Showing posts with label காவேரி. Show all posts
Showing posts with label காவேரி. Show all posts

Saturday, November 16, 2013

காவிரி நீர் எங்கே ?-மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி,மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!!

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் நடை பெற்றது. குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் , ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் துரை பால கிருஷணன், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியான், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச் செயலர் தமிழ் நேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tuesday, July 9, 2013

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழு வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியதாவது:

தமிழகத்திற்கு கர்நாடகம் 489 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று 1924-ல் மைசூர் அரசுடன் ஒப்பந்தம் செய்தவன் வெள்ளையன். ஆனால் இன்று 192 டிஎம்சி கர்நாடகம் நீர் தர வேண்டும் என்று காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பைக் கூட மத்தியஅரசு நிறைவேற்றித்தர மறுக்கிறது. கர்நாடக அணை களில் இருப்பில் உள்ள நீரில் 46 விழுக்காடு தமிழகத்திற்கும், 54 விழுக்காடு கர்நாடகத்திற்கு என பகிர்ந்து கொள்வதுதான் காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் சாரம். ஆனால் நீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அடாவடிக்கு மத்தியஅரசு கை கொடுக்கிறது.

Friday, June 14, 2013

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயற்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு! - வைகோ அறிக்கை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜூன் 12 இல் மேட்டூர் அணை யில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதை எண்ணி, காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். தென்மேற்குப் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை. மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 52 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தால் தான் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியும். ஆனால், தற்போது வெறும் 3.53 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருக்கின்றது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் ஜூன் மாதத்தில் அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி 10 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்திற்கு மிக முக்கிய மான காலமான ஜூன், ஜூலை, ஆகÞடு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங் களில், நீர்ப்பாசனத் தேவைக்காக தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் 134 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நடுவர்மன்றம் சரியான உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது.

Monday, June 3, 2013

காவிரி மேற்பார்வைக் குழுவை ஏற்க முடியாது!-சங்கொலி தலையங்கம்

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், மத்திய
காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்ததன் காரணமாக
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் இடைக்கால ஏற்பாடாக ‘மேற்பார்வைக் குழு’ ஒன்று மே 24 ஆம் தேதி மத்திய அரசால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ‘மேற்பார்வைக் குழு’ அமைக்கப்பட்டதால் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் செயற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. 

காவிரி நடு வர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியா னது. ஆறு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி இறுதி தீர்ப்பு அரசிதழில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் வழங்கி ய இறுதி தீர்ப்பில், மிக தெளிவாக, எவ்வாறு நடுவர்மன்ற உத்த ரவை நடை முறைப் படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இதன் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும். பக்ரா-பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன் மாதிரியாகக் கொண்டு, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத் தை அமைக்க வேண் டும் என்று வரையறுத்து நடுவர்மன்றம் ஆணையிட்டது.

Wednesday, May 22, 2013

காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம்

காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம்! 
-வைகோ அறிக்கை

கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல.

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவைச் செயல்படுத்த, பா.ஜ.க. முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்ற போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரி வித்தார்.