posts
Showing posts with label நாகைபட்டினம். Show all posts

Saturday, November 16, 2013

காவிரி நீர் எங்கே ?-மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி,மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!!

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் நடை பெற்றது. குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் , ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் துரை பால கிருஷணன், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியான், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச் செயலர் தமிழ் நேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, October 21, 2013

நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-மதிமுக

நாகை மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்க நிலத்தடி நீரை சேமிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என #மதிமுக வலியுறுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட இளைஞரணி அணி கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில துணை அமைப்பாளர் மார்கோனி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில இளை ஞரணி அமைப்பாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: 

நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து பொதுக்குழுவு கூடி முடிவெ டுக்கும். விவசாயத்திற்குப் பெயர் பெற்ற நாகை மாவட்டத்தில் இன்றைக்கு நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. காவிரி ஆற்றில் விடப்படும் தண் ணீரும் விவசாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாத அள விற்கு ஆறு, வாய்க்கால் தூர் வாரப்படாமல் ஆற்றுநீர் கடலுக்குச் செல்கிறது. உபரியாக கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் யாரும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் வங்கக்கடலில் கலந்து வீணாகியது. 
  

Saturday, October 19, 2013

செம்பனார்கோவிலில் மதிமுக கூட்டம்

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் #மதிமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். 

மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய செய லாளர் கொளஞ்சி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கழக செய லாளர் மோகன், தலைமை ஆலோசனை குழு உறுப்பினர் மகாலிங்கம், முன் னாள் ஒன்றியக்குழு தலைவர் தங்கையன் கலந்து கொண்டனர். 

Friday, September 6, 2013

உப்பனாற்றில் தடுப்பணை

கடலில் தண்ணீர் வீணாவதை தடுக்க உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்:  #மதிமுக வலியுறுத்தல்

தடுப்பணை ஏன் ?

சீர்காழி அருகே தேனூர் புதுமண்ணியாற்றிலிருந்து உப்பனாறு பிரிந்து கொண் டல், பனமங்கலம், துறையூர், சட்டநாதபுரம், காரைமேடு, புதுதுறை, திருநகரி வழியாக சென்று திருமுல்லைவாசல் கடலில் கலக்கிறது.

இந்த ஆறு மழைக்காலங்களில் வடிகாலாக இருந்து வருகிறது.கோடைகாலங் களில் திருல்லைவாசல் கடலில் இருந்து உப்பு தண்ணீர் ஆற்றின் வழியாக சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள பனமங்கலம் வரை சென்று விடுகிறது. 

Saturday, July 13, 2013

விருதுநகர் பந்தலில்,முழுநாள் மாநாடு

தஞ்சாவூர் கூட்டத்தில் #வைகோ அறிவிப்பு

தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில், 5.7.2013 அன்று, தஞ்சாவூரில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் விழா வெகு சிறப்பு டன் நடைபெற்றது. நிதியினைப் பெற்றுக் கொண்டு பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

நெடிய வரலாறு படைத்த இந்தத் தஞ்சைத் தரணியில், தஞ்சை மாவட்டம், திரு வாரூர் மாவட்டம்,நாகை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பாக
நடைபெறுகின்ற, நாடாளுமன்றத் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி அளிப்புக் கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கழகத்துக்கு புதியதோர் எழுச்சி தருகின்ற விதத்தில், இந்தத் தஞ்சை நகரில்,
நம்முடைய இலட்சியங்களைப் பறைசாற்றுகின்ற பதாகைகளை, பட்டயங் களை, நெடுகிலும் மிளிரச் செய்து, இந்த மண்டபத்தில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை,தன் சக தோழர்களோடு சேர்ந்து அமைத்துத் தந்து வரவேற்று இருக்கின்றீர்கள்.

Saturday, July 6, 2013

மதிமுக மீது மக்களின் நன்மதிப்பு

நாடாளுமன்றத்தில் இந்த முறை மதிமுகவின் குரல் ஒலிக்கும் என்றார் #மதிமுக பொதுச் செயலர் #வைகோ.

தஞ்சாவூரில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மதிமுக சார்பில் வெள்ளிக் கிழமை (05.07.13 ) இரவு நடைபெற்ற கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதியளிப்பு வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

முல்லைப் பெரியாறு பிரச்னை, ஈழத் தமிழர்கள் பிரச்னை, உர விலை உயர்வு, ராஜபட்ச வருகை எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்திய இயக்கம் இது.

Thursday, June 6, 2013

தமிழக மீனவர்கள் உயிர் என்ன கிள்ளுக் கீரையா ?

தமிழகத்து இளைஞன்,கரிகாலன் வழி வந்தவன்,இராஜராஜன் வழி வந்த வன், பராந் தகன் வழி வந்தவன், இராஜேந்திரன் வழி வந்தவன், வருண குலத்தான் வழி வந்தவன், உன் நாட்டின் மீது படையெடுத்து வென்ற இனத்துக்காரன், உன்னைத் தேடி வந்து உதைக்கிற காலம் வரும்.-வைகோ (6.2.2011 )

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து,நாகப்பட்டினத்தில் கழ கத்தின் சார்பில் 6.2.2011 அன்று நடைபெற்ற உண்ணாநிலை அறப்போரில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

உப்புக்கடல் சூழ்ந்த இந்த உருண்டை உலகத்தில்,ஒரு தீபகற்பமாகக் கருதப்படு கின்ற இந்தியத் துணைக்கண்டத்தில், 1076 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கடற் கரையைக் கொண்டு இருக்கின்ற தாய்த்தமிழகத்தில், இந்த அலைபாயும் கட லோ ரத்தில்தான் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. கொற்கைத் துறைமுகம் இருந்தது. நாகையிலும் துறைமுகம் இருந்தது.

Tuesday, May 7, 2013

பரசலூரில் நிழற்குடை அமைக்க வேண்டும் - மதிமுக

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பரசலூரில் பயணிகள் நிழற்குடை அமைக்க மதிமுக வலியுறுத்தியுள்ளது.

மதிமுக ஒன்றிய செயலாளர் கொளஞ்சி கூறியதாவது:

நாகை மாவட்டத்தில் செம்பனார்கோவில் ஒன்றியம் 57 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியமாகும். 57 ஊராட்சிகளில் அருகாமையில் உள்ள கிராமங்களான மேமாத்தூர், கீழ்மாத்தூர், சாத்தனூர், மேலப்பாதி, செம்பனார் கோவில், மேலக்கட்டளை ஆகிய கிராம மக்கள் அரசு அலுவ லர்கள், மாணவ, மாணவிகள், அருகில் உள்ள மயிலாடுதுறை நாகப் பட் டினம், பொறையார், பூம்புகார் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டு மென்றால் பரசலூரிலிருந்து தான் செல்ல வேண்டும்.

Sunday, April 21, 2013

மின்வாரியம் முன் மதிமுக சார்பில் வருகிற 26ம் தேதி ஆர்ப்பாட்டம்

மதிமுக விவசாய அணி கூட்டம்

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் மதிமுக விவசாய அணி கூட்டம் நடந்தது. ஒன்றிய விவசாய அணி தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் நம்பிராஜன் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மதிமுக ஒன்றிய செயலாளர் கொளஞ்சி கூறியதாவது: