Showing posts with label திருவாரூர். Show all posts
Showing posts with label திருவாரூர். Show all posts

Saturday, November 16, 2013

காவிரி நீர் எங்கே ?-மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி,மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!!

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் நடை பெற்றது. குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் , ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் துரை பால கிருஷணன், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியான், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச் செயலர் தமிழ் நேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, October 5, 2013

காமன்வெல்த் மாநாடு எதிர்ப்பு -மதிமுக , திவிக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குகிறது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு நடத்த கூடாது என்பதை வலியுறுத்தி , மன்னார்குடி ஒன்றிய மதிமுக மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங் கப் பட்டது 

தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடை பெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டிய லில் இருந்து நீக்க வேண்டும்,தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும், போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி மன்னார்குடி ஒன்றிய மதிமுக, திராவிடர் விடுதலைக் கழ கம்,தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் , மதிமுக மன்னார் குடி ஒன்றிய செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, தமிழன் சேவை மைய நிறுவனர் வாட் டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது.

Saturday, July 13, 2013

விருதுநகர் பந்தலில்,முழுநாள் மாநாடு

தஞ்சாவூர் கூட்டத்தில் #வைகோ அறிவிப்பு

தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில், 5.7.2013 அன்று, தஞ்சாவூரில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் விழா வெகு சிறப்பு டன் நடைபெற்றது. நிதியினைப் பெற்றுக் கொண்டு பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

நெடிய வரலாறு படைத்த இந்தத் தஞ்சைத் தரணியில், தஞ்சை மாவட்டம், திரு வாரூர் மாவட்டம்,நாகை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பாக
நடைபெறுகின்ற, நாடாளுமன்றத் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி அளிப்புக் கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கழகத்துக்கு புதியதோர் எழுச்சி தருகின்ற விதத்தில், இந்தத் தஞ்சை நகரில்,
நம்முடைய இலட்சியங்களைப் பறைசாற்றுகின்ற பதாகைகளை, பட்டயங் களை, நெடுகிலும் மிளிரச் செய்து, இந்த மண்டபத்தில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை,தன் சக தோழர்களோடு சேர்ந்து அமைத்துத் தந்து வரவேற்று இருக்கின்றீர்கள்.

Saturday, July 6, 2013

மதிமுக மீது மக்களின் நன்மதிப்பு

நாடாளுமன்றத்தில் இந்த முறை மதிமுகவின் குரல் ஒலிக்கும் என்றார் #மதிமுக பொதுச் செயலர் #வைகோ.

தஞ்சாவூரில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மதிமுக சார்பில் வெள்ளிக் கிழமை (05.07.13 ) இரவு நடைபெற்ற கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதியளிப்பு வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

முல்லைப் பெரியாறு பிரச்னை, ஈழத் தமிழர்கள் பிரச்னை, உர விலை உயர்வு, ராஜபட்ச வருகை எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்திய இயக்கம் இது.