Showing posts with label ஈழத்தமிழர். Show all posts
Showing posts with label ஈழத்தமிழர். Show all posts

Wednesday, August 21, 2013

பத்து தமிழர்கள் பட்டினிப் போராட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள். மீண்டும் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்.

காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினர்.

Monday, June 10, 2013

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி-மதிமுகவினர் எதிர்ப்பு

வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி, நேற்று (09.06.2013 ) போராட்டம் நடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற் றுவரும் பல்வேறு வெளிநாட்டினரோடு,கடந்த 27-ஆம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் பண்டார தசநாயக, ஹரிஷ்சந்திர ஹெட்டியாரச்சிக ஆகிய இருவரும் பயிற்சி பெறுகின்றனர்.

Monday, March 26, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 4

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இந்தியாவின் மனிதாபிமானக் கொடி அரைக்கம்பத்தில் பறப்பது ஏன் ?

இலங்கையில் சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே அரசு தமிழர்களை நர வேட்டையாடிய நேரத்தில் மாநிலங்களவையில் பதின்மூன்று கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வந்து தலைவர் வைகோ எடுத்துரைத்த நெகிழ்ச்சி மிக்க கருத்துகள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரின் இதயத்தில் ஈரம் கசியச் செய்தது .1984 ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் வைகோ கொண்டு வந்த ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து 1984 ஆகஸ்டு 16 ஆம் நாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மாநிலங்கள் அவையில் உரை ஆற்றினார்.அப்பொழுது இந்திராகாந்தி தெரிவித்த கருத்து.அதுவரை இந்திய அரசு கடைபிடித்து வந்த ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறை யில் மாற்றம் உருவாகியிருப்பதை உலகத்திற்கு உணர்த்தியது .

Tuesday, March 20, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இழப்போம்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாபெரும் திருப்புமுனை ஆண்டாகும்.ஈழத்தமிழ் இளைஞர்களின் போர்க் குணத்தையும் புறநானூற்றுப் போர் மரபில் வந்த இளைஞர் கூட்டம் களச்சாவிற்கு அஞ்சாதவர்கள் என்பதையும் இன எதிரி களுக்கு உணர்த்திய ஆண்டு. 1983 ஜூலை 15 போர்க்களத்தில் சிங்களப்படை யால் சுற்றிவளைக்கப் பட்ட சார்லஸ் ஆண்டனி என்ற தளபதி,தான் எதிரி களால் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு உடன் நின்ற போராளிக்கு கட்டளையிட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் நினைவாகவே மாவீரர் பிரபாகரன் தனது முதல் மகனுக்குச் சார்லஸ் ஆண்டனி எனப் பெயரிட்டார்.

Monday, March 19, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே .

1983 கருப்பு ஜுலை : இந்திராவின் கவனத்தை ஈர்த்த வைகோ 

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் இரத்தம் தோய்ந்த “கறுப்பு ஜூலை” ஆகும். 1983 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே,
சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே, தமிழர்கள் மீது கட்ட விழ்த்து விட்டிருந்த வன்முறைகள் ஜூலை மாதம் கோர நர்த்தனம் ஆடின. ஜூலை 25 ஆம் நாள், சிங்கள இராணுவம்நடத்திய இனப்படுகொலையில் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர் பகுதிகளில் தீவைப்புகள்,கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இந்த கொடூரங்களின்
உச்சகட்டமாக, ஜூலை 27 ஆம் நாள், வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த விடுதலை இயக்கத் தலைவர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட போராளிகள் 50 பேர் கண்ட கோடாலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறையில் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தமிழீழத்தில் 1983, ஜூலையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளை அறிந்து தமிழ்நாடு கொந்தளித்தது. உலகம் முழுவதிலிருந்தும் வரும் பத்திரிகைகள் இலங்கை இனப்படுகொலை பற்றிய நடுங்க வைக்கும் செய்திகளை வெளியிட்டன.

Sunday, March 18, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 1


திரு.மு.செந்திலதிபன்  
கழக ஏடான சங்கொலி யில் வார வாரம் , நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின்குரல்! என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் .வைகோ அவர்களின் நாடாளுமன்ற பணிகள் குறித்து கட்டுரையாக , மதிமுக அரசியல் ஆய்வு மய்யாச் செயலாளர் திரு.மு.செந்திலதிபன் எளிதி வருவதை இணையதள நண்பர்களுக்க இங்கே பதிவு செய்கிறோம் , படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி :- சங்கொலி குழு , மற்றும் திரு.மு.செந்திலதிபன் அவர்களுக்கு .



Wednesday, March 14, 2012

இந்தியா இனக்கொலையின் பங்காளி

சங்கரன்கோயில் இடைதேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பல்வேறு கிராமங்களில் ம.தி.மு.க வின் பொது செயலளார் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் இடையே ஹலோ எப் எம் வானொலிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிடில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் துடைத்து எறியப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tuesday, February 28, 2012

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்;
கூட்டுக் குற்றவாளியாக ஆகாதீர்!


பிரதமருக்கு வைகோ கடிதம்!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, இன்று (28.2.2012) எழுதி உள்ள கடிதம்:

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.